Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..
----------------------------
 
பூக்களைப்பிய்த்தெறிந்த
காற்றுக்கு தெரியப்போவதில்லை
பூக்கள் மென்மையானவை
அழகானவை
அன்பை பரப்புபவை என்று...
 
ஆற்றாமையுடன் 
துவண்டுவிழும்
இதயமொன்றின்
பாடல்களைகேட்கும்
பொறுமையும் 
அதற்கு இல்லை..
 
ஆயினும்...
 
இதயத்தின்பாடல்களை
கிழிந்து தொங்கும் இதழ்களின்
ஓவியத்தை
ஒடிந்த பல இறக்கைகள்
சுமந்துகொண்டுதான் செல்லும்..
 
அவற்றில் ஒன்றாய்
என் கவிதைகளும்
பயணிக்கலாம்..
 
என் நேற்றைவரை
எழுதி முடித்த
விதிக்கிழவன்
மார்பை பார்த்து
என் மலர் மனதை
பிய்த்தெறிய
காற்றை ஏவிவிட்ட
கதைக்கு நீதி கேட்க,
அவன் எழுப்பிய
ஆயிரமாயிரம் சிலுவைகளில்
அறையப்பட்டு
கனவழிந்து 
கண்ணீராய் செத்துப்போன
காதல்களின் 
மொழியாய் பேச
பூத்திருக்கலாம் 
என்கவிதைகள்
உதிர்ந்துபோன
என் மனப்பூவின்
உக்கலில்
கருக்கொண்டு...
 
யாருக்கு தெரியும்...
 
ஈரக்காட்டுக்குள்
இடைவழியில் தங்க
ஒரு சிறு குடிசைபோல்
தன் நிலவைத்தொலைத்த
யாராவது ஒரு
ஊமைக்காதலனின்
ஒரு துளி கண்ணீருக்கு
சிறுகூடாய்க்கூட
இருந்துவிட்டும் போகலாம்
என்கவிதைகள்..
 
ஆகையால்...
 
கிறுக்கல்களாய்
உதிர்ந்துகிடக்கட்டும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...
 
வானம் பார்த்து 
விதைத்தவை அல்ல
இவை...
உங்கள் வானங்களையே
கண்ணீர் மழையாக்கும்
வசியத்துடன்
விதைக்கப்பட்டவை...
 
சொல்லுங்கள்..
 
பசுஞ்சோலையாய் கிடந்த
பொழுதொன்றின் மீதான
பெருவலியோடமைந்த
பாடலொன்றின்
பெருமூச்சின் உஷ்ணம்பட்டும்
ஆவியாகாத 
மனக் கடலும் உண்டோ...?
 
இங்கே...
 
காதல் மடிந்துபோன
ஆற்றின் கரைகளில்
செத்துக்கிடக்கும்
சிறுமீன்களாய் 
அன்பு
வீசி எறியப்படிருக்கிறது
 
எந்த நினைவும்
அழிய மறுக்கும்
என் இதயத்தின் கவிதைகளை
எழுதி முடிக்க முடியாது..
 
ஆகையால்...
 
கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...
 
 

Edited by சுபேஸ்

 

ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..
----------------------------
 
பூக்களைப்பிய்த்தெறிந்த
காற்றுக்கு தெரியப்போவதில்லை
பூக்கள் மென்மையானவை
அழகானவை
அன்பை பரப்புபவை என்று...
 
ஆற்றாமையுடன் 
துவண்டுவிழும்
இதயமொன்றின்
பாடல்களைகேட்கும்
பொறுமையும் 
அதற்கு இல்லை..
 
ஆயினும்...
 
இதயத்தின்பாடல்களை
கிழிந்து தொங்கும் இதழ்களின்
ஓவியத்தை
ஒடிந்த பல இறக்கைகள்
சுமந்துகொண்டுதான் செல்லும்..
 
அவற்றில் ஒன்றாய்
என் கவிதைகளும்
பயணிக்கலாம்..
 
என் நேற்றைவரை
எழுதி முடித்த
விதிக்கிழவன்
மார்பை பார்த்து
என் மலர் மனதை
பிய்த்தெறிய
காற்றை ஏவிவிட்ட
கதைக்கு நீதி கேட்க,
அவன் எழுப்பிய
ஆயிரமாயிரம் சிலுவைகளில்
அறையப்பட்டு
கனவழிந்து 
கண்ணீராய் செத்துப்போன
காதல்களின் 
மொழியாய் பேச
பூத்திருக்கலாம் 
என்கவிதைகள்
உதிர்ந்துபோன
என் மனப்பூவின்
உக்கலில்
கருக்கொண்டு...
 
யாருக்கு தெரியும்...
 
ஈரக்காட்டுக்குள்
இடைவழியில் தங்க
ஒரு சிறு குடிசைபோல்
தன் நிலவைத்தொலைத்த
யாராவது ஒரு
ஊமைக்காதலனின்
ஒரு துளி கண்ணீருக்கு
சிறுகூடாய்க்கூட
இருந்துவிட்டும் போகலாம்
என்கவிதைகள்..
 
ஆகையால்...
 
கிறுக்கல்களாய்
உதிர்ந்துகிடக்கட்டும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...
 
வானம் பார்த்து 
விதைத்தவை அல்ல
இவை...
உங்கள் வானங்களையே
கண்ணீர் மழையாக்கும்
வசியத்துடன்
விதைக்கப்பட்டவை...
 
சொல்லுங்கள்..
 
பசுஞ்சோலையாய் கிடந்த
பொழுதொன்றின் மீதான
பெருவலியோடமைந்த
பாடலொன்றின்
பெருமூச்சின் உஷ்ணம்பட்டும்
ஆவியாகாத 
மனக் கடலும் உண்டோ...?
 
இங்கே...
 
காதல் மடிந்துபோன
ஆற்றின் கரைகளில்
செத்துக்கிடக்கும்
சிறுமீன்களாய் 
அன்பு
வீசி எறியப்படிருக்கிறது
 
எந்த நினைவும்
அழிய மறுக்கும்
என் இதயத்தின் கவிதைகளை
எழுதி முடிக்க முடியாது..
 
ஆகையால்...
 
கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

 

 

மனதில் இருந்து எழும் வலிகளில் இருந்து எழுந்து நான் இங்கே இருக்கின்றேன் என்று வலியை ஏற்படுத்தியவரிடம் சொல்வது ஒருவகை .  அல்லது சொறி வந்தாற் போல் அந்த வலியை கிண்டிக் கிளறி  அதில் இருந்து வரும் இரத்தத்தைச் சுவைப்பது அடுத்தவகை . இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கப் போகின்றீர்கள் ??? படைப்புக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் சுபேஸ் :) :) .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதில் இருந்து எழும் வலிகளில் இருந்து எழுந்து நான் இங்கே இருக்கின்றேன் என்று வலியை ஏற்படுத்தியவரிடம் சொல்வது ஒருவகை .  அல்லது சொறி வந்தாற் போல் அந்த வலியை கிண்டிக் கிளறி  அதில் இருந்து வரும் இரத்தத்தைச் சுவைப்பது அடுத்தவகை . இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கப் போகின்றீர்கள் ??? படைப்புக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் சுபேஸ் :) :) .

 

முதலாவது வகை நடந்துகொண்டிருக்கண்ணை :) .. இரண்டாவது வகை அப்பப்ப நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழாய்ப்போன ஞாபகங்கள் வந்தப்போ சொறிஞ்சுகொள்ளுவது... என்ன செய்ய மனச வச்சது பணத்து மேல இல்ல..பாசத்து மேல அல்லவா...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது உதிர்ந்த கவிதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் வந்த எவனுமே கவிதை எழுதாமல் தப்பித்து விட முடியாது போலும்.. :rolleyes::D

 

வலிகளிலுருந்து வரும் படப்புக்கள் தான் அதிகம் காத்திரமாய் இருப்பதைக் கண்டுள்ளேன், அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே தங்கள் ஒவ்வொரு படைப்புகளும் இருக்கிறது. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா.. :)

காதல் வந்த எவனுமே கவிதை எழுதாமல் தப்பித்து விட முடியாது போலும்.. :rolleyes::D

 

வலிகளிலுருந்து வரும் படப்புக்கள் தான் அதிகம் காத்திரமாய் இருப்பதைக் கண்டுள்ளேன், அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே தங்கள் ஒவ்வொரு படைப்புகளும் இருக்கிறது. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா.. :)

 

முதல் மனைவி நிலைமை ,?

 

கவிதை அருமை சுபேஸ் வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது உதிர்ந்த கவிதை.

நன்றி அக்கா...

காதல் வந்த எவனுமே கவிதை எழுதாமல் தப்பித்து விட முடியாது போலும்.. :rolleyes::D

 

வலிகளிலுருந்து வரும் படப்புக்கள் தான் அதிகம் காத்திரமாய் இருப்பதைக் கண்டுள்ளேன், அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே தங்கள் ஒவ்வொரு படைப்புகளும் இருக்கிறது. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா.. :)

காதல் வந்தால் சாதல்தான் :D ... நன்றி ஜீவா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் மனைவி நிலைமை ,?

 

 

 

அவ ஜெர்மனிக்கு வந்து சேர்ந்திருப்பா..அதால இனி இவர் அரக்கேலா..

 

 

 

கவிதை அருமை சுபேஸ் வாழ்த்துக்கள் .

 

நன்றி அண்ணா..

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் மனைவி நிலைமை ,?

 

சிக்கலான கேள்வி ப்றோ .. நான் இரவு பெட்டுக்கு போகவேணுமணை .. :lol:

 

காதல் வந்த சோகத்தை(ஊருக்கு) எழுதுவியள்,  மனைவி வந்தா(அவளுக்கு மட்டுமே) கலவியை எழுதுவிங்கள் அம்புட்டு தான்யா வித்தியாசம். :unsure::blink:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..
----------------------------
 

 
எந்த நினைவும்
அழிய மறுக்கும்
என் இதயத்தின் கவிதைகளை
எழுதி முடிக்க முடியாது..
 
ஆகையால்...
 
கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

 

 

பாராட்டு என்று சொல்லி விலகி செல்ல முடியவில்லை தம்பி. இதுதான் நியதி. வதைப்பட்டவனால் மட்டுந்தான் அந்தவலியின் கனங்களை உணர முடியும் பார்வையாளனாக நிற்கும் ஏனையோரால் அதனை புதினமாக நோக்கவும் பேசவும்தான் முடியும். வலிந்து திணிக்கப்படாத வரிகளில் கவிதை வெற்றி நடையிடுகிறாள் எழுதிய மனமோ துவண்டு தேம்பிக்கிடக்கிறது. :(

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

காதல் வந்தால் சாதல்தான் :D

 

இல்லை ராசா ... அடுத்த காதல் வரும் வரைக்கும் தான் ... :lol::icon_idea:

 

அவ ஜெர்மனிக்கு வந்து சேர்ந்திருப்பா..அதால இனி இவர் அரக்கேலா..

 

 

 

 

 

 

அதுக்கு தானேப்பா நீங்களும் அந்தரப்படுறியள் .. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...நடக்கட்டும்.  கவிதை அருமை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டு என்று சொல்லி விலகி செல்ல முடியவில்லை தம்பி. இதுதான் நியதி. வதைப்பட்டவனால் மட்டுந்தான் அந்தவலியின் கனங்களை உணர முடியும் பார்வையாளனாக நிற்கும் ஏனையோரால் அதனை புதினமாக நோக்கவும் பேசவும்தான் முடியும். வலிந்து திணிக்கப்படாத வரிகளில் கவிதை வெற்றி நடையிடுகிறாள் எழுதிய மனமோ துவண்டு தேம்பிக்கிடக்கிறது. :(

 

நன்றி அக்கா... சில உணர்வுகளை அனுபவித்து ஆகணும் என்று விதித்திருந்தால் யரால் மாற்றமுடியும் அக்கா...? அன்புக்கும் நேசத்துக்கும் நன்றி அக்கா..

இல்லை ராசா ... அடுத்த காதல் வரும் வரைக்கும் தான் ... :lol::icon_idea:

 

அதுக்கு தானேப்பா நீங்களும் அந்தரப்படுறியள் .. :D:lol:

 

சூடு கண்ட பூனை அடுபங்கரை சாம்பலைகூட கிண்டிபாக்காது நண்பா... :D

ம்...நடக்கட்டும்.  கவிதை அருமை :lol:

நமக்கு கல்யாணம் ஆகாத வரைக்கும் "கல்யாணம் ஆகி மனைவி கூட ஊர் சுற்றனும்" ன்னு தோணும்...
கல்யாணம் ஆகிடிச்சுனா பொண்டாடிய விட்டுகிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றனும்ன்னு தோணும்....
திஸ் இஸ் கால்டு லைப்... எண்டு தான சொல்லவாறியள்... :D
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குப் பாராட்டுக்கள்
உங்கள் கவலைக்கு ஒரு நாள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

அந்த வசந்தகாலம் வெகுவிரைவில் வரட்டும் :D

Edited by வாத்தியார்

தம்பி தோல்வியிலிருந்து வெற்றி சமை. வாழ்க்கை ஒரு முறையே சந்தோஷமாக வாழ்ந்து பார்த்திடு!!

அடடா, தம்பி என்று மாறிச்சொல்லி போட்டேன். நீங்க அண்ணா தானே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குப் பாராட்டுக்கள்

உங்கள் கவலைக்கு ஒரு நாள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

அந்த வசந்தகாலம் வெகுவிரைவில் வரட்டும் :D

வேணாம் வாத்தியார்..
 
பொண்ணு செட் ஆகிற வரை வாழ்க்கைல எதையோ மிஸ் பண்ற மாதிரி பீலிங்கா இருக்கும்...
 
பொண்ணு செட் ஆகிருச்சுன்னா வாழ்க்கையே மிஸ் ஆகுற மாதிரி பீலிங்கா இருக்கும்... :D
 
நன்றி பாராட்டுக்கு அண்ணா..

தம்பி தோல்வியிலிருந்து வெற்றி சமை. வாழ்க்கை ஒரு முறையே சந்தோஷமாக வாழ்ந்து பார்த்திடு!!

 

 

கண்டிப்பாய்... நன்றி அண்ணா..

 

 

 

அடடா, தம்பி என்று மாறிச்சொல்லி போட்டேன். நீங்க அண்ணா தானே  :D

 

ஏன் தாத்தா எண்டுங்களேன்.. :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ சுபேஸ்....மற்றவர்களுக்கு பதில் கருத்து எழுதும் பாங்கே தனி ரகமாக இருக்கு..கவிதையை விட அந்தக் கருத்துக்களைத் தான் நான் விரும்பி பார்ப்பது..

நன்றாக இருக்கிறது

ஆகையால்உன்  எண்ணங்களை வார்த்தைகளாய் உதிர்த்துக்கொண்ண்டே இரு நண்பா...!

மனதிலுள்ள பாரங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறையும்! :)

  • கருத்துக்கள உறவுகள்
ஆகையால்...
 
கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்... 

 

கவிதைகளும் அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ சுபேஸ்....மற்றவர்களுக்கு பதில் கருத்து எழுதும் பாங்கே தனி ரகமாக இருக்கு..கவிதையை விட அந்தக் கருத்துக்களைத் தான் நான் விரும்பி பார்ப்பது..

நன்றி அக்கா...

 இந்த கதல் உணர்வுகள் ஒரு நாற்பது ஜம்பது வயதில் வருமோ தெரியவில்லை..அதனால் முடிந்தளவு நேரங்கிடைக்கும்போதெல்லாம் இப்பவே எழுதிக்கொட்டிவிடுகிறேன்..பின்னாடி பென்சன் எடுக்கும்போது ஓய்வாய் இருந்து வாசிக்க.. :D

நன்றாக இருக்கிறது

நன்றி கரன் அண்ணா.. 
 
நல்ல வாசகன் போல இருக்கு.. ஆனால் என்ன நாலுவரிக்கு மேல் யாழில் எழுதுறியள் இல்ல.. இன்னும் கொஞ்சம் கீபாட்டை ஊண்டி அமத்தினால் ஒரு நாலு பந்தி வந்திடும்.. றை பண்ணுங்கோ அண்ணா.. :D

ஆகையால்உன்  எண்ணங்களை வார்த்தைகளாய் உதிர்த்துக்கொண்ண்டே இரு நண்பா...!

மனதிலுள்ள பாரங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறையும்! :)

சரி நண்பா.. எனக்கு சொல்லிப்போட்டு நீ படுத்துக்கிடக்காமல் நீயும் உதிர்த்துவிடு..  :D
 
நன்றிடா..

 

 

கவிதைகளும் அழகு.

 

கறுப்பியை கனநாளைக்குபிறகு கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது..
 
நன்றி கறுப்பி..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மற்றும் பச்சை குத்தி கவிதை மீதான தமது ரசிப்பை வெளிப்படுத்திய உறவுகள் தும்பளையான்,சண்டமாருதன் அண்ணா;காளான் அண்ணா,ரதி அக்கா,கிருபன் அண்ணா,விசுகண்ணா எல்லோருக்கும் நன்றிகள்..
 
நீங்களும் கவிதைகளை
காதலித்தால்
மீண்டும் 
கவிதை கொண்டுவரும்
எனது இன்னொரு வருகையில்
உங்கள் வானத்தின்
மழை நாட்கள் மெல்லவரும்
மண் எங்கும் பூ விரியும்..
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
 
ஈரக்காட்டுக்குள்
இடைவழியில் தங்க
ஒரு சிறு குடிசைபோல்
தன் நிலவைத்தொலைத்த
யாராவது ஒரு
ஊமைக்காதலனின்
ஒரு துளி கண்ணீருக்கு
சிறுகூடாய்க்கூட
இருந்துவிட்டும் போகலாம்
என்கவிதைகள்..
 
 

 

 

 

நீண்ட நாளைக்கு பிறகு சந்திக்கிற நண்பனிடம் பேசிவிட்டு,மச்சா சீரிஸா ஒரு லவ் பண்ணியே என்னாச்சுன்னு கேட்டா,அவ போயிட்டா மச்சா...அப்டீன்னும் போது தமாஸா எடுத்து கேலிபன்னலாம்னு யோசிக்கும்போதே,அதை சொல்லி விட்டு கீழே பார்த்த படியோ,வேறெங்காவது பார்த்தபடியோ,அந்த வலியை ஜீரணிக்க முயல்வது போல எடுத்து கொள்கிற கொஞ்ச நேர மவுனம் நம்மையும் கொஞ்சம் தாக்கத்தான் செய்கிறது...
 
# விர்ரா மச்சா... நம்ம ரேஞ்சுக்கு ஆயிரம் இல்லேன்னாலும் ஒரு ஐந்நூறு பிகராவது மடங்கும் மச்சா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.