Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சியாமளாவுக்கு இப்பொழுதெல்லாம் இதயம் அடிக்கடி வேகாமாக்த் துடிக்கிறது. எத்தனைதான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவே இல்லை. கண்களை கண்ணீர் மறைக்க, தன்னிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டாள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே. யாரிடம் போய் இதைச் சொல்வது. யார் என்றாலும் எனக்குக் காறித் துப்புவார்களே. ஏன் நான் இப்படி ஆனேன் என எண்ணியே மனது குமைந்ததில் தலைவலி இன்னும் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை.

எல்லோரும் போல் என் வாழ்வும் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதனால் இப்படி ஆனதோ என எண்ணியவளின் மனம், தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் எண்ணிப் பார்த்தது. கணவன் தனக்கு என்ன குறை வைத்தார்?. என் விருப்பம் எல்லாம் நிறைவேறியதே அன்றி ஒருநாளாகிலும்  நிறைவேறாது விட்டதில்லையே. இல்லை நிறைவேற்றாது கணவர் விட்டதில்லையே. மற்றைய கணவர்கள் போல் சியாமளாவின்மேல் சந்தேகம் கூட இதுவரை கணவனுக்கு ஏற்படவில்லையே. எத்தனை சிறந்த கணவன். பிள்ளைகள் மட்டும் குறைவா என்ன. மகன் அர்விந்த்,மகள் தட்சா இருவருமே தாய்மேல் கொள்ளை அன்பு கொண்ட சுட்டிகள்.

படுக்கையிலும் கூட கணவன் அவள் விருப்பின்றி எதையும் செய்ததில்லையாயினும், அவனின் சீண்டல்களும், தீண்டல்களும் அவளை நிறைவாகத்தானே வைத்திருந்தன. அப்படியிருந்தும் ஏன் என் மனம் இன்னொருவனை நாடியது. சிலநேரம் அவளது இரசனைகள் சிலவற்றுடன் ஒத்துப்போக முடியாதவனாக தன் கணவன் இருந்ததுதான் காரணமோ? அவள் கணவனின் கதைக்கு உறவினர்கள் எல்லோரும் இரசிகர்களாய் இருந்தனர்.அப்படியிருக்க அவள் மட்டும் இன்னொருவனின் கதையில் மயங்கவேண்டி எப்படி வந்தது என யோசித்ததில் விடைதான் இதுவரை கிடைக்கவில்லை.

முகப் புத்தகம் என்னும் மாய வலையில் சிக்குண்டதனால் அவள் வாழ்வு இன்று சிக்கித் தவிக்கின்றது. எத்தனையோ பேர் முகப்புத்தகத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள்தான். ஆனால் யாரும் அவளுடனோ அல்லது அவள் யாருடனுமோ இதுபோல் பேச்சை வளர்த்ததும் இல்லை.நின்மதியைத் தொலைக்கவும் இல்லை. அவன் தூர தேசத்தில் இருந்தாலும் அவனுடன் அருகில் இருந்து கதைப்பதுபோல் அவள் உணர்ந்து குதூகலித்தாள். கணவன் மாலையில் வேலைக்குச் சென்றுவிட, பிள்ளைகளை பாடசாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபின் அவர்களுக்கு உணவு கொடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்திவிட்டு இவள் கணனியே கதியெனக் கிடந்தாள்.

தருண், அவனுடன் கதைக்காது இப்போதெல்லாம் இவளுக்கு விடிவதே இல்லை. இத்தனைக்கும் அவனுக்கும் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் இருக்கின்றனர். ஆனாலும் அவளுக்கு அவன் தந்த மயக்கம் அதை எல்லாம் பெரிதாக எண்ண விடாது செய்தது. எப்போதும் அல்ல இப்போதுகூட கணவனுக்குத் தெரிந்தால் என்று என்னும்போதே நெஞ்சு பதைத்தது. இன்றுவரை அவளுக்குத் தன் கணவன் மேலும் எவ்வித வெறுப்பும் எழவில்லை என்பதே உண்மை. கணவனின் அன்பான பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனதுள் ஒரு குற்ற உணர்வு ஓடும். ஆனாலும் தருணின் முன்னால் எல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடும்.

தருணுடன் கதைக்கும்போதெல்லாம் இருவருமே இதுபற்றி நிறைய விவாதித்தும் இருக்கின்றனர். அவனும் தன் மனைவிமேல் அளவிலா அன்புதான் கொண்டுள்ளான் . ஒரே  நேரத்தில் இருவர்மேலும் அன்பு கொள்வது என்பது இருவர் வாழ்விலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறதுதான் என்றாலும் இது எப்படிச் சாத்தியமாகிறது என தன்னைத் தானே வியந்தும் கேட்டிருக்கிறாள். இன்றுவரை கணவனின் அணைப்பு அவளுக்கு விருப்புள்ளதாகவே இருக்கிறது. கணவனுடன் நிறைவாக இயங்கவும் முடிகிறது. இப்படித்தான் பலரின் வாழ்வும் இருக்கிறதோ?? எனக்குத்தான் தெரியவில்லையோ என்று எல்லாம் தன் மனத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே சலித்துவிட்டது.

தருணை மறப்பதும் அவனைத் தன் வாழ்வில் இருந்து அகற்றுவதும் அவளால் முடியவே முடியாததாகிவிட்டது. ஒரு நாள் அவன் குரல் கேட்கமுடியாது போனால் அவள் மனம் அன்று முழுதும் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல் துடிக்கும். மீண்டும்  அவன் குரல் கேட்கும் வரை நின்மதியற்று,  பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிப்போவாள் அவள்.

நான்கு தடவைகள் அவர்கள் இருவரும் தனியே சந்தித்தனர். வாழ்வில் மறக்க முடியாத அந்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்வதாக மிகுதி நாட்கள் கழிந்தன. அந்த இருதடவையும் அவனும் அவள்பால் ஈர்ப்புக் கொண்டவனாகவே இருந்தான். அவள்மேல் தான் எத்தனை அன்பு வைத்துள்ளேன் என்று அவளுக்கு விளங்கவில்லை என்று அவன் கூறிய வார்த்தையில் அவள் மயங்கித்தான் போனாள். அவனுக்குத் தன்மீதான காதல் அப்படியே இருக்கும் என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டதும் அப்போதுதான்.

இருந்தாலும் அப்பப்ப அருண் என்னை மறந்துவிடுவானோ என்பதுபோல் அவளுக்குச் சந்தேகம் எழும். என்னை மறந்துவிட மாட்டீர்கள் தானே என்று அப்பாவித்தனமாய் அவனைக் கேட்டு அவன் மறக்க மாட்டேன் என்று கூறும் பதிலில் அவள் மனம் நிறைவு கொள்ளும். எத்ததனை நாள் இது தொடர முடியும் என்பதையோ அவன் அப்படியே மாறாமல் இருப்பானோ என்பதில் எல்லாம் அவளுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

தொடரும் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஒ...கதை அப்படியோ... தொடரட்டும்....தொடரட்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காய் சீ உது என்ன கதை 

 

உலகத்தில நடக்கிற கதைதான் கரன். இனிப்பு மருந்து மட்டும் தான் குடிக்கிறதோ??

 

Link to comment
Share on other sites

மனித வாழ்வின் தேடல்களில் இதுவும் ஒன்று . மேலைத்தேசத்தவர்கள் இந்தத் தேடலைத் தம் வாழ்வில் ஓர் அங்கமாகப் பார்க்க நாமோ அதற்குக் கலாச்சார அரிதாரம் பூசி பேசாப் பொருளாக்கின்றோம் . திருமணத்தின் பின்னான இருபால் கவர்ச்சிகள் மனதளவில் இருந்தால் யாருக்குமே அதனால் பிரச்னைகள் இல்லை .மாறாக அது உடல் ரீதியாகத் தொடருமானால் அதற்கான பின்விளைவுகளை இருபாலாருமே ஏற்றுக்கொள்ளவேண்டும் . ஆனால் எமது சமூகக் கட்டமைப்பைப் பொறுத்த வரையில் இதில் பெண்களே முதலாம் எதிரியாகக் கருதப்பட்டுத் தண்டனையைப் பெறுகின்றனர் . நல்லதொரு விவாதத்துக்குரிய மையப்பொருளை  வைத்துக் கதை சொல்லிய சுமேரியருக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

Link to comment
Share on other sites

கேபியின் படம் மாதிரி போகுது நிஜம்தான் எழுதுங்கோ தொடர்த்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமே வாசிக்க மிக ஆவல்!  :D

 

ஊர் புதினம் உலகப் புதினம் எண்டாக் காணுமே அலைக்கு

 

Link to comment
Share on other sites

இப்பொழுது  இப்பிடியான சம்பவங்கள் நிறைய நடக்குது. அப்படியானதொரு  சம்பவம் ஒன்றைத் தழுவி எழுதுகின்றீர்கள் என்பது புரிகிறது. முழுவதுமாக எழுதிமுடியுங்கள் அக்கா.

மீண்டும் வருகிறேன்! :)

Link to comment
Share on other sites

நான்கு தரம் தனிமையில் சந்தித்தது எந்த மட்டில் போனது? :rolleyes: அடுத்த பகுதியில் எழுதுங்கோ.. :D

Link to comment
Share on other sites

திருமணத்தின் பின்னான இருபால் கவர்ச்சிகள் மனதளவில் இருந்தால் யாருக்குமே அதனால் பிரச்னைகள் இல்லை .மாறாக அது உடல் ரீதியாகத் தொடருமானால் அதற்கான பின்விளைவுகளை இருபாலாருமே ஏற்றுக்கொள்ளவேண்டும் .

சரியான கருத்து சார்.. :unsure: பின்விளைவு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது..! :D

Link to comment
Share on other sites

தருண், அவனுடன் கதைக்காது இப்போதெல்லாம் இவளுக்கு விடிவதே இல்லை. இத்தனைக்கும் அவனுக்கும் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் இருக்கின்றனர். ஆனாலும் அவளுக்கு அவன் தந்த மயக்கம் அதை எல்லாம் பெரிதாக எண்ண விடாது செய்தது. எப்போதும் அல்ல இப்போதுகூட கணவனுக்குத் தெரிந்தால் என்று என்னும்போதே நெஞ்சு பதைத்தது. இன்றுவரை அவளுக்குத் தன் கணவன் மேலும் எவ்வித வெறுப்பும் எழவில்லை என்பதே உண்மை. கணவனின் அன்பான பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனதுள் ஒரு குற்ற உணர்வு ஓடும். ஆனாலும் தருணின் முன்னால் எல்லாம் ஒன்றுமில்லை என்

 

இப்படித்தான் பலரின் வாழ்வும் இருக்கிறதோ?? எனக்குத்தான் தெரியவில்லையோ என்று எல்லாம் தன் மனத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே சலித்துவிட்டது.

தருணை மறப்பதும் அவனைத் தன் வாழ்வில் இருந்து அகற்றுவதும் அவளால் முடியவே முடியாததாகிவிட்டது. ஒரு நாள் அவன் குரல் கேட்கமுடியாது போனால் அவள் மனம் அன்று முழுதும் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல் துடிக்கும். மீண்டும்  அவன் குரல் கேட்கும் வரை நின்மதியற்று,  பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிப்போவாள் அவள்.

 

 

தனது குடும்பம் குழந்தைகள் எல்லாவற்றையும் விட இத்தகையதொரு அருவருப்பை அல்லது உறவை வளர்த்துக் கொள்கிறவர்களை ஒருவகை மனவியாதிக்காரராகவே நான் பார்க்கிறேன். காதல் சிறுவயதில் வந்தால் அது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குடும்பம் குழந்தைகள் என்று ஆகிய பின்னர் இன்னொருவரில் வருவதையும் காதல் என்ற சொல்லில் கோர்த்து காதலையும் தங்கள் இச்சைக்கு அல்லது சலனத்துக்கு பாதுகாப்பு தேடும் மனிதர்களை புனிதர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாட்களாக அவனிடம் மாற்றங்கள் தெரிகின்றன. அதை அவளால் சீரணிக்க முடியவில்லையாயினும் தன்   நிலையை எத்தனையோ தடவைகள் அவனுக்கு எடுத்துரைக்க முயன்றும் அவன் அவற்றைக் காது கொடுத்துக் கேட்காமல் தன் எண்ணப்படியே செய்கிறான். முன்பு காலை மாலை என தொலைபேசியில் சிரித்துப் பேசி மகிழ்ந்தவனுக்கு இப்போதெல்லாம் அவளுடன் பேசுவதற்கு  நேரமே இல்லை என்பதற்குமப்பால் விருப்பம் இல்லை என்றே இவள் கருதவேண்டி இருந்தது. முன்பெல்லாம் மணிக்கணக்காகப் பேசுவார்கள். இப்போது மணி தேய்ந்து நிமிடங்களாகிச் செக்கன்களில் வந்து நிற்கிறது.

ஆரம்ப நாட்களில் அவளுக்காக வீட்டுக்குக் கூடச் செல்லாது  வேலை இடத்திலேயே அதிகநேரம் நின்று மேலதிக வேலை என்று மனைவிக்குப் பொய் சொல்லி மணிக்கணக்காக இவளுடன் கதைத்த நேரங்கள் எல்லாம் நினைவில் மட்டுமேயாகிப் போனதில் இவளுக்கு நினைவே நிந்தனையானது. மனைவி பிள்ளைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவளுக்கு செய்திகள் அனுப்பிப் பூரிக்க வைப்பான். இன்று கனவில் கூட அவன் அப்படிச் செய்வதில்லை. அவனின் அலட்சியம் புரிந்தாலும் அவன் மேல் இவள் கொண்ட அளவிலா அன்பின் முன், இவளால் அதை எல்லாம் பெரிதாக எண்ணவிடாது செய்தது. அவனின் அலட்சியத்தை எல்லாம் ஓரம்தள்ளி வைத்து விட்டு அவனிடம் பழி கிடந்தாள்  இவள். அவனின் அலட்சியம் இவளை எதுவும் செய்யவிடாது இவள் நம்பிக்கைகளைத் தகர்த்து இவள் சக்தியை எல்லாம் இழக்க வைத்து 
 

 

இரவில் இவள் தூக்கம் தொலைத்து அருணின் தொலைபேசிச் செய்திக்காய் காத்திருக்க, எல்லாம் மறந்து அவன் இன்பமாகத் தூங்கினான்.காலையில் அவன் தொலைபேசிக்காகக் காத்திருக்க, எனக்கு காலையில் யாருடனாவது கதைப்பதென்றால் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என்று அவன் கூறியதை இவள் மனம் ஏற்க மறுத்தது. ஏனெனில் இத்தனை நாட்கள் பிடித்த விடயம் எப்படித் திடீரெனப் பிடிக்காது போயிற்று என்ற கேள்வி இவள் மனதில் எழுந்து இவள் நின்மதியைத் தொலைத்தது. முன்பெனில் மணிக்கணக்காக எந்தவிதச் சலிப்புமின்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.

இப்பொழுது போனில் கடமைக்கு மூன்று நான்கு நிமிடங்களில் அவசரமான பேச்சுக்களுடன் இவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காது முடித்துக்கொள்வது அவன் வழக்கமாகி விட்டிருந்தது. இவள் தன் மனக் கிடக்கையை இவனிடம் கூறினாலும் நீ அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, அவளைச் சமாதானப் படுத்தக் கூட ஒரு வார்த்தையும் சொல்லாது சும்மா இருப்பான். அவளுக்கு அப்பொழுதெல்லாம் வனாந்தரத்தில் யாருமற்றுத் தனியாக இருப்பது போன்ற வெறுமை தோன்றும்.

முன்பென்றால் எந்த வேலைப் பளுவிலும் இவளுக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்புவான். அதே அவனுடன் அருகில் இருக்கும் நிறைவைக் கொடுக்கும். தனக்கு வேலை அதிகம் பொறு என்றான். இவளும் பொறுத்துத்தான் போனாள். ஆனால் தொடர்ந்தும் அவன் செயல்கள் இவள்மேல் அவனுக்கு ஈடுபாடு இல்லாமையையே காட்டியது.

இப்பொழுதெல்லாம் இவள் அனுப்பும் சாதாரண குறுஞ்செய்திகளுக்குக் கூட அவனிடமிருந்து பதில் வராது போனதில் இவள் மனம் படும் பாட்டை  அவளாலேயே தாங்க முடியாமல் இருந்தது. அவன் செய்கைகளை இவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததில், இவளுக்கு தன் மனதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் தவிப்பாக இருந்ததில் நண்பி நித்தியாதான் நினைவில் வந்தாள்.

ஒருநாள் நித்தியாவுக்கு தொலைபேசியில் அவள் வீட்டில் நிற்கிறாளா என்று நிட்சயம் செய்துகொண்டு, அவள் வீட்டுக்குச் சென்று தன் நிலையை  அவளுக்குச் சொல்லிவிட்டு, அவள்முன் கூனிக் குறுகி அமர்ந்திருந்தாள். நித்தியாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எவ்வளவு நல்ல பெண் சியாமளா. இப்படியாகி விட்டாளே  என்று இரக்கம் ஏற்பட்டது. அவளுக்கு சியாமளா கூறியதை முதலில் நம்ப முடியவில்லையாயினும் அவளே கண்ணீருடன் தன்முன்னே இருந்து கூறுவதை எப்படி நம்பாது விடுவது.

இருதலைக் கொல்லி ஏறும்பானாள்  நித்தியா. இருந்தாலும் தன்னை நம்பி அவள் வந்து தன் மனக் கிடக்கையைக் கூறும்போது சரியான ஒரு பதிலையும் வலுகாட்டளையும் அவளுக்குச் சொல்லி அவள் புரிந்துகொள்ள வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதனால், சரி பிரச்சனை இல்லை. முதல்ல என்ன குடிக்கிறீர். குடித்துவிட்டு ஆறுதலாகக் கதைப்பம் என்றுவிட்டு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள்.

மற்றும் நேரம் எனில் சியாமளாவும் குசினிக்கே வந்து இவளுடன் விடாது கதைத்துக்கொண்டு இருப்பாள். இன்று அவள் எழுந்து வரவுமில்லை. இவளும் கூப்பிடவும் இல்லை. தேநீர் தயாரித்து முடித்து முதல் நாள் செய்த ரோள்சும்  கொண்டுபோய் அவள்முன் வைக்க, சியாமளா நித்தியாவை நிமிர்ந்து பார்த்த பார்வையில் என்னை நீ கேவலமாக எண்ணவில்லைத்தானே என்னும் எதிர்பார்ப்புடனான கேள்வி தெரிந்தது.

நித்தியாவும் அதைப் புரிந்துகொண்டு, முதல்ல சாப்பிட்டுத் தேத்தண்ணியைக் குடியும். நாங்கள் வடிவாக் கதைப்பம் என்று அவளை இலகுவாக்க முயன்றாள். ஒருவாறு அவளின் பதட்டம் குறைந்துவிட்டது என்று அறிந்ததும், சியாமளா எதோ நடந்தது நடந்துவிட்டுது. நீர் செய்தது சரி பிழை என்பதுக்கும் அப்பால் இனியாவது நீர் உம்பாட்டில் இருப்பதுதான் நல்லது என்று கூறு முன்னரே, அதுதான் என்னால் முடியவில்லையே. என்னை தருண் ஓரம் கட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. எப்பிடி எல்லாம்  என்னோட கதைச்சவர். இப்ப இப்பிடி இடை நடுவில விட்டா நான் செய்யிறது. எனக்கு ஒரு வேலையும் ஓடுதே இல்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டா இதே நினைப்பாக் கிடக்கு. இப்ப கணவர் கூட ஏன் ஒருமாதிரியா இருக்கிறாய் என்று கேட்கத் தொடங்கீட்டார். எனக்கு என்ன செய்யிறது எண்டே தெரியவில்லை என்று அழத்தொடங்கினாள்.

சியாமளா நீர் ஒண்டை வடிவா விளங்க வேணும். அவனும் ஏற்கனவே கலியாணம் கட்டி இரண்டு பிள்ளை இருக்கு எண்டு சொல்லுறீர். மனைவி பிள்ளையில அன்பும் இருக்கெண்டு சொல்லுறீர். இப்ப அவனுக்குத் தான் செய்யிறது பிழை  எண்டு  படுதோ தெரியாது. அதுக்குப் பிறகு நீர் அவனை போஸ் பண்ணுறது நல்லதில்லை.

நான் என்ன அவரை மனிசி பிள்ளையளை விட்டுவிட்டு வாங்கோ என்றா சொல்லிறன். என்னோட கதைச்சதுபோல தொடர்ந்தும் கதையுங்கோ அன்பு செலுத்துங்கோ எண்டுதானே. உப்பிடிப் பட்டவர் ஆரம்பிக்க முதல் எல்லோ யோசிச்சிருக்க வேணும்.என்னால அருணை மறக்க முடியேல்லை. எனக்கு உதவி செய் நித்தியா என்று கெஞ்சு  பவளுக்கு  எப்படிப் புரியவைப்பது என்று நித்தியாவுக்குப் புரியவில்லை.

நான் ஒன்று சொன்னால் அது உமது நன்மைக்கே என்று நினைத்து நான் சொல்லுறதை வடிவாக் கேளும் சியாமளா. நீர் தருணை மறக்கிறதுதான் நல்லது. உமக்கு ரண்டு பிள்ளைகள் இருக்கினம். அவர்கள் பாவம். நீர் உவனை நினைச்சு அதுகளைத் தண்டிக்கப் போறீரோ?? நித்தியா நிறுத்தமுதல் மீண்டும் அழுகையுடன் அவனை மறக்கவே என்னால் முடியாது அதைவிடச் செத்துப் போகலாம் என்றவளை, என்ன விசர்க் கதை எல்லாம் கதைக்கிறீர். கடவுள் உமக்கொரு நல்ல வாழ்க்கையைத் தந்திருக்கிறார். அதைக் காப்பாற்றிக்கொள்ளும். எனக்குத் தெரிஞ்ச ஒரு இந்தியப் பெண் இருக்கிறார். நன்றாகக் கவுன்சிலிங் செய்வார். நீர் அவனை முற்றாக மறக்க கட்டாயம் முடியும். நானே உம்மை அவவிடம் கூட்டிக் கொண்டு போறான். என் கணவருக்குக் கூட இந்த விசயத்தைச் சொல்ல மாட்டன் என்றதும் எனக்குச் சத்தியம் செய்யும் என்று சிறு பெண்போல் கையை நீட்டினாள். அவள் நம்பிக்கையைக் கெடுப்பான் எனென நித்தியாவும் சத்தியம் செய்து கொடுத்தது மட்டுமன்றி, அவள் மேல் அக்கறை கொண்டு அவளைக் கவுன்சிலிங்குக்கும்  கூட்டிக் கொண்டு போனாள்.

 

 

தொடரும் ..........

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி கரன். நான் தொடரும் போட மறந்துவிட்டேன் தொடர் இன்னும் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

 

 

இரவில் இவள் தூக்கம் தொலைத்து அருணின் தொலைபேசிச் செய்திக்காய் காத்திருக்க, எல்லாம் மறந்து அவன் இன்பமாகத் தூங்கினான்.காலையில் அவன் தொலைபேசிக்காகக் காத்திருக்க, எனக்கு காலையில் யாருடனாவது கதைப்பதென்றால் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என்று அவன் கூறியதை இவள் மனம் ஏற்க மறுத்தது. ஏனெனில் இத்தனை நாட்கள் பிடித்த விடயம் எப்படித் திடீரெனப் பிடிக்காது போயிற்று என்ற கேள்வி இவள் மனதில் எழுந்து இவள் நின்மதியைத் தொலைத்தது. முன்பெனில் மணிக்கணக்காக எந்தவிதச் சலிப்புமின்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.

நித்தியாவும் அதைப் புரிந்துகொண்டு, முதல்ல சாப்பிட்டுத் தேத்தண்ணியைக் குடியும். நாங்கள் வடிவாக் கதைப்பம் என்று அவளை இலகுவாக்க முயன்றாள். ஒருவாறு அவளின் பதட்டம் குறைந்துவிட்டது என்று அறிந்ததும், சியாமளா எதோ நடந்தது நடந்துவிட்டுது. நீர் செய்தது சரி பிழை என்பதுக்கும் அப்பால் இனியாவது நீர் உம்பாட்டில் இருப்பதுதான் நல்லது என்று கூறு முன்னரே, அதுதான் என்னால் முடியவில்லையே. என்னை தருண் ஓரம் கட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. எப்பிடி எல்லாம்  என்னோட கதைச்சவர். இப்ப இப்பிடி இடை நடுவில விட்டா நான் செய்யிறது. எனக்கு ஒரு வேலையும் ஓடுதே இல்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டா இதே நினைப்பாக் கிடக்கு. இப்ப கணவர் கூட ஏன் ஒருமாதிரியா இருக்கிறாய் என்று கேட்கத் தொடங்கீட்டார். எனக்கு என்ன செய்யிறது எண்டே தெரியவில்லை என்று அழத்தொடங்கினாள்.

 

 

 

அருணோ தருணோ வடிவாய் ஒரு பெயரை செலக் பண்ணுங்கோ நண்பி, இரண்டும் நல்ல பெயர் தான்  :D தொடருங்கோ பிள்ளை!

 

 

 

Link to comment
Share on other sites

நித்தியா கணவருக்கு சொல்லமாட்டன் எண்டுபோட்டு யாழ்களத்தில் சொல்லுவது தவறில்லையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியா கணவருக்கு சொல்லமாட்டன் எண்டுபோட்டு யாழ்களத்தில் சொல்லுவது தவறில்லையா? :D

 

வருகைக்கு நன்றி இசை . கதையை முழுதும் வாசிச்சிட்டு சொல்லுங்கோ. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்க் கொசிப் முழுக்க சுமோவுக்கு தெரியும் போல :lol: கவனம் :( கதை சுவாரசியமாகப் போகுது :) தொடருங்கள்

Link to comment
Share on other sites

நான்கு தரம் தனிமையில் சந்தித்தது எந்த மட்டில் போனது? :rolleyes: அடுத்த பகுதியில் எழுதுங்கோ.. :D

 

இதுக்கு 2ம் பகுதியில் விடை இருக்கு. அந்த மட்டில் போன படியால் அருண்/தருண் இப்ப கதைக்கிறார் இல்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு 2ம் பகுதியில் விடை இருக்கு. அந்த மட்டில் போன படியால் அருண்/தருண் இப்ப கதைக்கிறார் இல்லை. :D

 

அப்ப அந்த மட்டில் போனா ஆண்கள் பிறகு கதைக்க மாட்டினம் எண்டு நீங்கள் சொல்லத்தான் தெரியுது. :lol:

 

Link to comment
Share on other sites

அப்ப அந்த மட்டில் போனா ஆண்கள் பிறகு கதைக்க மாட்டினம் எண்டு நீங்கள் சொல்லத்தான் தெரியுது. :lol:

இதிலென்ன சந்தேகம்? இப்படி உறவு வைத்தால் அதுக்கு தானே. பின்னே என்ன தெய்வீக காதல் என்று சொல்றீங்களா? :D 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஒரு மாதம் சென்றிருக்கும். சியாமளா விபத்தில்  இறந்துபோயிருந்தாள். கேட்டவுடன் இவளுக்கு என்ன செய்வதெனத் தெரியாது கண்ணீர்தான் எட்டிப் பார்த்தது.
சியாமளாவின் கணவனை நினைக்கவே நித்தியாவுக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் வீட்டுக்குச் சென்றபோது கணவன்  இருந்த நிலையைப்  பார்க்க இவளுக்கு அடிவயிறு பிசைந்தது. பிள்ளைகள் இருவரும் முழுதாக எதுவும் விளங்காது தந்தைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். கணவனுக்கு இவள் ஏதாவது கூறியிருப்பாளா???இவள் தனக்குள் தானே எண்ணிக் குழம்பிக்கொண்டு இருந்தபோதுதான் மூன்றாம் நாள் இவளுக்கு ஒரு கடிதம் வந்தது. பின் விலாசம் இடாது யாராயிருக்கும் என்று யோசனையுடன் கடிதத்தைப் பிரித்தவளுக்கு படபடப்பு ஏற்பட்டு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

சியாமளா தான் எழுதியிருந்தாள். நித்தியா எனக்கு இப்ப நம்பிக்கையான ஒரே ஆள் நீர்தான். தருணை என்னால மறக்கவே முடியவில்லை நித்தியா. என் நினைவு முழுவதும் அவன்தான் ஆக்கிரமித்து இருந்தான். விடிய கண் முழிச்சு இரவு நித்திரை கொண்டபின்னும் கூட அவனையே நினைத்துக்கொண்டிருந்தேன். என் நிலை உமக்குச் சொல்லி விளங்காது. அவன் என்னை வெறுத்ததைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கும். ஆனால் அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்ததை தற்செயலாக நான் அறிய நேர்ந்தது. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படி நான் அதை அறிந்தேன் என்று எண்ணுகிறாய் என்று தெரிகின்றது.

அவனது வீட்டுத் தொலைபேசி இலக்கம் தந்திருந்தான். அவனது மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எக்காரணம் கொண்டும் எதுவும் கூற மாட்டேன் என சத்தியம் செய்த பின் அவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவனுடன் அந்த இலக்கத்தில் கதைப்பேன். அவன் என் தொலைபேசிக்கு பதில் தராது விட்டபின் நானும் முகப்புத்தகம், skype என்று எதிலாவது அவனுடன் தொடர்புகொள்ளப் பார்த்தால், அதையும் தடைசெய்துவிட்டான். மெயில் ஐ வேறு புளோக் செய்துவிட்டான்.

எனக்கு வேறு வழியின்றி அவனது வீட்டு எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன்.என் குரலைக் கேட்டதும் உடனே நிறுத்திவிட்டான். மீண்டும் மீண்டும் நானும் போனை எடுத்தேன். இனிமேல் எடுக்காதை என்று எத்தினைதரம் சொல்லுறது என்றபடி போனைக் கட் செய்துவிட்டான். மீண்டும் நான் எடுத்தபோது கோவத்தில் அவன் மாறி வேறு பட்டினை அழுத்திவிட்டு நிற்பாட்டியதாக எண்ணிக்கொண்டு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான். அது ஒரு பெண். என்னைப் பற்றி மிகக் கேவலமாக அந்தப் பெண்ணுக்குக் கூறிக்கொண்டிருந்தான்.

அப்பெண்ணும் என்னைப் போலவே பயித்தியம் பிடித்து இவனுக்குப் பிதற்றிக் கொடிருப்பதை கேட்டதுமுதல் என் மனம் என்னிடம் இல்லை. எத்தனை பெரிய நம்பிக்கையுடன் அவனுடன் பழகினேன். கோபம் ஆறியவுடன் மீண்டும் என்னுடன் கதைப்பான் என்று இருந்த நம்பிக்கையும் தகர்ந்து போனது. அவனை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்னும் வெறிதான் எனக்கு எழுந்தது. ஆனாலும் அதனால் என் கணவரோ பிள்ளைகளோ பாதிக்கக் கூடாது என்பதாலேயே எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போகாது வீதியைக் கடக்கும்போது விபத்துப் போல் வீதியில் பாய்ந்தேன்.  அவனிடம் நீர்தான் கூறவேண்டும். உன்னால் ஒருத்தி தற்கொலை செய்து  கொண்டாள் என்று.  அவன் இனிமேலும் இன்னொரு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. இந்த உதவியை நீர் எனக்குச் செய்தாலே என் ஆத்தமா இவ்வுலகை விட்டுப் போகும் என்று முடித்திருந்தாள்.

 தான் மடை வேலை செய்ததும் அல்லாது என்னையும் தேவை இல்லாமல் மாட்டி விடுகிறாளே என்று நித்தியாவுக்கு அவள் மேல் கோபம்தான் வந்தது. அவள்தான் இறந்துவிட்டாளே அவள் எழுதியதை பெரிதாக எடுக்கக் கூடாது என எண்ணி
பேசாதிருந்தவளுக்கு, கனவில் சியாமளா வந்து வெருட்டுவது போல் இருந்தது. தன் மனப் பயம் தான் இப்படி என்ன வைக்கிறதோ என்று எண்ணியவள், பிறகும் எதற்கும் அவனுடன் கதைத்துப் பார்ப்போம் என்று எண்ணி சியாமளா எழுதியிருந்த தொலைபேசி எண்ணுக்கு அவனுடன் கதைக்க அழுத்தினாள்.

இவள் சியாமளாவின் நண்பி என்றதும் மூன்று தடவைகள் போனை கட் பண்ணியவன், உங்கள் விலாசம் எனக்குத் தெரியும் என்று கூறியதும் தொய்ந்துபோன குரலில் என்ன என்றான். நித்தியாவும், சியாமளா போலீசுக்குக் குடுக்கச் சொல்லி எனக்கு ஒரு கடிதம் எழுதித் தந்திருக்கிறாள் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி அவனைத் திட்டித் தீர்த்தாள். அவனோ நான் என்ன செய்ய விருப்பமில்லாட்டி எப்பிடிக் கதைக்கிறது என்றான். அதை அவளோட கதைக்க முதலே யோசிச்சிருக்க வேணும். பெண்கள் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்கள்.எல்லாப் பெண்களாலும் ஏமாற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது. கணவன் இருக்க அவள் உங்களுடன் கதைத்தது தவறுதான். ஆனால் அதற்கு நீங்களும் ஒரு காரணம்தானே. ஒரேயடியா அவளை ஒதுக்காமல் கொஞ்சம் கொஞ்சமா குறைத்திருக்கலாம். அவளைப் போல இன்னொருத்தியையும் ஆக்கிப் போடாதேங்கோ தயவுசெய்து. உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கினம். இனிமேலாவது திருந்தி வாழுங்கோ. உப்பிடியான தவறுகள் ஏற்படாமல் இருக்கத்தான் எங்கட சமூகத்தில கட்டுப்பாடுகளை வச்சிருக்கினம். அது எல்லாருக்கும் நன்மைக்கே என்று தன் பிரசங்கத்தை முடித்தவள், இனியாவது உங்கள் குடும்பத்தை மட்டும் பாருங்கோ என்று கூறி வைத்துவிட்டாள். அவன் எதுவும் பேசாது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தான். அவன் திருந்துவானா மாட்டான என்பதற்குமப்பால் சியாமளா சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்தியதால் நித்தியாவின்  மனதில் ஒரு நின்மதி பரவியது.

முடிந்தது

Link to comment
Share on other sites

ஏன் காவல்துறைக்கு தெரியப்படுத்தவில்லை நித்யா?? அதைவிடடிட்டு பெண்மை, மென்மை, வன்மை என்றிட்டு.. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. / பாலி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.