Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த திசையில் தலை வைத்து உறங்க வேண்டும்?

Featured Replies

எந்த திசையில் தலை வைத்து
 உறங்க வேண்டும்?
எந்த திசையில் தலை வைத்து உறங்க  கூ டாது?
thayavu seithu yaaravathu sollunko

வடக்கே தலை வைத்தால் மாகாண சபை தொல்லை, கிழக்கே தலை வைத்தால் கேட்கவே வேண்டாம்.

தெற்கே தலை வைத்தால் சீனன் தொல்லை. மேற்கில் புத்தன்.

 

சுகமாக தூங்க வேண்டியது உங்கள் அன்புக்கினியவனின் மடி.

வடக்கே தலை வைத்தால் மாகாண சபை தொல்லை, கிழக்கே தலை வைத்தால் கேட்கவே வேண்டாம்.

தெற்கே தலை வைத்தால் சீனன் தொல்லை. மேற்கில் புத்தன்.

 

சுகமாக தூங்க வேண்டியது உங்கள் அன்புக்கினியவனின் மடி.

விவகரமாக நினைக்கப்போறங்கள், :D  அன்புக்கினியவளின் மடி .

  • கருத்துக்கள உறவுகள்

தலையணை உள்ள பக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

 

எந்த திசையில் தலை வைத்து
 உறங்க வேண்டும்?
எந்த திசையில் தலை வைத்து உறங்க  கூ டாது?
thayavu seithu yaaravathu sollunko

 

 

கிழக்கு,மேற்கு அல்லது மேற்கு,கிழக்காக தலை வைத்துப் படுக்க வேண்டும்
 
அது சரி படுப்பதற்கும் வலையில் உலகத்திற்கும் என்ன சம்மந்தம் :unsure:

ச்சே.. யாழ் களத்திலே எவருக்குமே கேட்ட கேள்விக்கு உருப்படியாய் பதில் சொல்லத் தெரியேல.. எனக்கும்தான்!

வடக்கு காந்த மூலை என்பதாம் வடக்கு தெற்க்கா தலை வைக்க கூடாது கிழக்கு மேற்க்குதான் பூமியின் சுழற்ச்சி இருப்பதால் உடல் சீரக இருக்கும் உறங்கும்போதும் .

 

என்று நான் சொல்லுறன்

:D

இப்ப என்ரை வீட்டில எந்தப் பக்கம் கிழக்கு? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தவீடு கிழக்கு
உறவினர்வீடு தெற்கு
தூரதேசம் என்றால் மேற்கு

 

என்று பழைய காலத்தில் கூறுவார்களாம்
 

வடக்கு மட்டும் தலை வைத்து உறங்கக்கூடாதாம்
அது இயமனின் திசையாம் :D

 

ஆனால் வடக்குத் திசையில் இருந்துவரும் ஈர்ப்புச் சக்தி தலையில் பட்டாலும்

கூடாதென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்களாம்
இணையத்தில் வாசித்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்குத்திசை அவ்வளவு நல்லதில்லையெண்டுதான் ஊரிலையும் கதைக்கிறவை.இதுக்கு விஞ்ஞானவிளக்கமும் இருக்கு.........சமயவிளக்கமும் இருக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

baby-sleeping1.jpg?w=642&h=508உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம்.
சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.
விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் ‘அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும்.
தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.
வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது, மேற்கு.
பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது, தெற்கு.
எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம்! வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர்.
நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம்.
தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.
தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும்.
இதது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.
எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.
இரவில் தூங்கினால், பூமி குளிர்ச்சி அடைவதுபோல, உழைப்பினால், உடம்பில் ஏற்பட்ட வெப்பம் நீங்கி, உடல் குளிர்ச்சியாகும்.

http://senthilvayal.wordpress.com/2010/06/26/10-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

  • தொடங்கியவர்

விளக்கமான இணைப்பிற்கு நன்றி நுனாவிலான். அனைவருக்கும் நன்றி 

இப்ப என்ரை வீட்டில எந்தப் பக்கம் கிழக்கு? :blink:

 

:lol: :lol: :lol:

இதே குழப்பந்தான் எனக்கும். திக்குத் திசை தெரியாமலேயே இத்தனை நாளை ஓட்டிட்டமே... :rolleyes::lol:

:lol: :lol: :lol:

இதே குழப்பந்தான் எனக்கும். திக்குத் திசை தெரியாமலேயே இத்தனை நாளை ஓட்டிட்டமே... :rolleyes::lol:

 

நான் ஐபோனிலுள்ள திசைகாட்டி மூலம்தான் திசையைக் கண்டுபிடித்தேன். இந்தத் திரியை வாசித்த பின்பு, அதன் மூலம் பரிசோதித்துப் பார்த்த பொழுது, கடந்த ஒரு வருடமாக வடக்குத் திசையில் தலை வைத்துப் படுத்திருக்கிறேன்.   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.