Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :unsure: :unsure: .

 

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதன் பெயர் முதலி மரம்.. :unsure:

Spoiler
சும்மா அடிச்சு விடுறதுதானே.. :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இத்தி மரம் ! :)

  • தொடங்கியவர்

ஆலமரம்

 

வணக்கம் பிள்ளையள் !!  எல்லாரும் நல்லாய்தான் கஸ்ரப்பட்டுப் போனியள்  :D .  இந்த மரத்துக்கு என்னுமொரு சாட்சி செம்பும் நாலைஞ்சு பேரும்தான் . அதைத் தான் டங்கு மறைமுகமாய் " முதலி மரம் "  எண்டு சொன்னார் :lol::D  . அண்ணாச்சி முதல் சொன்னதால அவருக்கு பரிசு போகுது :) .

 

  • தொடங்கியவர்

16 இலுப்பை மரம் அல்லது இருப்பை அல்லது குலிகம் (Madhuca longfolia or Bassia longifolia)

 

 

Madhuca_indica_(Mahua)_in_Hyderabad,_AP_

 

 

இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.

இலுப்பை மரம் கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய வன்மையான மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. விதையிலிருந்து எடுக்கக் கூடிய திருவிளக்கெரிக்கப் பயன்படும் எண்ணெய்க்காக திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது.

இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும் , பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும். கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன அற்புதமான மரம் இது. பொதுவாக ஆல், அரசு... போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இலுப்பையும். அதனால்தான் இத்தகைய மரங்களை நம் முன்னோர்கள் அதிகளவில் வளர்த்து வந்தார்கள். மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலுப்பை எண்ணெய் மூலம்தான் விளக்கு எரித்தார்கள். உலர வைத்த இலுப்பைப் பூவை சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தினர். ஆனால், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்கள், தற்போது வழக்கொழிந்து கொண்டு வருவதுதான் வேதனை.

 

http://en.wikipedia.org/wiki/Madhuca_longifolia

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நாவல் மரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கு மரம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 இலுப்பை மரம்.

இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் :)

இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் :)

இல்லாததும் இருப்பதும் எப்படி ஒன்றாகலாம்?

 

இல்+உப்பை எப்படி இரு + உப்பை யாகலாம்? :unsure:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கத்தாப் பூ  மரம் ....( ஊரில்) ...

 

 

.ஒரு  வகை தேக்கு மரம்

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :unsure: :unsure: .

  • தொடங்கியவர்

 இலுப்பை மரம்.

 

வணக்கம் பிள்ளையள் !!  செரியாத்தான் களைச்சுப்போனியள் . என்ன செய்ய ? எக்கச்சக்கம் மரங்களைத் துலைச்சுப்போட்டு நிக்கிறம்  :(  . இப்பத்தையானுகளுக்கு விளக்கெண்ணையும் , இலுப்பை புண்ணாகும் தெரியுமோ ? எண்டு கேட்டுப்பாருங்கோ  :unsure:  .  எங்களுக்கு மண்டை களண்டு போச்சுதோ எண்டு கேக்குங்கள் :lol: .  இதிலை தமிழினியும் நல்ல மறுமொழி சொன்னியள் .  ஆனால் நுணா முந்தீட்டாரே !!! ஆனாலும் உங்களை இலுப்பையின்ரை மற்றப் பேரை சொன்னதுக்கு மிச்சம் பாராட்டுறன் கண்டியளோ  :D  .

 

  • தொடங்கியவர்

17 இஞ்சி (  Ginger   Zingiber officinale )

 

v1r1.jpg

 

காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்
மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலைவீசி
நடப்பான் மிடுக்காய்.

உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.
இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.
கடுமையான கார ருசி உடையது. இது  , தீரும் நோய்கள்:பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் போன்ற வாதைகளைக் குணப்படுத்த வல்லது .

நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

 

உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

 

http://en.wikipedia.org/wiki/Zingiber_officinale

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சிச் செடி 

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சிச் செடி

உண்மைதான்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள்  செடி!! :D

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி இல்லை என்று மாத்திரம் கோமகன் சொல்லட்டும். நடக்கிறதே வேறை :D நான் வீட்டில் வளர்த்தேன் அதனால்த்தான் உடனே எழுதினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மஞ்சள்  எண்டு நான் சொல்லுறன்.......இல்லையெண்டு சொன்னால் ஐசே கோமகன் கொலைவிழும்....கொலைவிழும்.......கொலைவிழும்.......கொலை....ஆஆ....கொலை....tr-mar28-2008.jpg   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி  செடி.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி இல்லை என்று மாத்திரம் கோமகன் சொல்லட்டும். நடக்கிறதே வேறை :D நான் வீட்டில் வளர்த்தேன் அதனால்த்தான் உடனே எழுதினேன்.

 

இஞ்சி என்று மாத்திரம் கோமகன் சொல்லட்டும் ஓடுறதே வேறை! :D நான் பொங்கள் பாணைக்கு கட்டினேன் அதனால்தான் உடனே எழுதினேன்.

  • தொடங்கியவர்

அது மஞ்சள்  எண்டு நான் சொல்லுறன்.......இல்லையெண்டு சொன்னால் ஐசே கோமகன் கொலைவிழும்....கொலைவிழும்.......கொலைவிழும்.......கொலை....ஆஆ....கொலை....tr-mar28-2008.jpg   :lol:

 

ஆளாளுக்கு தாதாக்கள் எரியாவிலை கூடீட்டாங்கள் .

 

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :unsure: :unsure: .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் வரவர ஒழுங்கில்லை. நேரகாலத்துக்கு மரத்தைப் போட்டால் நாங்களும் வேற அலுவல் பாக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.