Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்படாக அமையாது – சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமி;ழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்டவீரர் என ஸ்ரீதரன் பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தேசிய இனப்பிரச்சினைக்கான கட்சியின் தீர்வுத் திட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீதரன் உணர்வுபூர்மாக கருத்து வெளியிட்டிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத் தேர்தல்களின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஓர் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனும் இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் அண்மையில் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99594/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தலைவர் என்பது எல்லோரினதும் நிலைப்பாடல்ல

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. ஏன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் அல்ல. உது சம்பந்தன் ஐயா.. சுமந்திரன் போன்ற ஒரு சிலரின் நிலைப்பாடு. சிறீதரின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடு. உலகத் தமிழரின் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் வரும்வரை  காத்திருப்போம்

அதுவரை

தமிழ் மக்களின் வாழ்வுக்கான  உத்தரவாதங்களைத்தேடணும் கூட்டமைப்பு.

அதைவிடுத்து

தேவையற்ற  வாதங்கள்

மறுப்பறிக்கைகள் என நீண்டு

தமிழ் மக்களின் நம்பிக்கையையும்

ஒரே ஒரு துரும்பு சீட்டையும் பலவீனப்படுத்தக்கூடாது...

காலத்தின் தேவையறிந்து எல்லோரும் பொறுப்புடன்  நடக்கவேண்டிய  காலமிது.

இல்லாது விடில் ஒரு நாள் பதில் சொல்லியே  ஆகவேண்டும்

சிரிப்புத்தான் வருது.

 

 

யாராவது கடும் போக்கு சிங்களவன் அறிக்கை விட அதை தொடர்ந்து மகிந்த வந்து அது அவர்களின் கருத்து சுதந்திரம் என்று கதைத்து இன்னும் காயவில்லை.

இதை எழுதும்போது அவுஸ்திரேலிய எ.பி.சி தொலைக்காட்சியில் இலங்கை பற்றியும் யுத்தத்தில் இறந்த இழந்த இழப்புக்கள் எல்லாத்துக்கும் கணக்கெடுப்பு நடக்கவுள்ளதாம். 

 

இதை பி.பி.சி ன் செய்தியாளர் (ஒரு தமிழரும்) இருந்து செவ்வி குடுத்துகொண்டிருக்கிறார். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு அறளை பேந்து விட்டது.சிங்க்கொடியைத்தூக்கிப் பிடித்தார்.அவர் அதைத் தெரியாமல் பிடித்தார் என்று மாவை சமாளிப்பு அறிக்கை விட்டார்.அடுத்தநாளே தெரிந்துதான் கொடியைப் பிடித்தேன் என்று மாவையின் காலை வாரிவிட்டார்.இன்று சிறிதரனின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று என்று சிறிதரனின் காலை வாருகிறார்.வாக்குபோட்ட சொந்த மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிங்களப் பாதுகாப்பு படைகளின் உதவியுடன் பின் வாசல் வழியாக ஓடுகிறார்.சம்பந்தரின் கருத்து தமிழ்மக்களின் கருத்து அல்ல.

விக்னேஸ்வரன் கூட சம்பந்தரில் இருந்து தள்ளி இருக்கிறதுதான்  விக்னேஸ்வரனுக்கும்  தமிழ் மக்களுக்கும் கூட நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என தமது கட்சி எம்.பி. கூறியது அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து அல்ல” என்று தெரிவித்துள்ளார், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

விடுதலைப் புலிகள் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அக்கட்சியின் தலைவராக அப்போது இருந்தவரும் இதே இரா.சம்பந்தன்தான். இலங்கையில் யுத்தம் முடிந்தபின் தேர்தல் காலங்களில் மட்டும் விடுதலைப் புலிகளை சிலாகிப்பது இக் கட்சியின் சமீபகால வழக்கம்.

இந்த நிலையில், சமீபத்தில் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

canada_11813_11-500x250.jpgஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், “எமது கட்சி எம்.பி., பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு உணர்ச்சி வசப்பட்டு கருத்து வெளியிட்டிருக்கக் கூடும். ஆனால், எமது கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல.

கடந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை (அடேங்கப்பா!).

எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படியான கருத்தை தெரிவிக்கப்போகிறார் என்று முன்கூட்டியே எமக்கு தெரியவந்திருந்தால், இப்படியான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

DSCF8915.jpgஎன்னங்க இது?

தமிழகத்தில் பழ.நெடுமாறன் நேற்று, “அடுத்த யுத்தத்துக்கு தலைமை தாங்க வருகிறார் பிரபாகரன்” என்கிறார்.

இலங்கையில் பெரிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று, “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என்பது எமது கட்சியின் கருத்து அல்ல” என்கிறார்.

பழ.நெடுமாறன் அய்யாவுக்கு இந்த விவகாரத்தில் உள்ள பெரிய சிக்கல் என்ன தெரியுமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் அதற்காக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதந்திர போராட்ட வீரர் என்று சொன்ன அக்கட்சியின் ஸ்ரீதரன் எம்.பி.க்கு பாராட்டு தெரிவிக்க முடியாது.

Aug302012_7.jpg“போராடி உயிர் நீத்த பிரபாகரன்” என்றல்லவா பேசி தொலைத்திருக்கிறார் அந்த ஸ்ரீதரன் எம்.பி.!

http://nadunadapu.com/?p=29417

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தன் சிங்கள எஜமானர்கள் மகிழ்ச்சி அடைய.. குத்துக்கிரணம்.. குட்டிக்கரணம் அடிக்கிறதில பெரும் கில்லாடி. இல்ல மகிந்த கூட போன் போட்டு கதைக்கிற அளவுக்கு உறவு வைச்சிருக்க முடியுமோ..???! :lol::D


விக்னேஸ்வரனும் தேர்தல் காலத்தில் தேசிய தலைவர் பிரபாகரனை சுதந்திரப் போராளி என்று தானோ குறிப்பிட்டார்.  ஒரு சிங்கள சுதந்திரப் போராளியை ஒப்பிட்டு..! கட்சியின் கருத்து சம்பந்தனின் கருத்து அல்ல என்பது தான் இதில் புலப்படுகின்ற உண்மை. மக்களின் கருத்து கட்சியின் பெரும்பான்மையானோரின் கருத்தே சிறீதரனின் கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அடுத்த தேர்தல் எப்ப வருது

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சொன்னது ஒரு தரம் என்றால்

நம்ம  இணையக்காறர் 100  தரம் சொல்கிறார்கள்

நல்ல  வளர்ச்சி

நல்ல சேவை

தொடரட்டும்....... :(  :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு நீங்களும்தான் கூத்தமைப்புக்கு ஆலவட்டம் சாத்தினீர்கள் கடந்த தேர்தலில். சம்பந்து எப்போது சிங்கக்கொடியை கையில் எடுத்துதோ அன்றே, தனது நிறம் என்ன என்பதி ஊரறியச்சொல்லிப்போட்டுது. இதற்குமேல் என்ன கதைக்க இருக்கு. அடுத்தமுற ஏதாவது தேர்தல் வடக்குக் கிழக்கில் வந்தால், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சீரியவழியில் கொண்டுபோவதற்கான மாற்று அரசியல் அணி உருவாகாதபட்சத்தில்  எனது உறவினர்கள் அனைவரதும் வாக்குகள் டக்ளசுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர், விஜய் ஐநாவுக்கு அனுப்பிய மகஜரில் கை எழுத்து வைக்காததை பிரச்சனையாக்கினார்கள். விஜய் யார் என்று ஐநாவுக்குத் தெரியப் போகுதா என்ன? ஆனால் கடைசியில் அனுப்பிய மகஜருக்கு என்னாச்சு என்றே தெரியாது. இப்படித் தான் சமீபத்தில் சிலவிடயங்களை ஊதிப் பெருதாக்கி அதில் அடிபட்டுமுடிப்பது தான் சிலரின் வேலை. சம்பந்தர் பேச்சுக்கு ஏன் முக்கியம் கொடுக்க வேண்டும்.தவிர ஐயர் வாயில் குருவி இறகு இருந்தது என்றால், இந்த ஊடகங்கள், குருவி, பருந்து எல்லாம் வாயில் இருந்து பறந்தன என்று எழுதுவார்கள். இது சம்பந்தனை நியாயப்படுத்த அல்ல. இப்படிப் பிரச்சனைகளை ஏன் உள்ளுக்குள் இருந்து நொட்டை, சொட்டை வேலை செய்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அதற்காக ஐயர் குசுவினால் குற்றம் இல்லை என்பதல்ல. எப்போதும் எமது தலைவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாதவர்களாக இருத்தல்வேண்டும் என்பதை, பிரபாகரன் காலத்திலிருந்தே தமிழர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். சம்பந்தர் போகும்பாதை முற்றிலும் தவறு, இதற்கான முன்னுதாரணம் கமரோனது யாழ்ப் பயணத்தில் சம்பந்தருக்கெதிராக மக்கள் கலவரம் செய்தது. இனிமேல் இவர்கள் மக்களை ஏமாற்ற முடியாது. இந்தியாவின் ஏவலாளிகளாகவும் அடிவருடிகளாகவும் நீண்டநாட்களுக்கு மக்கள் மத்தியில் சந்தர்ப்பவாத அரசியலும் சிங்களவனுடன் இணக்க அரசியலும் செய்ய முடியாது. கூத்தமைப்பு இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழர் தாயகத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கான விடுதலைக் கோரிக்கையை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்வது அன்றேல் நாட்டைப் பிரித்துவிடச் சொல்வது அது சர்வதேச நாடுகளால் முடியாதவிடத்தே. உலகில் எங்காவது ஒரு மூலையிலாவது எமது மண்ணிற்கீடான பிரதேசத்தை எமது ஆழுமைக்காக ஒதுக்கித்தருவது. யூதர்களது தாயகம் நோக்கிய பயணத்தில் யூதர்களுக்கான ஒரு மாற்ரு நிலப்பரப்பை ஆபிரிக்க நாடு ஒன்றில் ஒதிக்கித் தரலாம் என ஆலோசனை வழங்கியதையும் அதற்கு அன்றைய யூதர்கள் தலைவர் ஒப்புக்கொள்ளாததையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை அமைதிப்படுத்த இவ்வாறு சொல்லிவிட்டார்.. :D இப்படிச் சொல்வதற்குப் பதிலாக, 'எமது கட்சியில் எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது' என்று சொல்லியிருந்தால் எல்லாத்தரப்பையும் ஒரே நேரத்தில் சமாளிக்கலாம்.. :rolleyes:

தமி;ழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்டவீரர் என ஸ்ரீதரன் பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99594/language/ta-IN/article.aspx

 

 

ஸ்ரீதரனின் உரையை ஐயா நெடுமாறனும், சீமான் அவர்களும் கண்டிக்கவில்லையா?!  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீதரனின் உரையை ஐயா நெடுமாறனும், சீமான் அவர்களும் கண்டிக்கவில்லையா?!  :o

ஸ்ரீதரன் வாய் தவறி சொல்லிவிட்டார் என்பதால், கண்டிக்கவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு நீங்களும்தான் கூத்தமைப்புக்கு ஆலவட்டம் சாத்தினீர்கள் கடந்த தேர்தலில். சம்பந்து எப்போது சிங்கக்கொடியை கையில் எடுத்துதோ அன்றே, தனது நிறம் என்ன என்பதி ஊரறியச்சொல்லிப்போட்டுது. இதற்குமேல் என்ன கதைக்க இருக்கு. அடுத்தமுற ஏதாவது தேர்தல் வடக்குக் கிழக்கில் வந்தால், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சீரியவழியில் கொண்டுபோவதற்கான மாற்று அரசியல் அணி உருவாகாதபட்சத்தில்  எனது உறவினர்கள் அனைவரதும் வாக்குகள் டக்ளசுக்கே.

 

 

கூட்மைப்பை இன்றும் ஆதரிக்கின்றேன்

ஆனால் எல்லா கூத்தையுமல்ல........ :( 

சம்பந்தருக்கு யாராவது சிட்டுக்குருவி லேகியம் வாங்கி கொடுங்கப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.