Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் அப்பாச்சியும் 2 .!

Featured Replies

grand+.jpgநான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி  பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் .

 

மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது பக்கத்துக்கு வீட்டு பெடியள் வந்து போனா முடிச்சுது கதை அந்த பெடிவந்தது புடுங்கி கொண்டு போட்டுது கள்ள பெடி வீடுவாசளுக்கு எடுக்க கூடாது என்று பழி அங்க விழும் நாம சோகமா குந்தி இருந்து கதை கேட்பம் ஓமன ஆச்சி அவன் வர நீ என்ன செய்தனி பார்க்காமல் என்று இன்னும் கொளுத்தி போடுறது நம்ம வேலை பாருங்கோ .

 

அப்பாச்சியின் கைவந்த கலை ஓட்டப்பம் சுடுவது ஒரு 20வருடமா நான் இன்னும் அப்படி ஒரு அப்பம் சாப்பிடவே இல்லை உடைச்ச சட்டியில் ஊற்றி சிரட்டையால் மூடி எடுக்க அந்த அப்பத்தில் பல நூறு ஓட்டை இருக்கும் நல்ல தேங்காய் பாலும் சீனியும் கலந்து அதில் தொட்டு சாப்பிடும் ருசி வாழ்வில் இன்றைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு காலமா போட்டுது .என்ன சமையல் செய்தாலும் வாசனை நாலுவீடு தள்ளி மணக்கும் கைப்பக்குவம் உள்ள ஆள் ஆச்சி என்னமோ தெரியல்ல அளவான பாசமும் கூடிய அன்பும் கொட்டி கொடுபதால் எனக்கு சுவையா இருந்து இருக்கும் என்று இப்பொழுது தோன்றுவது உண்டு .

 

உள்ள பனைமரம் எல்லாம் ஏறி கிளி பிடிக்க நெஞ்சு எல்லாம் உரிச்சு கை எல்லாம் கீறி கிழிபட்டு வீட்டுக்கு வருவன் அம்மா கண்டா ஓட ஓட அடி விழும் என்கிற பயத்தில் வீடுக்கு புறத்தால் செக்கல் பொழுதில் வந்து பதுங்கி இருக்கிறது அப்பாச்சி கோயிலா வரும்வரை வந்தபின்தான் ஓடிபோய் அவா பின்னாடி நின்று பாதுகாப்பை தேடி ஆயிரம் பொய் எல்லாம் சொல்லி அம்மாவை சமாளிச்ச பின்னே வீட்டுக்கு உள்ளே போகலாம் இல்லது கிளுவம் தடி முறியும் முன்னாடி போய் மாட்டினா பாருங்கோ .அம்மா அடிக்கவேணும் என்று முடிவு எடுத்தா இரவு பாய்க்கு கிழே தடி முறிச்சு வைத்து இருப்பா படுக்கைக்கு போக எட்டி கையில பிடிச்சு சுற்ற தொடங்கினா கொப்பளம் வரும்வரை விழும்   என்று தெரியும் ஆச்சிக்கு எனக்கு வேவு பார்க்கிறது கிழவிதான் அட பெடி அம்மா தடி முறிச்சவா பின்னேரம் நீ இன்று எனக்கு அருகில பேசாமல் படு அங்க போன நான் பிடிக்க வரமாட்டன் என்று முதலே தகவல் தந்துடுவா .

 

 

நான் அடிக்கடி கிழவியின் சங்கிலி ...தோடு ..மோதிரம் .எல்லாம் நீனு செத்தா எனக்கு தானே என்று சொல்லுவன் இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி வை அல்லது மகனிட்ட சொல்லி வை என்று பகிடியா சொல்வது உண்டு அதுக்கு ஆச்சி சொல்லுவா நான் சாகிற காலம் நீ என்னை எப்படி பார்க்கிறாய் என்று பார்த்துதான் உனக்கு தருவன் அல்லது இல்லை என்று அப்படி அப்பாச்சி இறக்கும்போது 89 வயது கடைசி காலங்களில் கண் தெரியாமல் போயிட்டது குளிக்க தண்ணி நிறைத்து கொடுத்து, பேப்பர் வாசிக்கிறது; ஊர் புதினங்களை வந்து வக்கனையா சொல்லுறது ,எல்லாம் என்னுடைய வேலை அவியல் அப்படி இவையள் இப்படி அந்தபெடி அங்க நிக்கு யாரு யாரு கலியாணம் கட்டினம் யாரு தெருவில நின்று காதல் பண்ணினம் என்று கிழவிக்கு ஒன்றும் இல்லாமல் நான் வந்து சொல்லுவன் .

 

சிலவேளை தனிய இருப்பா வீட்டில் நான் வந்தா சத்தம் இல்லாமல் போய் மெதுவா சங்கிலியில் பிடிப்பன் என்ன செய்கிறா பார்ப்பம் என்று கிழவி சிரிச்சு போட்டு சொல்லும் உனக்குத்தான் கழட்டிக்கொண்டு போ என்று நான் பேசுறது இப்படி கள்ளன் வந்து செய்தா சத்தம் போடாமல் இப்படி சொல்லுவியா என்று அதுக்கு கிழவி சொல்லும் திருவாலி உன்னை தவிர எவனுக்கு என்னை தொடும் தைரியம் வரும் என்று ;யாருடைய மகள் என்று நினைச்ச என்று வீராப்பா சொல்லுவா .

 

சும்மா காச்சல் வந்தால் நான் அனுங்கி குனுங்கி கிடப்பேன் அண்ணன் சொல்லுவான் அவனுக்கு நெஸ்ட்மொட்  காச்சல் வந்திட்டு ஒன்று வாங்கி கரைத்து கொடுத்தா குளிசை போடாமல் மாறும் என்று நக்கல் பண்ணுவான் கிழவி தன்னிடம் உள்ள எல்லாம் புறக்கி செவினப் சோடாவும் .நெஸ்ட்மொட்டும் வாங்கி வந்து தலைமாட்டில் வைக்கும் உண்மைக்கும் இரண்டையும் கண்டால் கச்சல் போயிடும் எனக்கு :) பாசம் என்றால் என்ன என்று சொல்லி கொடுத்தவா ஆச்சி அப்படி வாழ்த்து காட்டி சென்றார் .

 

இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .

 

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு இந்தக் கொடுப்பினை இல்லை.நாம உலகத்துக்கு அறிமுகமாகும் போதே அப்பாவைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டே வந்தேன்.

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு,

இதை வாசித்த போது ஒரு ஏக்க பெருமுச்சு தான் வந்தது உண்மையை சொன்னால்.

நான் இவ்உலகுக்கு வரும்போது எனது பெற்றோரின் அம்மா,அப்பா போய் விட்டார்கள்.

 

ஆனால் எனது பிள்ளைகளுக்கு அவர்கள் இருந்தும் இப்படியான ஒரு அன்பு கிடைக்க கொடுத்து வைக்கவில்லை. :(

 

 

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு

 

 

 

Edited by நவீனன்

இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .  ////   நியாயமான கேள்வி . வைத்துப் பார்க்கவேண்டாம் , மற்றையவர்கள் முன் இது எனது அப்பா , இது எனது அம்மா என்று சொல்லி அங்கீகாரப்படுத்துவார்களா ??? இவர்களை சிதைப்பதில் ஊடகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதும் வலியான உண்மை . அப்பாச்சி 2 உண்மையிலேயே தொட்டது . வாழ்த்துக்கள் அஞ்சரன் தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடையில் முன்னேற்றம் தெரிகிறது.அவசரப்படாமல் எழுதியுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. அதனால் நன்றாகவும் உள்ளது.

  • தொடங்கியவர்

நமக்கு இந்தக் கொடுப்பினை இல்லை.நாம உலகத்துக்கு அறிமுகமாகும் போதே அப்பாவைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டே வந்தேன்.

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு,

 

நன்றி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் . 

 

இதை வாசித்த போது ஒரு ஏக்க பெருமுச்சு தான் வந்தது உண்மையை சொன்னால்.

நான் இவ்உலகுக்கு வரும்போது எனது பெற்றோரின் அம்மா,அப்பா போய் விட்டார்கள்.

 

ஆனால் எனது பிள்ளைகளுக்கு அவர்கள் இருந்தும் இப்படியான ஒரு அன்பு கிடைக்க கொடுத்து வைக்கவில்லை. :(

 

 

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு

 

நன்றி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் . 

 

என் கவலையும் இதுவே பிள்ளைகளுக்கு படம் காட்டி சொல்லு வைக்க வேண்டி இருக்கு :(

இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .  ////   நியாயமான கேள்வி . வைத்துப் பார்க்கவேண்டாம் , மற்றையவர்கள் முன் இது எனது அப்பா , இது எனது அம்மா என்று சொல்லி அங்கீகாரப்படுத்துவார்களா ??? இவர்களை சிதைப்பதில் ஊடகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதும் வலியான உண்மை . அப்பாச்சி 2 உண்மையிலேயே தொட்டது . வாழ்த்துக்கள் அஞ்சரன் தொடருங்கள் .

நன்றி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் . 

 

 

நிஜம் அண்ணா பலர் இப்படி செய்வதை நானும் நேரில் பார்த்து உள்ளேன் . :(

 

உங்கள் எழுத்து நடையில் முன்னேற்றம் தெரிகிறது.அவசரப்படாமல் எழுதியுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. அதனால் நன்றாகவும் உள்ளது.

 

நன்றி அக்கா உங்கள் கருத்து எதிர்பார்த்தேன் ஆதலால் மகிழ்ச்சி :)

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கம் நானும் வந்து உங்கள் கதையை வாசிச்சுட்டு போறனான்..எழுத்துப் பிழை,எக்ஸ்பிறஸ்ல எழுத்தை ஓட விட்டு எழுதுவது இவற்றைக் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நன்று அஞ்சரன்.தவறாக சொல்ல இல்ல, கவனத்தில் எடுக்க மட்டுமே சொல்கிறேன்..மற்றப்படி தப்பு செய்யாமல் திட்டு வாங்கின பிள்கைள் ரொம்ப பாவங்கள்.

  • தொடங்கியவர்

இந்த பக்கம் நானும் வந்து உங்கள் கதையை வாசிச்சுட்டு போறனான்..எழுத்துப் பிழை,எக்ஸ்பிறஸ்ல எழுத்தை ஓட விட்டு எழுதுவது இவற்றைக் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நன்று அஞ்சரன்.தவறாக சொல்ல இல்ல, கவனத்தில் எடுக்க மட்டுமே சொல்கிறேன்..மற்றப்படி தப்பு செய்யாமல் திட்டு வாங்கின பிள்கைள் ரொம்ப பாவங்கள்.

 

நன்றி யாயினி ...கண்டிப்பா உங்கள் அறிவுரை கவனத்தில் எடுக்கப்படும் கருத்துக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வாழ்ந்த இடத்துக்கும், அப்பாச்சி வாழ்ந்த இடத்துக்கும் இடையே பெரிய கடல் இருந்தது! இருந்தாலும், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் அப்பாச்சி வீட்டுக்குப் போகத் தவறியதில்லை! திரும்ப வரும்போது, கட்டாயம் ஒரு பனாட்டுககூடையும், புழுக்கொடியலும்,சீசனைப் பொறுத்து, ஒரு பெரிய பாரைக்கருவாடும் எப்போதும் தந்து விடப்படும்! ஒடியல் புட்டு. குரக்கன் புட்டு, கூழ், எல்லாம் அப்பாச்சியோட போனது தான்! :o

 

அப்பாச்சியின் நினைவை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் அஞ்சரன்!

  • தொடங்கியவர்

நாங்கள் வாழ்ந்த இடத்துக்கும், அப்பாச்சி வாழ்ந்த இடத்துக்கும் இடையே பெரிய கடல் இருந்தது! இருந்தாலும், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் அப்பாச்சி வீட்டுக்குப் போகத் தவறியதில்லை! திரும்ப வரும்போது, கட்டாயம் ஒரு பனாட்டுககூடையும், புழுக்கொடியலும்,சீசனைப் பொறுத்து, ஒரு பெரிய பாரைக்கருவாடும் எப்போதும் தந்து விடப்படும்! ஒடியல் புட்டு. குரக்கன் புட்டு, கூழ், எல்லாம் அப்பாச்சியோட போனது தான்! :o

 

அப்பாச்சியின் நினைவை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் அஞ்சரன்!

 

உண்மைதான் அண்ணா அவைகள் ஒரு வசந்தகாலம் .

 

நன்றி வரவுக்கும்  ..கருத்துக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய பிள்ளைகளுக்கு அந்தக் கொடுப்பிணை குறைவுதான்!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் தொடும் பகிர்வு இக் கால குழந்தைகளுக்கு எங்கே விளங்கக் போகிறது . மீண்டும் நினை வுகளை எண்ணி ஏங்க வைத்து விடீர்கள். எனக்கு இவைகள் கிடைக்கவே இல்லை. எல்லோரும் பரலோகம்போய் விட்டினம் கதைகளாக் கேள்விபட்டு ள்ளேன் . கொடுத்துவைத்த நீங்கள் . இங்கு எழுதவும் வைத்துவிட்டது. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி சுவி ..நிலாமதி வரவுக்கு ...உங்கள் கருத்துக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சயனின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. :icon_idea:

(இவரிடம் உள்ள  இந்த திறமையை  ஆரம்பத்திலிருந்தே கண்டு ஊக்குவித்தவன்  என்ற  வகையில்.)

நல்லதொரு  கலைஞனாக  வளர  வாழ்த்துக்கள்

எனக்கு

இரட்டிப்பு மகிழ்ச்சி............. :icon_idea:

  • தொடங்கியவர்

அஞ்சயனின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. :icon_idea:

(இவரிடம் உள்ள  இந்த திறமையை  ஆரம்பத்திலிருந்தே கண்டு ஊக்குவித்தவன்  என்ற  வகையில்.)

நல்லதொரு  கலைஞனாக  வளர  வாழ்த்துக்கள்

எனக்கு

இரட்டிப்பு மகிழ்ச்சி............. :icon_idea:

 

நன்றி அண்ணே ....நீங்கள் எல்லோரும் எனது எனர்ஜி :)

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை அப்பாச்சி கதை கோர்வை பிசகாமல் அழகாக எழுதப்பட்டுள்ளது. அவசரமில்லாத அப்பாச்சியின் கதை ஊரை மீளவும் கொண்டு வந்து அப்பாச்சிகளின் நினைவுகளைத் தந்து போகிறது.

  • தொடங்கியவர்

இம்முறை அப்பாச்சி கதை கோர்வை பிசகாமல் அழகாக எழுதப்பட்டுள்ளது. அவசரமில்லாத அப்பாச்சியின் கதை ஊரை மீளவும் கொண்டு வந்து அப்பாச்சிகளின் நினைவுகளைத் தந்து போகிறது.

 

நன்றி அக்கா .

 

அம்மம்மா, அப்பாச்சிகளின் பாசத்துக்கு ஈடிணையாக எதுவும் இருக்காது.

சென்றவருடம் என் அம்மம்மாவை இழந்தேன். "நீதான்டா எனக்கு கொள்ளி வைக்கோனும்...!" என்று என்னிடம்

எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிற மனிசிக்கு.... என்னால் அதை நிறவேற்ற முடியாத சூழ்நிலையில் நான் இருந்தேன். :(

 

 பல பழைய ஞாபகங்களை கிளறிவிட்டிருக்கிறது உங்கள் படைப்பு... மிக்க நன்றி அஞ்சரன்....!

 

  • தொடங்கியவர்

அம்மம்மா, அப்பாச்சிகளின் பாசத்துக்கு ஈடிணையாக எதுவும் இருக்காது.

சென்றவருடம் என் அம்மம்மாவை இழந்தேன். "நீதான்டா எனக்கு கொள்ளி வைக்கோனும்...!" என்று என்னிடம்

எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிற மனிசிக்கு.... என்னால் அதை நிறவேற்ற முடியாத சூழ்நிலையில் நான் இருந்தேன். :(

 

 பல பழைய ஞாபகங்களை கிளறிவிட்டிருக்கிறது உங்கள் படைப்பு... மிக்க நன்றி அஞ்சரன்....!

 

நன்றி கவிதை கருத்துக்கு .

 

சிலவற்றுக்கு கொடுப்பனவு வேணும் அண்ணே எங்கு இருந்தாலும் தலைமாட்டில் நிண்டு பத்தம் பிடிக்க வந்திடு என்று சொல்லிட்டே இருப்பா ஆனால் நாட்டில் இருந்து கூட என்னால் போகமுடியவில்லை சூழல்  அப்படி இன்று மனதில் ஒரு நெருடல் இருக்கு எனக்கு .:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.