Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ??

Featured Replies

வணக்கம் கள உறவுகளே !!  நாம் தொலைத்த ஒரு விடையத்தை இந்த தொடரூடாக தொடுகின்றேன் . நாம் பாரம்பரியமாக நினைத்துக்கொண்டிருக்கும் பலதும் நம்முடையவை இல்லை. நம்முடையதல்ல என்று காலம்காலமாக நினைத்துக்கொண்டிருக்கும் பலவும் நமக்குரியவை. தமிழருக்கும் பெளத்த மதத்துக்குமான தொடர்பு இப்படிப்பட்டதே. பெளத்தம் நமக்கு அந்நியமானது எப்படி? அது எத்தகைய மார்க்கத்தை நமக்கு போதிக்கிறது? இது உண்மையில் சர்ச்சைக்குரிய விடையமே எனது அறிவுக்குட்பட்டு  வரலாற்றாசிரியர் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமியின் ஆராய்ச்சி குறிப்புகள் துணையுடன் தொடர்கின்றேன் .

 

நேசமுடன் கோமகன்

 

***************************************************

 

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ??

 

dscn0365.jpg?w=496

 

 

ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவிகள் யாவை? பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இவற்றை அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது.

 

பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி செய்துவிட்டது. பௌத்தரால் தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலின் முதல் நோக்கமாகையாலும், இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு பகுதியாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது. வேறு வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரத்தில்மட்டும் இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தபடியினாலும், பல இன்னல்களுக்கிடையே இதனை எழுதவேண்டியிருந்தபடியினாலும் யாம் கருதிய அளவு இந்நூல் ஆக்கப்படவில்லை. ஆயினும், எமது ஆற்றலுக்கு இயன்ற வரையில் முயன்று, கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பெற்றுள்ளது. தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றினைக் கூறுவதும் பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளை ஒருங்காராய்ந்து விளக்குவதுமான நூல், தமிழ் மொழியில், யாம் அறிந்தவரையில், இதுவே முதலாவதாகும். இதுவரையில் மறைந்து கிடந்தனவும் மாய்ந்து போகும் தருவாயல் இருந்தனவுமான வரலாறுகளும் செய்திகளும் இந்த ஆராய்ச்சியால் உயிர்ப்பிக்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

 

இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய பின்னர், பாளி என்னும் மாகதி மொழியில் உள்ள பௌத்த நூல்களை நேரே படித்தறிந்தாலன்றித் தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றின் ஆராய்ச்சி முற்றுப்பெறாதென்பதை உணர்ந்தோம். ஏனென்றால், பௌத்தரால் போற்றப்படுகின்ற பாளிமொழி நூல்களில் சிலவற்றை இயற்றியவர்களும், பாளிமொழியில் உள்ள நூல்களுக்குச் சிறந்த உரைகளைப் பாளி மொழியில் இயற்றியவர்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த தமிழப் பௌத்தர்களாவர். அன்றியும், தமிழ் நாட்டில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த காலங்களில், பாளிமொழி தமிழ் நாட்டுப் பௌத்தர்களின் தெய்வ பாஷை யாக இருந்தது. இக்காரணங்களினால், தமிழ்நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்குப் பாளி மொழியறிவு பெரிதும் வேண்டற்பாலது. பாளிமொழியறியாத குறை எமக்குண்டு. ஆயினும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பாளிமொழி நூல்களினால் இக்குறை ஒருவாறு நீக்கப்பட்டது. சென்னைப் பிரம்பூரில் உள்ள மகாபோதி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்தர்மாசாரிய சோமாநந்த ஸ்தவிரர் அவர்கள், பாளிமொழி நூல்களில் சில பகுதிகளை மொழி பெயர்த்துச் சொன்னார்கள். இந்த உதவிக்காக எமது நன்றி அவருக்குரியதாகும். ஆயினும், நேர்முகமாகப் பாளி மொழியை அறிந்திருக்கவேண்டுவது தமிழ் நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும். ஆராய்ச்சி செய்வோர் உவத்தல் வெறுத்தல் இன்றி, சான்றுகள் காட்டும் ஆராய்ச்சி முடிவுகளை உள்ளது உள்ளவாறு கூறுதல்வேண்டும்; தமது கொள்கைக்கு முரண்பட்டதாக இருப்பினும், உண்மையையே நடு நின்று கூறுதல் வேண்டும், தமது கொள்கைக்கு முரண்பட்டதாகத் தோன்றுவதாலோ, அல்லது உண்மையைக் கூறினால் உலகம் சீறுமென்னும் அச்சத்தாலோ, உண்மை கூறாமல் விடுவோர் தமக்கும் நாட்டுக்கும் தீங்கு செய்தோராவர். இந்தக் கொள்கையை மனத்திற் கொண்டுதான் யாம் எமது ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளை இந்நூலுள் கூறியுள்ளோம். வாசகர் இந்நூலுள் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால், அதன்பொருட்டு எம்மீது சீற்றங்கொள்ளாமல், அது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக்கொள்வாராக, எந்த மதத்தையாவது குறைகூறவேண்டுமென்பதோ, அல்லது போற்றவேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மை உணரவேண்டும் என்பதொன்றே எம் கருத்து. இந்நூல் எழுதப்பட்டதும் அக்கருத்துடையார்க்கே. இந்நூலுள் ஒரோவிடங்களில் சில செய்திகள் மீண்டும் கூறப்படும். அவற்றைக் கூறியது கூறல் என்னும் குற்றமாகக் கொள்ளாமல், இது ஆராய்ச்சி நூலாதலின், தெளிவு பற்றி அநுவாதமாக அவ்வாறு கூறப்பட்டதெனக் கொள்க. இந்நூலினைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற தமிழ்த்தொண்டினை மேன்மேலும் இயற்றப் பெரிதும் ஊக்குவிக்கும் எனப் பெரிதும் நம்புகின்றோம்.

 

- தனது முன்னுரையில் மயிலை, சீனி. வேங்கடசாமி.

 

தொடரும்

 

http://fourladiesforum.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/

Edited by கோமகன்

  • Replies 50
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயத்தை தொட்டிருக்கின்றீர்கள்

தொடர  வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை, நினைத்தாலே....
பௌத்தத்தின் மீது... வெறுப்புத் தான் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோமகன்.....

ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது
இந்த வசனம் சரியா என மீள் வாசிப்பு செய்யவும்...கோமகன்... இந்துக்களுக்கு சமஸ்கிருதம் தெய்வீக பாசை.......முஸ்லிம்களுக்கு அரபிக் தெய்வீக பாசை.....கிறிஸ்தவர்களுக்கு கிபுரு தெய்வீக பாசை....பெளத்தர்களுக்கு பாளி தெய்வீக பாசை......அட நம்மட தமிழ் ???????? தமிழ் மொழியால் மதங்கள் வளர்ந்தன,பரப்பபட்டன.....
  • தொடங்கியவர்

நல்ல  விடயத்தை தொட்டிருக்கின்றீர்கள்

தொடர  வாழ்த்துக்கள்....

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா இருக்கலாம்.. வடக்கு முதல் இலங்கைத்தீவு வரையில் இருந்திருக்கலாம்.. பிறகு வட இந்தியக் கலப்பு வந்து சிங்கள இனம் உருவாகியிருக்கலாம்.. (மலையாளிகள் உருவானதுமாதிரி).. உருவான இனம் சரித்திரத்தையே மாற்றிவிட்டதாகவும் இருக்கலாம்..

இப்ப இருக்கிறதையே காப்பாற்ற முடியல்ல.  சிங்களவன் இனி  தமிழரும் பௌத்தர்கள் தான் என்பான்.

பௌத்தம் தமிழை கட்டி காத்தது என்பதெல்லாம் இந்து மதத்தை பழிப்பதற்காக சில அவிட்டு விடும் கட்டு கதை....

பௌத்தம் வருமுன் தமிழ் வளரவில்லையா? தமிழர் யாரை வழிபட்டார்கள்? பௌத்தம் வருமுன்னேயே தமிழர் உயர்ந்த நாகரிகவாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்தத்தை தழுவ வேண்டும்? இதற்கெல்லாம் இவர்கள் ஒன்றையும் சொல்லுவதில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தம் தமிழை கட்டி காத்தது என்பதெல்லாம் இந்து மதத்தை பழிப்பதற்காக சில அவிட்டு விடும் p>

 

தமிழால் பெளத்தம்,இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவம் வளர்கின்றது என்பதுதான் உண்மை....

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தமிழ்சிறி , புத்தன் , இசைக்கலைஞன் , நேசன் , நாந்தான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . தொடருடன் தொடர்ந்து இருங்கள் . உங்கள் சந்தேகங்களுக்கு இந்தத் தொடர் சிலவேளை பதில் தரலாம் .

  • தொடங்கியவர்

வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும். சமணமதம் என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது.

சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும்வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாக, தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்னும் எண்ணமுடையவர்கள். பொதுமக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதிவைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும்கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும்கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதிவைத்துள்ளார்கள்.

 

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மையும் கொண்டவர்களான சமணர்கள் தங்கள் மதக்கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மதநூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்துவைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெரும் பாவம் என்பது சமணர்களின் கொள்கை. சமணர்களின் இக்கொள்கையை விளக்கக் கீழ்க்கண்ட வரலாறுகளே போதுமானவை.

 

பௌத்தர்களுக்குரிய சுல்லவக்க என்னும் பாளி மொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது :-

 

பௌத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் புத்ததேவரிடம் சென்று, புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற் சென்று போதித்துவருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர்மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக! என்றனர். இங்குச் சந்தம் என்பது சம்ஸ்கிருத சுலோகம். சம்ஸ்கிருத சுலோகத்தில் புத்தர் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து, நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறியவேண்டும் என்றனர். இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகின்றது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்துவந்தனர்.

 

ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த கொள்கையுள்ளவர் என்பது பின்வரும் வரலாற்றிலிருந்து அறியலாம் :-

 

உஜ்ஜைனி தேசத்து அரசனது அவைக்களத்தில், சம்ஸ்கிருதம் கற்றுத்தேர்ந்து பெரும்புகழ் பெற்றுவிளங்கிய சித்தசேன திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப் போலவே கல்விக்கடலைக் கரை கண்டவர் என்று புகழுடன் வாழ்ந்துவந்த விருத்தவாதி முனிவர் என்னும் ஜைனத்துறவி ஒருவரும் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப்பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பின்னர், இவர் ஒருவரையொருவர் நேரில் காணும்படி நேரிட்டது. உடனே இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதில் தோற்றவர் மாணவரும், வென்றவர் குருவும் ஆவர் என்று முடிவு செய்துகொண்டு, வாது செய்யத் தொடங்கினார். அவ்வூர்ப் பொதுமக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடு நிலையாளராயிருந்தனர். சித்தசேன திவாகரர் தமது வட மொழிவல்லமையை விளக்க எண்ணி, சம்ஸ்கிருதத்தில் வாது செய்தார். விருத்தவாதி முனிவரோ, சம்ஸ்கிருதத்தில் நன்கு தேர்ந்தவராயிருந்தும், அந்த மொழியில் வாதம் செய்யாமல், நாட்டுமக்கள் பேசும் தாய்மொழியிலேயே வாதம் நிகழ்த்தினார். இவ்வாதப் போரில் வெற்றிபெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடுநிலையில் நின்றவர் முடிவு சொன்னார். ஆகவே, உடன்படிக்கைப்படி, விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் மாணவர் ஆனார்.

 

அதன் பிறகு, சித்தசேன திவாகரர், மக்கள் பேசிப் பயின்றுவந்த அர்த்த மாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த ஜைனமத நூல்களைச் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கக் கருதித் தமது கருத்தைத் தமது குருவான விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். ஜனங்கள் பேசியும் கற்றும்வரும் அர்த்த மாகதி பாஷையில் உள்ள நூல்களைப் பொதுமக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் எழுதி வைத்து, பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தமது குரு சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டுவரையில் வாய்பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார். இவர் கி. மு. முதல் நூற்றாண்டில் இருந்தவர். இந்த வரலாற்றினால், ஜைனரும் பௌத்தரைப் போலவே தாய் மொழிகளின் வாயிலாகப் பொது மக்களுக்குத் தங்கள் மதக்கொள்கையைப் போதிக்கவேண்டும் என்னும் கருத்துள்ளவர் என்பது விளங்குகின்றது.

 

பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாடசாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் பள்ளிக்கூடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் வழங்கிவருகின்றது.

இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச்செய்யுங் கருத்துடையவர்களாய்ப் பௌத்த ஜைனர்களான சமணர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மதநூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு தமிழர்களால் மறக்கற் பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப்பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி,. அவர்களுக்குத் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்பித்துவந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற பள்ளிக்கூடம் என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. பள்ளி என்னும் பெயர்க்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாடசாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் பள்ளிக்கூடம் என்னும் சொல் தமிழ் நாட்டில் வழங்கிவருகின்றது.

 

இவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ் நாடு வருவதற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள்தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்விகற்பித்த ஆசிரியருக்குக் கணக்காயர் என்ற பெயர் சங்க நூல்களில் காணப் படுகின்றது. பின், ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், சமணர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச்செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.

 

சமண மதத்தார் தாய்மொழியான தேசபாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றிவைத்ததுபோல, வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள்மட்டும் படிக்க வேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்னும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

 

வனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப்பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அஃதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ் மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் மூன்றையும் பௌத்தரும், சிலப்பதிகாரம், சிந்தாமணி என்னும் இரண்டையும் ஜைனரும் இயற்றினர். அவர் அப்பெருமாட்டிகு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உண்டு.

 

பௌத்தரும் ஜைனரும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகள் வாயிலாகத் தங்கள் கொள்கையைப் பரப்பிய செய்தியை இந்த அதிகாரத்திற் கூறினோம். இனி, தமிழ் நாட்டிலிருந்த பௌத்த பெரியார் யாவர் என்பதை ஆராய்வோம்.

 

(தொடரும்)

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தம்  பவித்திரமானது, சாதுக்களின் பார்வையெ சாந்தமாய் இருக்கும். அவர்கள்  நடக்கும் பாதையில் புல்லும் சாகாது. நம் நாட்டில் இப்ப இருப்பது  ரெளத்திரம் , ரெளடியிசமும்!!

 

தொடருங்கள் கோமகன்!!

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களைப் பற்றிய தேடலில், நிரம்பக் காலத்தை வீணடித்த பின்னர், பௌத்தம் பற்றி வாசிக்க நேர்ந்தது!

 

எனது சகல வினாக்களுக்குமான 'பதில்' பௌத்த மதத்தில் இருந்தது!

 

அத்துடன், தாய்லாந்து போன்ற தென்னாசிய நாடுகளில் 'பௌத்த மதம்' அந்த மக்களின் மனநிலையில் எவ்வளவு மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதென்பதையும் அவதானித்தேன்!

 

இங்கு சிட்னியில் கூட, எங்கோ ஒரு ' தொழில் பேட்டையில்' வசிக்கின்ற கட்டாக் காலிப் பூனைகளுக்காகத் தினமும் சாப்பாடு சமைத்துக் கொண்டுபோய் வைக்கின்ற ஒரு வெள்ளையினத்தவருடன், கதை கொடுத்தபோது, அவர் தான் பௌத்த மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறினார்!

 

இந்துவாகப் பிறந்த 'கௌதம புத்தர்', பிராமணர்களின் அட்டகாசம் தாங்க முடியாமலேயே, தேடலில் இறங்கினார்! அவரது தேடலின் பெரும்பகுதி, தென்னிந்தியாவை மையப்படுத்தியதாகவே இருந்தது!

 

பௌத்தம் மதமும், அது சார்ந்த 'ஜைனம்' போன்ற மதங்களும், இந்தியாவிலிருந்து தூக்கி எறியப்பட்டது, இந்தியாவின் துரதிஸ்டமே!

 

அது தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் போன்ற அரும்பெரும் காப்பியங்களைத் தந்தது பௌத்த மதமும், ஜைன மதமுமே என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!

 

தென்னிந்தியாவில் வளர்ந்த பௌத்தமதம், அகத்திய முனிவரின் வருகையுடன் அழிய ஆரம்பித்திருக்கலாம்! அதற்கு முதற்கால் இட்டவன், பெருமன்னன் 'ராஜ ராஜ சோழனாகவே இருக்க வேண்டும்!

 

நானே, பேராசிரியர் இந்திரபாலாவுடன் ' யாழ்ப்பாண நூதன சாலையில்' இருந்த பல 'புத்தர் சிலைகளை' அவதானித்துள்ளேன்! அவை அனைத்துமே, ' தென்னிந்திய சிலை அமைப்புக்களின்' வடிவில், கோபுரங்களின் இருக்கின்ற சிற்பங்களைப் போலவே, அமைக்கப்பட்டிருந்தன! இப்போது, அந்தப் புத்த சிலைகள் எங்கிருக்கின்றன என்று எனக்குத் தெரியாது!

 

நெடுந்தீவில் இருக்கும் வெடியரசன் கோட்டையின் அமைப்பு, ஒரு புத்த விகாரையின் அமைப்பே என்பது ஒரு சாதாரண அறிவுள்ளவருக்கும் புரியக்கூடிய ஒன்றாகும்! அதாவது அந்தப்பிரதேசத்தை ஆண்ட ஒரு தமிழ் மன்னன், புத்த மதத்தைப் பின் பற்றியிருக்கின்றான் என்பதே உண்மையாகும்!

 

கந்தரோடை போன்ற இடங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அனைத்தும் தமிழர்கள் பூசித்த புத்த விகாரைகளே என்பது எனது அனுமானமாகும்!

 

புத்தர் பல தடவைகள் வடக்குக்கு வந்திருக்கிறார். மாதகல், நயினாதீவு போன்ற இடங்கள் இவர் வந்து சென்ற இடங்களாகும்!

 

நாம் வணங்கும் முருகன் என்ற தெய்வம், இந்துக்கடவுளாக முன்பு, புத்த மதக் கடவுளாகவே இருந்திருக்கின்றார்! பௌத்த நூல்களில், இவர் மகாவிஷ்ணுவின் 'தேவ சேனாதிபதி' என்றே முதலில் அழைக்கப்பட்டார்!

 

ஆனால் இலங்கையில் இருக்கும் புத்தம் 'தேர வாதம்' என நினைக்கிறேன்!  தென்னாசியாவில் முற்றாக அழிந்துவிடும் நிலையிலிருந்த 'பௌத்தம்' ஒரு சீன யாத்திரிகரின் (இயான் பதூதா என நினைவு) இலங்கை வருகையினாலே தப்பிப்பிழைத்தது! இந்தியாவில் இருந்த பல பௌத்த நூல்கள் அழிக்கப்பட்டதுடன் மட்டுமன்றி, உலகின் அதி சிறந்ததும் முதல் பல்கலைக்கழகமுமான 'நாலந்தா பல்கலைக்கழகம்' கூட எரியூட்டப்பட்டு முற்றாக அழிந்து போனது! முழுப் பௌத்த நூல்களும் அழிந்து போய்விட, இலங்கையில் மிஞ்சியிருந்த சில 'தேரவாத பௌத்தத்தின்'  திரிபிடகங்களையே, அந்தச் சீன யாத்திரீகர் சீனாவுக்குத் தன்னுடன் எடுத்துச் சென்று பௌத்தத்தை மீண்டும் துளிர்க்க வைத்தார்!

 

இலங்கையில் பௌத்தம் ஒரு மதமாக அன்றி, ஒரு வெறியாக மாறி வருகின்றது! இது ஏறத்தாள ஐரோப்பாவில் நடந்த சிலுவை யுத்தத்துக்கு நிகரானதாகும்! அப்போதைய பாப்பாண்டவர்களின் 'மதவெறிக் கொள்கையைப்'  போன்றே இவர்களது 'மதவெறியும்' உள்ளது!

 

அத்துடன் தமிழர்களது 'சாத்வீக குணத்துக்கும்' பௌத்த மதமே காரணமாக இருந்திருக்கலாம்! உண்மையான ' இந்துக்கள்' எவ்வளவு பயங்கரவாதிகள் என்பதற்கு, வட இந்தியர்களது 'அயோத்தியா' போன்ற உதாரணங்களும், அண்மைக்கால 'முள்ளி வாய்க்கால்' நிகழ்வுகளும், பீகாரில் நரேந்திர மோடியின் இனப்படுகொலைகளும் நல்ல உதாரணங்களாக அமையும் என எண்ணுகின்றேன்!

 

மகாத்மா காந்தியின் ' சத்திய சோதனை' யில் இந்துக்களின் கொடூர மனப்பாங்குக்கு 'நிறைய' ஆதாரங்கள் இருக்கின்றன! இந்திய சுதந்திரந்தை வென்றெடுப்பதை விடவும், இந்து மத மேலாதிக்கத்தவரைக் கட்டுப்படுத்துவதே  காந்திக்கு முக்கிய வேலையாக இருந்தது! இறுதியில் அவரது முடிவும் ஒரு இந்து வெறியனாலேயே ஏற்பட்டது!

 

வாயில் இரத்தம் சிந்தியபடி நிற்கும் 'காளியையோ'  கையில் மழுவேந்தி நிற்கும் ''நடராஜனையோ', 'வச்சிராயுதம்' ஏந்தி நிற்கின்ற 'இந்திரனையோ'., திரிசூலம் ஏந்தி நிற்கின்ற 'சிவனையோ', வேலேந்தி நிற்கின்ற ' முருகனையோ' சித்தரிக்கும் மதத்தில் எவ்வாறு 'சாத்வீகம்' விளைய முடியும் ?

 

வேள்விகளிலும், யாகங்களிலும் மிருகங்களைப் பலியிடுவதும், விதவைப் பெண்களை உடன் கட்டையேறத்  தூண்டுவதும் 'சாத்வீகத்தை' வளர்க்காது எனவே நம்புகின்றேன்! 

 

இந்து மதத்தின் பெரும்பாலான கதைகள், பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுப்பதும், நரியைப் பரியாக்கும் வித்தையிலும், ஆற்றில் போட்ட பொன்னைக் குளத்தில் எடுப்பதுவும்,பர தாரத் திருமணங்களும், சுண்ணாம்புக் கல்லை மிதக்க விடுவதுமாகவே இருக்கின்றன!

 

இவற்றை புலத்தில் வளரும், சிந்தனைகளை நடுப்படுத்திய கல்வியைப்பயிலும் பிள்ளைகளுக்கு, எந்த முகத்துடன் நாங்கள் சொல்லிக்கொடுப்பது?

 

அந்தப் பிள்ளை, திரும்பி எம்மை ஒரு கேள்வி கேட்டால், அதற்கான பதில் எம்மிடம் இருக்கின்றதா?

 

இந்து மதத்தைப் பழிப்பதோ அல்லது புத்த மதத்தைத் தூக்கிப்பிடிப்பதோ எனது நோக்கமல்ல! இந்து மதம், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்து, இப்போது தனது மூலத்தையே தொலைத்து விட்டு நிற்கின்றது என்பதைத் தான் சொல்ல வந்தேன்!

 

இலங்கையில் 'பௌத்தம்' தோற்றுவிட்டது என்பதே எனது அனுமானமாகும்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

மதங்களைப் பற்றிய தேடலில், நிரம்பக் காலத்தை வீணடித்த பின்னர், பௌத்தம் பற்றி வாசிக்க நேர்ந்தது!

 

எனது சகல வினாக்களுக்குமான 'பதில்' பௌத்த மதத்தில் இருந்தது!

 

அத்துடன், தாய்லாந்து போன்ற தென்னாசிய நாடுகளில் 'பௌத்த மதம்' அந்த மக்களின் மனநிலையில் எவ்வளவு மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதென்பதையும் அவதானித்தேன்!

 

இங்கு சிட்னியில் கூட, எங்கோ ஒரு ' தொழில் பேட்டையில்' வசிக்கின்ற கட்டாக் காலிப் பூனைகளுக்காகத் தினமும் சாப்பாடு சமைத்துக் கொண்டுபோய் வைக்கின்ற ஒரு வெள்ளையினத்தவருடன், கதை கொடுத்தபோது, அவர் தான் பௌத்த மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறினார்!

 

இந்துவாகப் பிறந்த 'கௌதம புத்தர்', பிராமணர்களின் அட்டகாசம் தாங்க முடியாமலேயே, தேடலில் இறங்கினார்! அவரது தேடலின் பெரும்பகுதி, தென்னிந்தியாவை மையப்படுத்தியதாகவே இருந்தது!

 

பௌத்தம் மதமும், அது சார்ந்த 'ஜைனம்' போன்ற மதங்களும், இந்தியாவிலிருந்து தூக்கி எறியப்பட்டது, இந்தியாவின் துரதிஸ்டமே!

 

அது தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் போன்ற அரும்பெரும் காப்பியங்களைத் தந்தது பௌத்த மதமும், ஜைன மதமுமே என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!

 

தென்னிந்தியாவில் வளர்ந்த பௌத்தமதம், அகத்திய முனிவரின் வருகையுடன் அழிய ஆரம்பித்திருக்கலாம்! அதற்கு முதற்கால் இட்டவன், பெருமன்னன் 'ராஜ ராஜ சோழனாகவே இருக்க வேண்டும்!

 

நானே, பேராசிரியர் இந்திரபாலாவுடன் ' யாழ்ப்பாண நூதன சாலையில்' இருந்த பல 'புத்தர் சிலைகளை' அவதானித்துள்ளேன்! அவை அனைத்துமே, ' தென்னிந்திய சிலை அமைப்புக்களின்' வடிவில், கோபுரங்களின் இருக்கின்ற சிற்பங்களைப் போலவே, அமைக்கப்பட்டிருந்தன! இப்போது, அந்தப் புத்த சிலைகள் எங்கிருக்கின்றன என்று எனக்குத் தெரியாது!

 

நெடுந்தீவில் இருக்கும் வெடியரசன் கோட்டையின் அமைப்பு, ஒரு புத்த விகாரையின் அமைப்பே என்பது ஒரு சாதாரண அறிவுள்ளவருக்கும் புரியக்கூடிய ஒன்றாகும்! அதாவது அந்தப்பிரதேசத்தை ஆண்ட ஒரு தமிழ் மன்னன், புத்த மதத்தைப் பின் பற்றியிருக்கின்றான் என்பதே உண்மையாகும்!

 

கந்தரோடை போன்ற இடங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அனைத்தும் தமிழர்கள் பூசித்த புத்த விகாரைகளே என்பது எனது அனுமானமாகும்!

 

புத்தர் பல தடவைகள் வடக்குக்கு வந்திருக்கிறார். மாதகல், நயினாதீவு போன்ற இடங்கள் இவர் வந்து சென்ற இடங்களாகும்!

 

நாம் வணங்கும் முருகன் என்ற தெய்வம், இந்துக்கடவுளாக முன்பு, புத்த மதக் கடவுளாகவே இருந்திருக்கின்றார்! பௌத்த நூல்களில், இவர் மகாவிஷ்ணுவின் 'தேவ சேனாதிபதி' என்றே முதலில் அழைக்கப்பட்டார்!

 

ஆனால் இலங்கையில் இருக்கும் புத்தம் 'தேர வாதம்' என நினைக்கிறேன்!  தென்னாசியாவில் முற்றாக அழிந்துவிடும் நிலையிலிருந்த 'பௌத்தம்' ஒரு சீன யாத்திரிகரின் (இயான் பதூதா என நினைவு) இலங்கை வருகையினாலே தப்பிப்பிழைத்தது! இந்தியாவில் இருந்த பல பௌத்த நூல்கள் அழிக்கப்பட்டதுடன் மட்டுமன்றி, உலகின் அதி சிறந்ததும் முதல் பல்கலைக்கழகமுமான 'நாலந்தா பல்கலைக்கழகம்' கூட எரியூட்டப்பட்டு முற்றாக அழிந்து போனது! முழுப் பௌத்த நூல்களும் அழிந்து போய்விட, இலங்கையில் மிஞ்சியிருந்த சில 'தேரவாத பௌத்தத்தின்'  திரிபிடகங்களையே, அந்தச் சீன யாத்திரீகர் சீனாவுக்குத் தன்னுடன் எடுத்துச் சென்று பௌத்தத்தை மீண்டும் துளிர்க்க வைத்தார்!

 

இலங்கையில் பௌத்தம் ஒரு மதமாக அன்றி, ஒரு வெறியாக மாறி வருகின்றது! இது ஏறத்தாள ஐரோப்பாவில் நடந்த சிலுவை யுத்தத்துக்கு நிகரானதாகும்! அப்போதைய பாப்பாண்டவர்களின் 'மதவெறிக் கொள்கையைப்'  போன்றே இவர்களது 'மதவெறியும்' உள்ளது!

 

அத்துடன் தமிழர்களது 'சாத்வீக குணத்துக்கும்' பௌத்த மதமே காரணமாக இருந்திருக்கலாம்! உண்மையான ' இந்துக்கள்' எவ்வளவு பயங்கரவாதிகள் என்பதற்கு, வட இந்தியர்களது 'அயோத்தியா' போன்ற உதாரணங்களும், அண்மைக்கால 'முள்ளி வாய்க்கால்' நிகழ்வுகளும், பீகாரில் நரேந்திர மோடியின் இனப்படுகொலைகளும் நல்ல உதாரணங்களாக அமையும் என எண்ணுகின்றேன்!

 

மகாத்மா காந்தியின் ' சத்திய சோதனை' யில் இந்துக்களின் கொடூர மனப்பாங்குக்கு 'நிறைய' ஆதாரங்கள் இருக்கின்றன! இந்திய சுதந்திரந்தை வென்றெடுப்பதை விடவும், இந்து மத மேலாதிக்கத்தவரைக் கட்டுப்படுத்துவதே  காந்திக்கு முக்கிய வேலையாக இருந்தது! இறுதியில் அவரது முடிவும் ஒரு இந்து வெறியனாலேயே ஏற்பட்டது!

 

வாயில் இரத்தம் சிந்தியபடி நிற்கும் 'காளியையோ'  கையில் மழுவேந்தி நிற்கும் ''நடராஜனையோ', 'வச்சிராயுதம்' ஏந்தி நிற்கின்ற 'இந்திரனையோ'., திரிசூலம் ஏந்தி நிற்கின்ற 'சிவனையோ', வேலேந்தி நிற்கின்ற ' முருகனையோ' சித்தரிக்கும் மதத்தில் எவ்வாறு 'சாத்வீகம்' விளைய முடியும் ?

 

வேள்விகளிலும், யாகங்களிலும் மிருகங்களைப் பலியிடுவதும், விதவைப் பெண்களை உடன் கட்டையேறத்  தூண்டுவதும் 'சாத்வீகத்தை' வளர்க்காது எனவே நம்புகின்றேன்! 

 

இந்து மதத்தின் பெரும்பாலான கதைகள், பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுப்பதும், நரியைப் பரியாக்கும் வித்தையிலும், ஆற்றில் போட்ட பொன்னைக் குளத்தில் எடுப்பதுவும்,பர தாரத் திருமணங்களும், சுண்ணாம்புக் கல்லை மிதக்க விடுவதுமாகவே இருக்கின்றன!

 

இவற்றை புலத்தில் வளரும், சிந்தனைகளை நடுப்படுத்திய கல்வியைப்பயிலும் பிள்ளைகளுக்கு, எந்த முகத்துடன் நாங்கள் சொல்லிக்கொடுப்பது?

 

அந்தப் பிள்ளை, திரும்பி எம்மை ஒரு கேள்வி கேட்டால், அதற்கான பதில் எம்மிடம் இருக்கின்றதா?

 

இந்து மதத்தைப் பழிப்பதோ அல்லது புத்த மதத்தைத் தூக்கிப்பிடிப்பதோ எனது நோக்கமல்ல! இந்து மதம், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்து, இப்போது தனது மூலத்தையே தொலைத்து விட்டு நிற்கின்றது என்பதைத் தான் சொல்ல வந்தேன்!

 

இலங்கையில் 'பௌத்தம்' தோற்றுவிட்டது என்பதே எனது அனுமானமாகும்!

 

இதற்கு இந்தப்பதிவில் கருத்துக்களை எழுதிய இந்து அபிமானிகள் என்ன பதிலைச் சொல்லப் போகின்றார்கள் ??

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தின் தோற்றம் எப்போது என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆதாரங்கள் உள்ளனவா??? நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுள்த்தான் பௌத்த மதத்தின் தோற்றம் இருக்க வேண்டும்.

 

தமிழரின் மதம் ஆரியரின் வருகையின் பின்னரே இந்து மதமாக உருவெடுத்தது. அதன் பின்னரே வேள்விகள், யாகங்கள் என்பன  தோற்றுவிக்கப்பட்டன. தமிழர்கள் சைவர்களாகவே முன்பு இருந்துள்ளனர் என்பதும் அவர்களின் வழிபாட்டு முறைகளும் ஆரியத்தின் வருகையின்பின்னர் மறக்கடிக்கப் பட்டு விட்டது. இன்றுமட்டும் எமக்கென தனித்துவமான வழிபாட்டு முறையை நாம் கொண்டிருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

 

இந்து மதத்தின் நாயன்மார்கள் காலம் கி. பி பதின்மூன்றாம் நூற்றாண்டு தானே.

 

நல்லதொரு பதிவு கோமகன் தொடருங்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தின் தோற்றம் எப்போது என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆதாரங்கள் உள்ளனவா??? நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுள்த்தான் பௌத்த மதத்தின் தோற்றம் இருக்க வேண்டும்.

 

தமிழரின் மதம் ஆரியரின் வருகையின் பின்னரே இந்து மதமாக உருவெடுத்தது. அதன் பின்னரே வேள்விகள், யாகங்கள் என்பன  தோற்றுவிக்கப்பட்டன. தமிழர்கள் சைவர்களாகவே முன்பு இருந்துள்ளனர் என்பதும் அவர்களின் வழிபாட்டு முறைகளும் ஆரியத்தின் வருகையின்பின்னர் மறக்கடிக்கப் பட்டு விட்டது. இன்றுமட்டும் எமக்கென தனித்துவமான வழிபாட்டு முறையை நாம் கொண்டிருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

 

இந்து மதத்தின் நாயன்மார்கள் காலம் கி. பி பதின்மூன்றாம் நூற்றாண்டு தானே.

 

நல்லதொரு பதிவு கோமகன் தொடருங்கள்.

 

பௌத்த நெறி கிமு 5ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்றது.

தமிழர்கள் முன்பு சைவர்களாகவும் அதன் பின்னர் ஆரியக்கலப்பால் இந்துக்களாயினர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது.

கிட்டத் தட்ட 2000 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளில் கூட இது குறித்து எங்கும் எழுதப்படவில்லை. திருக்குறள் சமணக் கொள்கையினைத் தழுவி எழுதப்பட்டது.

வாயில் இரத்தம் சிந்தியபடி நிற்கும் 'காளியையோ'  கையில் மழுவேந்தி நிற்கும் ''நடராஜனையோ', 'வச்சிராயுதம்' ஏந்தி நிற்கின்ற 'இந்திரனையோ'., திரிசூலம் ஏந்தி நிற்கின்ற 'சிவனையோ', வேலேந்தி நிற்கின்ற ' முருகனையோ' சித்தரிக்கும் மதத்தில் எவ்வாறு 'சாத்வீகம்' விளைய முடியும் ?

 

இந்து மதம் ஏன் சாத்வீகமாக இருக்க வேண்டும்? மற்றும் அந்த கடவுள்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது "அநீதியை" அழிப்பதற்க்கே...என்ன விளக்கம் என்றே அறியாமல் தங்களுக்கு ஏற்றமாதிரி யாரும் என்ன கதையும் கட்ட முடியும்...அதை தான் மதம் பரப்பவந்தவர்கள் சொல்லுவது..

 

வேள்விகளிலும், யாகங்களிலும் மிருகங்களைப் பலியிடுவதும், விதவைப் பெண்களை உடன் கட்டையேறத்  தூண்டுவதும் 'சாத்வீகத்தை' வளர்க்காது எனவே நம்புகின்றேன்!

 

மிருகங்களை சாப்பிட வேண்டும் என்றால் நெருப்பில் சமைத்து தான் உண்ணவேண்டும்....அதை வேள்வியில், யாக தீயில் எரித்தால் என்ன பிரச்னை?

இந்து மதத்தில் எங்கே உடன் கட்டை ஏற சொல்லுகிறார்கள்? இந்து மதத்தில் இருந்த சிலர் கடைபிடித்த மூட நம்பிக்கைகளுக்கு இந்துமதம் காரணம் அல்ல..அப்படி என்றால் பௌத்தமதத்தை பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கும் எல்லா மூட செயல்களுக்கும் பௌத்தம் தான் காரணமா?

 

இந்து மதத்தின் பெரும்பாலான கதைகள், பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுப்பதும், நரியைப் பரியாக்கும் வித்தையிலும், ஆற்றில் போட்ட பொன்னைக் குளத்தில் எடுப்பதுவும்,பர தாரத் திருமணங்களும், சுண்ணாம்புக் கல்லை மிதக்க விடுவதுமாகவே இருக்கின்றன!

இவற்றை புலத்தில் வளரும், சிந்தனைகளை நடுப்படுத்திய கல்வியைப்பயிலும் பிள்ளைகளுக்கு, எந்த முகத்துடன் நாங்கள் சொல்லிக்கொடுப்பது?

 

இந்து மத கதைகள் மனித பரிணாமத்தையும், நீதிகளையுமே சொல்லுகிறது...அதை தான் விளங்கி பிள்ளைகளுக்கு சொல்லலாம்...இல்லை அந்த கதைகள் விளங்கவில்லை என்றால் யாரையும் கேட்கலாம்..அதை விட்டுவிட்டு தனக்கு விளங்கவில்லை என்று இந்து மதத்தை பழித்தால்...அதற்க்கு யாரும் எதுவும் செய்ய முடியாது..(இந்து மதம் தனது மதத்தை மற்றவன் மீது திணி என்று ஒரு இடமும் சொல்லவும் இல்லை...மற்றவனை முட்டாள் என்று நினை என்றும் சொல்லவும் இல்லை...இந்து மதம் சொல்லவது ஒன்று தான்...உன்னை போல் மற்றவனையும் நினை :) )

 

 

 

அந்தப் பிள்ளை, திரும்பி எம்மை ஒரு கேள்வி கேட்டால், அதற்கான பதில் எம்மிடம் இருக்கின்றதா?

 

இது ஆடதேரியாதவனுக்கு கூடம் கோணல்

 

 

இந்து மதத்தைப் பழிப்பதோ அல்லது புத்த மதத்தைத் தூக்கிப்பிடிப்பதோ எனது நோக்கமல்ல! இந்து மதம், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்து, இப்போது தனது மூலத்தையே தொலைத்து விட்டு நிற்கின்றது என்பதைத் தான் சொல்ல வந்தேன்!

 

இந்துமதம் இப்படி ஆயிரம் ஆயிரம் பேர்களை ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பார்த்தது...என்றபடியால் இந்து மதத்தை பற்றி அதை பிடிக்காதவர்கள் கவலைப்பட தேவையில்லலை...காசுக்கும் வேறு தேவைகளுக்கும் மதம் மாறுபவர்களால் இப்படி ஆயிரம் கதைகள் சொல்லப்படும்....அன்பே சிவம் :)

 

இந்து மதத்தில் தேடினால் எல்லா நல்ல விடயங்களும் இருக்கும்...தேட விருப்பம் இல்லாமல் அதை பிழை சொன்னால் ஒரே காரணம் மேலே கூறியது தான்....

 

 

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் ஏன் சாத்வீகமாக இருக்க வேண்டும்? மற்றும் அந்த கடவுள்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது "அநீதியை" அழிப்பதற்க்கே...என்ன விளக்கம் என்றே அறியாமல் தங்களுக்கு ஏற்றமாதிரி யாரும் என்ன கதையும் கட்ட முடியும்...அதை தான் மதம் பரப்பவந்தவர்கள் சொல்லுவது..

 

தெரியாமல் தான் கேட்கிறேன், இது வரை இந்து மதம் என்ன அநீதியை அழித்திருக்கின்றது?

 

வேதங்கள் முழுவதும் அரக்கர்களும், அசுரர்களும் தேடித்தேடி அழிக்கப்படுவது தானே கதை!

 

நானே ஒரு அரக்க இனம்! என்னிடம் இருந்து வேறு எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? :D

 

சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் எவ்வளவு தூரத்துக்குப் பயணித்திருக்கின்றது? 

 

 

 

மிருகங்களை சாப்பிட வேண்டும் என்றால் நெருப்பில் சமைத்து தான் உண்ணவேண்டும்....அதை வேள்வியில், யாக தீயில் எரித்தால் என்ன பிரச்னை?

இந்து மதத்தில் எங்கே உடன் கட்டை ஏற சொல்லுகிறார்கள்? இந்து மதத்தில் இருந்த சிலர் கடைபிடித்த மூட நம்பிக்கைகளுக்கு இந்துமதம் காரணம் அல்ல..அப்படி என்றால் பௌத்தமதத்தை பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கும் எல்லா மூட செயல்களுக்கும் பௌத்தம் தான் காரணமா?

 

இந்து மதம் கொல்லாமை, புலாலுண்ணாமை என்பவற்றை முன்னிலைப்படுத்தும் மதம்!

இதையே தான் 'பகவத் கீதை' திரும்பத் திரும்பச் சொல்கின்றது!

 

மேலே உள்ளதை எழுத உங்களுக்கு வெட்கமாயில்லையா?

வரிசையில் ஆடுகளைக் கொண்டுபோய் வேள்வியில் பலியிடுவது உங்களுக்கு ஏற்புடைத்தது தானா?

 

இந்து மத கதைகள் மனித பரிணாமத்தையும், நீதிகளையுமே சொல்லுகிறது...அதை தான் விளங்கி பிள்ளைகளுக்கு சொல்லலாம்...இல்லை அந்த கதைகள் விளங்கவில்லை என்றால் யாரையும் கேட்கலாம்..அதை விட்டுவிட்டு தனக்கு விளங்கவில்லை என்று இந்து மதத்தை பழித்தால்...அதற்க்கு யாரும் எதுவும் செய்ய முடியாது..(இந்து மதம் தனது மதத்தை மற்றவன் மீது திணி என்று ஒரு இடமும் சொல்லவும் இல்லை...மற்றவனை முட்டாள் என்று நினை என்றும் சொல்லவும் இல்லை...இந்து மதம் சொல்லவது ஒன்று தான்...உன்னை போல் மற்றவனையும் நினை  :) )

 

உங்களுக்கு இந்தக்கதைகளிருந்து ஏதாவது விளங்கியிருந்தால், கொஞ்சம் எனக்கும் சொல்லுங்கள். புரிந்து கொள்ள முயல்கின்றேன்!

 

மேலுள்ள கதைகளில் என்ன நீதி புதைக்கப்பட்டிருக்கின்றது?

 

 

இது ஆடதேரியாதவனுக்கு கூடம் கோணல்

 

என்ன பெரிய பதிலை நீங்கள் சொல்லப்போகின்றீர்கள்! அப்புசாமி கோவிக்கும் என்று தானே!

 

 

இந்து மதத்தில் தேடினால் எல்லா நல்ல விடயங்களும் இருக்கும்...தேட விருப்பம் இல்லாமல் அதை பிழை சொன்னால் ஒரே காரணம் மேலே கூறியது தான்....

 

வருணாச்சிரம தர்மத்தில் எங்கே அன்புக்கு இடமிருக்கின்றது?

 

நீங்கள் பிரமதேவனின் தலையில் இருந்து வந்தீர்களா, அல்லது அவரது வாலில் இருந்து வந்தீர்களா என்பதைப்பொறுத்தே ' சிவத்தின் அன்பின்' அளவு இருக்கும்!

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நான்தானுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ! :D

 

மதங்கள் பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு, நீங்கள் தயாராகவிருந்தால், ஒரு தனித்திரி திறவுங்கள்!

 

கோமகனின் திரிக்குள் நின்று நுனிப்புல் மேய்வதிலும் பார்க்க இன்னொரு திரியில் விவாதிப்பது பொருத்தமானது என எண்ணுகின்றேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கை அவரைத் திறக்கச் சொல்கிறீர்கள் நீங்களே திறவுங்கள். நல்லதொரு விடயம் இது. தர்க்கம் செய்தாலாவது சைவ சமயத்தைப் பற்றிய தெளிவு கிடைகும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த நெறி கிமு 5ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்றது.

தமிழர்கள் முன்பு சைவர்களாகவும் அதன் பின்னர் ஆரியக்கலப்பால் இந்துக்களாயினர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது.

கிட்டத் தட்ட 2000 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளில் கூட இது குறித்து எங்கும் எழுதப்படவில்லை. திருக்குறள் சமணக் கொள்கையினைத் தழுவி எழுதப்பட்டது.

 

எனக்கு இறை நெறிகள் பற்றிய அறிவு அதிகம் இல்லை. அத்துடன் கோமகன் கி.மு 2000 என்றதனால்தான் கேட்டேன். ஆதாரங்கள் இருந்திருந்தால் சைவமும் தமிழும் ஏன் இப்படி இருக்கப் போகின்றது. ஒரு கடவுட் கொள்கையும் உயரிய சிந்தனைகளும் உள்ளது சைவநெறி.

பௌத்தத்தின் தோற்றம் பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரியாக இருக்கலாம். ஏனெனில் மகாவம்சத்தில் அந்தக் காலமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக மகாவம்சம் கூறுவது எல்லாம் உண்மை என்பதல்ல. ஏனெனில் இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம்  பற்றிய நூல் நானூறு ஆண்டுகள் கழித்து இலங்கையில் வாழ்ந்த ஒரு துறவியால் எழுதப்பட்டிருப்பதில் எத்தனை புனைவுகளைக் கொண்டிருக்கும் இராமாயணத்தைப் போல்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கை அவரைத் திறக்கச் சொல்கிறீர்கள் நீங்களே திறவுங்கள். நல்லதொரு விடயம் இது. தர்க்கம் செய்தாலாவது சைவ சமயத்தைப் பற்றிய தெளிவு கிடைகும்.

 

சைவ மதம் ஒரு அற்புதமான மதம் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை !!

 

வேதங்களில் ஒரு 'உருத்திரன்' வருகிறான்! அந்த உருத்திரனுக்கும் எங்கள் சிவனுக்கும் தொடர்பேயில்லை! 

 

வேதங்களில் ஒரு ;ஸ்கந்தன்; இருக்கிறான்! அவனது பிறப்பைப் பற்றி எழுத, யாழ் கள விதிகள் என்னை அனுமதிக்காது!அந்த ஸ்கந்தனுக்கும், எங்கள் முருகனுக்கும் தொடர்பேயில்லை!

 

உண்மையில் வேதங்களுக்கும், சைவத்துக்கும் தொடர்பேயில்லை!

 

குதிரைகளே இல்லாத இந்தியாவில் தான் சைவம் வாழ்ந்தது! 'அசுவமேத யாகம்' பற்றிக்கதைக்கும் வேதங்களுக்கும் எருதை, நந்தியாக வணங்கிய எங்களுக்கும் தொடர்பில்லை!

 

சைவத்தின் வழிபாடு இயற்கையோடு இணைந்தது! சித்தர்கள் என அழைக்கப்பட்டவர்கள், மனித குலத்தின் 'நல் வாழ்வுக்கான' ஆய்வுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன! மருத்துவம், ஆயுர் வேதம், விஷமிறக்குதல், போன்றவை மட்டுமன்றி, அறுவைச் சிகிச்சைகள் கூடச் செய்யப்பட்ட ஆதாரங்கள் உள்ளன!

 

தமிழ் மொழியும், சைவமும், சமஸ்கிரிததுக்கும் வேதங்களுக்கும் முந்தியவை என்பதால், சைவத்திலிருந்து பல விடயங்கள் வேதங்களுக்குச் சென்றிருக்கலாமேயன்றி, மற்றமாதிரியாக ஒருநாளும் இருக்க முடியாது!

 

இந்து மத ஊடுருவல் வரும் வரைக்கும், சைவர்கள் தங்கள் உடல்களைத் தகனம் செய்வது கூட இல்லை!

 

ஆனால், இப்போது தனித்துவமான சைவம் இல்லை! 'இந்து' மதம், அதைச் சாப்பிட்டு, ஜீரணித்து விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கைக்கு இன்றைக்கு கோபம் வந்திட்டிது.. :D

நிற்க.. உலகத்திலை ஒரே கடவுள்தான் உள்ளார் என்கிறதை நான் நம்பவில்லை.. முன்பு ஒரு பிரபஞ்சம் தான் (universe) உள்ளது என்றோம்.. இப்போது அதுமாதிரி பல பிரபஞ்சங்கள் உள்ளன என்கிறார்கள்.. இந்த எல்லா பிரபஞ்சங்களையும் சேர்த்தப் பார்த்தாலும் ஒரே ஒரு வேற்றுக்கிரகவாசி (கடவுள்) தான் உள்ளாரா? :unsure:

இல்லவேயில்லை.. கோடானுகோடி ஏலியன்கள் உள்ளார்கள்.. இவர்கள் பறக்கும் தட்டில் வந்திறங்கியதைக் கண்ட மக்கள் இவர்களைக் கடவுளர் என்றார்கள்.. :D

கிருஷ்ண பரமாத்மா இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அவதாரம் எடுப்பேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.. இப்ப எந்தப் பிரபஞ்சத்தில், எந்தப் பால் வீதியில், எந்தச் சூரியக்குடும்பத்தில் நிற்கிறாரோ தெரியவில்லை. :D

அதுபோல இயேசு, அல்லா என்று கடவுளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆண்டுகள் ஈராயிரம்தான்.. :unsure: அதற்கு முன்னம் இந்தக் கடவுளர்கள் யாரும் தேவைப்படவில்லையா?? மனிதகுலவாழ்வில் அந்த ஈராயிரத்துக்கு முற்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் "கடவுளர்" இல்லாமலே வாழ்ந்திருக்கிறோம்.. இப்போது கடவுள் இல்லாமல் எதுவும் முடியாது என்பது எவ்வகையில் பொருத்தமானது?? :unsure:

ஆக, ஏலியன்கள் வந்தார்கள்.. பறக்கும் தட்டைப் பார்த்து புட்பக விமானம் என்றோம்.. :D நீரின் மேல் நடந்து காட்டினார்கள்.. நீரைப் பிரித்து நடந்து காட்டினார்கள்.. நம்மால் முடியாததை செய்து காட்டுகிறார்களே.. இவர்கள்தான் கடவுளர்கள் என்று எழுதி வைத்துவிட்டார்கள்.. :blink: இதை எழுதினதுக்காக ஏலியன்கள் தங்கட பலத்தை பாவித்து எனககுமேலை லைட் அடிக்காமல் விட்டால் சரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சைவ மதம் ஒரு அற்புதமான மதம் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை !!

 

வேதங்களில் ஒரு 'உருத்திரன்' வருகிறான்! அந்த உருத்திரனுக்கும் எங்கள் சிவனுக்கும் தொடர்பேயில்லை! 

 

வேதங்களில் ஒரு ;ஸ்கந்தன்; இருக்கிறான்! அவனது பிறப்பைப் பற்றி எழுத, யாழ் கள விதிகள் என்னை அனுமதிக்காது!அந்த ஸ்கந்தனுக்கும், எங்கள் முருகனுக்கும் தொடர்பேயில்லை!

 

உண்மையில் வேதங்களுக்கும், சைவத்துக்கும் தொடர்பேயில்லை!

 

குதிரைகளே இல்லாத இந்தியாவில் தான் சைவம் வாழ்ந்தது! 'அசுவமேத யாகம்' பற்றிக்கதைக்கும் வேதங்களுக்கும் எருதை, நந்தியாக வணங்கிய எங்களுக்கும் தொடர்பில்லை!

 

சைவத்தின் வழிபாடு இயற்கையோடு இணைந்தது! சித்தர்கள் என அழைக்கப்பட்டவர்கள், மனித குலத்தின் 'நல் வாழ்வுக்கான' ஆய்வுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன! மருத்துவம், ஆயுர் வேதம், விஷமிறக்குதல், போன்றவை மட்டுமன்றி, அறுவைச் சிகிச்சைகள் கூடச் செய்யப்பட்ட ஆதாரங்கள் உள்ளன!

 

தமிழ் மொழியும், சைவமும், சமஸ்கிரிததுக்கும் வேதங்களுக்கும் முந்தியவை என்பதால், சைவத்திலிருந்து பல விடயங்கள் வேதங்களுக்குச் சென்றிருக்கலாமேயன்றி, மற்றமாதிரியாக ஒருநாளும் இருக்க முடியாது!

 

இந்து மத ஊடுருவல் வரும் வரைக்கும், சைவர்கள் தங்கள் உடல்களைத் தகனம் செய்வது கூட இல்லை!

 

ஆனால், இப்போது தனித்துவமான சைவம் இல்லை! 'இந்து' மதம், அதைச் சாப்பிட்டு, ஜீரணித்து விட்டது!

 

திரி திறக்கச் சொல்லுறன். உங்களுக்குப் பயமெண்டாச் சொல்லுங்கோ நானே உங்கட பேர்ல ஒன்றைத் திறந்து விடுறன். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

புங்கைக்கு இன்றைக்கு கோபம் வந்திட்டிது.. :D

 

 

நேற்றே  சொல்லிவிட்டார்

சனி  பிடித்திருக்கு என்று.......... :lol:  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.