Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ஆன்மீகவாதி முதல்வர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

32%20new.jpg

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதைசெலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர்.

வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை முன்பக்கமாக குவித்துகொண்டிருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  கைகளை வயிற்றுக்கு முன்பாக குவித்துவைத்துகொண்டு நின்றதுடன் அவருடைய பாதணிகள் இரண்டும் கழற்றப்பட்டிருந்தன.

முன்வரிசை கதிரையில் முதலமைச்சர் அமர்ந்திருந்தமையினால் அவர் தனது பாதணிகளை கதிரைக்கு முன்பாக கழற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. பாதணிகளை ஏற்கெனவே கழற்றியிருந்த நிலையில் அவர் அமர்ந்திருந்தால் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அவர் எழுந்து நின்றமையினால் அவை கதிரையின் அடியில் அல்லது அவருடைய கால்களுக்கு பின்னாலே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/97302-2014-01-19-12-45-10.html

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவே செருப்பைக் கழட்டாமல் இருக்கும் போது... இவர் ஏன் கழட்டினார்.
ஓ... தானாடா விட்டாலும், சதையாடும் என்று... இதைத் தான் சொல்வார்களோ...

எந்த நாட்டிலும் யாரும் கழற்றுவது கிடையாது....

சும்மா கழற்றிஇருப்பார்... அந்த நேரம் பார்த்து தேசிய கீதமும் ஒலிக்க தொடங்கியிருக்கும்....

 

தேசியகீதத்திற்காக கழட்டியிருந்தால்...ரொம்ப சின்ன பிள்ளைதனம்...

இல்லாவிட்டால் மேடையில் பூஜை ஏதாவது நடந்திருக்கும்...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு கால்லை ஆனி. செருப்போடை நிக்க ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடிச் செய்தி போடுறது கொஞ்சம் ஓவரா தெரியேல்ல

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் ஆன்மீகவாதியாகவும் இருந்ததினால் சிங்களவன் தப்பிக்கத் தமிழன் அழிந்தான். முதல்வர் விக்னேஸ்வரனும் ஆன்மீகவாதியா..?????  :o  :o

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வன்கொடுமைச் சட்டம் இருக்குதோ இல்லையோ தெரியாது. அப்படி இருக்கும்பட்சத்தில், சம்பந்தி வாசுதேவா தூண்டுதலின்பேரில் மருமக்கள் கணவன்மாரது துன்புறுத்தல் என வழக்குப்போடவும் வாய்ப்பிருக்கு. தனது உள்வீட்டுக்குள்ளேயே தமிழர்களது பிரச்சனைகளை, அவர்கள் வேண்டிநிற்கும் தீர்வை கலந்துரஒயாடல்மூலம் தெளிவுபடுத்தி, தான் சார்ந்தோரை தம்பக்கம் இழுக்க முடியாதவர்போல் நாடகமாடும் விக்கு வினாயகத்தின் சந்தர்ப்ப அரசியலுக்கு, இது ஒரு உதாரணம்.

 

தவிர, உள்ளூராட்சி சபைகளது வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாதவாறு தடைகள்போடும் தமது உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கவோ, அன்றேல் அவர்களை கொம்புசீவிவிடும் ஏனையோருக்கு அறிவுறுத்தல் கொடுக்கவோ முடியாது என்றில்லை கூத்தமைப்புக்கு, அனால் இப்படியான பிரச்சனைகள் இருந்தாலே தங்களது சரிபிழைகளை எவரும் கண்டுகொள்ள முடியாது, அன்றேல் தங்களை நோக்கித் திசைதிரும்ப முடியாது எனும்  சம்பந்தன், சுமந்திரன், அதனுடன் இணைந்த "கடவுள்பாதி மனிதன்பாதி" என்பதுபோல் சிங்களம்பாதி தமிழன்பாதி என்று வாழும் விக்கு வினாயகம் வகையறாக்களது நான்காம்தர அரசியல்செய்யும் இவர்களை தமிழன் மீண்டுமொருமுறை தூக்கியெறிவதே நன்மைபயக்கும்.

 

 

Edited by நியானி

எந்த தேசிய கீதம்? சிங்கள நமோ நமோ நாயே கீதமா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தேசிய  கீதம் பாடினால் என்ன?

அந்த இடத்திலிருந்தால்

அதற்கான மரியாதையைக்கொடுக்கும் போதே

நமது தேசியத்தை எவ்வளவு மதிக்கின்றோம் என்பது புலப்படும்...

 

விக்னேசுவரர் சப்பாத்து  கழட்டிய  விபகாரம்

வேண்டாப்பெண்டாட்டி

கை  பட்டால்

கால் பட்டால் குற்றம் போன்றது....... :(

ஆரோ கக்கீமின் மு.கா  எழுதிய செய்தி.

 

மற்றைய ஊடகங்கள் எல்லாம் இந்த கூட்டத்தில் CV பகிரங்கமாக மகிந்தாவிடம் ஆமி வெளியே எடுக்கும் படி கேட்டார் என்று புகழ்ந்துதான் எழுதியிருந்தன. அதை மூடிமறைக்க சரியாய் கஸ்டப்படுகினம். 

 

 

அது நடக்காது

http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html


முயல்கூட்டம் சிங்கத்தை எதிர்நிக்காது

எந்த தேசிய கீதம் பாடினால் என்ன?

அந்த இடத்திலிருந்தால்

அதற்கான மரியாதையைக்கொடுக்கும் போதே

நமது தேசியத்தை எவ்வளவு மதிக்கின்றோம் என்பது புலப்படும்...

விக்னேசுவரர் சப்பாத்து கழட்டிய விபகாரம்

வேண்டாப்பெண்டாட்டி

கை பட்டால்

கால் பட்டால் குற்றம் போன்றது....... :(

நன்றி. உங்கள் கருத்தே எனது கருத்தும். சிங்களத்திற்கு அடிமை சேவகம் செய்வோரும் சிங்கள அரசிற்கு ஆதரவாக கருத்து எழுதுபவர்களும் உண்மையில் சிங்கள பண்பாட்டையும் இனத்தையும் மதிக்காதவர்களே என்பது என் கருத்து.

Edited by tulpen

செருப்பு கழட்டாத மகிந்த சிங்களவனுக்கு எதிரி என்று செய்தி போடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இப்படி சொல்லுகிறார்கள்.... இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் தனித் தமிழ் ஈழத்திற்கான பயணத்தை ஆரம்பித்து விட்டார் என தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் ர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்......... பாவம் முதலமைச்சர்....

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழனைப்பார்த்து சிங்களவன் திருந்திக்கொண்டு வாறான்.....
ஆனால்
சிங்களவனைப்பார்த்து தமிழன் திருந்திற எண்ணமே இல்லை..... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.