Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தமிழாய் தோணுதடி

Featured Replies

என்னாங்க நம்ம தமிழ்நாட்டில பாட்டெழுதுறவங்க நம்மூரில உள்ள எதையாவது கோத்து பாட்டாக்கிடுவாங்க.. ஏங்க ஈழத்துல இப்பிடி எழுத மாட்டாங்களா? இது நாட்டுப்புறப்பாட்டுங்க புடிச்சிச்சு கொண்டாந்து போடறேன்...

 

ஆக்கம் :- கொ. பெ. பிச்சையா

 

                           முத்தமிழாய் தோணுதடி                                         

 

முத்துப்போல பல்லழகி 

முறுவலாய் சொல்லழகி

கொத்துக்குலை கனியழகி

கோவைப்பழ இதழழகி

செப்புச்சிலை சீரழகி – உன்னை

சேர்த்தணைக்கத் தோணுதடி

 

திருவாரூர் தேரழகி

தென்மதுரை ஊரழகி

திருச்செந்தூர் அலையழகி

தஞ்சாவூர் கலையழகி

ஶ்ரீரங்கக் கோபுரமே – உன்னை

சேவிக்கத் தோணுதடி

 

தேனியூர் செங்கரும்பே

திருவண்ணைக் கற்கண்டே

வேம்பூறுக் கருப்பட்டியே

வெள்ளியணை அதிரசமே

கோவில்பட்டி மிட்டாயே – உன்னைக்

கடிச்சுத் தின்னத்தோணுதடி

 

 

வால்பாறைத் தேனீரே

பொள்ளாச்சி இளநீரே

சிறுவாணித் தண்ணீரே

சிங்கப்பூர் பன்னீரே

கொல்லிமலைத் தேனே – உன்னை

அள்ளிப் பருக ஏங்குதடி

 

சாத்துக்குடி ஆரஞ்சே

சேத்தூருக் கொய்யாவே

கொடைக்கானல் பேரிக்காயே

கோட்டாறுத் தேங்காயே

சாத்தூரு வெள்ளிப்பிஞ்சே – உன்னை

பாத்துண்ண வேண்டுமடி

 

மொத்தமாய் தேடுதடி

முத்தமிழாய் தோணுதடி

கட்டிக் கொள்ள ஆசையடி

ஒட்டிக் கொள்ள ஏங்குதடி

சத்தியமாய் வேண்டுமடி – உன்னைப்

பத்திரமாய் காப்பனடி

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாடலில், தமிழகத் தலை நகரான சென்னையை... விட்டுட்டாங்களே.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை வர்ணிக்க, எனது மண்ணில் ஏராளம் உவமானங்கள் உண்டு, அஞ்சலை!  :D

 

எங்கள் கடலில் விளைகின்ற,

கயல் மீனாய்க் கண்கள் உனக்கு....!

 

பனை மரங்களில் தொங்கும்,

தூக்கணாங்குருவிக் கூடுகளின்,

வளைவு உன் கழுத்துக்கு...!

 

எனது தேசத்துக் கடலலைகளின்,

துள்ளல் உனது நடைக்கு...!

 

தலைகீழாக்கிய 'திருமலை'யின்,

அழகு உனது இடைகளுக்கு....!

 

தெரிந்தெடுத்த சிலாபத்து முத்துக்களின்,

வரிசை உனது பற்களுக்கு..!

 

மட்டக்களப்பின் கட்டித் தயிரின்,

சுவை உனது குரலுக்கு...!

 

வன்னி விளைச்சல் தாங்காது,

மண் நோக்கிக் குனிகின்ற, 

நெற்கதிர்களின் நாணம் உனக்கு...!

 

இது போதுமா, அஞ்சலை? :rolleyes:

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை வர்ணிக்க, எனது மண்ணில் ஏராளம் உவமானங்கள் உண்டு, அஞ்சலை! :D

எங்கள் கடலில் விளைகின்ற,

கயல் மீனின் கண்கள் உனக்கு....!

பனை மரங்களில் தொங்கும்,

தூக்கணாங்குருவிக் கூடுகளின்,

வளைவு உன் கழுத்துக்கு...!

எனது தேசத்தின் கடலலைகளின்,

அசைவு உனது நடைக்கு...!

தலைகீழாக்கிய 'திருமலை'யின்,

அழகு உனது இடைகளுக்கு....!

தெரிந்தெடுத்த சிலாபத்து முத்துக்களின்,

வரிசை உனது பற்களுக்கு..!

மட்டக்களப்பின் கட்டித் தயிரின்,

சுவை உனது குரலுக்கு...!

வன்னி விளைச்சல் தாங்காது,

மண் நோக்கிக் குனிகின்ற,

நெற்கதிர்களின் நாணம் உனக்கு...!

இது போதுமா, அஞ்சலை? :rolleyes:

ஏதோ ஒண்டு மிஸ்ஸிங் மாதிரி இருக்கு ...........என்னவாக இருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒண்டு மிஸ்ஸிங் மாதிரி இருக்கு ...........என்னவாக இருக்கும்

 

இளவாலைச் செவ்விளநீர்க் குலைகளின் செழுமையின்

அளவான அடங்காத் திமிருன் முலைளுக்கு!!

 

இதா மிஸ்ஸிங்? :D

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒண்டு மிஸ்ஸிங் மாதிரி இருக்கு ...........என்னவாக இருக்கும்

 

தீவகத்து மாதுளம் முத்துக்களின்,

செம்மை உனது இதழ்களுக்கு...! 

 

இது தானே 'நந்து' மிஸ்ஸிங்....! :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஞ்சலை உங்கள் பதிவுக்கு

 

நம்நாட்டுக்கவிஞர்களும் நன்றாக எழுதுவார்கள் காலவெளிகள் கைகூடும்போது நிறைய நீங்கள் கேட்ட ஆக்கங்கள்போல் இந்த இணைய வெளிகளில் கிடைக்கும் சும்மா கேட்டீர்கள் என்பதற்காக சட்டென்று புங்கையூரான் உவமைகளை கோர்த்துக் காட்டியது மிகச் சொற்பமானவையே..இந்தக் கருத்துக்களத்தில் இருக்கும் கவிஞர்கள் எழுதினாலே போது உங்களுக்கு அடுத்த கேள்விக்கு இடமே இருக்காது. இருந்தாலும் இப்படி ஒரு விடயத்தை கேட்டு வைத்த உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

 

 


பெண்ணை வர்ணிக்க, எனது மண்ணில் ஏராளம் உவமானங்கள் உண்டு, அஞ்சலை!  :D

 

எங்கள் கடலில் விளைகின்ற,

கயல் மீனாய்க் கண்கள் உனக்கு....!

 

பனை மரங்களில் தொங்கும்,

தூக்கணாங்குருவிக் கூடுகளின்,

வளைவு உன் கழுத்துக்கு...!

 

எனது தேசத்துக் கடலலைகளின்,

துள்ளல் உனது நடைக்கு...!

 

தலைகீழாக்கிய 'திருமலை'யின்,

அழகு உனது இடைகளுக்கு....!

 

தெரிந்தெடுத்த சிலாபத்து முத்துக்களின்,

வரிசை உனது பற்களுக்கு..!

 

மட்டக்களப்பின் கட்டித் தயிரின்,

சுவை உனது குரலுக்கு...!

 

வன்னி விளைச்சல் தாங்காது,

மண் நோக்கிக் குனிகின்ற, 

நெற்கதிர்களின் நாணம் உனக்கு...!

 

 

 


தீவகத்து மாதுளம் முத்துக்களின்,

செம்மை உனது இதழ்களுக்கு...! 

 

 

 

ரோமியோ உங்களுடைய உவமைகளை நான் இப்படிக் கோர்த்து விட்டேன் நன்றாக இருந்தால் பச்சை போட்டு விடுங்கள் :lol:

 

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் துள்ளும் கயலழகு

காந்தம் கொள்ளுது பேரழகு

மடலைத் திறந்த தேவதையே - உன்

மைவிழிக் குளத்திலம் மீன் கண்டேன்

 

கழுத்தைப் பார்த்தேன் கண்மணியே - அது

தூங்கும் குருவியின் செழுங்கூடு - இதைப்

பனைகளில்தானே பார்த்திருந்தேன் - அடி

பைத்தியம் பிடிக்குது இப்போது

 

திருப்பிப் பார்த்தேன் திருமலையை

திக்கின்னு போச்சுது இதயமடி - உன்

இடையின் நெளிவை அதில் கண்டேன் - நான்

உணர்ச்சிப் பெருக்கில் கட்டுண்டேன்.

 

முக்குளித்தெழுந்தேன் சிலாபத்தில் - என்

பொத்திய கைக்குள் உன் பற்களடி

அத்தனை அழகடி உன் சிரிப்பில் - அதில்

நான் தொலைந்தேன் இப்புவியில்

 

மட்டுநகரின் தயிர்போல

மாதே உந்தன் குரல் குழையும் - அடி

மத்தினில் சிக்கிய தயிர் போலே

இந்த மன்னவன் மனமோ அலைக்கழியும்

 

வன்னியில் விளைந்த நெற்பயிர்கள்

நிறைவது நாணும் நிலம் நோக்கி - நம்

கண்ணது கூடும் கணங்களிலே - நீ

அப்பயிராய் ஆனாய் பெண்மானே.

 

தீவக மாதுளச் செம்மையெலாம் - உன்

தேனிதழ் கொண்டன உண்மையடி

தீர்வில்லை எந்தன் விடுதலைக்கு

தீந்தமிழே இது என் வழக்கு

 

:lol: :lol: :lol::D :D :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் துள்ளும் கயலழகு

காந்தம் கொள்ளுது பேரழகு

மடலைத் திறந்த தேவதையே - உன்

மைவிழிக் குளத்திலம் மீன் கண்டேன்

 

கழுத்தைப் பார்த்தேன் கண்மணியே - அது

தூங்கும் குருவியின் செழுங்கூடு - இதைப்

பனைகளில்தானே பார்த்திருந்தேன் - அடி

பைத்தியம் பிடிக்குது இப்போது

 

திருப்பிப் பார்த்தேன் திருமலையை

திக்கின்னு போச்சுது இதயமடி - உன்

இடையின் நெளிவை அதில் கண்டேன் - நான்

உணர்ச்சிப் பெருக்கில் கட்டுண்டேன்.

 

முக்குளித்தெழுந்தேன் சிலாபத்தில் - என்

பொத்திய கைக்குள் உன் பற்களடி

அத்தனை அழகடி உன் சிரிப்பில் - அதில்

நான் தொலைந்தேன் இப்புவியில்

 

மட்டுநகரின் தயிர்போல

மாதே உந்தன் குரல் குழையும் - அடி

மத்தினில் சிக்கிய தயிர் போலே

இந்த மன்னவன் மனமோ அலைக்கழியும்

 

வன்னியில் விளைந்த நெற்பயிர்கள்

நிறைவது நாணும் நிலம் நோக்கி - நம்

கண்ணது கூடும் கணங்களிலே - நீ

அப்பயிராய் ஆனாய் பெண்மானே.

 

தீவக மாதுளச் செம்மையெலாம் - உன்

தேனிதழ் கொண்டன உண்மையடி

தீர்வில்லை எந்தன் விடுதலைக்கு

தீந்தமிழே இது என் வழக்கு

 

:lol: :lol: :lol::D :D :icon_mrgreen: :icon_mrgreen:

 

வரலாறு வரைந்து விட்ட,

வல்வை மண்ணில் தவழ்ந்து....

 

வரலாற்றுக் கவிஞனின்,

வாசல் படிகளில் பயின்று......

 

வல்வையெனும் பெயர் சுமக்கும்,

கவிதாயினியிடமா,

வார்த்தைகளுக்குப் பஞ்சம்,

வந்துவிடப் போகின்றது?

 

வெண்பாவில் வடித்தெடுத்த,

'விதம்'.... அழகு ! :D

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு வரைந்து விட்ட,

வல்வை மண்ணில் தவழ்ந்து....

 

வரலாற்றுக் கவிஞனின்,

வாசல் படிகளில் பயின்று......

 

வல்வையெனும் பெயர் சுமக்கும்,

கவிதாயினியிடமா,

வார்த்தைகளுக்குப் பஞ்சம்,

வந்துவிடப் போகின்றது?

 

வெண்பாவில் வடித்தெடுத்த,

'விதம்'.... அழகு ! :D

 

ரோமியோ பண்டிதர்கள் எல்லாம் தற்கொலை செய்ய முனைந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. இலக்கண உடைப்புகளைக்' கொண்ட வரிகளை வெண்பா என்று சொல்வதில்லை... எனக்கு சீர், தளை, தேமா, புளிமா,கருவிளம் கூவிளம் என்று குத்துப்பட விருப்பமில்லை உங்கள் கற்பனையைப்பார்த்தபோது சும்மா பாடல் மாதிரி எழுதினால் என்ன என்றுதான்  களமிறங்கினேன். மற்றப்படி இலக்கணங்களுக்கு அடங்கமுடியாத வசனங்கள் மட்டுந்தான் எழுதவேன் என்ன அவை எல்லாம் வசனக்கவிதைக்குள் அடங்கி விடுவதால் கவிதை எழுதுவேன் என்று ஒரு சின்ன இறுமாப்பு... ஆனால் இந்தக்களத்திற்கு இலக்கணப்பிழையின்றி எழுதவல்ல பண்டிதர்கள் இருக்கிறார்கள் நிச்சயமாக என்னையும் உங்களையும் பார்த்து நகைத்துக் கொண்டிருப்பார்கள்... அவர்கள் எம்மைக் குட்டாத வரைக்கும்..... :lol::rolleyes:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலை பகிர்ந்த கவிதை போல
புங்கையூரன் மற்றும் வல்வை சகாறா ஆகியோரின் கவிதைகளும் அசத்துகின்றன...

 

பாராட்டுகள்...!!

  • கருத்துக்கள உறவுகள்

தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131811

DSC01074.jpg

Edited by shanthy

திருப்பிப் பார்த்தேன் திருமலையை

திக்கின்னு போச்சுது இதயமடி - உன்

இடையின் நெளிவை அதில் கண்டேன் - நான்

உணர்ச்சிப் பெருக்கில் கட்டுண்டேன்.

 

வெண்பா எழுதிய பெண்பா !! வாழ்த்துக்கள்..

 

கொடியிடை கண்டிருக்கிறேன் .... மலை நெளிவிலும் இடையைக் காணலாம் என்று இங்கு கண்டேன் ...:)

  • தொடங்கியவர்

சும்மா ஒரு கேள்விக்கு கேட்டேங்க...உங்க கிட்டயும் இருக்குங்க சரக்கு என்னாங்க வெளிப்படுத்தாம இருக்கீங்க.....நன்றிங்க எல்லாருக்கும் இங்கிட்டு வந்து ரசிச்சீங்க இல்லீங்களா நேக்குப் புடிச்சிருக்குங்க.

  • கருத்துக்கள உறவுகள்

வெண்பா எழுதிய பெண்பா !! வாழ்த்துக்கள்..

 

கொடியிடை கண்டிருக்கிறேன் .... மலை நெளிவிலும் இடையைக் காணலாம் என்று இங்கு கண்டேன் ... :)

 

அட உங்களுக்கு விசயமே தெரியாதா??? :rolleyes:  மலையின் நெளிவில் இடையைக்கண்டவர் நம்ம ரோமியோதான் நானில்லை அவருடைய அத்திவாரத்தில் கொஞ்சம் அரிதாரம் பூசியது மட்டுந்தான் என்னுடைய பணி

 

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ பண்டிதர்கள் எல்லாம் தற்கொலை செய்ய முனைந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. இலக்கண உடைப்புகளைக்' கொண்ட வரிகளை வெண்பா என்று சொல்வதில்லை... எனக்கு சீர், தளை, தேமா, புளிமா,கருவிளம் கூவிளம் என்று குத்துப்பட விருப்பமில்லை உங்கள் கற்பனையைப்பார்த்தபோது சும்மா பாடல் மாதிரி எழுதினால் என்ன என்றுதான்  களமிறங்கினேன். மற்றப்படி இலக்கணங்களுக்கு அடங்கமுடியாத வசனங்கள் மட்டுந்தான் எழுதவேன் என்ன அவை எல்லாம் வசனக்கவிதைக்குள் அடங்கி விடுவதால் கவிதை எழுதுவேன் என்று ஒரு சின்ன இறுமாப்பு... ஆனால் இந்தக்களத்திற்கு இலக்கணப்பிழையின்றி எழுதவல்ல பண்டிதர்கள் இருக்கிறார்கள் நிச்சயமாக என்னையும் உங்களையும் பார்த்து நகைத்துக் கொண்டிருப்பார்கள்... அவர்கள் எம்மைக் குட்டாத வரைக்கும்..... :lol::rolleyes:

வல்வை சகாரா

எப்போதும் சொந்த ஆக்கங்கள் மெச்ச தக்கது. உங்கள் கவிதை என் போன்ற பாமரனுக்கு இனிக்குது

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.