Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரொளிரும் பருவமது பதினாறின் பேரழகே.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

yarl16b.png

 

நாலிரண்டு திக்கிருந்தும் - நல்

அருவிகளாய் ஊற்றெடுத்து

யாழெனும்...... 

ஆழியிலே சங்கமித்து

ஆனதுகாண் அருஞ்செல்வம்

 

மானமது காக்கும்

மறக்குலத்தின் மாவிளக்கே

தேனமிழ்தே தாயகத்தின்

மணம் உணர்த்தும் தனிமலரே

 

திசை வெளிகள்

உன் உறவொளிரும்

தீந்....தமிழால்

யாழ் இசைக்கும் நரம்பொளிரும் 

பாரொளிரும் பருவமது

பதினாறின் பேரழகே! 

நாமொளிரக் களமுவந்த

யாழ் அரங்கே நீ வாழீ.

 

வானமெனத் தமிழ் பரந்த

வலையுலகத் திருவே, 

ஊனுனதாய், உளமுனதாய்

கானமிது எழுகிறதே

கண்மணியே..... !

எம் கவின்வனமே! 

காலவெளி கடந்தும், 

காற்றுவெளி நிறைந்தும்

நீ ஆனதென

வாய்கள் மலர்ந்தும்

வாழிய நீ பல்லாண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன்... நான்காவது கவிதை, யாழை பெண்ணாக வர்ணித்து வந்துள்ளதை....
ஆண் வர்க்கத்தின் சார்பில்... மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
யாழை ஆணாக வர்ணித்து வரும் கவிதையை... ஆராவது எழுதுங்கப்பா... :)

திசை வெளிகள்

உன் உறவொளிரும்

தீந்....தமிழால்

யாழ் இசைக்கும் நரம்பொளிரும் 

பாரொளிரும் பருவமது

பதினாறின் பேரழகே! 

நாமொளிரக் களமுவந்த

யாழ் அரங்கே நீ வாழீ. /// சந்தங்களில் வந்த சத்தியமான வார்த்தைகள் . கவிப் பாவுக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன்... நான்காவது கவிதை, யாழை பெண்ணாக வர்ணித்து வந்துள்ளதை....

ஆண் வர்க்கத்தின் சார்பில்... மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

யாழை ஆணாக வர்ணித்து வரும் கவிதையை... ஆராவது எழுதுங்கப்பா... :)

 

உங்கள் வன்மையான கண்டனத்தை ஏற்க முடியாது...இதில் எங்கே பெண்பால் தெரிகிறது.....சாட்சிப்படுத்தவும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வன்மையான கண்டனத்தை ஏற்க முடியாது...இதில் எங்கே பெண்பால் தெரிகிறது.....சாட்சிப்படுத்தவும். :icon_mrgreen:

 

 

 

yarl16b.png

 

 

திசை வெளிகள்

உன் உறவொளிரும்

தீந்....தமிழால்

யாழ் இசைக்கும் நரம்பொளிரும் 

பாரொளிரும் பருவமது

பதினாறின் பேரழகே! 

நாமொளிரக் களமுவந்த

யாழ் அரங்கே நீ வாழீ.

------

 

நீங்கள்... எனக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து விட்டீர்கள் போலுள்ளது.

அரங்கு என்றால்... பெண் என்று அர்த்தம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்... எனக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து விட்டீர்கள் போலுள்ளது.

அரங்கு என்றால்... பெண் என்று அர்த்தம். :D

 

குசும்பு தாங்க முடியலைடி இலையான் கொல்லி :icon_mrgreen:

எதற்கும் முதலில் உங்க பிரச்சனையைத் தீர்த்து வைக்க யாழ்ப்பெடியனுக்கு ஒரு கவிதை எழுதிக் கொண்டு வாறன் பொறுங்கள் :rolleyes:  <_<  :icon_idea:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பெண்ணாக இருப்பதால்தான் அதிகம் ஆண்கள் இங்கு வட்டமடிக்கின்றார்கள் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன்... நான்காவது கவிதை, யாழை பெண்ணாக வர்ணித்து வந்துள்ளதை....

ஆண் வர்க்கத்தின் சார்பில்... மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

யாழை ஆணாக வர்ணித்து வரும் கவிதையை... ஆராவது எழுதுங்கப்பா... :)

 

இலையான் கில்லரின் விருப்பம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. :rolleyes:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138117

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா நீங்கள் நன்றாக கவிதை எழுதுகின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காலவெளி கடந்தும், 

காற்றுவெளி நிறைந்தும்

நீ ஆனதென

வாய்கள் மலர்ந்தும்

வாழிய நீ பல்லாண்டு

 

 
உங்கள் கவிதையிலுள்ள, வார்த்தைகளே போதும்!
 
காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைத்தும் அவள் நிச்சயமாக வாழ்வாள்!
 
நாளைய தலைமுறைக்கு, நமது வரலாற்றைகயும் காவிச் செல்வாள்!
 
அருமையான கவிதைக்கு நன்றிகள், வல்வை! :lol:

அருமையான கவி வாழ்த்துக்கள் அக்கா ...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திசை வெளிகள்

உன் உறவொளிரும்

தீந்....தமிழால்

யாழ் இசைக்கும் நரம்பொளிரும் 

பாரொளிரும் பருவமது

பதினாறின் பேரழகே! 

நாமொளிரக் களமுவந்த

யாழ் அரங்கே நீ வாழீ. /// சந்தங்களில் வந்த சத்தியமான வார்த்தைகள் . கவிப் பாவுக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள் .

 

நன்றி கோமகன் உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும்

 

யாழ் பெண்ணாக இருப்பதால்தான் அதிகம் ஆண்கள் இங்கு வட்டமடிக்கின்றார்கள

 

 

நீங்கள் சொன்னால் உண்மையாக இருக்கும் கிருமி

வல்வை சகாரா நீங்கள் நன்றாக கவிதை எழுதுகின்றீர்கள்

 

நன்றி அகஸ்தியன்

 

 
உங்கள் கவிதையிலுள்ள, வார்த்தைகளே போதும்!
 
காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைத்தும் அவள் நிச்சயமாக வாழ்வாள்!
 
நாளைய தலைமுறைக்கு, நமது வரலாற்றைகயும் காவிச் செல்வாள்!
 
அருமையான கவிதைக்கு நன்றிகள், வல்வை! :lol:

 

 

நன்றி ரோமியோ

 

அருமையான கவி வாழ்த்துக்கள் அக்கா ...!

 

நன்றி அஞ்சரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

மிகச் செழுமையான வார்த்தைகளால் யாழுக்கு வாழ்த்துபாடல் வடித்துள்ளீர்கள் அக்கா...

"தீந்...தமிழால்

யாழ் இசைக்கும் நரம்பொளிரும்

பாரொளிரும் பருவமது

பதினாறின் பேரழகே"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே யாழை ஆணாக்கியும் ஒன்டு போடுங்கோ, பாவம் தமிழ்சிறி இப்பவே கடுப்பாயிட்டார்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.