Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வராது – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வராது – சுமந்திரன்

[ சனிக்கிழமை, 03 மே 2014, 02:14 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]

இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் இந்த நாட்டில் வரப்போவதில்லை என்பது அடிப்படையான விடயம்.

அதற்காக இந்தியா சொல்வது எல்லாவற்றையும் செய்யப்போகின்றோம் என்பதும் எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதுமில்லை.

எங்களுடைய கொள்கைகளின் அடிப்படையிலேயேதான் தீர்வு வரும்.

ஆனால் அதை இந்தியாவைப் புறந்தள்ளிச் செய்யமுடியாது.

இந்தியாவை நாங்கள் எங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலே ஓர் அடிப்படை விடயம் உள்ளது.

ஒரு நாட்டைக் குறிவைத்து நிறைவேற்றுகின்ற எந்தத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவாக வாக்களிப்பதில்லை.

உதாரணத்துக்கு சிரியாவில் நடைபெறுகிற விசாரணை தொடர்பில் அவர்கள் ஆதரித்து வாக்களிக்கவில்லை.

வடகொரியா விவகாரத்திலும் கூட வாக்களிக்கவில்லை.

அவர்களுடைய பொதுவான கொள்கை ஒரு நாட்டைக் குறிவைத்து நிறைவேற்றுகின்ற தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என்பதாகும்.

ஆனாலும், இரண்டே இரண்டு தடவைகள் அதற்கு விதிவிலக்காகச் செயற்பட்டிருக்கிறார்கள்.

அது இலங்கை சம்பந்தமான 2012, 2013ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.

அதற்கு காரணம், தமிழ்நாட்டிலே இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எழுந்த கோசங்கள்.

ஆகவே அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலேயே மாற்றத்தினை ஏற்படுத்தி அந்தத் தீர்மானங்களுக்காக வாக்களித்தார்கள்.

இந்தத் தடவை ஒரு வித்தியாசம் ஏற்பட்டது.

இந்த ஆண்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலே எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ, கோசமோ இருக்கவில்லை.

இதற்குக் காரணம் இந்தத் தீர்மானம் பிரியோசனமில்லை என்ற பொய்யான பரப்புரையின் பிரதிபலிப்புத்தான் தமிழ்நாட்டில் எந்த அழுத்தமும் ஏற்படாமைக்கான காரணம்.

அத்துடன் அமெரிக்காவுக்கு எதிரான ஊர்வலங்கள் நடத்தப்படுவதற்கும் அதுவே காரணமாகியது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு கல்லெறிந்தார்கள்.

அவ்வாறான அழுத்தம் இல்லாமை காரணமாகவே இந்தியா தனது சாதாரண வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையிலே ஒரு நாட்டைக் குறிவைத்து தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்காமல் இருக்கக் கூடியதாக இருந்தது.” என்று அவர்மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20140503110443

இந்தியாவைப் புறந்தள்ளி ஒரு தீர்வும் வராதுதான். இந்தியா ஊடான தீர்வுதான் சிறிலங்காவின் தீர்வாக இருக்கும். வேறு எந்த சக்தியாலும் தமிழர்களுக்கான தீர்விற்காக சிறிலங்காவைப் பணிய வைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இருந்து பார்க்கத்தானே போறம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா  தராதா  என்பதற்கு மேல்

இந்தயா  விடாது என்பது தான் உண்மை

 

ஆனால் இந்தவிடயத்தை தமிழகம் கையிலெடுத்திருப்பது  நமக்கெல்லாம் பெரும் ஆறுதல்

நாம் செய்யணும்

இந்தியாவை  தமிழகம் தட்டி  வைக்கணும்

வைக்கும்.

 

நமது செயல் எப்போது?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த வலிமையோடு இருந்த ருசியா உடைந்து துண்டு துண்டான நிகழ்வு நாங்கள் வாழும் காலத்திலேதான் நடைபெற்றது.  :o  :lol:  :D

இந்தியாவைப் புறந்தள்ளி ஒரு தீர்வும் வராது, இந்தியா ஊடாகா ஒரு தீர்வும் வராது...

எமக்கு பிடிக்குதோ இல்லையோ உண்மை அதுதான் .

 

தமிழகத்திற்குள் இந்தியா இருக்கு தட்டி வைக்க . :icon_mrgreen:


உடையிற துண்டில நீங்களும் ஒன்றை எடுத்து எனக்கும் ஒண்டு தாங்கோ . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிலை  ஜெனிவாவின் வாக்களிப்பில் தெரிந்து விட்டது. தாமரையின் மேல் உள்ள தண்ணீர் போல் தான் தமிழரின் பிரச்சனையையும் அணுகுகிறது. இந்தியாவை தமிழ் நாட்டால் தான் தமிழர் சார்பான நிலைக்கு கொண்டு வர முடியும். அல்லது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தமிழர்களுக்கான தீர்வை மனப்பூர்வமாக முன்னெடுத்தால் இந்தியாவும்  ஒத்துப்பாட முன் வரும். தனியாக இந்தியா தமிழருக்கு தீர்வை தரும் என்பது கல்லில் நாருரிப்பதற்கு சமனானது. இந்தியாவின் கடந்த கால சம்பவங்கள் இவற்றுக்கு சான்று.

இந்தியா ஒரு வைக்கல் பட்டறை நாய் போன்று தானும் முன்னின்று தீர்வை செய்து முடிக்காது மற்ற வெளினாடுகளையும் செய்ய விடாது. சிங்களத்தின் விருப்பபடியே தமிழரின் மேல் அழுத்தங்களை பிரயோகிக்கும். இது கடந்த வரலாறு. இனிவரும் காலம் எப்படி அமையுமோ ஒன்றும் நிச்சயம் இல்லை. சுமந்திரனின் தொழிலில் முக்கியமானது இந்தியாவையும் இலங்கையையும் தூக்கி வைத்து எம்மினத்தை காலில் மிதிப்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.. நடைமுறைசாத்தியம் இல்லாதவிடையங்களை பேசி குளிரவைத்து குளிர்காய்தல் என்பது இதுதான்.

இந்தியாவுக்கு தனது நாட்டுக்குள்ளேயே தீர்க்கப்பட ஆயிரம் பிரச்சினைகள் இருக்கு...  பல பகுதி  இந்தியர்களை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் நிலை தங்களை விட மேல் ...  !!

 

இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக  இந்தியா செய்ய ஒண்டுமே இல்லை...    இதுதான் உண்மை... !!! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பாகிஸ்தானை பிரிக்க முடிவெடுத்த கதை தெரியுமோ.. சுமந்திரனுக்கு.. அது ஒரு நாட்டிற்கு எதிராக எடுத்த முடிவில்லையாமோ..???!

 

சரி.. அதுபோகட்டும்.. சிறீலங்காவுக்கு எதிரா இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டனவே. வடக்குக் கிழக்கு தமிழர்களின் பூர்வீக பூமி என்று மொழியப்பட்டதே.. அப்ப சுமந்திரன் என்ன கைசூப்பிக் கொண்டிருந்தவரோ.. அது ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானம் இல்லையாமோ..???!

 

காஷ்மீர் விவகாரத்தில்.. இந்தியா மீது ஐநா அழுத்தம்.. உள்ளது. அங்கு ஐநா மத்தியஸ்தத்தோடு இந்தியா ஒரு மக்கள் விருப்புத் தேர்தலை நடத்த கோரப்பட்டு வருகிறது. காஷ்மீரில்... இந்தியாவின்  மனித உரிமைகள் மீறல் குறித்தும் ஐநா பிரஸ்தாபித்து வருவதோடு.. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு தொடர்பிலும்.. இந்தியாவோடு ஐநா முரண்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில்..  இருந்து தான் தப்பிக்கவே இந்தியா மற்றைய நாடுகள் மீதான ஐநா தலையீட்டை எதிர்த்து வருகிறதே அன்றி.. குறிப்பாக... ஆசிய பிராந்திய நாடுகள் மீதான ஐநா தீர்மானத்தை.. எதிர்த்து வருகிறது. அதுமட்டுமன்றி ஐநா பாதுகாப்புச் சபையில் ரஷ்சியாவின் வீட்டோ அதிகாரத்தை நம்பியுள்ள இந்தியா.. ரஷ்சியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை எப்போதுமே எடுத்ததில்லை. ரஷ்சிய சார்பு நாடுகள்.. ரஷ்சிய நட்பு நாடுகள் செய்யும் அட்டூழியங்கள் அனைத்தையும்.. இந்தியா எதிர்க்காமலே இருந்து வருகிறது. இதுதான் இந்தியாவின் கொள்கையே தவிர... இந்தியாவுக்கு என்று ஒரு உருப்படியான வெளிவிவகாரக் கொள்கை இல்லை..!

 

அப்படி இருந்திருந்தால்.. இன்று இந்திய தென்மண்டலத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதமும்.. சீனக் கண்காணிப்பும் ஊடுருவி இருக்க முடியாது. இதனால் தான் இந்திரா காந்தி அம்மையார் ஈழத்தை தமிழகத்துக்கூடாக ஆதரித்தார். அதுவும்.. இந்தியாவின் நலன் கருதியே. ஆனால் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள்.. தமிழர்களைக் கைவிட்டுவிட்டு.. சிங்களவனை ஆதரிக்கப் போய்.. கடைசியில்.. பாகிஸ்தான் தீவிரவாதத்திடம்.. தமிழகத்தை இலக்கு வைத்துவிட்டு.. வட இந்தியாவில் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால்.. அது இந்தியா என்ற போலி கூட்டமைப்பின் இருப்புக்கோ ஓர் நாள் ஆப்பாகும். அப்போதாவது இந்தியா ஈழத்தமிழர்களை ஆதரிக்கலாம்.. ஆதரிக்காமல்.. பூமிப்பந்தில் இருந்த இடம் தெரியாமல் போகலாம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
அப்படி இருந்திருந்தால்.. இன்று இந்திய தென்மண்டலத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதமும்.. சீனக் கண்காணிப்பும் ஊடுருவி இருக்க முடியாது. இதனால் தான் இந்திரா காந்தி அம்மையார் ஈழத்தை தமிழகத்துக்கூடாக ஆதரித்தார். அதுவும்.. இந்தியாவின் நலன் கருதியே. ஆனால் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள்.. தமிழர்களைக் கைவிட்டுவிட்டு.. சிங்களவனை ஆதரிக்கப் போய்.. கடைசியில்.. பாகிஸ்தான் தீவிரவாதத்திடம்.. தமிழகத்தை இலக்கு வைத்துவிட்டு.. வட இந்தியாவில் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
அதற்குத்தான் தமிழ் இளைஞர்கள் இன்று சிறிலங்கா இராணுவத்திற்கு தேவைப்படுகின்றார்கள் போலும்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிலை  ஜெனிவாவின் வாக்களிப்பில் தெரிந்து விட்டது. தாமரையின் மேல் உள்ள தண்ணீர் போல் தான் தமிழரின் பிரச்சனையையும் அணுகுகிறது. இந்தியாவை தமிழ் நாட்டால் தான் தமிழர் சார்பான நிலைக்கு கொண்டு வர முடியும். அல்லது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தமிழர்களுக்கான தீர்வை மனப்பூர்வமாக முன்னெடுத்தால் இந்தியாவும்  ஒத்துப்பாட முன் வரும். தனியாக இந்தியா தமிழருக்கு தீர்வை தரும் என்பது கல்லில் நாருரிப்பதற்கு சமனானது. இந்தியாவின் கடந்த கால சம்பவங்கள் இவற்றுக்கு சான்று.

 

தமிழ்நாட்டை இன்னுமா நம்புகிறீர்கள்? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! யுத்தம் நடந்த காலத்திலும் சரி அதற்கு முற்பட்டகாலத்திலும் சரி ஏன் இப்பவும் சரி தமிழ்நாடு குறித்த தெளிவு சிங்களத்துக்கு இருந்தது. ஆனால் பட்டபிறகும் எம்மவருக்கு தெளிவு இல்லாதிருப்பது வருந்தத்தக்கது.

 

(அரசியல்) கோமாளிகள் என சிங்களம் தெளிந்திருந்தது.

 

Edited by வாலி

என்னைப் பொறுத்தவரையில் சீன பாகிஸ்தான் என்பதெல்லாம் இந்தியாவிற்கு தென்பிராந்தியத்தில் தற்போதைக்கு தலையிடியான ஒரு விடயமல்ல. இற்றைய வல்லரசுகள் கூட தமது பிராந்தியங்களை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவில்லை. இந்தியா சிறிலங்காவில் தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததோ அதனை சீனா சிறிலங்காவில் செய்து கொண்டிருக்கிறது.

இந்தியப் பிராந்தியத்தில் இருக்கும் எந்த நாட்டிலும் இந்தியச் செல்வாக்கின் பாதிப்பு குறையாமல் இருக்கும். இதுகால வரையில் இந்தியச் செர்வாக்கு என்பது தமது அண்டை நாடுகளில் தேவையான போதெல்லாம் ஒரு திணிப்பாகவே இருந்து வந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.