Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்குத் தனியான அழைப்பு விடுக்க சவுத் புளொக்கும் பாஜகவும் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லியில் இன்று நடக்கும் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு, பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று மாலை நடக்கவுள்ள நரேந்திர மோதடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன.

எனினும் பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன.

வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே, அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்சவுடன், விக்னேஸ்வரன் வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தனியான அழைப்பு அனுப்புவது, சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் கடப்பாட்டை இந்தியா மீறுவதாகி விடும் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னதாக பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க தன்னுடன் வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140526110591

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லியில் இன்று நடக்கும் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு, பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று மாலை நடக்கவுள்ள நரேந்திர மோதடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன.

எனினும் பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன.

வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே, அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்சவுடன், விக்னேஸ்வரன் வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

1ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தனியான அழைப்பு அனுப்புவது, சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் கடப்பாட்டை இந்தியா மீறுவதாகி விடும் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னதாக 2பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க தன்னுடன் வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140526110591

 

1. இலங்கை தொடர்பான இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு. முகவரி மாறினாலும் இந்தியாக்காரனின் முகம் ஒன்றுதான்.

 

2. வடக்கு மாகாண முதல்வருக்கு நன்றி.

 

இதிலிருந்து ஒன்றுமட்டும் நிச்சயம் சிங்களம் நன்றாக வடக்கினில் ஊடுறுவிட்டது.. தனக்கு என்று செல்வாக்கான ஆட்களை அதிகாரிகள் மட்டத்தில் திட்டமிட்டு வைத்துள்ளது. முள்ளுகளை மெதுவாக அகற்ற வேண்டும். அறிவிற்கு வேலை கொடுத்து படிப்படியாக தமிழரின் ஆதிக்கம் டில்லியுள் ஊடுறுவவேண்டும். மிகக்கவனமாக, கையாளவேண்டும்.

சிங்களம் ஒன்றும் டெல்கியில் ஊடுருவவில்லை எம்மவர்  எங்கு போனாலும் எதிர்ப்பை சம்பாதிப்பதுதான் வேலை .

மோடியுடன் இப்போதே தொடங்கிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து ஒன்றுமட்டும் நிச்சயம் சிங்களம் நன்றாக வடக்கினில் ஊடுறுவிட்டது.. தனக்கு என்று செல்வாக்கான ஆட்களை அதிகாரிகள் மட்டத்தில் திட்டமிட்டு வைத்துள்ளது. முள்ளுகளை மெதுவாக அகற்ற வேண்டும். அறிவிற்கு வேலை கொடுத்து படிப்படியாக தமிழரின் ஆதிக்கம் டில்லியுள் ஊடுறுவவேண்டும். மிகக்கவனமாக, கையாளவேண்டும்.

 

அங்கு இன்னமும் இருப்பது பழைய அதிகாரிகள்தானே.. மேனன், நம்பியார், பணிக்கர், நாயர்.. :D

சிங்களம் ஒன்றும் டெல்கியில் ஊடுருவவில்லை எம்மவர்  எங்கு போனாலும் எதிர்ப்பை சம்பாதிப்பதுதான் வேலை .

மோடியுடன் இப்போதே தொடங்கிவிட்டார்கள் .

 

இந்த விடயத்தில் நான் உங்களுடன் ஒத்துப் போகிறேன், ஏதோ மகிந்தவை வெத்திலை தாம்பூலம் வைத்து அழைத்த மாதிரியல்ல்வா எல்லாரும் குதிக்கீனம், அதே போல் மகிந்தவுக்கு சார்க் நாட்டு தலைவர் என்ற அடிப்படையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டது, ஏன் இலங்கையின் ஒரு மாநில முதல் அமைச்சருக்கு அழைப்பு விட வேண்டும் என யாராவது விளக்கம் தர முடியும்மா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் உங்களுடன் ஒத்துப் போகிறேன், ஏதோ மகிந்தவை வெத்திலை தாம்பூலம் வைத்து அழைத்த மாதிரியல்ல்வா எல்லாரும் குதிக்கீனம், அதே போல் மகிந்தவுக்கு சார்க் நாட்டு தலைவர் என்ற அடிப்படையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டது, ஏன் இலங்கையின் ஒரு மாநில முதல் அமைச்சருக்கு அழைப்பு விட வேண்டும் என யாராவது விளக்கம் தர முடியும்மா?

 

 

ஒத்துப்போவது  இருக்கட்டும்

அவர் எம்மவர் என்பது யாரை???

அவருடைய  எம்மவர்கள் நிச்சயமாக புலிகளோ  அதன் ஆதரவாளர்களோ  கிடையாது

 

அப்படியாயின்  யார் அந்த எம்மவர்.....???

விளக்கம் தந்து   போட்டு கச்சேரியை  ஆரம்பிக்கலாம்  நீங்கள்.....

:lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துத் தமிழர்கள் இதுவரை எல்லாவற்றையும் இழந்தவர்களே
இனி இழப்பதற்கு அவர்களிடம் இருப்பது ஒன்றுமில்லை

மோடியின் அரசியலால் தமிழர்களுக்கு   இழப்புக்கள் எதுவும் இருக்கப்போவதில்லை.

அந்த வகையில் பொறுத்திருப்பதே மேல்
 

ஜெயாக்கா தான் தனக்கு மோடியால் ஒரு பிரயோசினமும் இல்லை என்று கூவுகிறார் என்று மற்றவர்களும் துள்ளுவதால் பிரயோசினம் இல்லை..இனி 5  வருடம் மாநில அரசு கடிதம் அனுப்ப வேண்டியது தான்....

 

தி.மு.க அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வோடு சேர்ந்தால்.........ஈழ தமிழர் நிலை???

(மோடி கடைசி வடக்கிலாவது நல்ல முறையில் ஆட்சி செய்தால்..ஆந்திரா/கர்நாடகா இரண்டுமே பா.ஜ.க தான் ) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒத்துப்போவது  இருக்கட்டும்

அவர் எம்மவர் என்பது யாரை???

அவருடைய  எம்மவர்கள் நிச்சயமாக புலிகளோ  அதன் ஆதரவாளர்களோ  கிடையாது

 

அப்படியாயின்  யார் அந்த எம்மவர்.....???

விளக்கம் தந்து   போட்டு கச்சேரியை  ஆரம்பிக்கலாம்  நீங்கள்.....

:lol:  :D  :D

 

ச்..ச்....ச்....ச்...சும்மா ஒரு கதைக்கும் கதைக்க விட மாட்டியள் போலை கிடக்கு... :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சவுத் புளொக்கின் நிலைபாடுகளால் நாங்கள் மாத்திரமல்ல மோடியே ஏமாந்துதான் போயுள்ளார்  <_<

 

 

2013ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபுக்கு கோழி பிரியாணி பரிமாறி உபசரிப்பதாக மோடி குற்றஞ் சாட்டியிருந்தார் அல்லவா! இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இரு இந்திய இராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம், கோழி பிரியாணி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டிப் பேசினார் நரேந்திர மோடி.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது குறித்து சசிதரூர் தனது ட்டுவிட்டர் சமூக இணைய தளத்தில் நவாஸுக்கு, மோடி பிரியாணி பரிமாறுவார் என எதிர்பார்க்கலாம் என்று நச்சென்று கிண்டல் அடித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர்

http://viduthalai.in/e-paper/80995.html

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சவுத் புளொக்கின் நிலைபாடுகளால் நாங்கள் மாத்திரமல்ல மோடியே ஏமாந்துதான் போயுள்ளார்  <_<

 

 

2013ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபுக்கு கோழி பிரியாணி பரிமாறி உபசரிப்பதாக மோடி குற்றஞ் சாட்டியிருந்தார் அல்லவா! இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இரு இந்திய இராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம், கோழி பிரியாணி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டிப் பேசினார் நரேந்திர மோடி.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது குறித்து சசிதரூர் தனது ட்டுவிட்டர் சமூக இணைய தளத்தில் நவாஸுக்கு, மோடி பிரியாணி பரிமாறுவார் என எதிர்பார்க்கலாம் என்று நச்சென்று கிண்டல் அடித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர்

http://viduthalai.in/e-paper/80995.html

 

 

மாட்டிவிட்ட அதிகாரிகளை கலைத்துவிட்டு சவுத் பிளாக்கை கழுவித் துடைக்க வேண்டும் மோடி..  :D

மோடியை சுற்றி மலையாள மாந்திரிகக்கூட்டம், சவுத்புளக்கை டெட்டோல் போட்டு கழுவி எடுக்கவேண்டும். அத்துடன் மகிந்தா மோடியை வசியப்படுத்தும் மந்திரவாதியின் பொருடகளுடன் இந்தியா போய் இருக்கிறார் என இன்று பதிவில் வாசித்தேன்.. இனி தமிழர் இதனை முறிக்கும் அலுவல் பார்க்கவேண்டும்.. இனி வருங்காலம் மந்திர தந்திர,இயந்திர யுத்தத்தை தொடங்கி வேதனையைத்தந்தவனுக்கே திருப்பி கொடுத்தால் தான் தமிழன் உலகில் உருப்படலாம். இந்த உலகம் நியாயம், நீதி நேர்மை என்றால் கிலோ என்னவிலை என்று கேற்கிறது.. தமிழன் இனி மாறவேண்டும்.. தோல்விகள் காரணங்கள் மீளாய்வு செய்யப்பட்வேண்டும்...உலகில் தமிழர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்... தோல்வி நிரந்தரமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கவேண்டிய விடயமாய் சவுத்திற்க்கு எதிரியாய் இலங்கையை மாட்டிவிடுவது தற்போதைய சூழலில் நடக்கலாம்.அவர்களை அவர்களின் வழியிலேயே போய் விழித்திவிடுவது அவை 13 விட்டு விடமாட்டினம் சிவப்புசால்வைக்கு 13 தூக்குமேடை ஒப்பானது .

இனித்தமிழர்கள் மோடியுடன் நல் உறவை பேணி சவுத்புளக்கையும், ராஜபக்சவையும் தனிமைப்படுத்தும் வழிகளை புத்திசாலித்துடன் மேற்கொள்வதுதான் நல்லது என என்மனதிற்கும் படுகிறது. ராஜபக்சவின் வருகையை எதிர்த்தும் பலன் இல்லை. இதற்கு சவுத்புளக்கின் நரித்திட்டங்கள் தான் காரணம். அதற்காக மோட்யுடன் பகைத்து கோபித்து எமக்கு நட்டமும், ராஜபக்ச, சவுத்புளக்குகளின் பிரிக்கும் நரிகொள்கைகளுக்கு சார்பாகவும் அமையும். இப்படியே தொடர்ந்தால் இன்னும் 5வருடங்கள் இல்லை நிரந்தரமாக எம்மக்களுக்கு நிம்மதியும் தீர்வும் கிடைக்காமல் போகும். எனவே ராஜபக்சவின் வருகை எதிர்ப்பை இத்துடன் நிறுத்தி மோடியுடன் ஒத்து கோபாலசாமி போன்றவர்கள் ஆட்சியுனுள் நுழைந்து எமக்கு சாதகமாக ஆக்கவேண்டும். எதிர்த்து,எதிர்த்து தொடர்வதில் எமக்கு ரோசம் இருப்பதை காட்டுகிறோம் ஆனால் விளைவு ஒன்றும் சாதகமில்லை. எனவே சாணக்கிய அரசியல் தேவை. மோடி எமக்கு நண்பன் என்னும் கொள்கை எமக்கு சாதகமான சூழ்னிலையும், எதிரிகளுக்கு வயிற்றை கலக்கும் நிலையையும் உண்டாக்கும்..ராஜபக்சவை அழைத்து தமிழர்களை மோடிக்கு எதிராக மாற்றும் திட்டத்தை தவிடு பொடியாக்குங்கள்.. தமிழகமக்களே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.