Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலக்கழிவு கலக்காத கிணறு யாழ் நகரத்தில் தற்போது இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.குடாநாட்டிற்கு 2025ம் ஆண்டிலாவது சுத்தமான நீரை வழங்குங்கள் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சிவச்சந்திரன் தெரிவித்தார்.
 
இன்று காலை 9.30 மணியளவில் யாழ்;.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தில் 80 வீதமான மக்களும், 20வீதமான வளங்களுமே உள்ளன.ஆகையால் வளப்பங்கீடு செய்தல் மிக அவசியம்.அத்துடன் நீர் பிரச்சனையை தீரப்பதற்கு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் விஞ்ஞான பூர்வமான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும் நீர் பிரச்சனை தற்போது ஐ.நா பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.அதுமட்டுமல்லாது,மலக்கழிவு கலக்காத கிணறு நகரத்தில் தற்போது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=103243051327840252#sthash.ysKPvWrt.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியபோது, யாரோ பாய்ந்து பிராண்டினார்கள்..  :D

படி படியென்று மெத்த படித்து என்ன பிரயோசனம்?

நஞ்சு அடித்த உணவு, இரசாயனம் மலம் கலந்த நீர் உட்கொள்ளவா?

இன்னும் ரெண்டு ஆசுபத்திரி கட்டினால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியபோது, யாரோ பாய்ந்து பிராண்டினார்கள்..  :D

யாரவர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

யாரவர்கள் ?

 

மறந்துவிட்டது.. தேடிப் பார்க்க வேண்டும்..  :huh:

சிவசந்திரனை கனடாவில சந்தித்த போது உதே விடயத்தை சொன்னார் .

அதை நான் எழுதியதாக ஞாபகம் . :icon_mrgreen: .

மேலும் நீர் பிரச்சனை தற்போது ஐ.நா பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.அதுமட்டுமல்லாது,மலக்கழிவு கலக்காத கிணறு நகரத்தில் தற்போது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மழைநீரைச் சேமிக்கும் எந்தத் திட்டமுமில்லை. இப்படியே இருக்கின்ற குளங்களையும் நிரவி வீடு கட்டிக் கொண்டு போனால் யாழில் தண்ணீர் பிரச்சனை வருவதைத் தடுக்க முடியாது. மலசல கூடத்திற்கும் கிணற்றிற்கும் இருக்க வேண்டிய இடைவெளி பற்றிய கரிசனை இல்லாமல் நெருக்கமாக அமைக்கத் தொடங்கியதன் விழைவுகளை இனி அம்மக்கள் அனுபவித்தேயாக வேண்டிய நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

மழைநீரைச் சேமிக்கும் எந்தத் திட்டமுமில்லை. இப்படியே இருக்கின்ற குளங்களையும் நிரவி வீடு கட்டிக் கொண்டு போனால் யாழில் தண்ணீர் பிரச்சனை வருவதைத் தடுக்க முடியாது. மலசல கூடத்திற்கும் கிணற்றிற்கும் இருக்க வேண்டிய இடைவெளி பற்றிய கரிசனை இல்லாமல் நெருக்கமாக அமைக்கத் தொடங்கியதன் விழைவுகளை இனி அம்மக்கள் அனுபவித்தேயாக வேண்டிய நிலை.

 

அதுக்குத்தான் இரணைமடுவில் இருந்து கொண்டுவரவேண்டும். :D ஆசிய வளர்ச்சி வங்கி சரிபார்த்து சொல்லிவிட்டது..  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தண்ணீர் பிரச்சினை வந்தால் வன்னியில் போய் இருக்கலாம்தானே. இல்லாவிட்டால் கடல் நீரை நன்னீராக மாற்றினால்தான் இருக்கமுடியும்.

நானும் இது பற்றிச் சில திரிகளில் எழுதியுள்ளேன். 

 

யாழ் மக்கள் தற்போதுள்ள சுதந்திரத்தை அனுபவிப்பது போலவே இந்த மாசடைந்த தண்ணீரையும் சர்வ சாதாரணமாகப் பருகுவதை அங்கு சென்றபோது பார்த்தேன்.

 

இவர்கள் தமது வரட்டு கௌரவத்தை விட்டு வன்னியை நோக்கித் தமது குடியிருப்புகளை நகர்த்த வேண்டும்.

இதற்க்கு ஒரே ஒரு காரணம் யாழில் கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லாததே....இதை கட்டுவதற்கு ஒருவரும் முயலவில்லை....உலகவங்கி கடன் கொடுத்தால்...எல்லாரின் (வீடுகளின்) தலையிலும் ஒரு 500000 கடன் விழும்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு செம்பிலை தண்ணியெடுத்துக்கொண்டு காடு,கரம்பை,வடலி எண்டு அப்பிடிப்போய் கக்கா இருந்திட்டு வந்தால் ஒரு சோலியும் வராது. :icon_idea:

 

கெமிக்கல் அடிச்ச போத்தில் தண்ணிதான் இப்ப ஸ்ரைல்........   :D  :lol:

மலசல கழிவுகளிலிருந்து நன்னீர் எடுத்து மீண்டும் தேம்ஸ் ஆற்றுடன் கலக்கும் முறை

 

யாழிலும் இப்படி செயற்படுத்த முனைவார்களா?

 

content-area-4.jpg

 

http://www.thameswater.co.uk/cycles/accessible/sewage_treatment.html

 

ஒரு வீட்டு தேவைக்கு, இந்த உபகரணத்தை வாங்க, இரண்டு ஆடம்பர "சடங்குகளுக்கான" பணச்செலவு மட்டும் போதும்.

APG6.jpg£1,895.00

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இது பற்றிச் சில திரிகளில் எழுதியுள்ளேன். 

 

யாழ் மக்கள் தற்போதுள்ள சுதந்திரத்தை அனுபவிப்பது போலவே இந்த மாசடைந்த தண்ணீரையும் சர்வ சாதாரணமாகப் பருகுவதை அங்கு சென்றபோது பார்த்தேன்.

 

இவர்கள் தமது வரட்டு கௌரவத்தை விட்டு வன்னியை நோக்கித் தமது குடியிருப்புகளை நகர்த்த வேண்டும்.

அப்ப யாழில் ஏற்க்கனவே காலியாக இருக்கிற காணிகளை என்ன செய்வது.வேற்று இனத்துக்கு அடி மாட்டு விலைக்கு விக்கிறதா  :rolleyes:

யாழ்ப்பாணத்தில் தண்ணீர் பிரச்சினை வந்தால் வன்னியில் போய் இருக்கலாம்தானே. இல்லாவிட்டால் கடல் நீரை நன்னீராக மாற்றினால்தான் இருக்கமுடியும்.

அப்ப யாழில் ஏற்க்கனவே காலியாக இருக்கிற காணிகளை என்ன செய்வது.வேற்று இனத்துக்கு அடி மாட்டு விலைக்கு விக்கிறதா  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யாழில் ஏற்க்கனவே காலியாக இருக்கிற காணிகளை என்ன செய்வது.வேற்று இனத்துக்கு அடி மாட்டு விலைக்கு விக்கிறதா  :rolleyes:

தண்ணீர் இல்லாவிட்டால் காணிக்கு மதிப்பு இருக்குமா? செவ்வாய்க் கிரகம் மாதிரி இருக்கும் இடத்தில் யாராவது போய் இருப்பார்களா?

ஒழுங்கான திட்டமிடல் இருந்தால் மலக்கழிவு கலக்காத குடிநீர் யாழில் கிடைக்க வழிசெய்யலாம். ஆனால் நீண்டகால நோக்கில் சிந்திப்பவர்கள் குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல தண்ணீருக்குத் தட்டுப்பாடு வருவதைத் தடுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடந்த மாச் மாதம் 3 கிழமை தாயகத்தில் நின்றேன்.அதில் 2 கிழமை வன்னியில் நின்றேன்.எனது கணிப்பின் படி உண்மையிலேயே வன்னி மக்கள் இதை விலரும்ப வில்லை.மற்றது அவர்களுக்கு வெளி நாட்டு காசு வருமானமும் யாழை மாதிரி இல்லை.யாழ் மக்கள் (பெரும்பாலும்)கதிரை உத்தியோகம் அல்லது வெளிநாட்டு பயனம் இதுவே அவர்கள் தொிவாக உள்ளது.ஒன்று செய்யலாம் வன்னியில் தண்ணி தயாரித்து விலைக்கு (குடி தண்ணி தான்)யாழுக்கு அனுப்பலாம்.
மற்றது உந்த கக்கூசு பிரச்சனைக்கு தீர்வு கான ஏலாதோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.