Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு - உள்ளக சீர்திருத்த வேண்டுகோள்?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்களை நீங்கள் தான் மீளாய்வு செய்து கொள்ளனும். அடுத்தவன் சொல்லி உங்களை மாற்றிக்கிற நிலைக்கு ஒரு நாளும் நீங்கள் வரக்கூடாது. அடுத்தவன் சொல்வதை உள்வாங்கி மீளாய்வில் அதனை வைச்சுக் கொள்ளலாம். அதற்கா மற்றவன் சொல்லுற படியே நான் மாறனுன்னு நினைக்கும் பகுத்தறிவற்ற தனத்தை வளர்க்கக் கூடாது. :):icon_idea:

 

அப்படி வைச்சுக்கொள்ளத்தான் இந்த மீளாய்வு ராசா

 

யாழ் எனது குடும்பம்

எந்தவகையிலும் அது காயப்படக்கூடாது

அதேநேரம் 

எனது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சுத்தமானது

யாழில் உள்ள கருத்தாடல்கள் சார்ந்து

இங்கு கருத்திட  வாதிடமுடியாதவர்கள்  எவராவது

எனது சொந்த வாழ்வை

பொதுவாழ்வை சந்திக்கு இழுத்தால்...................

அதற்கு இந்த திரி ஆதாரமாக இருக்கக்கூடும்.

 

நன்றி  தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

என் ஒவ்வொருவரது முடிவுகளையோ கருத்துகளையோ அந்தந்த நேர நெருக்கடிகளும் , சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன. சில காலத்துக்கு முன் சரியேன்று நினைத்தது, நிகழ்காலத்தில் தவறாய்ப் போய் விடுகின்றது. அதுவும் கூட எதிர் காலத்தில் மாறிப் போகலாம். இதுக்கு மேல் கொள்கையாவது  கத்தரிக்காய்யாவது அப்படியெல்லாம் ஒன்டும் கிடையாது.

 

தன்னை, சகோதரரை, மனைவியை தோற்ற போது தர்மத்தைக் கடைப் பிடித்த தருமனும் , துரோனரைக் கொல்வதற்காக பொய் சொல்ல முடியுது என்றால் நீங்களோ நானோ எம்மாத்திரம்.

 

ஊர்ப் புதினத்தில் சீரியசாய்க் கதைக்கிறோம், சிரிப்போமில் சிரிக்கிறோம், வண்ணத்திரையில் ஜொள்ளு விடுகிறோம்...! இந்தக் கலவைதான் மனிதர்கள்.

 

நீங்கள் எதையும் மூளைக்குள் விடாமல் , முடியோடு உதறி விட்டுட்டு  வழமைபோல் வலம் வாருங்கள்...! :D :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நானாகவே இருப்பேன்......இன்றுவரை என் மனைவி பிள்ளைகளுக்காகக் கூட ...... என்னை நான் மாற்ற தயாரில்லை.........அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி.......ஒருவன் மற்றவனிடம் சரிபிழை கேட்பது தப்பில்லை......icon6m_zps6069767e.gif

 

நன்றியண்ணா...

 

அதற்காகத்தான் இதை இங்கு வைத்தேன்

......உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

இதுவரை இல்லை...... இனிமேல் அப்படி ஒரு நிலை வந்தால் தெரியப்படுத்துகின்றேன் :D

 

நிச்சயமாக

எப்பவும் கேட்க  தயாராகவே  உள்ளேன்

 

நன்றி  தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதுகின்ற பெரும்பாலான அரசியற் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.அதற்காக உங்கள் எழுத்துக்களை மாத்தி எழுதுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை.எனக்கு சரியெனப்ப்பட்டதை நான் எழுதுவது மாதிரி,உங்களுக்கு சரியெனப்பட்டதை நீங்கள் எழுதுகிறீர்கள்.உங்கள் கருத்துக்களை பற்றிய எனது நிலைப்பாடு என்ன என்டால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தாலும் எதாவது காரணத்தை அந்த உண்மையை சொல்வதில்லை அல்லது மறுக்கிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துக்களை நடைமுறை யதார்த்தத்தை மீறியதாகவே நான் காண்கிறேன்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பிள்ளாய்.........

 

நேரடி  எதிரிகள் பற்றி  பார்த்து

யோசித்து முடிவெடுக்கலாம்

மறைமுக  எதிரிகளை ....?

இது   போன்று கூட்டுப்பொறுப்புடன் முறியடிக்கலாம்

 

மறைமுக எதிரிகள் என்று யாரை சொல்கிறீர்களோ நமக்கு புரிய இல்லை...விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நான்  இதை இங்கு எழுதியதற்கான  பல  காரணங்கள்  உங்களது கருத்தில் உள்ளது

அவைக்கான ஒரு  உள்ளக தேடல் தான் இது.... :icon_idea:

 

நன்றி ராசா

மனதில் தோன்றியதை எழுதியிருந்தேன். நீங்கள் தடித்த எழுத்துக்களில் மாற்றியதைப் பார்க்கவே எனக்கே புதுப்புது அர்த்தங்களாக இருக்கின்றது!. அப்படி பிரான்சில் என்னதான் நடக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தோன்றியதை எழுதியிருந்தேன். நீங்கள் தடித்த எழுத்துக்களில் மாற்றியதைப் பார்க்கவே எனக்கே புதுப்புது அர்த்தங்களாக இருக்கின்றது!. அப்படி பிரான்சில் என்னதான் நடக்கின்றது!

அடுத்த தேர்தல் களமாக இருக்கலாம்

விசுகு அண்ணா என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதுகின்ற பெரும்பாலான அரசியற் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.அதற்காக உங்கள் எழுத்துக்களை மாத்தி எழுதுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை.எனக்கு சரியெனப்ப்பட்டதை நான் எழுதுவது மாதிரி,உங்களுக்கு சரியெனப்பட்டதை நீங்கள் எழுதுகிறீர்கள்.உங்கள் கருத்துக்களை பற்றிய எனது நிலைப்பாடு என்ன என்டால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தாலும் எதாவது காரணத்தை அந்த உண்மையை சொல்வதில்லை அல்லது மறுக்கிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துக்களை நடைமுறை யதார்த்தத்தை மீறியதாகவே நான் காண்கிறேன்.நன்றி

மிக அப்பட்டமான உண்மை .அரசியல் செய்பவர்களுக்கு அவர் வாழ்வும் வாக்கும் பொய் தான் .கருணாநிதி இன்றும் பல ஆரவாரங்களுடன் தான் நடை பயில்கின்றார்.கருணாநிதிக்கும் தெரியும் அது பொய்யென்று ஆரவாரங்களுக்கும் தெரியும் அது பொய் என்று இருந்தாலும் தொடருகின்றார்கள் தமது அரசியல் வாழ்க்கையை .

எனக்கு உந்த பிரச்சனை இல்லை ஏனெனில் எல்லாம் உண்மை . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை இருந்து கொண்டு எங்களுக்கு எல்லா உண்மையளும் தெரியும் எண்டுறவை இவ்வளவு வருசமாகியும் ஒண்டையும் புடுங்கினதாய் தெரியேல்லை......இப்பவும் காட்டிக்குடுக்கிறதை தவிர....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில், பல விதமான கருத்தாளர்கள் உள்ளார்கள், விசுகர்!

 

அவர்களின் பல்வேறுபட்ட கருத்துக்களே, யாழ் களத்தை நோக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணமாகும்!

 

ஒரு கை தட்டும் போது, அது ஓசை எழுப்புவதில்லை.... இரண்டு கைகளும் தட்டப்படும் போதே ஓசை எழுகின்றது!

 

அந்த ஓசை தான், களத்தைக் கலகலப்பாக வைத்திருக்கின்றது..... எனவே எல்லோரது கருத்துக்களும் தேவை..!

 

இந்த வகைக்குள்ளேயே உங்களது கருத்துக்களும் அடங்குகின்றன!

 

யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும், 'நல்லது, கெட்டதை' பிரித்தறியத் தெரிந்தவர்கள் ! உங்கள் கருத்துக்களால், 'மனம்' நொந்து போனால், அதைக் கருத்துக்களத்தில் தெரிவிப்பார்கள்!

 

உங்களுக்காகவோ, அல்லது வேறு யாருக்காகவோ, தங்கள் கருத்துக்களை அவர்கள் மட்டுப்படுத்தி எழுதுவார்கள் எனில், அவர்கள் 'கருத்தாளர்கள்' அல்ல!

 

வெறும் சாமரம் வீசுபவர்கள்!

 

எனவே, களத்தின் விதிகளுக்கிணங்க, நீங்கள் கருத்தெழுதுவதாக, நீங்கள் நம்பினால், இந்த அபிப்பிராயத் திரிக்கு அவசியமேயில்லை என்பது எனது கருத்தாகும்!

 

தனது மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் ஒரு மனிதன், எவருக்கும் பணிந்து போக வேண்டிய தேவையில்லை! :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் ஒவ்வொருவரது முடிவுகளையோ கருத்துகளையோ அந்தந்த நேர நெருக்கடிகளும் , சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன. சில காலத்துக்கு முன் சரியேன்று நினைத்தது, நிகழ்காலத்தில் தவறாய்ப் போய் விடுகின்றது. அதுவும் கூட எதிர் காலத்தில் மாறிப் போகலாம். இதுக்கு மேல் கொள்கையாவது  கத்தரிக்காய்யாவது அப்படியெல்லாம் ஒன்டும் கிடையாது.

 

தன்னை, சகோதரரை, மனைவியை தோற்ற போது தர்மத்தைக் கடைப் பிடித்த தருமனும் , துரோனரைக் கொல்வதற்காக பொய் சொல்ல முடியுது என்றால் நீங்களோ நானோ எம்மாத்திரம்.

 

ஊர்ப் புதினத்தில் சீரியசாய்க் கதைக்கிறோம், சிரிப்போமில் சிரிக்கிறோம், வண்ணத்திரையில் ஜொள்ளு விடுகிறோம்...! இந்தக் கலவைதான் மனிதர்கள்.

 

நீங்கள் எதையும் மூளைக்குள் விடாமல் , முடியோடு உதறி விட்டுட்டு  வழமைபோல் வலம் வாருங்கள்...! :D :D

 

நன்றியண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதுகின்ற பெரும்பாலான அரசியற் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.அதற்காக உங்கள் எழுத்துக்களை மாத்தி எழுதுங்கள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை.எனக்கு சரியெனப்ப்பட்டதை நான் எழுதுவது மாதிரி,உங்களுக்கு சரியெனப்பட்டதை நீங்கள் எழுதுகிறீர்கள்.உங்கள் கருத்துக்களை பற்றிய எனது நிலைப்பாடு என்ன என்டால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தாலும் எதாவது காரணத்தை அந்த உண்மையை சொல்வதில்லை அல்லது மறுக்கிறீர்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துக்களை நடைமுறை யதார்த்தத்தை மீறியதாகவே நான் காண்கிறேன்.நன்றி

 

நன்றி  ரதி

நான் ஏற்கனவே  எழுதியது தான்

பொதுநன்மை கருதி

தேவையற்ற  நேரத்தில்

தேவையற்ற  விடயத்தை பேசாதிருத்தலும் ஒருவகை சேவையே.

அதைத்தான் நான் செய்கின்றேன்

அதில் என்றும் மாற்றமிராது

நாலு பேர்  கிளறுகிறார்கள்

பொழுது போகும் என்பதற்காக

என் வீட்டுப்பிரச்சினையை  எழுதமுடியாது..

 

இது தான் செய்தவனுக்கும்

வேடிக்கை  பார்த்தவனுக்குமான  வித்தியாசம்

நான் எழுதுவேன்

எமக்கான குறிக்கோளை  அடைந்தபின்............

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளணும்

கூட்டணி

புலிகள்

இன்று  தேசியக்கூட்டமைப்பு..............  எல்லாமே எமது தாயகவேட்கைக்கான ஒவ்வொரு தடிகள்...

அவை அவை தேவைப்படுமளவுக்கு தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டன

 

வழி  நடாத்தியவர்கள் நாம் (தமிழர்கள்)

தப்பு நடந்திருந்தால் பொறுப்பும் நாமே தான்

அவர்களை  பிழை  சொல்லமுடியாது

அந்த நேரம் அவை சரியாக இருந்தன

இனி  அதைப்பற்றி  பேசிக்கொண்டிருப்பதில்  என்ன  லாபம்?

 

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிங்களம் எம்மை  விழுங்கிவிடும்...

 

அடுத்தவர் யார்?

 

அதை ஆதரிக்க தயாராகவே உள்ளேன்

இது தான் எனது நிலைப்பாடு.....

தாயகத்தின் நிலை அறிந்தவன்

தாயகத்தை மீட்க  நினைப்பவன்

செயற்பட  நினைப்பவன்

இதைத்தான் செய்வான்

இதை மட்டும் தான் செய்வான்

செய்யணும்........

 

மற்றும்படி

உங்கள் அரசியல் மற்றும் தாயக  கருத்துக்களில்

துளியும் உடன்பாடு கிடையாது எனக்கு.

எல்லாவற்றையும்  தட்டிவிடும்  எழுத்து தங்களது.........

இன்றைய  சூழலில்

புதிதாக சேர்க்காவிட்டாலும்

இருப்பதையாவது இழக்காமல்

பகைக்காமல் இருக்கணும்............

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது அண்ணா பொய்யை சொல்லி மக்களை ஏமாத்திறதில் எனக்கு விருப்பம் இல்லை.நீங்கள் என்ன தான் உண்மையை பூசி மறைத்து பொய்யை எழுதினாலும் மக்களுக்கு உண்மை தெரியும்.இனி மேலும் அவர்களை ஏமாத்த முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

நீங்கள் நீங்களாகவே இருங்கள் விசுகு. உங்களுக்கு எது சரி என்கிறதோ அதையே செய்யுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது அண்ணா பொய்யை சொல்லி மக்களை ஏமாத்திறதில் எனக்கு விருப்பம் இல்லை.நீங்கள் என்ன தான் உண்மையை பூசி மறைத்து பொய்யை எழுதினாலும் மக்களுக்கு உண்மை தெரியும்.இனி மேலும் அவர்களை ஏமாத்த முடியாது

 

1-  மௌனமாக இருப்பதற்கு  பெயர் பொய்  பேசுகின்றேன் என்பது அபாண்டமானது

2- உங்களுக்கு உண்மை  தெரியும்  என்றால் எதற்கு என்னை இழுக்கின்றீர்கள்??? ரதி.

 

எல்லோருக்கும் எல்லாம் தெரியும்

ஆனால் அதனை  ஏன் கிளறிக்கொண்டிருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு....

மறைமுக எதிரிகள் என்று யாரை சொல்கிறீர்களோ நமக்கு புரிய இல்லை...விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

 

 

 

மறைமுக  எதிரிகள்  என்று யாரைச்சொல்கின்றேன் என்பது அவரவருக்கு புரியும்...

 

நீங்கள் பதில் எழுதினால்

அதற்கு நாம் பதில் தரக்கூடிய  மாதிரி  நடந்து கொள்ளுங்கள்

சாட்சியை  பதில் கூறவிடாது  தாங்கள் நினைத்தது போல் தண்டிப்பது அநியாயமாகும்.. :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தோன்றியதை எழுதியிருந்தேன். நீங்கள் தடித்த எழுத்துக்களில் மாற்றியதைப் பார்க்கவே எனக்கே புதுப்புது அர்த்தங்களாக இருக்கின்றது!. அப்படி பிரான்சில் என்னதான் நடக்கின்றது!

 

என்ன  செய்வது?

யாழின் நீண்டகால  உறுப்பினர் நான்

அதன் இன்ன துன்பங்களில் முடிவுகளில் ....

உறவுகளோடு ஒற்றுமையாக நின்றுள்ளேன்

அதைத்தொடர்ந்து செய்வேன்

அது சிலருக்கு உறுத்தலாம்

நேரடியாக மோத  தயாராகவே உள்ளேன்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை இருந்து கொண்டு எங்களுக்கு எல்லா உண்மையளும் தெரியும் எண்டுறவை இவ்வளவு வருசமாகியும் ஒண்டையும் புடுங்கினதாய் தெரியேல்லை......இப்பவும் காட்டிக்குடுக்கிறதை தவிர....

 

 

தற்பொழுது

மிகவும் லாபகரமான  தொழில் இது தான்....

பாவம் பிழைச்சுப்போகட்டும்

அதற்கும் தமிழன் உதவினான் என்று இருக்கடடும்

யாழ் களத்தில், பல விதமான கருத்தாளர்கள் உள்ளார்கள், விசுகர்!

 

அவர்களின் பல்வேறுபட்ட கருத்துக்களே, யாழ் களத்தை நோக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணமாகும்!

 

ஒரு கை தட்டும் போது, அது ஓசை எழுப்புவதில்லை.... இரண்டு கைகளும் தட்டப்படும் போதே ஓசை எழுகின்றது!

 

அந்த ஓசை தான், களத்தைக் கலகலப்பாக வைத்திருக்கின்றது..... எனவே எல்லோரது கருத்துக்களும் தேவை..!

 

இந்த வகைக்குள்ளேயே உங்களது கருத்துக்களும் அடங்குகின்றன!

 

யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும், 'நல்லது, கெட்டதை' பிரித்தறியத் தெரிந்தவர்கள் ! உங்கள் கருத்துக்களால், 'மனம்' நொந்து போனால், அதைக் கருத்துக்களத்தில் தெரிவிப்பார்கள்!

 

உங்களுக்காகவோ, அல்லது வேறு யாருக்காகவோ, தங்கள் கருத்துக்களை அவர்கள் மட்டுப்படுத்தி எழுதுவார்கள் எனில், அவர்கள் 'கருத்தாளர்கள்' அல்ல!

 

வெறும் சாமரம் வீசுபவர்கள்!

 

எனவே, களத்தின் விதிகளுக்கிணங்க, நீங்கள் கருத்தெழுதுவதாக, நீங்கள் நம்பினால், இந்த அபிப்பிராயத் திரிக்கு அவசியமேயில்லை என்பது எனது கருத்தாகும்!

 

தனது மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் ஒரு மனிதன், எவருக்கும் பணிந்து போக வேண்டிய தேவையில்லை! :D  

 

 

நன்றியண்ணா

யாழ்  களத்தில் நாம் நிற்கின்றோம்

அதனால் களமாடலாம்....

அதை மீறி  வெளியில் நின்றால்.....? :(  :(  :(

நீங்கள் நீங்களாகவே இருங்கள் விசுகு. உங்களுக்கு எது சரி என்கிறதோ அதையே செய்யுங்கள்.

 

 

நன்றி  கறுப்பித்தம்பி

 

நீண்டகால  உறுப்பினர் தாங்கள்

உங்களது கணிப்பும் அவதானிப்பும்  மிகமிக அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதை வாசித்தேன் நீங்கள் நீங்களாக இருங்கள் ....மனதில் பட்டதை எழுதுங்கோ....தொடரட்டும் உங்கள் பணி.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.