Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஐ.நா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால் அதற்கு அடித்தளமிட்டது புலிகளின் போராட்டமே - மனோ கணேசன்

Featured Replies

'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்;ந்தும் தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும்  ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள். இந்த தரப்புகளை அரவணைத்து கூட்டிணைக்கும் தோழமை பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இந்த பொறிமுறை உள்நாட்டிலே கட்டாயமாக தேர்தல் கூட்டமைப்பாக  அமைந்திட வேண்டும் என்பது இல்லை.  அப்படி இருக்க கூடாது என்பதும் இல்லை. தேர்தல்களின் போது அவசியப்படுமானால் நாம் கூட்டாக முடிவுகள் எடுக்கலாம்.
ஆனால், இங்கே நான், தேர்தல் இலக்குகளுக்கு அப்பாற்பட்ட கூட்டிணைவு ஒன்றையே பிரேரிக்கின்றேன். முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதை போல், பல்வேறு சிறு நிறுவனங்களை கூட்டிணைத்து பெரிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது போன்றதாகும் இந்த யோசனை. இந்த இணைவு, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. இனவாதத்திற்கு எதிரானது. சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறும் இணைவாகும்.

இரண்டாவது, இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன.  புலிகளின் சரிகளையும், பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை  நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐ.நா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே.  

போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது. இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்துங்கள் என்று நாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் கோருன்றோம். நாம் இங்கே தொடர்ச்சியாக போராடினால், அந்த போராட்டமே,  அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் செயற்படுத்தும் அழுத்தமாக மாறும். போராட்டம் என்றால் ஆயுதபோராட்டத்தை நான் இங்கே கூறவரவில்லை.

ஜனநாயக அறவழி போராட்டங்களை ஆரம்பியுங்கள் என்றே கூறுகின்றேன். 1960 களில் தந்தை செல்வா தலைமையில், தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்டங்களை திட்டமிட்டு மீண்டும் ஆரம்பியுங்கள். உலகம் எம்மை திரும்பி பார்க்கும். இலங்கை அரசுக்கு புரியும் பாஷையும் அதுதான்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளே, காத்திரமான  இந்த இரண்டு பணிகளையும்  உங்கள் தலைமையின் கீழ் இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் தோழமை கட்சி என்ற அடிப்படையில் துணையிருப்போம்' என்றார். http://www.pathivu.com/news/33735/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு விளங்கியது, இன்னும் சிலருக்கு புரியவில்லை


இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐ.நா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே. 
 

  • கருத்துக்கள உறவுகள்

மனோவை.. வடக்குக் கிழக்கு அரசியல் சார்ந்து இயங்க அரவணைத்ததில்.. தேசிய தலைவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. மனோவை கூப்பிட்டு பேசியவர் தேசிய தலைவர். அவர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களுக்காக போராடக் கூடிய யாரையும் புறக்கணிக்கவில்லை. அதன் சாட்சியாக இன்று மனோவின் குரல்.! ஆனால் சம்பந்தன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. வகையறாக்கள்.. பழைய நஞ்சுகளை நெஞ்சில் காவிய சர்ப்பங்களாக சுயநல அரசியல் செய்வது தான் தமிழ் மக்களின் சாபக் கேடு. !!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்றால்

இது தெரிந்திருக்கணும்..

 

இதற்குத்தான் வரலாற்றை  திரிப்பவரை நாம் ஆதரிக்கக்கூடாது

ஆதரிப்பதில்லை..

ஆதரிக்கக்கூடாது...

 

மனோவை.. வடக்குக் கிழக்கு அரசியல் சார்ந்து இயங்க அரவணைத்ததில்.. தேசிய தலைவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. மனோவை கூப்பிட்டு பேசியவர் தேசிய தலைவர். அவர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களுக்காக போராடக் கூடிய யாரையும் புறக்கணிக்கவில்லை. அதன் சாட்சியாக இன்று மனோவின் குரல்.! ஆனால் சம்பந்தன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. வகையறாக்கள்.. பழைய நஞ்சுகளை நெஞ்சில் காவிய சர்ப்பங்களாக சுயநல அரசியல் செய்வது தான் தமிழ் மக்களின் சாபக் கேடு. !!!!

 

தமிழனிடம் அகற்றப்படவேண்டிய குணம்  இது.....

இநந்தக்குணம் இருக்குமவரை

எமக்கு விடிவு எந்தவழியிலும் வராது..

  • கருத்துக்கள உறவுகள்

வைகுந்தவாசன் ..ஐ.நா வில் தமிழருக்காக குரல் கொடுத்த பொழுது பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டார் இன்று அதே ஐ.நா சபை எம்மை திரும்பி பார்கின்றது என்றால் புலிகளின் போராட்டம் தான்....காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஏன் இந்த ஐநா சபை புலிகள் இருக்கும் மட்டும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் எம்மை திரும்பி பார்க்கவில்லை?

ஐநா திரும்பி பார்க்க காரணம் இலங்கை அரசின் கட்டுமீறிய அட்டூழியங்கள்.

ஐ நாவை யாரும் (ஏன் மனோவே) ISISக்கும் புலிகளுக்கும் இருக்கிறதா என்றும் கேட்டுப் பார்த்து விட்டு.. அவர்கள் "இல்லை..இல்லவே இல்லை"  என்று சொல்லப்போவதையும் இங்கு பதியலாம் :) :) .....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போர்க்குற்ற ஆதாரங்களை அதிகம் கையளித்தவர்களில் யு என் எச் சி ஆர் பிரதிநிதிகளே முக்கியமாக உள்ளனர். இறுதிப் போரில் கூட இருந்த இரண்டு அமைப்புக்களில் ஒன்று யு என் எச் சி ஆர் மற்றது.. சர்வதேச செஞ்சிலுவை. அதிலும் கோத்தபாய ஐநாவை வெளியேற்றிவிட்ட பின்னும்.. இயங்கிய சில தன்னார்வ யு என் எச் சி ஆர் அமைப்பினரே இன்று சர்வதேச அளவில் போர்க்குற்றம் தொடர்பான செய்திகளையும் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பதை சொல்ல முற்பட்டுள்ளனர். சிங்களப் படைகளோடு நின்ற ஈபிடிபியோ.. புளொட்டோ.. கருணா குழுவினரோ அல்ல..!

 

அதுமட்டுமன்றி.. எமது வணங்காமுடி நிவாரணக் கப்பல் முள்ளிவாய்க்காலை நோக்கி செல்ல சர்வதேசமோ ஐநாவோ தடை போட்டிருக்கவில்லை. சிங்களம் தான் கப்பலை இறுதியில் பறித்துக் கொண்டு கொழும்புக்கு கொண்டு சென்று அந்த நிவாரணமும் எம் மக்களை சரியான நேரத்தில் போவதை தடுத்தது.

 

வணங்காமுடியில் தமது நிவாரணங்களை எமது யாழ் கள உறவுகள் பலரும் அனுப்பி வைத்திருந்தமை இங்கு நினைவுகூறத்தக்கது. அப்போது எல்லாம் யாழ் களத்தை எட்டியும் பார்க்காதவர்கள்.. இன்று சிங்களவனுக்கு வக்காளத்து வாங்க வருவது தான் வேடிக்கையாக உள்ளது. இவர்களின் நாசகார பிரச்சாரங்கள் மக்களுக்கு எதனையும் கொண்டு வரப்போவதில்லை. மாறாக எதிரியின் நடவடிக்கைகளுக்கு விதண்டாவாத நியாயம் கற்பிப்பதை மட்டுமே செய்யும். அது எவ்வளவு அநியாயமானது என்பதை மக்கள் நன்கே தெரிந்திருக்கிறார்கள்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போர்க்குற்ற ஆதாரங்களை அதிகம் கையளித்தவர்களில் யு என் எச் சி ஆர் பிரதிநிதிகளே முக்கியமாக உள்ளனர். இறுதிப் போரில் கூட இருந்த இரண்டு அமைப்புக்களில் ஒன்று யு என் எச் சி ஆர் மற்றது.. சர்வதேச செஞ்சிலுவை. அதிலும் கோத்தபாய ஐநாவை வெளியேற்றிவிட்ட பின்னும்.. இயங்கிய சில தன்னார்வ யு என் எச் சி ஆர் அமைப்பினரே இன்று சர்வதேச அளவில் போர்க்குற்றம் தொடர்பான செய்திகளையும் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பதை சொல்ல முற்பட்டுள்ளனர். சிங்களப் படைகளோடு நின்ற ஈபிடிபியோ.. புளொட்டோ.. கருணா குழுவினரோ அல்ல..!

 

அதுமட்டுமன்றி.. எமது வணங்காமுடி நிவாரணக் கப்பல் முள்ளிவாய்க்காலை நோக்கி செல்ல சர்வதேசமோ ஐநாவோ தடை போட்டிருக்கவில்லை. சிங்களம் தான் கப்பலை இறுதியில் பறித்துக் கொண்டு கொழும்புக்கு கொண்டு சென்று அந்த நிவாரணமும் எம் மக்களை சரியான நேரத்தில் போவதை தடுத்தது.

 

வணங்காமுடியில் தமது நிவாரணங்களை எமது யாழ் கள உறவுகள் பலரும் அனுப்பி வைத்திருந்தமை இங்கு நினைவுகூறத்தக்கது. அப்போது எல்லாம் யாழ் களத்தை எட்டியும் பார்க்காதவர்கள்.. இன்று சிங்களவனுக்கு வக்காளத்து வாங்க வருவது தான் வேடிக்கையாக உள்ளது. இவர்களின் நாசகார பிரச்சாரங்கள் மக்களுக்கு எதனையும் கொண்டு வரப்போவதில்லை. மாறாக எதிரியின் நடவடிக்கைகளுக்கு விதண்டாவாத நியாயம் கற்பிப்பதை மட்டுமே செய்யும். அது எவ்வளவு அநியாயமானது என்பதை மக்கள் நன்கே தெரிந்திருக்கிறார்கள்..!! :icon_idea:

 

சீ

அவை  புலிகளை மீளாய்வு செய்து

சரி பிழைகளை  பகுத்தாய்வு செய்து

மீளத்தொடங்கப்போகினமாம்..

 

எழுத்தைப்பார்த்தால் தெரிகிறது தானே  

போராட்டம் எப்படி  இருக்கும் 

எத்தனை யென்மம் பிடிக்கும் என்று..

அவர் அரசியல்வாதி எதையும் தனது தேவைக்கு பேசுவார் ,எமக்கு புத்தி எங்கே போனது 
நாளைக்கு மேவின் பேசுவர் "இப்ப சர்வதேசத்திலும்  ஐ நா விலும்  அடிக்கடி சிறி லங்கா  என்று பேசுகின்றார்கள் என்றால் மகிந்த அரசுதான் அதற்கு காரணம் என்று .மேவினுக்கு சிறிலங்காவின் பெயர் அடிபடுகின்றது என்பதுதான் தெரியுது அது ஏன் என்று தெரியவில்லை .அப்படிதான் புலி ஆதரவாளர்கள் நிலையும் .
புலிகள் தமிழர்களின் விடுதலைக்காக போராடினார்கள் ,அவர்கள் ஒரு விடுதலை இயக்கம் என்று சர்வதேசம் சொன்னால் நானும் உங்கள் கட்சிதான் ,
புலிகளை இன்னமும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அனேக நாடுகள் எடுக்கவில்லை  ,இறுதி யுத்தத்தில் இவ்வளவு மக்கள் இறந்ததற்கு புலிகளும் காரணம் என்று குற்றத்தின் மேல் குற்றம் வைத்து பட்டியல் போட்டிருகினார்கள்  அதை எப்படி எதிர்கொள்ளுவது என்பது தமிழர் தரப்பு மண்டையை போட்டு உடைக்கிறது இதற்குள் பயங்கரவாதிகள் என்று பெயர் எடுத்து உலகத்தை பார்க்க வைத்தார்களாம் .
பிள்ளை படித்து விஞ்ஞானி ஆனால் சர்வதேச செய்தி ஆகும் அதே போல பிள்ளை  நாலுபேரை நடுத்தெருவில் வைத்து போட்டாலும் சர்வதேச செய்தி ஆகும் .
இரண்டாவதை செய்து சர்வதேச செய்தியில் வந்ததாக பெருமைப்படும் பெற்றோரின் நிலை தான் யாழில் பலரின் நிலை .
  • கருத்துக்கள உறவுகள்

 

அவர் அரசியல்வாதி எதையும் தனது தேவைக்கு பேசுவார் ,எமக்கு புத்தி எங்கே போனது 
நாளைக்கு மேவின் பேசுவர் "இப்ப சர்வதேசத்திலும்  ஐ நா விலும்  அடிக்கடி சிறி லங்கா  என்று பேசுகின்றார்கள் என்றால் மகிந்த அரசுதான் அதற்கு காரணம் என்று .மேவினுக்கு சிறிலங்காவின் பெயர் அடிபடுகின்றது என்பதுதான் தெரியுது அது ஏன் என்று தெரியவில்லை .அப்படிதான் புலி ஆதரவாளர்கள் நிலையும் .
புலிகள் தமிழர்களின் விடுதலைக்காக போராடினார்கள் ,அவர்கள் ஒரு விடுதலை இயக்கம் என்று சர்வதேசம் சொன்னால் நானும் உங்கள் கட்சிதான் ,
புலிகளை இன்னமும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அனேக நாடுகள் எடுக்கவில்லை  ,இறுதி யுத்தத்தில் இவ்வளவு மக்கள் இறந்ததற்கு புலிகளும் காரணம் என்று குற்றத்தின் மேல் குற்றம் வைத்து பட்டியல் போட்டிருகினார்கள்  அதை எப்படி எதிர்கொள்ளுவது என்பது தமிழர் தரப்பு மண்டையை போட்டு உடைக்கிறது இதற்குள் பயங்கரவாதிகள் என்று பெயர் எடுத்து உலகத்தை பார்க்க வைத்தார்களாம் .
பிள்ளை படித்து விஞ்ஞானி ஆனால் சர்வதேச செய்தி ஆகும் அதே போல பிள்ளை  நாலுபேரை நடுத்தெருவில் வைத்து போட்டாலும் சர்வதேச செய்தி ஆகும் .
இரண்டாவதை செய்து சர்வதேச செய்தியில் வந்ததாக பெருமைப்படும் பெற்றோரின் நிலை தான் யாழில் பலரின் நிலை .

 

 

 

அண்ணை

உங்கட  பிள்ளைப்பற்றி  நீங்க முதலில் சொல்லுங்க

என்ன நினைக்கிறீீங்க...? :(

 

அடுத்த வீட்டுக்காறன்

பொறாமையிலும் சொல்வான்

தன் பிள்ளையை  உயர்த்துவதற்காகவும் தாழ்ப்பான்.... :(

மனோ  அண்ணர்  அதைத்தான் சொல்கிறார்

நம்ம பிள்ளைகளால் தான்  இது கிடைத்தது என்று..

அவ்வளவு தான்

 

அதற்கு எதற்கு இந்தளவு நீட்டல் நிமர்த்தல்.. :(

கொஞ்ச சர்வதேச அரசியல் பேசுவம் என்று பார்த்தால் தேத்தண்ணி கடை லெவலுக்கு நிற்கின்றீர்கள் . :icon_mrgreen: இனி எப்படி தொடர்வது . :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச சர்வதேச அரசியல் பேசுவம் என்று பார்த்தால் தேத்தண்ணி கடை லெவலுக்கு நிற்கின்றீர்கள் . :icon_mrgreen: இனி எப்படி தொடர்வது . :D

 

கேள்வி  கேட்டா  பதிலுக்கு பதிலாக

கேள்வி போடுவது தான் உங்களது பழக்கம்

 

 

 

சரி  உங்க வழியில்.............

தீர்வு யாருக்கு...?

எமக்கா? 

சர்வதேசத்துக்கா.??

Edited by விசுகு

அப்போ ஏன் இந்த ஐநா சபை புலிகள் இருக்கும் மட்டும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் எம்மை திரும்பி பார்க்கவில்லை?

ஐநா திரும்பி பார்க்க காரணம் இலங்கை அரசின் கட்டுமீறிய அட்டூழியங்கள்.

திரும்பி பாக்க இல்லையா...??  :rolleyes: 

 

சரி விடுங்கோ...   !!    

 

புலிகள் தமிழர்களின் விடுதலைக்காக போராடினார்கள் ,அவர்கள் ஒரு விடுதலை இயக்கம் என்று சர்வதேசம் சொன்னால் நானும் உங்கள் கட்சிதான் ,

புலிகளை இன்னமும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அனேக நாடுகள் எடுக்கவில்லை  ,இறுதி யுத்தத்தில் இவ்வளவு மக்கள் இறந்ததற்கு புலிகளும் காரணம் என்று குற்றத்தின் மேல் குற்றம் வைத்து பட்டியல் போட்டிருகினார்கள்  அதை எப்படி எதிர்கொள்ளுவது என்பது தமிழர் தரப்பு மண்டையை போட்டு உடைக்கிறது இதற்குள் பயங்கரவாதிகள் என்று பெயர் எடுத்து உலகத்தை பார்க்க வைத்தார்களாம் .

பிள்ளை படித்து விஞ்ஞானி ஆனால் சர்வதேச செய்தி ஆகும் அதே போல பிள்ளை  நாலுபேரை நடுத்தெருவில் வைத்து போட்டாலும் சர்வதேச செய்தி ஆகும் .

இண்டைக்கு புலிகள் கொலை செய்தார்கள் பயங்கரவாதிகள் எண்டு சொல்லும் எந்த நாடு கொலைகள் செய்யாமல் விடுதலை அடைஞ்சது... ???

உலக நாடுகளுக்கு ஜனநாயக பாடம் படிப்பிக்கும் பிரித்தானியா கொலை செய்யவில்லையா...? இல்லை பிரித்தானியாவுக்கு எதிராக போராடிய அமெரிக்கர்கள் கொலைகள் செய்யவில்லையா... இல்லை தனிநாடு அமைக்க இஸ்ரேல் எண்ற நாடு கொலைகள் செய்யவில்லையா...?

சரி ஜேர்மனி..?? பிரான்ஸ் ...? இத்தாலி..?? இரஸ்யா..??? இந்தியா...??

இதிலை புலிகளை குறை சொல்லும் எவர் குற்றமற்ற சுத்தமானவர் எண்டு பறையுங்கோ...? உங்கட பக்கம் நாங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொள்கிறோம்....

ஒருவேளை பலத்தோடை இருப்பவர்கள் சொல்வது வேதவாக்கோ என்னவோ...??

  • கருத்துக்கள உறவுகள்

1- அப்போ ஏன் இந்த ஐநா சபை புலிகள் இருக்கும் மட்டும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் எம்மை திரும்பி பார்க்கவில்லை?

2- ஐநா திரும்பி பார்க்க காரணம் இலங்கை அரசின் கட்டுமீறிய அட்டூழியங்கள்.

 

 

பார்த்ததா?

பார்க்கவில்லையா?..

முதலில் இல்லை என்கிறீர்கள்

அடுத்ததில் பார்த்தார்கள் என்கிறீர்கள்

 

சிங்களம் அட்டூழியங்களை  செய்கிறது

அவ்வளவு மக்கள் அழிப்பையும் செய்யும் என்றவர்கள் புலிகள்

அந்த கோரமுகத்தை தமது உயிரைக்கொடுத்து

அதை வெளியில் கொண்டு வந்தவர்கள் புலிகள்...

 

நீங்கள்

புலிகளை வறுத்தெடுத்தவர்கள்

அதுக்கே உங்களுக்கு நேரம் போதாதே.......

:(  :(  :(

சரி ஜேர்மனி..?? பிரான்ஸ் ...? இத்தாலி..?? இரஸ்யா..??? இந்தியா...??

 

 

பிரான்சிலுள்ள

நோர்மொண்டியில்   போய்ப்பார்த்தால் தெரியும்

உலகப்போரில் சண்டையிட்டு இறந்தவர்களில் முக்கால்வாசிப்பேர்

18 வயதுக்கு குறைந்தவர்கள்

அவர்களது  பிரச்சினை தீர்ந்ததும் வேறு ஒரு சட்டம்.. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து ராசவன்னியன் மேடைக்கு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் அண்ணா மேர்வின் சில்வா உதாரணம் நெத்தியடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது, இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன.  புலிகளின் சரிகளையும், பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை  நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐ.நா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே.  

போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது. இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்துங்கள் என்று நாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் கோருன்றோம். நாம் இங்கே தொடர்ச்சியாக போராடினால், அந்த போராட்டமே,  அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் செயற்படுத்தும் அழுத்தமாக மாறும். போராட்டம் என்றால் ஆயுதபோராட்டத்தை நான் இங்கே கூறவரவில்லை.

ஜனநாயக அறவழி போராட்டங்களை ஆரம்பியுங்கள் என்றே கூறுகின்றேன். 1960 களில் தந்தை செல்வா தலைமையில், தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்டங்களை திட்டமிட்டு மீண்டும் ஆரம்பியுங்கள். உலகம் எம்மை திரும்பி பார்க்கும். இலங்கை அரசுக்கு புரியும் பாஷையும் அதுதான்.

என்றார். http://www.pathivu.com/news/33735/57//d,article_full.aspx

புலி என்றால் அந்தளவு கேனையர்களா என்று இவரிடம்தான் கேக்கவேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.