Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தலைவர்களுடன் புதிய பயணத்திற்கு தயார் : முஸ்லிம் காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தலைவர்களுடன் புதிய பயணத்திற்கு தயார் : முஸ்லிம் காங்கிரஸ்
 
ஒரு கொள்கையினை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். சரியான தீர்மானமெடுத்து சரியான பாதையில் பயணிப்பதனால் மட்டுமே தமிழ், முஸ்லிம் சமூகத்தினை காப்பாற்ற முடியும். எனவே, தமிழ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து புதிய பயணத்தினை ஆரம்பிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
hasan-ali_0.jpg
அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலைமைக்கு இனி ஒரு  போதும் இடமில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் எனவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
 
எதிர்வரும் சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான முடிவுகளை எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த கால கசப்பான சம்பவங்கள் இருசாரருக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் கடந்த முப்பது வருட கால சூழல் இப்போது இல்லை. தமிழ் தலைவர்கள் இன்று தமது கொள்கையில் உறுதியாகவும் தாம் பயணிக்கும் பாதையில் தெளிவாகவும் உள்ளனர். அதேபோல் முஸ்லிம் சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில் நாம் இன்று மிகச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களுடன் நாம் சேர்த்து செயற்படுவதனால் மட்டுமே எமது எதிர்காலத்தினை சரியானதாகவும் ஒற்றுமையானதாகவும் கொண்டு செல்லமுடியும். எனவே, ஆரம்பத்தில் நாம் எவ்வாறு இனங்களை ஒற்றுமைப்படுத்தி சுமுகமான பயணத்தினை கொண்டு செல்ல முயற்சித்தோமோ அதே சூழ்நிலையினை இப்போதும் ஏற்படுத்தி வடக்கு, கிழக்கினை இணைத்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். எனவே, எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான இரு தரப்பு சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவானதும் ஆரோக்கியமானதுமான பல தீர்மானங்களை முன்னெடுத்து தமிழ் முஸ்லிம் உறவினை பலப்படுத்தும்.
 
மேலும், சுயநல அரசியலை செய்யும் கட்சியல்ல நாம். நாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றமைக்கும் பல காரணங்கள் உள்ளது. எமது சமூகத்தினை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசுடன் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் இன்று அரசாங்கம் முஸ்லிம் மக்களின் விடயத்தில் நம்பகத்தனமாக செயற்படவில்லை. எனவே, அரசாங்கத்தில் இருந்து கொண்டு பேரம் பேசும் அரசியலை இனிமேலும் செய்ய முடியாது. அரசாங்கம் சிறுபான்மை மக்கள் விடயத்தில் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, அதனை வலியுறுத்தி எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போம். அடுத்து நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் - முஸ்லிம் மக்கள் விடயத்தினையும் ஆட்சி போக்கினையும் கருத்தில் கொண்டு தீர்மானமெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

"சி" விவாகரத்து....புதுசா "த" தேவைப்படுகிறது,........

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வாறாங்கள் எண்ட உடனே கிலி ஆரம்பமாகுது.. :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வாறாங்கள் எண்ட உடனே கிலி ஆரம்பமாகுது.. :blink::D

 

உண்மை தான்.... இசை.

என்ன... குழி பறிக்கிற, யோசனையோடை வாறாங்களோ....

தமிழ் தலைவர்களுடன் ஒன்றாக பயணிக்க முஸ்லீம் காங்கிரஸ்  தயார் ஆறு கடக்கும் வரை. .............................................................?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப நடப்போம், நம்பி நடக்கிலோம்.

முசுலீம்மக்களின் தலைமையாக நல்லாட்ட்சி இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

அசாத்சாலியும் பரவாயில்லை. மற்றயவ்ர்கள் எல்லாம் திருடர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகள் இல்லாம இருப்பம். ஆனா தயவுசெய்து உறவுவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அழுகின பழம் .....கனியுது போல ...ஊவா மாகாணம் கனிச்சுபோட்டுது 
......எதிரியும் வேணாம் ....நண்பனும்  வேணாம் ஏன் அவர்கள் கதையே வேண்டாம் ...

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை கல்முனையில் முக்கிய சந்திப்பு!

[Friday 2014-09-26 18:00]
sampanthan-hakeem-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நாளை கல்முனையில் நடைபெறவுள்ளது. முக்கியமான அரசியல் சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் கல்முனை மாநகர சபை மேயர் அலுவலகத்தில் இடம்பெறும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

  

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி, பிரதி செயலாளரும், கல்முனை மாநகர மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர உறுப்பினருமான ஏ.எல்.மஜீத் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ், முஸ்லிம்களின் ஒன்றுபட்ட நிலைப்பாடு மற்றும் இந்த விடயத்தில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒத்த கருத்துக்கு வரவேண்டுமென்ற தமிழர் பிரச்சினையில் கரிசனை கொண்டுள்ள நாடுகளின் கோரிக்கை என்பன குறித்து இந்தச் சந்திப்பில் விசேடமாக ஆராயப்படவுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பில் சுமுகமாகப் பேசித் தீர்வுகளைக் காணவும் இச்சந்திப்பின் போது முயற்சிக்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே தமிழர், முஸ்லிம் தலைவர்களுக்கிடையே ஆரம்பித்து இடையில் விடுபட்டது போன்றல்லாது, இம்முறை ஆரம்பமாகும் சந்திப்பும், பேச்சுக்களும் தொடர்ந்தேர்ச்சியாக எதிர்காலத்தில் இடம்பெறுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸனலி நம்பிக்கை தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள் தொடர்பாகவும் ஏனைய தமிழ், முஸ்லிம் நிலைப்பாடுகள் தொடர்பிலும் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=117549&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சம்பந்தரை அசட்டை செய்து அரசுடன் ஹக்கீம் கூடிக்குலாவிய கிழக்கு தேர்த்தலை நினைவு கூருகிறேன். கிழக்கை அரசுக்கு தாரை வார்த்த  பெருமை ஹக்கீமை சாரும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு திருந்திறதுக்கு..... சான்ஸே இல்லை.
அடுத்த முறை தேர்தலில், கூட்டமைப்புக்கு..... கட்டுக்காசும் கிடைக்காமல் செய்ய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பநட நம்பி நடவாதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீமை நம்புறவன், முழு முட்டாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.