Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் கனவுகளுக்கு உளவியல் ரீதியான அர்த்தம் தெரியவேண்டுமா?

Featured Replies

கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றன. சில வேளைகளில் ஏதும் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும். ஆனால் எப்போதாவது உங்கள் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா…? இந்த அறிவு டோஸில் பொதுவாக காணப்படும் 6 விதமான கனவுகளுக்கு உளவியல் (psychological) ரீதியாக என்ன அர்த்தம் என்பதை அறியத்தருகின்றேன்.

 

பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது போல் கனவு:

இந்த வகையான கனவு உங்களில் பலர் அனுபவித்து இருப்பீர்கள். பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் அல்லது பொதுவான ஓர் இடத்தில் நிற்பது போல் கனவு காணும் போழுது, திடீரென்று நீங்கள் முற்றிலும் நிர்வாணமாக நிற்கின்றீர்கள் என்பது தெரிய வந்து விடும். உளவியல் ரீதியாக இவ்வாறு கனவு காண்பதற்கு அர்த்தம் இது தான்: நமது மனதில் இருக்கும் ஏதோ ஒரு விடயத்தை நாம் மறைக்க விரும்புகின்றோம். அந்த விடயம் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்பது தான் இந்தக் கனவின் அர்த்தம். இதுவே அந்தக் கனவில் நாம் நிர்வாணமாக இருந்தும் வேறு ஒருவரும் நம்மை அவதானிக்கவில்லை என்றால், நாம் மறைக்கும் விடயத்தை இன்னும் ஒருவருக்கும் தெரிந்துவிடவில்லை என்று அர்த்தம்.

 

விழுவது போல் கனவு 

நீங்கள் எங்கேயோ இருந்து முடிவே இல்லாமல் விழுந்து கொண்டே இருப்பது போல் கனவு காண்பீர்கள். இது பலரால் காணப்படும் ஓர் பொதுவான கனவாகும். உளவியல் ரீதியாக இந்தக் கனவுக்கு அர்த்தம் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான விடயம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டு, நீங்கள் பாதுகாப்பற்ற, பயந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பது தான். மேலும் நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் (உதாரணத்திற்கு பரீட்சையில்) தோற்றுவிட்டீர்கள் என்றாலும் இப்படியான கனவு வரக்கூடும்.

 

யாரோ துரத்துவது போல் கனவு

யாராவது உங்களைத் துரத்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை கண்டு ஓடிவிடுகின்றீர்கள் என்று உளவியல் அர்த்தம். நீங்கள் எந்தப் பிரச்சினையை பார்த்து ஓடி விடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து, யார் அல்லது எது உங்களைத் துரத்துகின்றது என்பது தெரியவரும்.

 

பரீட்சை செய்வது போல் கனவு

இந்தக் கனவும் பலருக்கு வருகின்ற பொதுவான கனவாகும். உங்கள் கனவில் திடீரென்று ஓர் பரீட்சை செய்ய வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிடும். எனவே, நீங்கள் அந்தப் பரீட்சை நடக்கும் மண்டபத்தை நாடிப் போகின்றீர்கள், ஆனால், அந்த மண்டபத்தைத் தேடித் தேடிப் பார்த்தாலும் உங்களால் அதை சென்றடையவே முடியாது. இந்தக் கனவு பல வடிவங்களில் வரக்கூடும். உளவியல் ரீதியாக நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் வாழ்க்கையில் சோதனை செய்யப் படுகின்றீர்கள் என்று அர்த்தம். அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதற்குத் தீர்வு தெரியாமல் அவதிப் படுகின்றீர்கள் என்று அர்த்தமாகும்.

 

நின்ற நிலையிலே ஓடுவது போல் கனவு:

உங்கள் கனவில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றீர்கள், இருந்தாலும் ஒரு அடி கூட முன்னே போகவில்லை. இதற்கு அர்த்தம் வேறு ஒன்றும் இல்லை: உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவை ஒன்றுமே தீர்ந்து போகவில்லை. அப்படி தீர்ந்தாலும் அடுத்த பிரச்சினை உங்களைத் தேடி வந்து விடுகிறது. ஒரே நேரத்தில் பல விடயங்களைச் செய்ய முயற்சிக்கும் நீங்கள், அது முடியாமல் அவதிப் படுகின்றீர்கள்.

 

பறப்பது போல் கனவு: 

சிலர் பறப்பது போல் கனவு காண்பார்கள். உளவியல் ரீதியாக உங்களுக்கு முக்கியம் எனப்படுகின்ற அனைத்து விடயங்களும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பது தான் அர்த்தம். உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பலமாக இருக்கிறது. உங்களால் எது என்றாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றீர்கள். அதே கனவில் உங்களுக்குப் பறப்பது கடினமாக இருந்தால், யாரோ ஒருவர் அல்லது ஏதோவொன்று உங்களுக்குத் தடங்கலாக இருக்கின்றது என்று தான் அர்த்தம். அப்படி பறக்கும் போது உங்களுக்கு பயமாக இருக்கின்றது என்றால் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஓர் பிடிக்காத சவால் இருக்கின்றது என்பது தான் அர்த்தம்.

 

கனவுகளில் இந்த 6 வகைகளும் தான் இருக்கின்றன என்று இல்லை. இன்னும் எத்தனையோ வகையான கனவுகள் இருக்கின்றன. ஆனால், இந்த 6 வகைகளும் தான் பொதுவாகப் பலரால் காணப்படும் கனவுகள் ஆகும். எல்லாக் கனவுக்கும் அர்த்தம் இருக்கின்றது என்றும் எண்ணமுடியாது, ஆனால் பல விதமான கனவுகளுக்கு அர்த்தங்கள் இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

 

சரி, இனி நீங்கள் கூறுங்கள், நண்பர்களே! மேலே சொல்லப்பட்ட கனவு வகைகளில் நீங்கள் எந்த வகைக் கனவுகளைக் கண்டிருக்கின்றீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

 

அடுத்த அறிவு டோஸ் உடன் இன்னும் ஒரு நாள் சந்திக்கிறேன்

-- Niroshan Thillainathan -- 

 

00212-480x480.jpg

 

http://www.arivu-dose.com/why-do-we-dream-and-interpretation-in-clinical-psychology/

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

பெரிசா ஒண்டுமில்லை,வயசு போட்டுது
  • கருத்துக்கள உறவுகள்

பெரிசா ஒண்டுமில்லை,வயசு போட்டுது

 

உடம்புக்கு தான் வயசு போய்விட்டது மனசுக்கு இன்னும் வயசு போகவில்லை.... இல்லை ....இல்லை..இல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

 

 

நீங்கள் கனவு கண்ட  நடிகைகள் தற்பொழுது  நடிப்பதில்லை ஐயா.. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கனவு கண்ட  நடிகைகள் தற்பொழுது  நடிப்பதில்லை ஐயா.. :lol:  :D

 

பாட்டி ,ஆத்தா போன்ற வேடங்களில் நடிக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் நடிகைமார் கனவில வந்திச்சினம் இப்ப கடவுள் கனவில வாரார் என்ன காரணம்?

அது அது அவர்களுடன் கூட கூடிய வயதில் வருகிறது ..............
நான் நினைக்கிறேன் இனி மேலே போய் கடவுளுடன் கூடும் காலம் வந்து விட்டது என்று. 
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ துரத்துவது போன்ற கனவும், நின்ற நிலையில் ஓடும் கனவும் முந்தி வந்த ஞாபகம் உள்ளது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ துரத்துவது போன்ற கனவும், நின்ற நிலையில் ஓடும் கனவும் முந்தி வந்த ஞாபகம் உள்ளது.. :D

 

 

துரத்துபவரை உங்களுக்கு பிடித்திருக்கு என்று பொருள்.... :wub:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

மரண வீடு திருமணவீடு போன்ற நிகழ்வுகளைக் கனவில் கண்டால்

என்ன பலன் கிடைக்கும் என்பதை அறியும் ஆவலில் உள்ளேன் ஐயா :D

  • கருத்துக்கள உறவுகள்
இதில் எனக்கு எந்த நமிபிக்கையும் இல்லை ............... அல்லது இவர்கள் கொடுக்கும் விளக்கும் நம்பும் படியாக இல்லை.
 
என்னை பொருத்தவரை கம்ப்யூட்டர் ராம் (தற்காலிக மேமொரியின்) செயற்பாடு போன்று கனவு வரவே சாத்தியம் நிறைய இருக்கிறது. கனவுகளை நீங்கள் ஞாபகம் வைத்து அலசி ஆராய்ந்தால் அது கொஞ்சம் சரியாகவே தெரியும்.
 
நீங்கள் கொம்பியுட்டரில் இல்லாத ஒன்றை தேடினால் அல்லது தவறான ஒரு கமாண்டை கொடுத்தால் ... நீங்கள் கொம்பியுட்டரை மூடும்வரை அது திரை மறைவில் அதை தேடிக்கொண்டே இருக்கும்.
 
நீங்கள் ஒரு நாளில் எவளவோ காட்சிகளை கண்களால் காண்பீர்கள் .... சிலதை சிந்தித்துகொண்டு இருப்பீர்கள் எதிர்பாராத விதமாக அது தீடீரென நின்று விடும்.(குறிப்பாக போன் ரிங் ஆனால் உங்கள் கவனம் போனுக்கு போய்விடும்) முன்பு இருந்த சிந்தனையை நீங்கள் மறந்து வேறு ஒரு நிகழ்விற்கு போய்  விடுவீர்கள். இந்த சிறிய சிறிய பகுதிகளான சிந்தனை சிதறல்கள் .... நீங்கள் கண்ட காட்சிகள். 
எல்லாவற்றிற்கும் மூளை ஒரு விடை தேடிக்கொண்டு இருக்கும். நீங்கள் நித்திரை செய்யும்போது அவை ஒரு காட்சியாக இரைமீட்க படுகிறது. 
கனவு எல்லா நாளும் வருவது இல்லை. 
நித்திரையில் 2-3 மணி நேரம் ஆழ்ந்த நித்திரை இருக்கிறது (டீப் ஸ்லீப்) அடுத்த கட்டம் ஒரு அயர் நிலை 1 மணி நேரம் தையும் தொடர்ந்து தூங்கும்போதுதான் கனவு வருகிறது.
நீங்கள் 10-11 மணிக்கு இரவு தூங்கினால் கனவு அதிகாலை 4-5 போல்தான் வருகிறது.
நீங்கள் கொஞ்சம் விழிப்பாக கூட இருக்கிறீர்கள். அல்லது மூளை விழிப்பாக இருக்கிறது அந்த நேரத்தில்.
இது என்னுடைய தனிபட்ட எண்ணம்.
பல சைகலஜிட் களின் கரங்களை படித்து பார்த்தேன் ஒன்றும் நம்பும் படியாக இல்லை. 

யாரோ துரத்துவது போன்ற கனவும், 

எனக்கும் இந்த அனுபவம்(?) உண்டு.எனினும் நித்திரை முறிந்து எழும்பும்போது படுக்கின்ற விதத்தில் தவறு இருப்பதை உணர்ந்து(கை, கால் தலை என்பன சிலவேளைகளில் எக்குத்தப்பாக மாட்டியிருக்கும்) அதை மாற்றியபின்பு    இப்படியான கனவுகள் இப்போது வருவதில்லை. 
     ஓடாத சைக்கிளும் ஓடாத காரும்(கனவில்) பின் அவற்றை பழகிய பின்பு ஓடத்தொடங்கியது. இப்போதும் நான் சுடும் துப்பாக்கி ரவைகள் யாரையும் கொல்வதில்லை. இசை இதற்கு தீர்வு என்ன?
விழுவது போல் கனவு

 

 

இது அடிக்கடி வரும்.  :) பரவாயில்லை.

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி வரும். :) பரவாயில்லை.

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ?

இது நிச்சயமா சாமி குத்தமாதான் இருக்கும். லாச்சப்பலிலுள்ள ஏதாவது ஒரு கோயிலுக்கு காவடி எடுங்க எல்லாம் சரியாபெோயிடும்
  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி வரும். :) பரவாயில்லை.

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ?

ஏதோ ஒரு ஆவி போய்வாற வழியில் படுக்கிறீங்கள் போலை.. :D படுக்கிற இடத்தை மாத்துங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அடிக்கடி வரும்.  :) பரவாயில்லை.

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

 

யாழ்களத்திலை வெட்டுறதை கொஞ்சம் விட்டுப்புடிச்சு, யோசிச்சு வெட்டினால்..... நாலைஞ்சு பேர்  சேர்ந்து அமுக்கிற கனவெல்லாம் வராது... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திலை வெட்டுறதை கொஞ்சம் விட்டுப்புடிச்சு, யோசிச்சு வெட்டினால்..... நாலைஞ்சு பேர்  சேர்ந்து அமுக்கிற கனவெல்லாம் வராது... :icon_mrgreen:

 

இணையவன் இப்ப... குட் போய். :rolleyes: (நல்ல பையன்)

முந்தி மாதிரி... வெட்டுவதில்லை.

அவருக்கு.... சனி பகவானின், பார்வை பட்டிருக்கு என்று....நினைக்கின்றேன்.  :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி வரும்.  :) பரவாயில்லை.

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

 

ஏன்  இணையவன்  ரொம்ப அமைதியாக இருக்கிறார்

அதிகம்   பேசுவதில்லை என்று பல நாட்கள் தலையை  உடைத்துண்டு

இன்றைக்கு பதில் கிடைத்தது.... :lol:  :D

காலையிலிருந்து   மதியம்வரை இரவு  நடந்ததையும்

மதியத்திலிருந்து

இன்றிரவு இரவு நடக்கப்போவதையும் நினைத்தால்.....?? :lol:  :D  :D

இரண்டு கிழமைக்கு முதல் ஒரு சிறிய தீவில் தனியே இருப்பதுபோலவும் உயரமாக கடல் அலைகள் எழும்பி எழும்பி வந்ததுபோலவும் ஒரு கனவு கண்டேன் . காலையில் மனைவியிடம்  கூறினேன் .பணம் வரப்போகுது என்று சொன்னார் ..
 
[ஆனால் நடந்தது 5000 ஐரோ பணத்தை இழந்தது  ,ஒரு சிறிய தனி முயற்சி ஒன்றை ஆரம்பித்து ,, ஏமாத்திட்டாங்க :(   ] ...............அப்புறம்தான் தெரிந்தது உண்மையான கனவின் அர்த்தம்  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இன்னொன்று. யாரோ நாலைந்து பேர் என்னை அமுக்கிற மாதிரி அடிக்கடி வருது. சிலதடவை வாய்விட்டு ஆஆஆ என்று கத்த மனைவியும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயோ என்று கத்த, ஒரே களோபரமாயிருக்கு.

இதுக்கும் ஏதாவது பரிகாரம் உண்டா ? 

 

நித்திரையின்போது தலையை உயர்த்தும் அளவிற்குத் தலையணைகளைப் பாவிப்பதுண்டா?

மூச்சுக்குழாய் தடைப்படுவதால் மூச்சு விடக் கஷ்டப்படுவதால் இப்படியான அமுக்கம் ஏற்படலாம்.  அதிலிருந்து விடுபடுவதற்காகக் கத்தியிருக்கலாம்

இது வைத்தியர்கள் விளக்க வேண்டிய கேள்வி

நெடுக்ஸ் வந்தால் கட்டாயம் விளக்கம் அளிப்பார் என நினைக்கின்றேன் இனியவன்

 

  • 2 weeks later...

Edited by kssson

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.