Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்

Featured Replies

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

அது சரி , ஏன் டக்ளஸ்ச பிழை சொல்வான் , இப்பவும் ......., தமிழீழ போராளி என்று இவர்களை சொல்வதா , உண்மையான மாவீரர்கள் இருக்கும் பொது இந்த் ........ .... .

நியானி: ஒரு சொல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

  • Replies 105
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படிக்கவேண்டும் புதிய பாடம்!!

 

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

 

இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் ‘பேதங்கள் மறந்த ஒற்றுமை‘ அவசியம். புகலிடத்திலும் தளத்திலும் ‘சிங்களம்‘ தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும். எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம். கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம்.

 

சந்ததியார், கண்ணன், பார்த்தன், சுந்தரம், உமாமகேஸ்வரன், பொபி, தாஸ், பற்குணம், மைக்கல், மாத்தையா, கௌசல்யன், அற்புதன்(EPDP), யோகேஸ்வரன், தர்மலிங்கம், அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது, ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ஆரம்பகால உறுப்பினர்களுக்கும், அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரும்(ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமார்) தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள். பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே. இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள்.

 

தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால்,

அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம், கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்(தமிழரின் தாகம்),

தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால்

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள்.

 

தற்பொழுது யாரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை. நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து, அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம், தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை, அடையப்படவுமில்லை. இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள், சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது.

 

எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்.

எமக்கென்று ஒரு நாடு வேண்டும்.

அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும்.

 

அதை விடுத்து அவன் LTTE, இவன் PLOTE, நான் TELO, நீ EPRLF, கிழக்கு, வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை, அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும்.

 

4lanka.jpg

 

யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும், திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம், பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள். தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது. அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

 

prabha-Uma.jpg

ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின், போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம். அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள். மேலும், PLOTE இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி, ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது.

 

பிற்காலத்தில் PLOTE போராளிகள் தேசியம், சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது. அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம். அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள், இன உணர்வுள்ள இளைஞர்கள், திறமையான போராளிகள், சிந்தனைவாதிகள்(தராக்கி சிவராம் போன்றோர்) ஏனைய இயக்கங்களில்(PLOTE, TELO, EPRLF, EROS போன்ற) உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

 

இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின், தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின், வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின், விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார்.

எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம், எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம். காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும், மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது.

 

நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம். அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் RAW அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலைசெய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள். பின் செய்தும் முடித்தார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்.

 

தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள். டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள். இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள்.

இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா?
அன்பான தமிழ் மக்களே!

 

ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!

 

முரளி நடேசன்

 

http://ulavan.wordpress.com/2010/07/30/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/

Edited by nedukkalapoovan

படிக்கவேண்டும் புதிய பாடம்!!

 

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

 

இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் ‘பேதங்கள் மறந்த ஒற்றுமை‘ அவசியம். புகலிடத்திலும் தளத்திலும் ‘சிங்களம்‘ தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும். எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம். கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம்.

 

சந்ததியார், கண்ணன், பார்த்தன், சுந்தரம், உமாமகேஸ்வரன், பொபி, தாஸ், பற்குணம், மைக்கல், மாத்தையா, கௌசல்யன், அற்புதன்(EPDP), யோகேஸ்வரன், தர்மலிங்கம், அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது, ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ஆரம்பகால உறுப்பினர்களுக்கும், அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரும்(ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமார்) தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள். பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே. இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள்.

 

தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால்,

அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம், கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்(தமிழரின் தாகம்),

தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால்

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள்.

 

தற்பொழுது யாரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை. நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து, அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம், தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை, அடையப்படவுமில்லை. இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள், சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது.

 

எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்.

எமக்கென்று ஒரு நாடு வேண்டும்.

அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும்.

 

அதை விடுத்து அவன் LTTE, இவன் PLOTE, நான் TELO, நீ EPRLF, கிழக்கு, வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை, அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும்.

 

4lanka.jpg

 

யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும், திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம், பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள். தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது. அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

 

prabha-Uma.jpg

ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின், போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம். அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள். மேலும், PLOTE இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி, ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது.

 

பிற்காலத்தில் PLOTE போராளிகள் தேசியம், சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது. அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம். அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள், இன உணர்வுள்ள இளைஞர்கள், திறமையான போராளிகள், சிந்தனைவாதிகள்(தராக்கி சிவராம் போன்றோர்) ஏனைய இயக்கங்களில்(PLOTE, TELO, EPRLF, EROS போன்ற) உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

 

இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின், தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின், வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின், விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார்.

எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம், எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம். காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும், மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது.

 

நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம். அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் RAW அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலைசெய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள். பின் செய்தும் முடித்தார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்.

 

தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள். டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள். இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள்.

இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா?

அன்பான தமிழ் மக்களே!

 

ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!

 

முரளி நடேசன்

 

http://ulavan.wordpress.com/2010/07/30/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/

 

என்ன அருமையான பதிவு , முதலில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள் , விமர்சனத்தை நாடு அடைந்த பின்னர் செய்யலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உள்ள பல கருத்துக்கள் எமது மனவிகாரங்களை தெளிவாக எடுத்து சொல்கிறது. அது காணாது என்று இன்னும் கற்பனை கதைகளை இணைப்பதால் யாருக்கு என்ன பலன் ?

  • கருத்துக்கள உறவுகள்

 

பனாகொடை மகேஸ்வரன் என்று ஒருத்தர் இருந்தார். காத்தான்குடி வக்கி கொள்ளை அடித்து, நல்ல ஆயுதங்களும், தேர்ந்து எடுக்கப் பட்ட சிறந்த, குறித்த எண்ணிக்கையான உறுபினர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தார்.
 
புலிகள், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை, கையளித்து,களத்தினை விட்டகல வேண்டும் என எச்சரிக்க, அவரோ நேரே கிட்டரிடம் போய், ஆயுதங்ககளை இப்பவே தர தயார். ஆனால், நாம் அமைதியாக நாட்டினை விட்டு வெளியேறும் வரை, பிரச்னை தரா உத்தரவாதம் தர வேண்டும் என கோரி, பெற்று, சகல உறுப்பினர்களையும் வெளி அனுப்பி, தானும் பத்திரமாக வெளியேறினார்.
 
எந்த இயக்கத்துக்கும் அனுதாபம் இல்லையாயினும், தன்னை நம்பி வந்தவர்களை கரிசனையாக கவனித்து, பத்திரமாக அனுப்பி வைத்த அவர் எனது பார்வையில் ஒரு சிறப்பான தலைவர்.

 

 

பனாகொடை மகேஸ்வரன்

எனது உறவினர் தான்...

இவர் ஒரு பொறியியலாளர்

இவர்  பனாகொடையிலிருந்து இரவோடிரவாக தப்பிய இவர் விடியக்காலையில் தட்டிய முதல் கதவு எங்களது தான்...

 

இவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து

புலிகளின் வேண்டுதலுக்கு அமைய   இடைஞ்சல் செய்யாது விலகிச்சென்றது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் 

பெருமையாகவும் இருந்தது

அத்துடன்  விலகிச்சென்ற அவரோ அவரது அமைப்பினரோ

போராட்டத்துக்கு  எந்த இடைஞ்சலும் செய்யவில்லை

புலிகளும் அவர்களை தேடவில்லை.

 

இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம்

புலிகள் எவரையும் பகையாக்க விரும்பவில்லை

வந்து சேர்ந்து போராடுங்கள்

அல்லது விலகிச்சென்று  ஒதுங்கி  இருங்கள் என்பதை கடைசிவரை மதித்தார்கள் என்பது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசு,

நீங்கள் எழுதுவது எவ்வளவு கேவலம் என்றே தெரியாமல் பிறந்து வளர்ந்து விட்டார்கள் . இன்னும் காலம் இருக்கிறது என்ன பிழை என்றாவது அறிய :(

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம்

புலிகள் எவரையும் பகையாக்க விரும்பவில்லை

வந்து சேர்ந்து போராடுங்கள்

அல்லது விலகிச்சென்று  ஒதுங்கி  இருங்கள் என்பதை கடைசிவரை மதித்தார்கள் என்பது....

ஆமாம். இதுதான் உண்மை. ^_^

இப்படியான உண்மைகளை வெளியே கொண்டுவரக்கூடாது என்று இந்திய ரோ, அமெரிக்க சிஐஏ, சிங்களப் புலனாய்வுப் பிரிவுகளின் பெரும் ஒத்துழைப்புடன் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக விளங்கிய ஐயர் எழுதிய அம்புலிமாமாக் கதையை நானும் மெனக்கட்டு யாழில் பதிந்திருந்தேன். :(

பொய்யையயும் புரட்டையும் படிக்க நேரம் உள்ளவர்கள் படிக்கலாம்!

http://www.yarl.com/forum3/index.php?/topic/67608-தமிழீழ-விடுதலைப்-புலிகளின்-தோற/

பொய்களைப் படிக்கக்கூடாது என்று சின்ன வயதிலேயே கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட விசுகு ஐயா போன்றவர்கள் அதில் ஒரு வரிதன்னும் படித்து நேரத்தை வீணாக்கியிருக்கமாட்டார்கள். <_<

 

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம்

புலிகள் எவரையும் பகையாக்க விரும்பவில்லை

வந்து சேர்ந்து போராடுங்கள்

அல்லது விலகிச்சென்று  ஒதுங்கி  இருங்கள் என்பதை கடைசிவரை மதித்தார்கள் என்பது....

  

அந்தக் காலங்களில் தங்களுடன் வந்து இணையும்படி சொல்லவோ அல்லது விலகிச் செல்லும்படி சொல்லவோ புலிகளுக்கு கொந்தராத்துக் கொடுத்தது யார்? மக்கள் கொடுத்தார்களா அல்லது புலிகளே அதிகாரத்தைத் தாங்களாகவே எடுத்துக்கொண்டார்களா?

Edited by வாலி

  • தொடங்கியவர்

பனாகொடை மகேஸ்வரன்

எனது உறவினர் தான்...

இவர் ஒரு பொறியியலாளர்

இவர்  பனாகொடையிலிருந்து இரவோடிரவாக தப்பிய இவர் விடியக்காலையில் தட்டிய முதல் கதவு எங்களது தான்...

 

இவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து

புலிகளின் வேண்டுதலுக்கு அமைய   இடைஞ்சல் செய்யாது விலகிச்சென்றது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் 

பெருமையாகவும் இருந்தது

அத்துடன்  விலகிச்சென்ற அவரோ அவரது அமைப்பினரோ

போராட்டத்துக்கு  எந்த இடைஞ்சலும் செய்யவில்லை

புலிகளும் அவர்களை தேடவில்லை.

 

இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம்

புலிகள் எவரையும் பகையாக்க விரும்பவில்லை

வந்து சேர்ந்து போராடுங்கள்

அல்லது விலகிச்சென்று  ஒதுங்கி  இருங்கள் என்பதை கடைசிவரை மதித்தார்கள் என்பது....

எவ்வாறு முடிவு எடுத்து? புலிகளுக்கு இடைஞ்சல் செய்தாது எங்கு சென்றார்? உங்களுக்கு பெருமையாகவும் மகிழ்சியாகவும் இருக்க ?

தயவு செய்து எனக்கு இதற்கான பதில் வேண்டும் .

 

யாழில் சில காலம் எழுதாமல் விடுவம் என்று இருந்தேன் ,இப்படி ஒரு பச்சை பொய்யை பார்த்தபின் எழுதாமல் விட முடியவில்லை .

மகேஸ்வரன் எனது அண்ணருடன் யாழ் மத்திய கல்லூரியில் படித்து மாத்திரம் அல்ல அண்ணரின் மிக நெருங்கிய நண்பருமாவார் .இன்றும் அவர்களுக்கு தொடர்பு இருக்கு .மகேந்திரன் ,மகேஸ்வரன் ,சந்திரன் ,ரவீந்திரன் அனைவரையும் எனக்கும் தெரியும் பழக்கமும் கூட ,யாழில் பிரவுண்வீதி வீட்டிற்கு சென்று இருக்கின்றேன் அவரதும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் .லண்டனால் வந்து களுவாஞ்சிகுடி கொள்ளைக்கு சில நாட்களின் முதலும் சந்தித்தேன் .விடுமுறையில் வந்து நிற்பதாக சொன்னார் .தம்பாவின் ஆட்கள் பலரை இந்தியாவில் சந்தித்தேன் புலிகளுக்கு பயந்துதான் ஓடிவந்திருந்தார்கள் .

புலிகள் மாற்று இயக்கத்தவர்களை என்ன செய்தார்கள் என்று ஓடிவந்த உங்களுக்கு எதுவும் தெரியாது மாற்று இயக்கங்களில் இருந்தவர்களுக்கு தெரியும் .நாட்டுக்காக போராடினார்கள் என்று ஒரு மரியாதை சற்று அவர்களில் இருந்தது இப்படி முழு பொய்களை எழுதும்போது அவர்களையும் சேர்த்து திட்டவேண்டிஇருக்கு .

லண்டனில் மகேஸ்வரனில் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் இருவர் .ஒருவர் வீடு படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றவர் நான் எழுதிய பயங்கரவாதிகள் கதையில் வந்து ராம்போ அம்பு விட போவதாக சொன்னவர் .

போரட்டத்தில் நடந்ததும் தெரியாது போராட போனவர்களையும் தெரியாது ஓடி வந்து தேவாரம் பாடி படம் அந்த மாதிரிக்காட்ட நன்றாகதெரிந்திருக்கு .

  • தொடங்கியவர்

படிக்கவேண்டும் புதிய பாடம்!!

 

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

 

இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் ‘பேதங்கள் மறந்த ஒற்றுமை‘ அவசியம். புகலிடத்திலும் தளத்திலும் ‘சிங்களம்‘ தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும். எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம். கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம்.

 

சந்ததியார், கண்ணன், பார்த்தன், சுந்தரம், உமாமகேஸ்வரன், பொபி, தாஸ், பற்குணம், மைக்கல், மாத்தையா, கௌசல்யன், அற்புதன்(EPDP), யோகேஸ்வரன், தர்மலிங்கம், அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது, ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ஆரம்பகால உறுப்பினர்களுக்கும், அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரும்(ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமார்) தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள். பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே. இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள்.

 

தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால்,

அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம், கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்(தமிழரின் தாகம்),

தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால்

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள்.

 

தற்பொழுது யாரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை. நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து, அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம், தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை, அடையப்படவுமில்லை. இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள், சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது.

 

எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்.

எமக்கென்று ஒரு நாடு வேண்டும்.

அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும்.

 

அதை விடுத்து அவன் LTTE, இவன் PLOTE, நான் TELO, நீ EPRLF, கிழக்கு, வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை, அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும்.

 

4lanka.jpg

 

யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும், திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம், பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள். தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது. அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

 

prabha-Uma.jpg

ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின், போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம். அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள். மேலும், PLOTE இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி, ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது.

 

பிற்காலத்தில் PLOTE போராளிகள் தேசியம், சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது. அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம். அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள், இன உணர்வுள்ள இளைஞர்கள், திறமையான போராளிகள், சிந்தனைவாதிகள்(தராக்கி சிவராம் போன்றோர்) ஏனைய இயக்கங்களில்(PLOTE, TELO, EPRLF, EROS போன்ற) உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

 

இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின், தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின், வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின், விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார்.

எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம், எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம். காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும், மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது.

 

நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம். அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் RAW அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலைசெய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள். பின் செய்தும் முடித்தார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்.

 

தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள். டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள். இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள்.

இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா?

அன்பான தமிழ் மக்களே!

 

ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!

 

முரளி நடேசன்

 

http://ulavan.wordpress.com/2010/07/30/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/

நெடுக்கர் இப்படியானவர்களின் ஆக்கம் வாசித்துத்தான் எமது போரட்ட வரலாற்றை வளர்த்துள்ளார் போலிருக்கு ,உதை விட ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களில் நெடுமாறனின் வெடி புராணம் இருக்கு அதை வாசித்தால் இன்னமும் அறிவு வளரும் .

கண்ணுக்கு முன்னால் நடந்த போராடத்திற்கு திரை கதை வசனம் எழுதுகின்றார்கள் .அதை வாசித்து நம்ப ஒரு கூட்டம் .

நெடுமாறன் ஐயா அவர்களை விமர்சிக்கின்ற அளவுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை . அவர் எங்கள் தேசியதலைவரின் ஒரு வலது கை என்றே சொல்லலாம் . உங்களின் இஸ்டத்திக்கு விமர்சனம் செய்யகூடாது .
போராட்டத்தை வளர்த்த தலைவருக்கு அவர் ஆற்றிய உதவிகள் சொல்லில் அடங்காது. 
 
கொண்ட லட்சியத்தை விடிடுட்டு உருப்படாமலும் கிட்டதட்ட களவாணி பயல்களை இங்கு புனிதர் என்று சொல்ல வரும் உங்களை என்னவென்று சொல்ல.
 
நெல்சன் மண்டேலாவின் படத்தை கொண்டிருக்கும் நண்பரே அவரை விட எவ்வளவோ உயர்ந்த எங்கள் தலைவரையும் அவர் வளர்த்தெடுத்த எங்கள் புனிதமான் வீரமான விடுதலை இயக்கத்தை விமர்சிக்க நீங்கள் என்ன தியாகம் நாட்டுக்காக செய்துள்ளிர்கள் . 
 
ஒருவரை விமர்சனம் செய்பவருக்கு அதனை விட செயலில் வளர்ந்தவராக இருக்கவேண்டும் .

தலைப்பை மாற்றிய  நிர்வாகத்திற்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு முடிவு எடுத்து? புலிகளுக்கு இடைஞ்சல் செய்தாது எங்கு சென்றார்? உங்களுக்கு பெருமையாகவும் மகிழ்சியாகவும் இருக்க ?

தயவு செய்து எனக்கு இதற்கான பதில் வேண்டும் .

 

யாழில் சில காலம் எழுதாமல் விடுவம் என்று இருந்தேன் ,இப்படி ஒரு பச்சை பொய்யை பார்த்தபின் எழுதாமல் விட முடியவில்லை .

மகேஸ்வரன் எனது அண்ணருடன் யாழ் மத்திய கல்லூரியில் படித்து மாத்திரம் அல்ல அண்ணரின் மிக நெருங்கிய நண்பருமாவார் .இன்றும் அவர்களுக்கு தொடர்பு இருக்கு .மகேந்திரன் ,மகேஸ்வரன் ,சந்திரன் ,ரவீந்திரன் அனைவரையும் எனக்கும் தெரியும் பழக்கமும் கூட ,யாழில் பிரவுண்வீதி வீட்டிற்கு சென்று இருக்கின்றேன் அவரதும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் .லண்டனால் வந்து களுவாஞ்சிகுடி கொள்ளைக்கு சில நாட்களின் முதலும் சந்தித்தேன் .விடுமுறையில் வந்து நிற்பதாக சொன்னார் .தம்பாவின் ஆட்கள் பலரை இந்தியாவில் சந்தித்தேன் புலிகளுக்கு பயந்துதான் ஓடிவந்திருந்தார்கள் .

புலிகள் மாற்று இயக்கத்தவர்களை என்ன செய்தார்கள் என்று ஓடிவந்த உங்களுக்கு எதுவும் தெரியாது மாற்று இயக்கங்களில் இருந்தவர்களுக்கு தெரியும் .நாட்டுக்காக போராடினார்கள் என்று ஒரு மரியாதை சற்று அவர்களில் இருந்தது இப்படி முழு பொய்களை எழுதும்போது அவர்களையும் சேர்த்து திட்டவேண்டிஇருக்கு .

லண்டனில் மகேஸ்வரனில் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் இருவர் .ஒருவர் வீடு படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றவர் நான் எழுதிய பயங்கரவாதிகள் கதையில் வந்து ராம்போ அம்பு விட போவதாக சொன்னவர் .

போரட்டத்தில் நடந்ததும் தெரியாது போராட போனவர்களையும் தெரியாது ஓடி வந்து தேவாரம் பாடி படம் அந்த மாதிரிக்காட்ட நன்றாகதெரிந்திருக்கு .

அவர் பனாங்கொட ஜெயிலில் இருந்து எப்படி தப்பினார் என்று அறிய ஆவல்.
யாராவது தெரிந்தால் எழுதவும். 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இப்படியானவர்களின் ஆக்கம் வாசித்துத்தான் எமது போரட்ட வரலாற்றை வளர்த்துள்ளார் போலிருக்கு ,உதை விட ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களில் நெடுமாறனின் வெடி புராணம் இருக்கு அதை வாசித்தால் இன்னமும் அறிவு வளரும் .

 

கண்ணுக்கு முன்னால் நடந்த போராடத்திற்கு திரை கதை வசனம் எழுதுகின்றார்கள் .அதை வாசித்து நம்ப ஒரு கூட்டம் .

 

புளொட்டின்ர வரலாறு என்ன என்று வவுனியாவில நேரடியா கண்டு வளர்ந்த ஆக்கள் நாங்க. நீங்க என்ன தான் வெள்ளை அடிச்சாலும் அது வெழுக்காது. நம்கிட்ட வேணாம்.. விடுங்க.. விடுங்க.

 

அவர் எழுதின நியாயத்தில ஒரு 0.1% ஐ என்றாலாது.. அரசியல் சார்ந்து எழுதப் பழகுங்க அர்ஜீன் அண்ணா. உங்கள் மனசை நெகிழ்வா வைச்சு எழுதினால் முடியும். புலிகள் மட்டில் இறுக்கமாவே உங்க மனசை வைச்சிருப்பது மனசுக்கு நல்லதல்ல. அது நியாயத்தை ஏற்க மறுப்பதற்கு முக்கிய காரணமே இது தான். :):lol::icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விசு,

நீங்கள் எழுதுவது எவ்வளவு கேவலம் என்றே தெரியாமல் பிறந்து வளர்ந்து விட்டார்கள் . இன்னும் காலம் இருக்கிறது என்ன பிழை என்றாவது அறிய :(

எனக்கு  விளங்கவில்லை

கொஞ்சம் விளக்கமாக எழுதமுடியுமா??

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இதுதான் உண்மை. ^_^

இப்படியான உண்மைகளை வெளியே கொண்டுவரக்கூடாது என்று இந்திய ரோ, அமெரிக்க சிஐஏ, சிங்களப் புலனாய்வுப் பிரிவுகளின் பெரும் ஒத்துழைப்புடன் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக விளங்கிய ஐயர் எழுதிய அம்புலிமாமாக் கதையை நானும் மெனக்கட்டு யாழில் பதிந்திருந்தேன். :(

பொய்யையயும் புரட்டையும் படிக்க நேரம் உள்ளவர்கள் படிக்கலாம்!

http://www.yarl.com/forum3/index.php?/topic/67608-தமிழீழ-விடுதலைப்-புலிகளின்-தோற/

பொய்களைப் படிக்கக்கூடாது என்று சின்ன வயதிலேயே கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட விசுகு ஐயா போன்றவர்கள் அதில் ஒரு வரிதன்னும் படித்து நேரத்தை வீணாக்கியிருக்கமாட்டார்கள். <_<

 

 

ஐயா

உங்களுக்கு ஐயர் சொல் வேதவாக்கு..

எனக்கு தலைவர் சொல் வேதவாக்கு...

எது சரி......??

 

ஒரு விடயத்தை சொல்லணும்

ஐயருடன் இருந்த

அதற்கு பின்பும் இயக்கத்தில் இருந்த எனது மைத்துணர்

ஐயருடைய  புத்தகத்தை பார்த்துவிட்டு சொன்னது..

இந்த புத்தகத்தை  வாசிக்கும்வரை

இயக்கம் பற்றி  ஐயருக்கு கனக்க தெரிந்திருக்கும் என்று தான் நினைத்தேன்

ஆனால் இயக்கம்  ஒவ்வொருவரையும் எந்தெந்த அளவில் வைத்திருந்தது என்பதை அவருடைய  எழுத்தை பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன்

ஆச்சரியமாக இருக்கு இயக்கத்தின் உள் கட்டுமானங்கள் என்றார்..

அத்துடன் இந்த புத்தகம் எழுதும்வரை

தன்னுடன் தொடர்பிலிருந்த ஐயர்

அதன் பின் தொடர்பே இல்லாது  போய்விட்டாராம்

முடிந்தால் தொடர்பைத்தரவும்...............

அந்தக் காலங்களில் தங்களுடன் வந்து இணையும்படி சொல்லவோ அல்லது விலகிச் செல்லும்படி சொல்லவோ புலிகளுக்கு கொந்தராத்துக் கொடுத்தது யார்? மக்கள் கொடுத்தார்களா அல்லது புலிகளே அதிகாரத்தைத் தாங்களாகவே எடுத்துக்கொண்டார்களா?

 

 

இப்பொழுது கூட தாயகத்தில்

கூட்டமைப்புடன் சேர்ந்து ஒன்றாக இயங்குங்கள்

அல்லது விலகியிருங்கள் என்கின்றோம்

எந்த உரிமையில்??

யார் தந்த கொந்தராத்து.....??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு முடிவு எடுத்து? புலிகளுக்கு இடைஞ்சல் செய்தாது எங்கு சென்றார்? உங்களுக்கு பெருமையாகவும் மகிழ்சியாகவும் இருக்க ?

தயவு செய்து எனக்கு இதற்கான பதில் வேண்டும் .

 

யாழில் சில காலம் எழுதாமல் விடுவம் என்று இருந்தேன் ,இப்படி ஒரு பச்சை பொய்யை பார்த்தபின் எழுதாமல் விட முடியவில்லை .

மகேஸ்வரன் எனது அண்ணருடன் யாழ் மத்திய கல்லூரியில் படித்து மாத்திரம் அல்ல அண்ணரின் மிக நெருங்கிய நண்பருமாவார் .இன்றும் அவர்களுக்கு தொடர்பு இருக்கு .மகேந்திரன் ,மகேஸ்வரன் ,சந்திரன் ,ரவீந்திரன் அனைவரையும் எனக்கும் தெரியும் பழக்கமும் கூட ,யாழில் பிரவுண்வீதி வீட்டிற்கு சென்று இருக்கின்றேன் அவரதும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் .லண்டனால் வந்து களுவாஞ்சிகுடி கொள்ளைக்கு சில நாட்களின் முதலும் சந்தித்தேன் .விடுமுறையில் வந்து நிற்பதாக சொன்னார் .தம்பாவின் ஆட்கள் பலரை இந்தியாவில் சந்தித்தேன் புலிகளுக்கு பயந்துதான் ஓடிவந்திருந்தார்கள் .

புலிகள் மாற்று இயக்கத்தவர்களை என்ன செய்தார்கள் என்று ஓடிவந்த உங்களுக்கு எதுவும் தெரியாது மாற்று இயக்கங்களில் இருந்தவர்களுக்கு தெரியும் .நாட்டுக்காக போராடினார்கள் என்று ஒரு மரியாதை சற்று அவர்களில் இருந்தது இப்படி முழு பொய்களை எழுதும்போது அவர்களையும் சேர்த்து திட்டவேண்டிஇருக்கு .

லண்டனில் மகேஸ்வரனில் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் இருவர் .ஒருவர் வீடு படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றவர் நான் எழுதிய பயங்கரவாதிகள் கதையில் வந்து ராம்போ அம்பு விட போவதாக சொன்னவர் .

போரட்டத்தில் நடந்ததும் தெரியாது போராட போனவர்களையும் தெரியாது ஓடி வந்து தேவாரம் பாடி படம் அந்த மாதிரிக்காட்ட நன்றாகதெரிந்திருக்கு .

 

 

வணக்கம் அண்ணை

மீள் வரவுக்கு  நன்றி

(ஏதோ என்னால்முடிந்தது)

 

பொதுவான கருத்தைத்தான் நான் பதிந்திருந்தேன்...

எம்முடன் சேருங்கள்

அல்லது ஒதுங்கி  இருங்கள் என்பதே  புலிகளின் வேண்டுதலாக இருந்தது..

 

இதில் பனாகொடை மகேசுவரனது  முடிவு ஒரு சகோதர சண்டையை  தவிர்த்த

போராடுபவர்களை அதை செய்யும்படி விட்டுவிட்டு விலகி  நிற்கும் முடிவாக இருந்தது

இது தான் நான் பதிந்தது

 

அதன் பின்னர்

நடிகைகளை வைத்து சினிமா  எடுத்தார்களா?

லண்டனில் பயங்கரவாதம் செய்தார்களா என்பது பற்றி  தமிழருக்கு அக்கறையில்லை

உங்களுக்கு புலிகள் தொடர்ந்தும் கலைத்தார்கள் என்பதற்கான ஆதாரம் இருந்தால்

வையுங்கள்

அப்புறம் கருத்தை கருத்தால் வெல்லாமல்

தேவாரம் அது இது என்றால்

 நாங்கள் புலி ஆதரவாளர்

எமக்கும் உங்களைவிட எல்லாம் வரும்......

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணை

மீள் வரவுக்கு  நன்றி

(ஏதோ என்னால்முடிந்தது)

 

பொதுவான கருத்தைத்தான் நான் பதிந்திருந்தேன்...

எம்முடன் சேருங்கள்

அல்லது ஒதுங்கி  இருங்கள் என்பதே  புலிகளின் வேண்டுதலாக இருந்தது..

 

இதில் பனாகொடை மகேசுவரனது  முடிவு ஒரு சகோதர சண்டையை  தவிர்த்த

போராடுபவர்களை அதை செய்யும்படி விட்டுவிட்டு விலகி  நிற்கும் முடிவாக இருந்தது

இது தான் நான் பதிந்தது

 

அதன் பின்னர்

நடிகைகளை வைத்து சினிமா  எடுத்தார்களா?

லண்டனில் பயங்கரவாதம் செய்தார்களா என்பது பற்றி  தமிழருக்கு அக்கறையில்லை

உங்களுக்கு புலிகள் தொடர்ந்தும் கலைத்தார்கள் என்பதற்கான ஆதாரம் இருந்தால்

வையுங்கள்

அப்புறம் கருத்தை கருத்தால் வெல்லாமல்

தேவாரம் அது இது என்றால்

 நாங்கள் புலி ஆதரவாளர்

எமக்கும் உங்களைவிட எல்லாம் வரும்......

நான் விமானத்துறையில் வேலைசெய்வதால் .... இங்கு ஓவருவருடமும் போலிஸ் ஒரு வகுப்பு வைக்கும் அதில் கடந்த கால பயங்கரவாத எதிர்கால பயங்கரவத தாக்குதல்கள் பற்றி படிப்பிபார்கள். நாம் எவளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லித்தருவார்கள்.
அப்படி ஒரு வகுப்பில்.
 
உந்த மகேஸ்வரன் பற்றி படிக்க நேர்ந்தது. இவருடைய சென்னை (தவறுதலான) குண்டுவெடிப்பு அதன் திட்டம் மிகவும் நுட்பமானதாக இருந்திருக்கிறது.
அவருடைய திட்டப்படி அது நடந்திருந்தால் கட்டுநாயக்கா விமானதளமே அதிர்ந்திருக்கும். 
 
இப்படி பல சூத்திரங்களை கொண்டவர்கள்.
பின்னாளில் ஏன் ஒதுங்கி போனார்கள் என்பது கவலையாக இருக்கிறது.
ஏன் பின்னாளில் புலிகளுடன் இவர்களால் சேர முடியவில்லை? 
 
தமிழர் விடுதலையை பற்றி இவர்கள் பின்னாளில் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

 

அவர் பனாங்கொட ஜெயிலில் இருந்து எப்படி தப்பினார் என்று அறிய ஆவல்.
யாராவது தெரிந்தால் எழுதவும். 

 

 

பனாகொடை  முகாமில் அடைக்கப்பட்ட பொறியலாளர் மகேசுவரன்

வெளியிலிருந்து அவருக்கு தரப்பட்ட சாப்பாட்டுடன்

இரும்பு வெட்டும் சிறு வாள் (அரம்)

மூலம் சிறையின் கம்பிகளை வெட்டி

சுவிங்கத்தை அதன் மீது தடவி மறைத்து வைத்து

சந்தர்ப்பம் வந்தபோது

இரவோடிரவாக தப்பியிருந்தார்....

இலங்கை அரசையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தப்புதல் இது.

இலங்கை முழுவதும் தேடப்பட்டுக்கொண்டிருக்க

ஒரு முழுமையான இசுலாமியராக வேசம் அணிந்து

எனது அண்ணரின் கடையில்

அண்ணருடன் பேசிக்கொண்டிருப்பார்

காவல்த்துறையினர் கூட கடைக்கு வந்து போவார்கள்

எனக்கு நடுக்கமெடுத்து

ஓடி ஒழிந்து கொண்டதுண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

பனாகொடை  முகாமில் அடைக்கப்பட்ட பொறியலாளர் மகேசுவரன்

வெளியிலிருந்து அவருக்கு தரப்பட்ட சாப்பாட்டுடன்

இரும்பு வெட்டும் சிறு வாள் (அரம்)

மூலம் சிறையின் கம்பிகளை வெட்டி

சுவிங்கத்தை அதன் மீது தடவி மறைத்து வைத்து

சந்தர்ப்பம் வந்தபோது

இரவோடிரவாக தப்பியிருந்தார்....

இலங்கை அரசையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தப்புதல் இது.

இலங்கை முழுவதும் தேடப்பட்டுக்கொண்டிருக்க

ஒரு முழுமையான இசுலாமியராக வேசம் அணிந்து

எனது அண்ணரின் கடையில்

அண்ணருடன் பேசிக்கொண்டிருப்பார்

காவல்த்துறையினர் கூட கடைக்கு வந்து போவார்கள்

எனக்கு நடுக்கமெடுத்து

ஓடி ஒழிந்து கொண்டதுண்டு..

நன்றி !
இவருக்கு மற்ற இயக்க உறுப்பினர்களுடன் அதிகம் தொடர்பு இருக்கவில்லை.
எப்படி தப்பினார் என்ற கேள்வி எனக்கு எப்போதிருந்தே இருந்துவந்தது. 
 
கிறுக்கு பயலாக இருந்திருக்கிறார்.
 
(வசதியான புங்குடிதீவு வர்த்தகர் ஒருவரின் மகன் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இவர்களுக்கு மருதானையில் ஒரு சாப்பாட்டு கடை இருந்ததா? )
  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி !
இவருக்கு மற்ற இயக்க உறுப்பினர்களுடன் அதிகம் தொடர்பு இருக்கவில்லை.
எப்படி தப்பினார் என்ற கேள்வி எனக்கு எப்போதிருந்தே இருந்துவந்தது. 
 
கிறுக்கு பயலாக இருந்திருக்கிறார்.
 
(வசதியான புங்குடிதீவு வர்த்தகர் ஒருவரின் மகன் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இவர்களுக்கு மருதானையில் ஒரு சாப்பாட்டு கடை இருந்ததா? )

 

 

ஆம்

தவளகிரி கோட்டல்...(மருதான)

அண்ணர் நடாத்திய ஞானகிரி  கோட்டலும் (ஆமர்வீதி)அவர்களின் பரம்பரைச்சொத்துத்தான்

  • தொடங்கியவர்

ஒரு வரலாற்று சம்பவத்தை எழுதிவிட்டு பொதுவாக எழுதினேன் என்று சொல்லக்கூடாது .

 

"இவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து

புலிகளின் வேண்டுதலுக்கு அமைய   இடைஞ்சல் செய்யாது விலகிச்சென்றது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் 

பெருமையாகவும் இருந்தது

அத்துடன்  விலகிச்சென்ற அவரோ அவரது அமைப்பினரோ

போராட்டத்துக்கு  எந்த இடைஞ்சலும் செய்யவில்லை

புலிகளும் அவர்களை தேடவில்லை."

 

இந்த பந்திக்கு விளக்கம் கேட்கின்றேன் அண்ணை .தயவுசெய்து மழுப்பாமல்   விளக்கமும் முடிந்தால் ஆதாரமும் தரவும் .

 


மகேஸ்வரனை தெரியும் என்றால் அவர் என்ன சாடையில் எப்படி இருப்பார் அண்ணை ,

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரலாற்று சம்பவத்தை எழுதிவிட்டு பொதுவாக எழுதினேன் என்று சொல்லக்கூடாது .

 

"இவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து

புலிகளின் வேண்டுதலுக்கு அமைய   இடைஞ்சல் செய்யாது விலகிச்சென்றது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் 

பெருமையாகவும் இருந்தது

அத்துடன்  விலகிச்சென்ற அவரோ அவரது அமைப்பினரோ

போராட்டத்துக்கு  எந்த இடைஞ்சலும் செய்யவில்லை

புலிகளும் அவர்களை தேடவில்லை."

 

இந்த பந்திக்கு விளக்கம் கேட்கின்றேன் அண்ணை .தயவுசெய்து மழுப்பாமல்   விளக்கமும் முடிந்தால் ஆதாரமும் தரவும் .

 

மகேஸ்வரனை தெரியும் என்றால் அவர் என்ன சாடையில் எப்படி இருப்பார் அண்ணை ,

 

என்னால் முடிந்தளவு

எனக்குத்தெரிநதளவு விளக்கமாக எழுதியுள்ளேன்

இனி  

அவர்கள் இலங்கையிலேயே  இருந்தார்கள்

இயக்கவேலை செய்தார்கள் என்றோ

புலிகள் அவர்களை  போடத்திரிந்தார்கள் என்றோ

உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கள்....

எதையுமே சாதிக்காதவர்களை தலைவர்களை இப்படியான தலைப்புக்கள் இட்டு ஓட்டினாலே ஒழிய மற்றும்படி எதுவுமே நடக்காது  

 

 

. இரண்டாவது திருநாவுக்கரசு சந்திரசேகர் எனும் பொபியினது செயற்பாடுகளின் உச்சமாக ஒரு அற்புதமான போரளியாகிய தாசை இழந்ததால் வந்தவினை.

வணக்கம் அண்ணை தாஸ் போபி பற்றிய பிரச்சனைகளை முழுமையாக நீங்கள் அறிந்தவரை பதிவிட முடியுமா ?

அல்லது எந்த நூலில் கிடைக்கும் என்றாவது சொல்லுங்கள்...இந்த திருநாவுக்கரசு சந்திரசேகர் யார் ,,,,,

 

தாஸ் பீற்றர் காளி இன்னும் இருவர் பேர்கள் நினைவில் இல்லை.ஐவரினதும் படங்கள் (தாடியோடு) என் அறியாவயதில் பார்த்தது நினைவிருக்கு ... 

 

புதியதோர் உலகம் , வெல்வோம் அதற்காக(சீலன்) நான் நடந்துவந்த பாதை(குமரன் ) மூன்றையும் வாசித்தேன். (மூன்றும் புளட்டின் மத்திய குழுவினரால் வெளிவிடப்பட்ட புத்தகங்கள்) மிக அண்மைக்காலங்களில் அதிலிருந்து ஒரு முடிவுக்கே வந்தேன். :icon_idea:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.