Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் நிறையும் தனிமை

Featured Replies

பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது

இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை

நீண்டவால்க் குருவி.

 

வானத்தின் சோகங்களையும்

வீதியின் தனிமைகளையும்

பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும்

துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை

இழைத்துக்  கூவியழுகின்றது.

 

சேர்ந்து இசைக்கும்

குரலொன்று வருமென்ற தேடலில்

நியமம் தப்பாத இடைவெளிகளை

சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

 

நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில்

சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான்.

 

இருளின் பெருக்கத்தொடு இயைந்து

மௌனத்தின் இடைவெளியும் நீண்டு

கனக்கத் தொடங்குகையில்,

 

அந்த

இடைவெளிகளின் நிசப்தத்தில்

மூச்சின் ஒலிகளை  நிறுத்திக்

காவலிருக்கத் தொடங்குகிறேன்.

 

இன்னொருகுரல்

எங்காவது ஒலித்துவிடாதா....

நீள்கின்ற தனிமை இந்த

இலையுதிர்காலத்தொடு கலைந்துவிடாதா ....

 

நீண்டவால்க் குருவியின்

ஒற்றைக்குரலும் தளம்பத்தொடங்குகிறது.

குளிர் மெல்லப் பரவ.

அங்குமிங்கும் வெண்துகள்கள் சிந்தத்தொடங்குகிறது.

 

எங்கும் இருள்.

தூண்களில், 

மின்குமிழ்களில்

தடித்த கோடுகள் நீள்கின்றன.

யன்னல்கள்  அடைந்து கொள்கின்றன.

 

உதிர்ந்துகிடக்கும்

மஞ்சள்  இலையொன்றை எடுத்து

நரம்புகளோடு பேசத்தொடங்குகிறேன்.

 

உள்ளங்கையில் தவறிவிழுந்த

ஒற்றைத் துளியின் சூட்டில்

நீண்டவால்க் குருவியின் மௌனத்தால்

நட்சத்திரமொன்று  உதிர்ந்துகொண்டதை உணர்ந்தேன்.

 

காலடியில்,

வானம் வெறுமையாகிக் கிடந்தது.

 

நல்லதொரு கவிதை நெற்கொழு. வாசிக்கின்றவர்கள் தனிமையில் இருந்தாலோ அல்லது அவர்கள் தனிமையில் ஒரு காலத்தில் வாழ்ந்து இருந்தாலோ  அனுபவத் தொற்றலைக் கொடுக்க கூடிய கவிதை இது.

 

நீண்ட வானில் எவருமற்று இருளுக்குள் கரையும் ஆட்காட்டிக் குருவியின் குரலைப் போன்று இருக்கின்றது கவிதை.

 

 


சேர்ந்து இசைக்கும்

குரலொன்று வருமென்ற தேடலில்

நியமம் தப்பாத இடைவெளிகளை

சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

 

 

எங்கும் இருள்.

தூண்களில், 

மின்குமிழ்களில்

தடித்த கோடுகள் நீள்கின்றன.

யன்னல்கள்  அடைந்து கொள்கின்றன.

 

அருமை....!

  • தொடங்கியவர்

மிக்க அன்பு நிழலி அண்ணா. 

 

உங்களில் வார்த்தைகள் புதிதாய் என்னை உருவாக்குகின்றன.

முதல் கவிதையில் விட்ட தவறினை விடக்கூடாது என நினைத்தேன். ஓரளவு சாத்தியமாக்கி விட்டேன் என்றே நினைக்கிறேன். 

இன்னும் முயற்சிப்பேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து இசைக்கும்
குரலொன்று வருமென்ற தேடலில்.........

 

 

பாராட்டுக்கள். சேர்ந்து இசைக்கும் குயில் விரைவில் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு கவிதை எழுதுவதில் அடுத்த மட்டத்துக்கு(level) சென்றுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

சேர்ந்து இசைக்கும்

குரலொன்று வருமென்ற தேடலில்

நியமம் தப்பாத இடைவெளிகளை

சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

 

 

 

 

 

இருளின் பெருக்கத்தொடு இயைந்து

மௌனத்தின் இடைவெளியும் நீண்டு

கனக்கத் தொடங்குகையில்,

 

அந்த

இடைவெளிகளின் நிசப்தத்தில்

மூச்சின் ஒலிகளை  நிறுத்திக்

காவலிருக்கத் தொடங்குகிறேன்.

 

இன்னொருகுரல்

எங்காவது ஒலித்துவிடாதா....

நீள்கின்ற தனிமை இந்த

இலையுதிர்காலத்தொடு கலைந்துவிடாதா ....

 

நீண்டவால்க் குருவியின்

ஒற்றைக்குரலும் தளம்பத்தொடங்குகிறது.

குளிர் மெல்லப் பரவ.

அங்குமிங்கும் வெண்துகள்கள் சிந்தத்தொடங்குகிறது.

 

எங்கும் இருள்.

 

 

 

 

உதிர்ந்துகிடக்கும்

மஞ்சள்  இலையொன்றை எடுத்து

நரம்புகளோடு பேசத்தொடங்குகிறேன்.

 

உள்ளங்கையில் தவறிவிழுந்த

ஒற்றைத் துளியின் சூட்டில்

நீண்டவால்க் குருவியின் மௌனத்தால்

நட்சத்திரமொன்று  உதிர்ந்துகொண்டதை உணர்ந்தேன்.

 

காலடியில்,

வானம் வெறுமையாகிக் கிடந்தது.

 

உன் சோகம் எம் இனத்துக்கான சாபம்

நாம் எல்லோரும் எதை எதை ஒரு மனிதன் இழக்கக்கூடாதோ

அவற்றை பறி  கொடுத்தவர்கள்

உன்னை பார்த்திருக்கின்றேன்

என்னை கண்டிருக்கின்றாய்

எம் முகங்கள் எவ்வளவு தான் சிரித்தாலும்

மனமார்ந்த சிரிப்பென்பது

எம்மினத்துக்கு தமிழீழம் கிடைத்தாலும் வராது...

இழந்தவை அத்தனை அத்தனை.........

 

ஒவ்வொரு வரியும் பின்னிப்போடுகிறது

கண்கள் பனிக்கின்றன

ஒரு இனத்தை உன்னால்

உன் வரிகளால்தொடமுடியும் என்பதை

உன்னைக்கண்டதிலிருந்து நம்புகின்றேன்..

அதற்கொரு படி இது...

தொடர்க

வாழ்க  வளமுடன்..

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு தனிமை பற்றிய  உணர்வேந்திய படைப்பு. தேடல்கள் வேறாகினும் தனிமையைத் தாண்டியிருக்கிறேன் எழுத்துகளின் துணையோடு ....  உறவுகளும் , தோழமைகளும் தராத ஆறுதலையும் நிம்மதியையும் எழுத்துக்கள் பிரசவிக்கும். இந்த எழுத்துப்பிரசவிப்பின் பின்னர் சிறிது நாட்களுக்கு மனம் சற்றே ஆழ்ந்து உறங்கும். இதை எழுதிய பின்னால் உங்களுடைய மனதில்கூட பேரமைதி ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தனிமை அரவின்றி கொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பணின் வரிகள் என்ற உணர்வோடு வாசிக்கும்போது வாசகன் என்பதைத்தாண்டி ஒரு நெகிழ்ச்சி மனமெங்கும் இருக்கும்.. இந்த கவிதா உணர்வுகள் எம்மை எத்தனை வயதிலும் அத்தனை இளமையோடு இணைத்திருக்கும்.. இந்த அழகியல் உணர்வு நிறைந்த நண்பர்களோடு வாழ்வைக்கடப்பதில் கொஞ்சம் கர்வமாகவும் இருக்கு. கவிதை வார்த்தைக்கோர்ப்பில் பிரமாண்டமாக இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் வாடை முகத்திலறையும் வேளைகளில் தனிமையின் சுவாசம் மூச்சை அடைக்கும் வேளைகளில் சுற்றிலும் உறவுகளிருந்தாலும் முற்றிலும் தனிமை உணர்வு நிறைந்தவளாய் நானும் என் கனவுகளும் ம்ட்டுமே வாழும் பொழுதுகள் ஏராளம். தனிமை உணர்வை நெகிழ்ச்சியுடன் எடுத்து வந்த நெற்சொழுவின் கவிதை மிக அற்புதம். பாராட்டுக்கள்.

இனிமையாய் தோன்றும் தனிமை ஒரு கட்டத்தில் சலித்து வெறுப்பாய் வெறுமையாய் தோன்றும்.

வரிகள் அருமை நேற்கொழு. எதுவுமெ நிரந்தரமில்லை... உங்கள் தனிமையும் விரைவில் விலகும்.

தனிமையின் எல்லைவரை  துணை தேடி அலைந்து கடைசியில் தனித்து நின்று கூவியலும் ஒற்றை வாழ்  குருவி தனிமையில் நிறைந்திருக்கும் வெறுமையை மனதில் இருத்துகிறது.  வசந்தம்  வர அமைதியாக காத்து கிடந்த புள் தானாக முளைக்கும். நீண்ட வால் குருவியின் தனிமை விலகும் வரும் நாட்களில். தனிமையின் வேர்களை ஆழ எம்முள் பதிய வாய்த்த குருவி இணை சேர்ந்து இளவேனிற் காலத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற மலர்களை உடைய மரத்தின் உச்சியில் நின்று வசந்தத்தின் ரீங்கார கானத்தை எம்முள் நிரப்ப வேண்டும் :) நிரப்பும் .... :)

 

வாழ்த்த வயதில்லை அண்ணா ....

  • தொடங்கியவர்

கருத்துக்களோடு வந்து என்னை உற்சாகமூட்டிய 

நண்பன் ராஜன் விஷ்வா,நண்பன் கவிதை காவலூர் கண்மணி அக்கா, நண்பன் சுபேஸ், வல்வை அக்கா, விசுகு அண்ணை, நுனாவிலான் அண்ணை , நிலாமதி அக்கா, மற்றும் அனைவருக்கும் என் அன்புகள். 

 

தன் முகநூலில் பகிர்ந்த நிழலி அன்னைக்கும் மீண்டும் என் அன்புகள்.

 

நான் எவ்வளவு பெறு  பெற்றவன் என்பதனை உணர்கிறேன் உங்களில் வரிகள். 

நீங்கள் எல்லோரும் இருக்கையில் இந்த தனிமை என்னை செய்துவிடும்....  :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையாய் தோன்றும் தனிமை ஒரு கட்டத்தில் சலித்து வெறுப்பாய் வெறுமையாய் தோன்றும்...எனக்கு மிகவும் பிடித்தவரிகள்...

 

உங்களை மட்டும் தான் தனிமை ஆள்கொள்கிறது என நினைக்க வேண்டாம்.இங்கு பலர் அப்படித் தான்....வெளியில் தொிவதில்லை....நட்புக்கள் உறவுகள் என்று பழகினாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களாலும் மேலதிக தண்டனைகளைப் பெறும் சந்தர்ப்பங்களையோ,பேச்சுக்களையோ கேட்கும் போது தனிமை மேலானாது எனத் தோன்றும்...முன்பு எல்லாம் நான் இரண்டு இடங்களில் யாழ்,முகநூலில் பலருடனும் பேசும் சந்தர்ப்பங்கள் இருந்தது..

இப்போ எல்லாம் யாழ் மட்டும் தான்.அவ்வப்போது முகப் புத்தகப் பக்கம் எட்டிப் பார்ப்பேன்.. எழுதுவது என்பது இனிமேல் நடக்காத ஒன்று....என்ன முகப் புத்தகத்தை எட்டிப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் ஜடம் போல் நின்று விட்டு திரும்புவேன்..

வீட்டில் சில உறவுகள் இருந்தாலும் அவர்கள் உடல் நிலை,வயது கருதி எங்கள் விடையங்களை பரிமாறிக் கொள்ள முடியாது..இயல்பிலயே அமைதியானவள் ஆகையினால் கேட்கும் கேள்விக்கு ஓம்,இல்லையோடு காலத்தை நகர்த்திக் கொண்டு செல்கிறேன்.

ஆகவே இப்படியானவர்களும் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றோம்.. உங்கள் தனிமையும் நீங்களாக நீண்ட காலத்திற்கு  இழுக்காதவரையில் ஒன்றும் நிரந்தரமானது அல்ல...விரைவில் இதிலிருந்து விடுபட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை உங்களுக்கு நேற்கொளுதாசன்

  • தொடங்கியவர்

யாயினி அக்கா ,மற்றும் அம்மாவுக்கும் அன்புகள். 

 

நீங்கள் பயப்படுவது போல இருக்கே ... ஆஹா ஆஹா அஹா 

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி அக்கா ,மற்றும் அம்மாவுக்கும் அன்புகள். 

 

நீங்கள் பயப்படுவது போல இருக்கே ... ஆஹா ஆஹா அஹா 

 

சுமேயையா அம்மா என்றீர்கள் நெற்கொழு????????!!!!!

laughing_cartoon_persona.gif

  • தொடங்கியவர்

சுமேயையா அம்மா என்றீர்கள் நெற்கொழு????????!!!!!

 

 

நிச்சயமாக, 

 

அம்மா எழுதிய மொசப்பத்தேமியா தொடரில் "ஐயா" என விளித்து ஒரு கருத்தினை பதிவு செய்தேன். அதன் பின் அவ  வந்து தான் ஐயா இல்லை என்றார். அப்ப சரி அம்மாவா என்றேன். அன்று எதோ சம்பிரதயாமாக உரையாடி இருந்தாலும், இன்று  உணர்வோடு அம்மா என்று அழைக்கும் உரிமையை பெற்றுவிட்டேன். அது நிரந்தரமாக இருக்கும் எனக்குள்... 

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயையா அம்மா என்றீர்கள் நெற்கொழு????????!!!!!

laughing_cartoon_persona.gif

 

நேர்கொழு கன காலமாக என்னை அம்மா என்கிறாரே. நீங்கள் இப்பதான் கவனித்தீர்களோ சகாரா ??? எனக்கும் அப்படி அழைப்பது  மகிழ்வாகத்தான் இருக்கு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.