Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

60 வயதில், டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09-rajinikanth34-600-jpg.jpg

 

60 வயதில்.. என்னை டூயட் பாட வைத்தது, கடவுள் கொடுத்த தண்டனை.

ரஜினி பேச்சு.

 

ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று ரஜினிகாந்த் கூறினார்.

 

ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து...

 

சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் சென்னைக்குத் திரும்பியதும், என்னால் எவ்வளவு உதவித் தொகை தர முடியுமோ அதை அளிப்பேன்.

 

நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனது நேரடிப் படம் இது. நடுவில் கோச்சடையான் படம் வந்தது. அது வேறு வகைப் படம். அனிமேஷனில் எடுத்திருந்தார்கள். லிங்கா நேரடிப் படம்.

 

முதலில் இத்தனை பிரமாண்ட படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது. பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்பதை வைத்து இதைச் சொல்லவில்லை. இந்தப் படத்தின் சப்ஜெக்ட் அத்தனை பெரிது. சுதந்திர காலத்துக்கு முந்தைய 1930கள் மற்றும் 40களில் நடக்கும் கதை இது. இந்தக் கதைக்காக ஒரு பெரிய அணை கட்ட வேண்டியிருந்தது.

 

பெரிய பெரிய ரயில் சண்டைகள், யானைகள், குதிரைகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறைந்தது 40 காட்சிகளிலாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்றனர். இத்தனை பிரமாண்ட ஷூட்டிங்கை ஆறே மாதங்களில் முடித்தது சாதாரணமானதல்ல. ஹேட்ஸ் ஆப் டு டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், அவரது யூனிட் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

 

நாங்களெல்லாம் நடிகர்கள் ஒன்றுமே இல்லை.. ஷூட்டிங்குக்கு வருவோம், நடிப்போம், போய்விடுவோம். ஆனால் இந்த டெக்னீஷியன்கள் அசாதாரணமாக உழைத்து 6 மாதங்களில் படத்தை முடித்தார்கள். அந்த உழைப்பு பாராட்டத்தக்கது.

 

இந்தப் படத்தில் மூணு ஆச்சர்யங்கள் இருக்கு. முதல் ஆச்சர்யம் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் சாபு சிரில், ரஹ்மான், ரத்னவேலு, சோனாக்ஷி, அனுஷ்கா எல்லாருமே ரொம்ப பெரிய, பிஸியான ஆர்டிஸ்ட்கள். படம் பார்க்கும்போது அவர்களின் உழைப்பு உங்களுக்கு தெரியும்.

 

இரண்டாவது ஆச்சர்யம், படம் வெளியாகும் நேரம் பாத்து நாலு அஞ்சு பேர் இந்தக் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர்.

 

ட்விட்டர்ல ஒண்ணு பார்த்தேன். அதில் ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவர் படத்துல கதை இருந்தா, அந்தக் கதைக்கு நாலு பேர் சொந்தம் கொண்டாடறாங்கன்னா நான் அந்தப் படத்தை முதல்ல பார்ப்பேன்னு ஒருத்தர் போட்டிருந்தார்.

 

உண்மையிலேயே இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. ஆனா அது அந்த நாலு பேரோடது இல்லை. பொன் குமரனுடையது. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. இதில் நடிச்சது பெருமையா இருக்கு.

 

மூன்றாவது ஆச்சர்யம்... நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா அந்த ரயில் சண்டையோ, க்ளைமாக்ஸ் சண்டையோ அல்ல... இந்த ஹீரோயின்களோட டூயட் பாடி நடிச்சதுதான். சத்தியமா சொல்றேன்.

 

இந்த சோனாக்ஷியை சின்னக் குழந்தையா இருக்கும் போதிலிருந்து எனக்குத் தெரியும். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா கூடவே வளந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்னதும் எனக்கு வியர்த்துடுச்சி. என்னோட முதல் படமான அபூர்வ ராகங்கள்ல முதல் ஷாட் நடிச்சப்ப கூட இப்படி டென்ஷன் இருந்ததில்லை எனக்கு.

 

நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு கடவுள் நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம்.

 

மேக்கப் போட்ட பானுவுக்கு நன்றி. கேமராமேன் ரத்தினவேலு கூட சென்னையில நடந்த ஆடியோ விழாவுல வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்ம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்... ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அழகா காட்டியிருக்கேன்னு சொன்னாரு. ரொம்ப கஷ்டப்பட்ட இளமையான காட்டினதா சொன்னது ஓகே.. அழகா காட்டியிருக்கேன்னு சொன்னது...(பலமாக சிரிக்கிறார்)..

 

இந்தப் படம் 6 மாதத்தில் முடிந்ததை நான் சாதனையாகச் சொல்வேன். என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகர், இந்த துறையில் இவ்வளவு சம்பாதித்த பிறகு, அந்தத் துறைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும், இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணத்தைத் தரவேண்டும். அதுதான் இந்த லிங்கா. இதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டோம். அதை ரவிக்குமார் சாதித்துக் காட்டினார்.

 

ஹாலிவுட்டில் கூட படங்கள் தொடங்குவதற்கு முன்பு பல மாதங்கள், ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை 3 அல்லது நான்கு மாதங்களில் முடித்துவிடுகிறார்கள்.

 

ராஜமவுலியின் பாஹுபலி இதில் விதிவிலக்கு. இதில் அவரைச் சேர்க்க வேண்டாம். அவர் ஒரு அற்புதமான கலைஞர். இந்தியாவின் நம்பர் ஒன் கலைஞராக வரக்கூடியவர். சந்தேகமில்லை. சொல்லப்போனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பணியாற்றுவதை சந்தோஷமாகக் கருதுவேன்.

 

ரவிகுமார், இந்தப் படத்தின் கேப்டன். சிறப்பாகப் பணியாற்றினார்.

அடுத்து அல்லு அரவிந்த் சொன்னதுபோல, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். ஆபத்பாந்தவன். பலனை எதிர்ப்பார்க்காமல் கூப்பிட்ட நேரத்தில் ஓடி வந்து உதவுபவர். அதனால்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.

 

ரத்னவேலு இந்தப் படத்துக்காக மிக கஷ்டப்பட்டார். கொட்டும் மழையில் படம்பிடித்தார். அனுஷ்கா மிக அருமையான பெண். சிறந்த நடிகை. அவருக்கு நன்றி.

 

அடுத்து ஜெகபதி பாபு. பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். சினிமாவில் ஜென்டில்மேன் எனலாம். குசேலனில் என்னுடன் நடித்தவர். இந்தப் படத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்.

 

என் படங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ, அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களும் ரசித்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் படமும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவும் உற்சாகமும் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

பிற்குறிப்பு: தலைப்பையும், செய்தியையும்... ஆரம்பப் பகுதியில் கொஞ்சம் தான் வாசித்தேன். மிச்சத்தை வாசிக்க, தலை விறைக்குது.
உங்களுக்கு, எப்பிடி இருக்கு என அறிய ஆவல். :D

  • கருத்துக்கள உறவுகள்

அதை எங்கள பாக்க வைப்பது நீங்கள் எமக்கு கொடுக்கும் தண்டனை.....

  • கருத்துக்கள உறவுகள்

..

 

பிற்குறிப்பு: தலைப்பையும், செய்தியையும்... ஆரம்பப் பகுதியில் கொஞ்சம் தான் வாசித்தேன். மிச்சத்தை வாசிக்க, தலை விறைக்குது.

உங்களுக்கு, எப்பிடி இருக்கு என அறிய ஆவல். :D

 

என் குறிப்பு:

 

நான் வாசிக்கவே இல்லை !

 

"வெள்ளி சிறி" வேறு நிறத்தில் தடிமனாக மேற்கோள் செய்யப்பட்ட செய்தியை மட்டுமே படித்துவிட்டு இதை பதிகிறேன். :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பணத்தாசை செய்யும் வேலை. பழியை வழமை போல ரஜனி கடவுள் மேல போட்டு தப்பித்து கொள்கிறார். இவருக்கு.. கடவுள் சாட்டி பொய் சொல்லி பிழைப்பதற்கு என்ன தண்டனையை கடவுள் கொடுக்கப் போறார் என்று பார்ப்போம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் ரஐனியின்  வெற்றியின் ரகசியம்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் ஒரு பக்காச் சுயநலவாதி. ஆனால் தமிழ்நாட்டுக்கு ஏற்ற ஆள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சத்துருஹன்சின்கா என்னும் ஒரு நடிகர் ஹிந்தியில் இருக்கிறார்.இவருக்கு ஏறக்குறைய ரஜனியின் வயசு தான் இருக்கும்.ரஜனியின் நெருங்கின நண்பர்.அவரது மகள் தான் சோனாக்சின்ஹா.ரஜனியின் மகள்களை விட வயது குறைந்த[23] பெட்டை.வெட்கம் கெட்ட .......

நியானி: ஒரு சொல் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
இந்தாளின் கதையை பார்த்தால் ...........
70இலும் டுயட் பாடும் எண்ணம் இருக்கும்போல இருக்கு.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் பாலச்சந்தர் விட்ட பிழை... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா இந்த படத்துடன் ஆளின் நடிப்புக்கு தமிழ்நாட்டு சனம் பாடை கட்டுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா இந்த படத்துடன் ஆளின் நடிப்புக்கு தமிழ்நாட்டு சனம் பாடை கட்டுங்கள்.

 

தமிழ் நாட்டு மக்களை, புரிந்து கொள்வது கடினம்.

ரஜனியுடன், தொழில் ரீதியாக சம்பந்தம் இல்லாத..... எழுத்தாளர், தொழிலதிபர், மருத்துவர் என்று  இருப்பவர்களே...

ரஜனியை... தலையில் துக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள்.

அது வரை, ரஜனி தமிழ்நாட்டு மக்கள் தலையில்...மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பார்.

சத்துருஹன்சின்கா என்னும் ஒரு நடிகர் ஹிந்தியில் இருக்கிறார்.இவருக்கு ஏறக்குறைய ரஜனியின் வயசு தான் இருக்கும்.ரஜனியின் நெருங்கின நண்பர்.அவரது மகள் தான் சோனாக்சின்ஹா.ரஜனியின் மகள்களை விட வயது குறைந்த[23] பெட்டை.வெட்கம் கெட்ட .......

நியானி: ஒரு சொல் தணிக்கை

 

முழுக்க நனைஞ்சா பிறகு முக்காடு எதற்கு? நடிக்க வந்தா பிறகு வெட்கம் எல்லாம் பார்க்க கூடாது. கீரோ அப்பாவுடைய வயசா தாத்தாவுடைய வயசா எண்டேல்லாம் பார்க்கக்கூடாது. கொடுக்கிற காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவிட்டு போகவேண்டியதுதான்.  :D  :lol: 

 

தமிழ் நாட்டு மக்களை, புரிந்து கொள்வது கடினம்.

ரஜனியுடன், தொழில் ரீதியாக சம்பந்தம் இல்லாத..... எழுத்தாளர், தொழிலதிபர், மருத்துவர் என்று  இருப்பவர்களே...

ரஜனியை... தலையில் துக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள்.

அது வரை, ரஜனி தமிழ்நாட்டு மக்கள் தலையில்...மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பார்.

ரஜனி அரசியலையும் இமயமலையையும் வைத்து நல்லாதான் மிளகாய் அரைக்கிறார் சிறியர். ரஜனிக்கு நாக்கை புடுங்குறமாதிரி சத்யராஜ் நல்லா குடுக்கிறார். இந்த காணொளியை பாருங்கோ.  :D  :D  :lol: 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனி அரசியலையும் இமயமலையையும் வைத்து நல்லாதான் மிளகாய் அரைக்கிறார் சிறியர். ரஜனிக்கு நாக்கை புடுங்குறமாதிரி சத்யராஜ் நல்லா குடுக்கிறார். இந்த காணொளியை பாருங்கோ.  :D  :D  :lol: 

 

 

சத்தியராஜ் குடைஞ்சு எடுத்தது ரஜனிசாருக்கு விளங்கியிருக்குமா???  :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி அரசியலையும் இமயமலையையும் வைத்து நல்லாதான் மிளகாய் அரைக்கிறார் சிறியர். ரஜனிக்கு நாக்கை புடுங்குறமாதிரி சத்யராஜ் நல்லா குடுக்கிறார். இந்த காணொளியை பாருங்கோ.  :D  :D  :lol: 

 

சத்திய ராஜின், பேச்சுக்கு... ரஜனியின் வாய், இடியப்பம்  புளியுது. :D

காணொளி... பல வருடங்களுக்கு முன்பு எடுத்தது போலுள்ளது.

இதுக்குப் பிறகும், ரஜனி திருந்திய மாதிரி தெரியவில்லை, ஆளுக்கு... எருமைத் தோலாக இருக்குமோ...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.