Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது இடத்தில் பாலூட்டல் தவறா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

breastfeeding-rocks1.jpg

 

பிரிட்டனில் ஒரு ஹோட்டலில்.. பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது மறைப்பிடவில்லை என்று குற்றச்சாட்டி அவர் மறைப்பிட்டு பாலூட்டக் கோரிய சம்பவம் பாலூட்டும் தாய்மார் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

 

உலகத்தில் உள்ள பாலூட்டும் ஜீவராசிகள் அனைத்தும்.. தனது சொந்தக் குட்டிக்கு பசி எடுக்கும் நேரம் தனக்கு விரும்பிய படி.. பாலூட்டும் உரிமையைக் கொண்டிருக்க.. மனிதப் பெண்ணுக்கு அவள் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு பாலூட்ட உள்ள உரிமை மறுக்கப்படுவது சரியா..??!

 

பாலூட்டல் என்பது என்ன பாலுறவுத்தூண்டலாவா நோக்கப்படுகிறது.. மனித சமூகத்தில்..????!

 

இது பற்றி உங்கள் கருத்துக்களை.. அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!!

 

23A8E05C00000578-2857391-Upset_Lou_Burns

 

குறித்த பெண் மறைப்பிட முன்னும் நாகரிகமாகத்தானே பாலூட்டுறா...!!

 

Louise-Burns.jpg

 

குறித்த ஹோட்டலில் ஹோட்டல் கேட்டுக்கொண்டமைக்கு அமைய.. மறைப்பிடப்பட்டு பாலூட்ட அனுமதிக்கப்பட்ட தாய்.

 

இது குறித்தி UKIP தலைவர் வெளியிட்ட கருத்தால் அவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

ஹோட்டலின் இந்த நடைமுறைக்கு மற்றும் அரசியல்வாதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தாய்மார் திறந்த வெளியில் பாலூட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

எங்கள் நிலைப்பாடு:  ஒரு பெண் தனக்கும் குழந்தைக்கும் செளகரியமான முறையில் பாலூட்டுவதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது அவளின் அடிப்படை உயிரின உரிமையையே பறிக்கும் செயல் என்பதே எங்கள் கருத்து.

 

http://www.bbc.co.uk/news/uk-30354712

 

  • கருத்துக்கள உறவுகள்

மறைவாக பாலூட்டும்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் யார் பொறுப்பு??! :o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் நாகரீகமாக பாலூட்டல் என்று சொல்லி விட்டார்களே!! ஆறறிவு மனிதனை மிருகத்துடன் ஒப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மாதம், சுமந்து பெற்ற தாய், குழந்தை அழும் போது....
அதற்கு, பொது இடத்தில்...பால் கொடுப்பது தவறு இல்லை.
அந்தக் குழந்தை, மிஞ்சி.. மிஞ்சி போனால்,
ஆறு மாதம், தனது தாயின் பாலை குடிக்குது.
அது பால் குடிக்கும் அழகை.... தாயும் ரசித்து பார்க்கும் போது... நிச்சயம் ஒரு சந்தோசம், பெருமிதமும் ஏற்படும் என எண்ணுகின்றேன்.
அதனை... உற்றுப் பார்க்கும், மற்றவனை செருப்பால் அடித்தால்.. நல்லது.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாய் தன் மகவுக்கு பாலூட்டும் நிகழ்வு உலகத்திலேயே அற்புதமான நிகழ்வுகளில் ஒன்று. இதனை வக்கிர நினைவோடு பார்க்கும் பேர்வழிகளால்தான் சிக்கல் எழுகின்றது. பொது இடத்தில் பாலூட்டுவதில் தவறேயில்லை. உதைவிடக் கேவலமான எத்தனையோ நிகழ்வுகள் நடக்கிது (எடுத்துக்காட்டாக, பெண்ணின் இதழ்களைக் கவ்விப்பிடித்தாவாறு மணிக்கணக்காக நிற்றல்) இதுகளைக் கவனிக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மாதம், சுமந்து பெற்ற தாய், குழந்தை அழும் போது....

அதற்கு, பொது இடத்தில்...பால் கொடுப்பது தவறு இல்லை.

பால் குடித்த பின் பொது இடத்தில் வயிற்றால போனால்???

அந்தக் குழந்தை, மிஞ்சி.. மிஞ்சி போனால்,

ஆறு மாதம், தனது தாயின் பாலை குடிக்குது.

அதற்கு மேலே குடிக்க நீங்கள் விட மாட்டீர்கள் போல இருக்கிறதே?

அது பால் குடிக்கும் அழகை.... தாயும் ரசித்து பார்க்கும் போது... நிச்சயம் ஒரு சந்தோசம், பெருமிதமும் ஏற்படும் என எண்ணுகின்றேன்.

அதனை... உற்றுப் பார்க்கும், மற்றவனை செருப்பால் அடித்தால்.. நல்லது.

மற்றவன் உற்று பார்க்காவிட்டால் மற்ற குழந்தை எப்படி பிறக்கும்?
  • கருத்துக்கள உறவுகள்

வக்கிரம் பிடித்த குற்றச்சாட்டு தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை அநாகரீகமாக கருதும் இவங்களை என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

140826200850-01-famous-moms-breastfeed-h

 

 

breastfeed11n-1-web.jpg

 

பாலூட்டலை பாலுணர்ச்சியுடன் பார்க்கும் வக்கிர புத்திகளை ஒன்றுமே செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

140826200850-01-famous-moms-breastfeed-h

 

 

breastfeed11n-1-web.jpg

 

பாலூட்டலை பாலுணர்ச்சியுடன் பார்க்கும் வக்கிர புத்திகளை ஒன்றுமே செய்ய முடியாது.

இது ஒரு மெல்லிய கோட்டு இடைவெளி பிரச்சனை.
மிகவும் நிதானமாக இருப்பதே நன்று. 
 
(நான் ஒருநாள் விமான நிலையத்தில் வேலை செய்யும்போது ஒரு அர்ஜண்டீனா குடும்பம் வந்தது இவரகள் அர்ஜண்டீனாவில் இருந்து எனது விமானநிலையம் ஊடாக இன்னொரு அமெரிக்க விமானநிலையம் சென்று  அங்கிருந்து கனடா டொரோண்டோ போகிறார்கள். இவர்கள் சுங்க இலகா முடித்துக்கொண்டு என்னிடம்  வந்தார்கள் (சர்வதேச டிக்கெட்டிங்). அவர்களுக்கு ஒரு கை குழந்தை கை குழந்தைக்கு மிக குறுகிய தொகையில் ஒரு டிக்கெட் இருக்கவேண்டும். (அதன் முக்கிய காரணம் யார் எங்கு போகிறார்கள் என்பது தெரிந்துகொள்ள. சிசு கடத்தல்களை தடுக்க உதவும்) அவர்களிடம் அது இருக்கவில்லை. அவர்களிடம் பணமும் இல்லை. எனது விமான நிலையத்தில் இருந்து அடுத்த விமான நிலையம் செல்ல நான் அனுமதித்துவிட்டேன். 
பின்பு அவர்கள் மற்ற விமான நிலையத்தில் சென்று கஷ்ட  படுவார்கள் என்று விட்டு கனடா போகும்வரை அந்த கை குழந்தைக்கு டிக்கெட் கொடுத்துவிடுவோம் என்று விட்டு அவர்களிடம் சென்றேன். எனக்கு அந்த பிள்ளையின் பெயர் பிறந்த திகதி வேண்டும். நான் அங்கு போக அவர் கதிரையில் இருந்து இரண்டு மார்புகளையும் எடுத்து வெளியில் விட்டு ( இரண்டும் C கப் இருக்கும்) விட ஒன்றில் குழந்தை பால் குடிந்தது கொண்டு இருக்கிறது. நான் முடிந்தவரை அதை பார்க்காது விபரங்களை எழுதிக்கொண்டு இருந்தேன். இன்னுமொருவர் அதை கடந்து போகும்போது என்னை பார்த்துகொண்டு போனார். அவர் என்ன நினைத்திருப்பார்? இந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. இவர் ஒரு சீலையை மறைத்துக்கொண்டு பால் கொடுத்திருக்கலாம். அல்லது விமான நிலையத்தில் அதற்கு என்று இடம் இருக்கிறது அங்குபோய் பால் கொடுத்திருக்கலாம் என்பது எனது தனிபட்ட என்னம். எனக்கு ஒரு வீணான தலைகுனிவு தவிர அவருடைய அழகு  மார்பகங்கள் என்பன தேவை இல்லாத சிந்தனைகளை கொண்டுவந்தது என்பதை மறுக்க முடியவில்லை. அதனால்தான் இதை எழுதுகிறேன்)
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மற்றவர்கள் முன்னால் குழந்தைக்குப் பாலூட்டும் பொது மார்பகங்களைக் காட்டிக்கொண்டுதான் பாலூட்டவேண்டும் என்பது இல்லை. மற்றவர்கள் பார்க்கும்போது வேற்று மார்புதானே ஒருவருக்குத் தெரியுமே தவிர அதன்பின்னர் தான் அந்தப் பெண் என்ன செய்கிறார் என்பதும் ஒரு குழந்தை பால் குடிக்கிறது என்பதும் மற்றவர்களுக்குத் தெரியவாரம்பிக்கும். இதில் மற்றவர் காமக் கண்ணுட பார்க்கிறார் என்று நாம் குதிக்கத் தேவை இல்லை. இதில் திறந்த மார்புடன் பால் குடுக்கலாம் என்று எழுதிய வீரச் சிங்கங்கள் தம் பெண்டிரை அப்படிப் பால் குடுக்க விடுவார்களா என்பது கேள்வி ??? நான் கூட ஓடும் ரெயிலில் பிள்ளைக்குப் பால்கொடுத்திருக்கிறேன். ஆனால் மேலே ஒரு துன்ன்டைப் போட்டுவதில் எந்தத் தப்பும் இருப்பதாகக் கூறமுடியாது.

 

அந்த ரெஸ்டாரண்டில் அந்தப் பெண் முற்றிலும் திறந்துவிட்டுப் பால் கொடுக்கவில்லை என்றாலும் யாரோ சொல்லியோ அன்றில் மற்றவருக்குப் பார்க்கும்போது அசௌகரியம் ஏற்பட்டதால்த்தானே கடைக்காரன் துண்டு போர்த்தும்படி கூறியுள்ளான். நாமும் விலங்குகள் போல் திறந்து காட்டிக்கொண்டு பால்கொடுக்காலாம் எனில் எமக்கு ஏன் உடை விலங்குகள் போல் அதையும் துறந்து திரிய வேண்டியதுதானே.

 

ஒரு குழந்தைக்குத் தாய் பால்கொடுக்கும் போது மனம் ஒருமித்திருக்கவேண்டும் அதில். .அதைவிட்டு எல்லாரும் பாருங்கள் என்று திறந்து காட்டுவது நல்ல பெண்களுக்கு ஆனது அல்ல. நான் பல மேற்குலகப் பெண்கள் பால்கொடுப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் மார்பகங்கள் வெளியே தெரியாதபடி மறைத்தபடிதான் கொடுப்பதைக் கண்டுள்ளேன். பண்பானவர்கள் எந்த இனத்திலும் பண்பாகவே நடந்துகொள்ளுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.