Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - மகிந்த முறைப்பாடு

Featured Replies

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில், லம்போகினி சொகுசு பந்தயக் கார் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற ஆணையுடன் நேற்றுக்காலை காவல்துறையினர் தேடுதல் நடத்தியிருந்தனர்.

இது மகிந்த ராஜபக்சவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து இரண்டு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அவர், தற்போதைய அரசாங்கத்தினால் தாமும் தனது ஆதரவாளர்களும் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,

என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அரசியல் வாழ்வில் முதல் முறையாக எனது வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல்கள் நடக்கின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும்.மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தே புதிய அதிபருக்கு வாக்களித்துள்ளனரே தவிர, தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பழிவாங்குவதற்காக அல்ல.” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/37131/57//d,article_full.aspx

மகிந்தவுக்கு அடுத்த அதிர்ச்சி – மகாநாயக்கர்களிடம் முறைப்பாடு JAN 20, 2015 | 10:54by கார்வண்ணன்in செய்திகள்

Mahinda-Rajapaksa--300x200.jpgமுன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில், லம்போகினி சொகுசு பந்தயக் கார் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற ஆணையுடன் நேற்றுக்காலை காவல்துறையினர் தேடுதல் நடத்தியிருந்தனர்.

இது மகிந்த ராஜபக்சவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து இரண்டு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அவர், தற்போதைய அரசாங்கத்தினால் தாமும் தனது ஆதரவாளர்களும் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,

என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அரசியல் வாழ்வில் முதல் முறையாக எனது வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல்கள் நடக்கின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தே புதிய அதிபருக்கு வாக்களித்துள்ளனரே தவிர, தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பழிவாங்குவதற்காக அல்ல.” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2015/01/20/news/3044

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சிங்கனோடை கூடமாட இருந்தவங்களே குழிபறிக்கிறாங்கள் போலை கிடக்கு..... :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன், அரசியலை நினைச்சுப் பார்க்க கூடாது இனி எண்டு தான் இந்த வேலை.

எல்லாம் இவர் அந்த கதிரைல இருந்து ஒடர் போடேக்க, அத பத்தி கதைச்சாலே, வெடி.

தனக்கு வந்தோன்ன, குய்யோ, முறையோ, ஆச்சா, போச்சா, அப்படியோ, இப்படியோ!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் வினை தன்னை சுடும் .

இது வரலாற்று பாடமாக இருந்தும் யாரும் கற்றுகொண்டதாக தெரியவில்லை .

எல்லாரும் ஏறி விழுந்த சொத்தி குதிரையில செக்கடத்தாரும் ஏறி விழுந்தாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16c5f67ae665d4b230f4a279fe0fc102

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவிம் இப்ப தரப்பட்டுள்ள முக்கியமான Assignment, எல்லா யுத்தக் குற்ற orders, கோத்தாவிடம் இருந்து தான் போனது என்று army குள் இருந்து சாட்சியம் திரட்டும் படி.

இருக்குது இன்னம் பெரிய ஆப்பு.

இது சிறார் துஸ்பிரயோகம் இல்லையா? 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ராஜபக்ஷவின் அதிகாரம் அழிக்கப்பட முடியாதது என்றுதான் சில மாதங்களுக்குமுன் இலங்கையில் பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், அதிகாரம் போய், ஆளின் அதிகாரமே காற்றில் கரைந்து போனது.

 

இன்றைக்கும் மகிந்தவின் நிலையை பார்த்து அழும் சிங்களவர்கள் உள்ளார்கள். ஆனால், அடுத்த சில ஆண்டுகளின்பின் அந்த எண்ணிக்கை மறைந்துவிடும்.

 

சிங்களவரோ, தமிழரோ, ஒரு அளவுக்கு மேல் ஆட்டம் போட்டவர்கள் எலிமினேட் பண்ணப்படுவார்கள். சிறிது காலத்துக்கு அவர்களை நினைத்து ஆட்கள் அழுவார்கள்.  No Problem. காலம் மாறிவிடும், இன்று யாழ்.கொம்மில் சிங்கள ஏகாதிபத்திய அரசியலுக்கு அதன் வாசகர்கள் முக்கியத்துவம் கொடுப்பது போல (வாங்கண்ணே.. வாங்க அடுத்த ரெண்டு நாளைக்கு லீவு)

Edited by sabesan36

"சிங்களவரோ, தமிழரோ, ஒரு அளவுக்கு மேல் ஆட்டம் போட்டவர்கள் எலிமினேட் பண்ணப்படுவார்கள். சிறிது காலத்துக்கு அவர்களை நினைத்து ஆட்கள் அழுவார்கள்.  No Problem. காலம் மாறிவிடும்"

 

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் பலருக்கு நீங்கள் இப்படி ஆட்டம் போட்டால் முடிவு அதோகதி  என்று மீண்டும் மீண்டும் பல பக்கங்களாலும் சொல்லப்பட்டதுதான்.

கெடுகுடி சொற்கேளாது .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கடற்கரையில் வீழ்ந்த போது உணர்ந்திருப்பார்.

கொழும்பு கடற்கரையில் வீழ்ந்த போது உணர்ந்திருப்பார்.

முதலில் உதாரணங்கள் எழுத நினைத்து பின்னர்  பொதுவாக எழுதினேன் .

மகிந்தாவிற்கு அமெரிக்காவில் இரவு விருந்தின் போது ஒபாமாவின் ஆலோசகர் ஒருவர் விளங்கபடித்தியதை விட தெளிவாக யாரும் விளங்கபடுத்த முடியாது .

அதே போல கடற்கரையில் விழுந்தவருக்கு கிட்டத்தட்ட அதே செய்தியை நானே சொன்னேன்.

நோர்வேயில் வைத்து சர்வதேசம் பாலசிங்கத்திடம் அதைத்தான் சொன்னது .

 

விளங்காத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் .

  • கருத்துக்கள உறவுகள்

என் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - மகிந்த முறைப்பாடு

 

அவருக்குத்தெரியும்

ஆட்டுவிப்போரை அடக்கும் சக்தி  யாரென்று....

 

மாற்றமே மாறாதது ......................மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் அனைத்தும் மாறும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை அழிச்சவர் மகிந்தர் எண்டு சந்தோசத்திலை துள்ளிக்குதிச்ச சனம்.....இப்ப  மகிந்த தோற்றதுக்கும் சந்தோசப்படுனீனமாமெல்லே....ஐயொ..ஐயொ   :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பலி வாங்கினீங்கள்? எண்டு உங்களுக்குத்தானே தெரியுமையா, அதுதான் பழிக்குபயப்படுறீங்க.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.