Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க
7409a669ae7e923aa6ddefd2ec97a31c.jpg
காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும்  போதைப்பொருள்  பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார். 
 
 
கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.
01%2894%29.jpg
 
அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
வளம் மிக்கதும் பெறுமதியான துறைமுகம் யாழ்ப்பாணத்தில் உள்ளது. எனினும் கடந்த 30 ஆண்டுகளாக பயன்பெறாது உள்ளது. 
02%2889%29.jpg
 
 
எனினும் இந்தியாவுடன் இணைந்து நாம் துறைமுகத்தை புனரமைத்து செயற்படுத்தினால் அதிகவருவாயை ஈட்ட முடியும் . 
 
எனவே புதிய அரசு உருவாகியதுடன் 100 நாள் வேலைத்திட்டத்தையும் மைத்திரி அரசு அமூலப்படுத்தியுள்ளது.அத்துடன் வலி.வடக்கில் இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் 1000 ஏக்கர் நிலப்பகுதியை விடுவிப்பதற்கு அரசு இணக்கம் கண்டுள்ளது.
03%2870%29.jpg
 
இந்தநிலையில் குறித்த துறைமுகத்தை திறப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும்  பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளேன். 
 
மேலும் அரசின் 100 நாள் திட்டத்தில் துறைமுகம் விடுவிக்கப்படுவது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் நாங்கள் பிறந்த பிள்ளை போல இருக்கின்றோம். அரசு ஆரம்பித்து தற்போது ஒரு மாதம்.
 
இந்தநிலையில் கடந்த 30 வருட காலமாக இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக மாற்ற முடியாது. இதனால் பிரச்சினைகள்  ஏற்படும். 
33333%283%29.jpg
 
அத்துடன் குறித்த துறைமுகம் இந்தியாவிற்கு அயலில் உள்ளமையால் மக்கள் பாவனைக்கு விடப்படும் போது கஞ்சா , குடு மற்றும் தங்கம் கடத்தும் நடவடிக்கை ஊக்குவிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும் அதற்கு அடிமையாவார்கள் .
 
இரண்டு பிள்ளைகளின் தந்தை என்ற ரீதியில் கூறுகின்றேன். எனக்கு தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன பாகுபாடு இல்லை. அனைவரும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.  
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=467683871713482699#sthash.Z58VNNfo.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு கஞ்சா கொழும்புத்துறை முகத்தால் வருவதால்.. மூவின பாடசாலை பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அப்ப அதனை மூடிட்டு.. கடற்படை தளம் அமைப்பமா.. அர்ச்சுனா ரணதுங்க. சிங்களவன் என்ன மாதிரி எல்லாம் கவலைப்படுறான் தமிழனை நினைச்சு பாருங்க. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதனைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் வேற மாதிரி சொன்னால், பொருளாதாரம் நன்றாக வளரும். துறைமுகமும், விமான நிலையமும் இரு கண்கள் மாதிரி. Cross Shot விளையாடதீங்கள். நேராக, நேர்த்தியாக ஆடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுகம் திறக்கப்பட்டால் போதைபொருள் பாவனை அதிகரிக்கும் - வெட்கமே இல்லாமல் சொல்லுறார்.

Edited by நிழலி
ஒருமை சொல் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும்..... கொழும்பு துறைமுகத்தினூடாக,

1000 தொன்னுக்கு மேற்பட்ட ஹரோயின், பாகிஸ்தானிலிருந்து பெரிய கொள்கலன்களில் (Container)

கொண்டு வரப்பட்டாதாக இவர் ஆட்சியிலுள்ள அமைச்சரே பகிரங்கமாக தெரிவித்தது செய்தியில் வந்தது.

 

ஆடு, நனையப்  போகுதென்று........ ஓநாய் அழுததாம்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அருகில் இருப்பது ஆபத்து என்கின்றார்.
இந்தியாதான் வடபகுதியில் போதைப் பொருள் பாவனைக்கு உதவி செய்கின்றது என்கின்றார்.
இதுவரை வடபகுதியில் இருக்கும் படையினருக்கும் அவர்கள் தான் வினியோகம் செய்திருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன் துறைமுகம் மூடியிருக்கும்போதே, ஏற்கெனவே அதிகரித்துவிட்ட கஞ்சாவை இனித்தான் வரப்போகுது என்று கதையளக்கும் இவர் எங்கிருத்து வந்தவர்? இவருக்கு எல்லாம்  ஒரு அமைச்சு. ஊரைப்பற்றி தெரியாதவர் ஊருக்கு வழி சொன்னாராம். இவர் முட்டாளா? அல்லது மக்களை முட்டாள்கள் என்று நினைத்து சொல்கிறாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களின் வல்லமை / வலிமை ........இவற்றைக்கண்டு சிங்களம் என்றும் மிரளும். 

சிங்களம் வெருட்சியடைவது வேறொரு விடயம் சம்பந்தமாக என நினைக்கின்றேன்.  :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதனைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் வேற மாதிரி சொன்னால், பொருளாதாரம் நன்றாக வளரும். துறைமுகமும், விமான நிலையமும் இரு கண்கள் மாதிரி. Cross Shot விளையாடதீங்கள். நேராக, நேர்த்தியாக ஆடுங்கள்

நீங்கள் எழுதியது நல்ல கருத்து. துறைமுக அபிவிருத்தி பணி இந்தியாவிடம் உள்ளது என்பதால் அர்ஜூண மிரளுகிறார் போலிருக்கிறது. மற்றும்படி இனத்தை வைத்து பெரிதாக பொலிட்டிக்ஸ் பண்ணாத ஆள் இவர்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

01%2894%29.jpg

 

 "பிள்ளைதாச்சி" அமைச்சர்களும், இளிச்சவாயன் தமிழர்களும்.

 

சிங்கள அமைச்சர் மார்... எல்லாருக்கும்,
வயித்திலை.... பிள்ளை இருக்குப் போலை கிடக்கு.
திண்டு... தினவு எடுத்து.... வெள்ளை வேட்டியோடை  வந்து நிக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன திறப்பாங்களோ இல்லையோ

இப்ப என்ன திறப்பாங்களோ இல்லையோ

 

திறப்பம் ஆனா திறக்கமாட்டம்   :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனைகிறது  என்று

ஓநாய் அழுத கதையாகக்கிடக்கு...

 

இவர் காணாததா??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.