Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்

Featured Replies

யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் FEB 21, 2015 | 12:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

Narendra-Modi-300x200.jpgஅடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் மார்ச் 13ம் நாள் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுநாள், யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், இந்திய பல்வேறு மீள்கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வுக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.

எனினும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம், இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை.

இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல்களின் போது, பலமுறை இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண பயணம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது, அவர்களுடன் இணைந்திருக்கிறது என்பதைக் கோடி காட்டுவதாக  அமைந்திருக்கும்.

அதேவேளை, இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மார்ச் முதல் வாரத்தில் சிறிலங்கா செல்லக் கூடும் என்றும், இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/02/21/news/3868

 

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் அழைத்து செல்லவும்....

இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்.
 
இவர் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்குமான நட்புறவு சிறக்க வேண்டும். 
 
இராமர் பாலம் பற்றி ஏதாவது சொல்வாரா ? ?   :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நிமிடத்தில் இவரது யாழ்ப்பாண பயணம் ரத்து செய்யப்படும்.(காரணம் எதுவும் சொல்லாமல்)

  • தொடங்கியவர்

 

இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்.
 
இவர் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்குமான நட்புறவு சிறக்க வேண்டும். 
 
இராமர் பாலம் பற்றி ஏதாவது சொல்வாரா ? ?   :icon_idea:

 

 

இவர் ஒரு பொம்மைதான்.கொள்கைவகுப்பாளர்களும் "றோ" வும் தான் முடிவெடுப்பார்கள்

இவர் ஒரு பொம்மைதான்.கொள்கைவகுப்பாளர்களும் "றோ" வும் தான் முடிவெடுப்பார்கள்

 

10 வருஷம் சோனியாவின் பினாமி ஆட்சியில் ஊழலும் சீர்கேடும் தாண்டவமாடிய போது இந்த "கொள்கை வகுப்பாளரும்" "றோ" வும் எங்கே போனார்கள்?  :)
 
கொள்கை வகுப்பாளர்களின் எல்லை ஆலோசனையுடன் முடிவடையும். முடிவெடுப்பது மோடி தான்.
 
மோடி யாழ் வருவாராயின் மிகச் சிறிய சமுதாயம் என்ற ரீதியில் எங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகத்தான் இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

பி ஜே பி தமிழ்நாட்டுக்குள் புகுவதற்கு படாத பாடு படுகின்றது எனவே ஒரு ஒப்புக்காவது மோடி வருகை நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்.

இவர் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்குமான நட்புறவு சிறக்க வேண்டும்.

இராமர் பாலம் பற்றி ஏதாவது சொல்வாரா ? ? :icon_idea:

அப்படியா,புலிகள் 2000 ஆண்டு யாழ்பாணத்துக்குள் நுழைந்த பொது அவர்களை பின்வாங்குமாறு மிரட்டியவர்களும் இந்த கூட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து செய்திட்டுது.. நாங்க செய்யமாட்டமா என்ன..?! ஆனால்.. நீங்களா ஒன்னுமே வெட்டிப்புடுங்கப் போறதில்ல தமிழர்களுக்கு. :lol::D


 

இராமர் பாலம் பற்றி ஏதாவது சொல்வாரா ? ?   :icon_idea:

 

 

இராமர் பாலத்தை பளிங்குக் கற்களால் கட்டப் போறாராம். பிறகு அதில அணில் ஓட விடப் போறாரம். புலம்பெயர் தமிழர்கள் விரும்பினால்.. கிலோமீற்றருக்கு ஒரு கோவில் கட்டி.. இந்திய சினிமா இசைக்கச்சேரி நடத்தட்டாம். கூடவே சிங்களவர்கள்.. பக்கத்தில் பன்சல அமைக்கலாம்.ஜிகாத்தினர் மசூதி கட்டலாம். அதுக்கு மேல எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. புலி வேசம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது கட்டாயம். :lol::D

Edited by nedukkalapoovan

அப்படியா,புலிகள் 2000 ஆண்டு யாழ்பாணத்துக்குள் நுழைந்த பொது அவர்களை பின்வாங்குமாறு மிரட்டியவர்களும் இந்த கூட்டம் தான்.

 

 

அன்று அவர்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் பின்னாளில் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் உயிர்கள் தப்பியிருக்குமா ?

அன்று அவர்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் பின்னாளில் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் உயிர்கள் தப்பியிருக்குமா ?

தப்பி இருக்கும் என்பது தான் எனது கருத்து என்என்றால் 2000ம் ஆண்டு யாழ்பாணம் விழ்ந்து இருந்தால் இலங்கை இராணுவத்தினன் கதை முடிந்திருக்கும் , வாடா மாகாணம் முழுவதும் போனால் நிச்சயமாக இப்போது தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும், இப்போது எதுவும் இல்லை, மகிந்த இருந்த வரையாவது மேற்கு கொஞ்சம் ஆதரவாக இருத்தது ஆனால் இனி அதுவும் இல்லை,

தப்பி இருக்கும் என்பது தான் எனது கருத்து என்என்றால் 2000ம் ஆண்டு யாழ்பாணம் விழ்ந்து இருந்தால் இலங்கை இராணுவத்தினன் கதை முடிந்திருக்கும் , வாடா மாகாணம் முழுவதும் போனால் நிச்சயமாக இப்போது தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும், இப்போது எதுவும் இல்லை, மகிந்த இருந்த வரையாவது மேற்கு கொஞ்சம் ஆதரவாக இருத்தது ஆனால் இனி அதுவும் இல்லை,

 

 

யாழ்ப்பாணம் விழுவதா ??
 
பாக்கிஸ்தான் குடுத்த மல்ரி பரல் அல்லவா சாவகச்சேரியில் விழுந்தது.
 
இலங்கை பாகிஸ்தான், சீனாவிடம் போய் மண்டி இடும் நிலையைத் தவிர்க்கத்தான் பி.ஜே.பி. அப்படிச் சொன்னது. 

இராமர் பாலத்தை பளிங்குக் கற்களால் கட்டப் போறாராம். பிறகு அதில அணில் ஓட விடப் போறாரம். புலம்பெயர் தமிழர்கள் விரும்பினால்.. கிலோமீற்றருக்கு ஒரு கோவில் கட்டி.. இந்திய சினிமா இசைக்கச்சேரி நடத்தட்டாம். கூடவே சிங்களவர்கள்.. பக்கத்தில் பன்சல அமைக்கலாம்.ஜிகாத்தினர் மசூதி கட்டலாம். அதுக்கு மேல எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. புலி வேசம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது கட்டாயம். :lol::D

 

 

பாலம் நிறைய நன்மைகளை வட கிழக்கு மக்களுக்கு கொண்டு வரும். இந்திய உல்லாசப் பிரயாணிகளின் வருகையும் அதனால் வருமானமும், வடகிழக்கு உணவு மற்றும் ஏனைய‌ உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை, எம்மவர்களின் ஆன்மீக பயணங்கள், இந்திய உற்பத்திப் பொருட்களை மலிவாக பெற்றுக் கொள்ளல், தமிழ் நாடு மற்றும் இந்திய ஏனைய மானிலங்களுடன் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்தல்.. 
 
எம் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

மோடி யாழ்பாணம் போனால் எங்கட பாடு அவ்வளவுதான் .

அவர் இந்தியாவில் பார்க்கும்  இடங்களுடன் ஒப்பிடும்போது யாழ்பாணம்  சொர்க்கமாக தெரியும் .இலங்கை அரசிற்கு நன்றி சொல்லிவிட்டு போய்விடுவார் .

இலங்கைத் தமிழரின் பின் பலமாக அல்லது தமிழர் நலனில் இந்தியா நிச்சியமான அக்கறை உள்ளது என்ற செய்தி சிங்களப் பேரினவாததிற்கு சொல்லப்பட வேண்டியது அவசியம்.
 
இதற்காகவாவது மோடி யாழ்ப்பாணம் வரவேண்டும்.
 
சிங்களப் பேரினவாதம் பலவீனப் பட்டால் தான் ஒரு தீர்வை எட்ட முடியும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் மேலே குறிப்பிட்டு இருப்பதுபோல் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சிங்களவனை நகர்த்துவதற்கு இவரின் வருகையை பயன்படுத்தலாமே தவிர வேறு எந்தபயனும் இருக்காது குறிப்பாக சொல்வதானால் மீண்டும் ஒருதடவை தமிழர்கள் நம்பி ஏமாரப்போகின்றார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி  வாழ்க

நேரு வாழ்க

இந்திரா காந்தி வாழ்க

ராயீவ் காந்தி வாழ்க

மோடி வாழ்க....................

 

யெய்கிந்த்......................

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மோடி யாழ்பாணம் போனால் எங்கட பாடு அவ்வளவுதான் .

அவர் இந்தியாவில் பார்க்கும்  இடங்களுடன் ஒப்பிடும்போது யாழ்பாணம்  சொர்க்கமாக தெரியும் .இலங்கை அரசிற்கு நன்றி சொல்லிவிட்டு போய்விடுவார் .

இந்தியாவில் உள்ள நகரங்களுடன் யாழ்பாணத்துடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு தமிழர்கள் சொர்க்கத்தில் வாழ்கின்றார்கள் என்று நினைப்பார்கள் நீங்கள் சொல்வது சரிதான் அர்ஜுன்.  

  • கருத்துக்கள உறவுகள்

11001760_1053163261366953_60912602007724


ஜே கிந் ...... வந்தே மாதரம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் மேலே குறிப்பிட்டு இருப்பதுபோல் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சிங்களவனை நகர்த்துவதற்கு இவரின் வருகையை பயன்படுத்தலாமே தவிர வேறு எந்தபயனும் இருக்காது குறிப்பாக சொல்வதானால் மீண்டும் ஒருதடவை தமிழர்கள் நம்பி ஏமாரப்போகின்றார்கள்.  

 

இதற்கு

சிங்கக்கொடி பிடிக்கும்

இலங்கை சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளும் 

சம்பந்தர்

பெரும் சாணக்கியர்

எதற்கு மூக்கைத்தொட இத்தனை சுத்துதல்.  காலவிரயம்... :(  :(  :(

இதற்கு

சிங்கக்கொடி பிடிக்கும்

இலங்கை சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளும் 

சம்பந்தர்

பெரும் சாணக்கியர்

எதற்கு மூக்கைத்தொட இத்தனை சுத்துதல்.  காலவிரயம்... :(  :(  :(

 

 

பிரபாகரன் இலங்கைத் தமிழ் இனத்தை அழித்து அதன் சமூகக் கட்டமைப்பை சின்னா பின்னமாக்கி முழு உலகத்தையும் தமிழ் இனத்துக்கு பகையாக்கி, இருந்த நன்பர்களையும் எதிரியாக்கி, இறுதியில் நம்பிவந்த மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொலைக்கள‌த்துக்கு அனுப்பி,  ஒரு துளியும் நம்பிக்கையைத் தராத எதிர்காலத்தை இனத்துக்கு விட்டுச் சென்ற நிலையில் இருந்து... 
 
இன்று,
 
போராளிக் குடும்பங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும்,  அரசியற்கைதிகள் விடுவிக்கபடக் கூடிய சூழ்நிலையயும், சிங்களத் தலைமையே தமிழர் உரிமை பற்றி பேசுகின்ற சூழலையும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் உரிமைக்காக குரல் தரவும் தமிழர் சார்பாக நடக்கவும், வட கிழக்கில் மிஹிந்தவினதும் கொத்தபாயவினதும் பயங்கரம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் முடியக்கூடியதாய் இருக்கிறதென்றால் அதில் நிச்சியமாக சம்பந்தரின் பங்களிப்பும் இருக்கிறது.
 
இதற்காக அவர் சிங்கக்கொடி தூக்கினால் என்ன ?
கழுதைக் கொடி தூக்கினால் என்ன ?
நாய்க் கொடி தூக்கினால்தானும் என்ன ?
  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு தெளிவாய் இருந்த ஈழத் தமிழர்களை, முள்ளிவாய்க்காலுக்குப் முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என பிரித்தால் யாரைத்தான் நம்புவதோ ..? என்ற நிலையில் பலரின் நெஞ்சமிருக்கிறது.. முன்னர் ஆதரித்த அதே மக்கள் சிலர், 180 பாகை திரும்பி எதிர்க்கின்றனர்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு தெளிவாய் இருந்த ஈழத் தமிழர்களை, முள்ளிவாய்க்காலுக்குப் முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என பிரித்தால் யாரைத்தான் நம்புவதோ ..? என்ற நிலையில் பலரின் நெஞ்சமிருக்கிறது.. முன்னர் ஆதரித்த அதே மக்கள் சிலர், 180 பாகை திரும்பி எதிர்க்கின்றனர்.. :o

180 பாகை திரும்புகிறவர்களின் கருத்துக்களின் நம்பகத்தன்மை (Credibility) சுழியமே.. ஏனென்றால் இவர்கள் மறுபடியும் ஒரு 180 பாகை திரும்பமாட்டார்கள் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை.

பிரபாகரன் இலங்கைத் தமிழ் இனத்தை அழித்து அதன் சமூகக் கட்டமைப்பை சின்னா பின்னமாக்கி முழு உலகத்தையும் தமிழ் இனத்துக்கு பகையாக்கி, இருந்த நன்பர்களையும் எதிரியாக்கி, இறுதியில் நம்பிவந்த மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொலைக்கள‌த்துக்கு அனுப்பி,  ஒரு துளியும் நம்பிக்கையைத் தராத எதிர்காலத்தை இனத்துக்கு விட்டுச் சென்ற நிலையில் இருந்து... 
 
இன்று,
 
போராளிக் குடும்பங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும்,  அரசியற்கைதிகள் விடுவிக்கபடக் கூடிய சூழ்நிலையயும், சிங்களத் தலைமையே தமிழர் உரிமை பற்றி பேசுகின்ற சூழலையும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் உரிமைக்காக குரல் தரவும் தமிழர் சார்பாக நடக்கவும், வட கிழக்கில் மிஹிந்தவினதும் கொத்தபாயவினதும் பயங்கரம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் முடியக்கூடியதாய் இருக்கிறதென்றால் அதில் நிச்சியமாக சம்பந்தரின் பங்களிப்பும் இருக்கிறது.
 
இதற்காக அவர் சிங்கக்கொடி தூக்கினால் என்ன ?
கழுதைக் கொடி தூக்கினால் என்ன ?
நாய்க் கொடி தூக்கினால்தானும் என்ன ?

 

என்ன பிரபாகரன் இலங்கை தமிழ் இனத்தை அழித்தாரா, எப்படி அழித்தார் எவ்வாறு அழித்தார் என்பதை விளக்க முடியும்மா? பிரபாகரன் நச்சு வாயு குண்டும்,மல்டி பரலும் அடிக்கவில்லை, தமிழ் பெண்களை கற்பழிக்கவில்லை அப்படி இருக்கும் போது எப்படி அழித்தார் என்று கூற முடியும்மா அதை விட யார் அந்த நண்பர்கள் என்று கூற முடியுமா அத்துடன் எப்படி அவர்களை பிரபாகரன் எதிரி ஆக்கினார் என்று கூற முடியும்மா?

ஓரளவு தெளிவாய் இருந்த ஈழத் தமிழர்களை, முள்ளிவாய்க்காலுக்குப் முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என பிரித்தால் யாரைத்தான் நம்புவதோ ..? என்ற நிலையில் பலரின் நெஞ்சமிருக்கிறது.. முன்னர் ஆதரித்த அதே மக்கள் சிலர், 180 பாகை திரும்பி எதிர்க்கின்றனர்.. :o

தெளிவானவர்கள் எப்பவும் தெளிவாய்த்தான் இருக்கின்றார்கள் .

 

ஆனால் எதிரியை நோக்கி நீட்டிய துப்பாக்கி தங்களை நோக்கி திரும்பினால் அவர்களை தங்களை மாற்றிக்கொண்டதிலும் தவறில்லை .

பிரபாகரன் இலங்கைத் தமிழ் இனத்தை அழித்து அதன் சமூகக் கட்டமைப்பை சின்னா பின்னமாக்கி முழு உலகத்தையும் தமிழ் இனத்துக்கு பகையாக்கி, இருந்த நன்பர்களையும் எதிரியாக்கி, இறுதியில் நம்பிவந்த மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொலைக்கள‌த்துக்கு அனுப்பி, ஒரு துளியும் நம்பிக்கையைத் தராத எதிர்காலத்தை இனத்துக்கு விட்டுச் சென்ற நிலையில் இருந்து...

இன்று,

போராளிக் குடும்பங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், அரசியற்கைதிகள் விடுவிக்கபடக் கூடிய சூழ்நிலையயும், சிங்களத் தலைமையே தமிழர் உரிமை பற்றி பேசுகின்ற சூழலையும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் உரிமைக்காக குரல் தரவும் தமிழர் சார்பாக நடக்கவும், வட கிழக்கில் மிஹிந்தவினதும் கொத்தபாயவினதும் பயங்கரம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் முடியக்கூடியதாய் இருக்கிறதென்றால் அதில் நிச்சியமாக சம்பந்தரின் பங்களிப்பும் இருக்கிறது.

இதற்காக அவர் சிங்கக்கொடி தூக்கினால் என்ன ?

கழுதைக் கொடி தூக்கினால் என்ன ?

நாய்க் கொடி தூக்கினால்தானும் என்ன ?

ஒரு தன்னலமற்ற விடுதலைப்போராளைப்பற்றி அவதூறு பேசும் நீங்கள் சம்பந்தன் தூக்குவதையும் தூக்கி ஆட்டுக்காட்டுவதையும் ரசிப்பவராச்சே. நல்லா ரசியுங்க. தமது பதவிக்காக தமிழர்களை உசுப்பேற்றி பதவிசுகம் அனுபவித்த சம்பந்தன் சுதந்திர தினத்துகு அன்று போன தமிழர்களை துரோகி என்று வர்ணித்த சம்பந்தன் இன்று தனது இறுதிக்கால ரிலாக்ஸ் வாழ்க்கை நடத்த எதையும் தூக்கி ஆட்டட்டும். அதை நீங்க ரசிக்கட்டும்

Edited by trinco

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.