Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதைக்கு பழகாத பாதச் சுவடுகள்....

Featured Replies

27xh8o.jpg

பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே

பயணங்கள் தொடர்கிறது

எதிர்படும் எல்லா முகங்களிலிருந்தும்

எல்லோருக்குமான முகமொன்றை தேடியலைகிறேன்

நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின்

மூன்றுவேளை உணவிற்கான கனவுடன்

மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது

வசப்பட்டாக வேண்டிய வாழ்க்கையை

வரவேற்க வாயிற் படியிலேயே வாழ

பழகிக் கொள்கிறேன்

நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்குமான

தோழமையின் வருகைமீதான நம்பிக்கையில்

தனிமையை எதிர்கொள்ள தயாராகிறேன்

நாளைய யன்னல்களில் உட்புகும்

ஒளியில் எனது இருண்ட அறையெங்கும்

வைகறையை நிரப்பி கொள்வேன்

புத்தக பைகளை வீசி எறிந்துவிட்டு

சுமைதூக்கிகளுக்கு அழகின் வானவில்

வர்ணங்களை வரைய கற்றுத் தருவேன்

விலைமாதொருவளின் ஒர்நாளின் ஒரிரவின்

உறக்கத்திற்கான பெறுமதியை பெறக்கூடிய

உழைப்பொன்றை தேடிக் கொள்வேன்

போர்முடிந்து வீடு திரும்பும் வீரனிடம்

உனது காயங்களுக்கான மருந்தை

யாசித்து பெற்றுத் தருவேன்

வல்லாதிக்க பேரரசுகளின் ஆயுத போட்டியில்

வெல்ல விரும்புவோருக்கு வேண்டுமானால்

விந்து சுரப்பிகளை தானமாக தருவேன்

சமவெளிகளையும், பள்ளத்தாக்கையும் சரிகூறாய்

பகிர்ந்திருக்கும் முள்வேளிபல கடந்துவருமென்

இதயப்புறாவிடம் சுதந்திரத்தின் கடிதத்தை கட்டியனுப்புவேன்

பெறற்கரிய விடுதலையை என்தேசம்

பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து

நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

~ ராஜன் விஷ்வா

07.03.15

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

பெறற்கரிய விடுதலையை என்தேசம்
பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து
நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின்

மூன்றுவேளை உணவிற்கான கனவுடன்

மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது

யதார்த்தமான சிந்தனை...!

வாழ்த்துக்கள்...!!

  • தொடங்கியவர்

பெறற்கரிய விடுதலையை என்தேசம்

பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து

நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

நன்றி ஐயா.

நல்வரவு குழந்தாய் :D

நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின்

மூன்றுவேளை உணவிற்கான கனவுடன்

மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது

யதார்த்தமான சிந்தனை...!

வாழ்த்துக்கள்...!!

மிக்க நன்றிகளண்ணா வாழ்த்திற்க்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

வல்லாதிக்க பேரரசுகளின் ஆயுத போட்டியில்

வெல்ல விரும்புவோருக்கு வேண்டுமானால்

விந்து சுரப்பிகளை தானமாக தருவேன்  

 ~ ராஜன் விஷ்வா

    07.03.15

angry-face-girl-2.jpg?312108

சர்வதேச மகளிர் தினம் எழுதியிருக்கிற கவிதையைப்பார்ரா

 

என்ன கவிஞன் இவன்  அப்பட்டமான ஆணாதிக்கம் பிடிச்சவனா இருக்கான்.... மறைமுகமாக பெண்களுக்கெதிரான வன்முறையை உலகத்தரத்தில் பிரகடனப்படுத்தும் ஆண் உக்தி 

ppt_emoticon_showing_angry_face_time_man

  • தொடங்கியவர்

வல்லாதிக்க பேரரசுகளின் ஆயுத போட்டியில்

வெல்ல விரும்புவோருக்கு வேண்டுமானால்

விந்து சுரப்பிகளை தானமாக தருவேன்

~ ராஜன் விஷ்வா

07.03.15

angry-face-girl-2.jpg?312108

சர்வதேச மகளிர் தினம் எழுதியிருக்கிற கவிதையைப்பார்ரா

என்ன கவிஞன் இவன் அப்பட்டமான ஆணாதிக்கம் பிடிச்சவனா இருக்கான்.... மறைமுகமாக பெண்களுக்கெதிரான வன்முறையை உலகத்தரத்தில் பிரகடனப்படுத்தும் ஆண் உக்தி

ppt_emoticon_showing_angry_face_time_man

ஆயுத பரவல்களும், ஆயுத பெருக்கமும் என்றைக்கும் மனிதகுலத்திற்கு எதிரானைவையே. வையம் வாழ மானுடம் தழைக்க வேண்டும் என்பது நியதி, அதற்கு இயற்கை வழங்கிய கொடையாகிய விந்துப்பைகளை வேண்டுமானால் தானாமாக வழங்குவேன் என்பது உயிர்களை பெருக்குதல் என்ற பொருளில் எழுதினேன். பெண்ணாக இருந்தால் கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் !!!

நிற்க இவன் ஒருத்தன் எத்தனை உயிர்களை உருவாக்குவான் என்று அடுத்த கேள்வியை கேட்க கூடாது :D இது ஆய்வகத்தில் நிகழக்கூடிய செயற்கை வழிமுறைக்கானது மட்டுமே யுவர் ஆனர்.

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

அக்காவின் உக்கிர தாண்டவத்தை பார்க்கும் போது கோவம் கவிதையில் இல்லை கவிதை எழுதியவர் மேல் தானோ என்று சந்தேகம் வலுக்கிறது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விலைமாதொருவளின் ஒர்நாளின் ஓரிரவின்
உறக்கத்திற்கான பெறுமதியை பெறக்கூடிய
உழைப்பொன்றை தேடிக் கொள்வேன்

 

சமவெளிகளையும், பள்ளத்தாக்கையும் சரிகூறாய்
பகிர்ந்திருக்கும் முள்வேளிபல கடந்துவருமென்
இதயப்புறாவிடம் சுதந்திரத்தின் கடிதத்தை கட்டியனுப்புவேன்

பெறற்கரிய விடுதலையை என்தேசம்
பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து
நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

 

எனக்கு மிகவும்  பிடித்த வரிகள்.

 

பிழை திருத்தம் செய்யுங்கள் -   தேடியலைகிறேன்   ஒரு நாளின்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி விஸ்வா

  • தொடங்கியவர்

விலைமாதொருவளின் ஒர்நாளின் ஓரிரவின்

உறக்கத்திற்கான பெறுமதியை பெறக்கூடிய

உழைப்பொன்றை தேடிக் கொள்வேன்

சமவெளிகளையும், பள்ளத்தாக்கையும் சரிகூறாய்

பகிர்ந்திருக்கும் முள்வேளிபல கடந்துவருமென்

இதயப்புறாவிடம் சுதந்திரத்தின் கடிதத்தை கட்டியனுப்புவேன்

பெறற்கரிய விடுதலையை என்தேசம்

பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து

நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

பிழை திருத்தம் செய்யுங்கள் - தேடியலைகிறேன் ஒரு நாளின்

பிழை திருத்திவிட்டேன் அண்ணா.

ஒருநாள் = ஒர்நாள், இது வழுவமைதியாகும் தானே ? ஒர்நாள் என்பது தான் எனக்கு வாசிக்க பொருந்துவது போல் தோன்றுகிறது.

பிழைகளை கூர்ந்து கவனித்து எடுத்து சொன்னமைக்கு நன்றிகள் அண்ணா :)

கவிதைக்கு நன்றி விஸ்வா

வாழ்த்திற்க்கு நன்றி வாத்தியாரே,

ஒர்நாள் என்பது பயன்படுத்தலாமா என்று உங்கள் இலக்கண புத்தகத்தில் ஆராய்ந்து சொல்லவீர்களா ?

நல்ல கவிதை விஷ்வா 

  • தொடங்கியவர்

நல்ல கவிதை விஷ்வா 

 

நன்றி  அண்ணா, உங்களை அதிகம் காண முடிவதில்லையே களத்தில் ??

 

  • கருத்துக்கள உறவுகள்

பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே

பயணங்கள் தொடர்கிறது

 

போருக்குப் பழக்கப்பட்ட மனிதர்களே அன்று போர்புரிந்தார்கள் அதனால் மனிதர்கள் மட்டுமே அன்று பாரில் அழிந்தனர்.  :(
போருக்குப் பழக்கப்படாத மனிதர்களே இன்று போர்புரிகின்றனர் அதனால் மனிதர்கள் மட்டுமன்றிப் பாரே அழிவைக் காண்கின்றது.  :o

பெறற்கரிய விடுதலையை என்தேசம்

பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து

நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

அருமையான வரிகள் நன்றி

Edited by செந்தமிழாளன்

  • கருத்துக்கள உறவுகள்

பெறற்கரிய விடுதலையை பெறும் நாளிற்காய் காத்திருக்கும் எம் மன உணர்வுகளை எம் எதிர்பார்ப்புக்களை ஏந்தி வந்த உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்; நல்லதொரு கவிதை நன்றிகள்

  • தொடங்கியவர்

 

போருக்குப் பழக்கப்பட்ட மனிதர்களே அன்று போர்புரிந்தார்கள் அதனால் மனிதர்கள் மட்டுமே அன்று பாரில் அழிந்தனர்.  :(
போருக்குப் பழக்கப்படாத மனிதர்களே இன்று போர்புரிகின்றனர் அதனால் மனிதர்கள் மட்டுமன்றிப் பாரே அழிவைக் காண்கின்றது.  :o

 

 

சமவெளிகளையும், பள்ளத்தாக்கையும் சரிகூறாய்

பகிர்ந்திருக்கும் முள்வேளிபல கடந்துவருமென்

இதயப்புறாவிடம் சுதந்திரத்தின் கடிதத்தை கட்டியனுப்புவேன்

இந்த புறாவை போல என்றைக்கு இந்த பூமி பந்து மனிதர்களுக்கு சுதந்திர வாசலை திறவுமோ??? :rolleyes:

 

வரவிற்கு நன்றிகள் பாஞ்ச் அண்ணே  :)

 

பெறற்கரிய விடுதலையை என்தேசம்

பெறும்நாளில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்து

நொடிப்பொழுதில் ஆனந்தமாய் மரித்திடுவேன்...

அருமையான வரிகள் நன்றி

 

தேசத்தின் விடுதலையை விட பெரும் பெறு உண்டோ.....!!  நன்றிகள் அண்ணா வாழ்த்திற்கு :)

 

பெறற்கரிய விடுதலையை பெறும் நாளிற்காய் காத்திருக்கும் எம் மன உணர்வுகளை எம் எதிர்பார்ப்புக்களை ஏந்தி வந்த உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்; நல்லதொரு கவிதை நன்றிகள்

 

வரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் அம்மா :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.