Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தாராளமாக திரும்பி வரலாம்! - அழைக்கிறார் ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Maithripala-300-news.jpg

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் சுதந்திரமாக வாழமுடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

   

ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் முதன்முறையாக ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை சந்தித்த அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

 

நான் பிரித்தானியாவிற்கு சென்றபோது அங்கு ஈழம் கோருகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் 300 பேரளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் என்னை சந்தித்த எலிஸபெத் மகாராணியார் இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதை ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டவர்கள் அறியாதுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

லண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பல அமைப்புக்கள் உள்ளன. நான் இம்முறை விஜயத்தின் போது சில அமைப்பினருடன் பேச்சுக்களை நடத்தினேன். ஈழம் கோரும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களுடன் நான் பேசவில்லை. அவர்களுடன் பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் சந்தித்த புலம் பெயர் தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் சிங்களத்தில் என்னுடன் உரையாடினர். எம்மை புலம் பெயர் தமிழர்கள் என்று முத்திரை குத்தவேண்டாம். நாம் உங்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயராக இருக்கின்றோம். முன்னர் இருந்த இலங்கையின் தலைவர்கள் எம்முடன் பேசவில்லை.  பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். நாட்டுக்கு வரவும் தயாராக உள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

 

இவ்விடயம் தொடர்பில் பிரதமருடனும் அமைச்சரவையுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றேன். தற்போது யுத்தம் இல்லை. குண்டு வெடிப்புக்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆனால் இந்த யுத்தம் ஏற்படுவதற்கு காரணமான விடயங்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. யுத்தம் மீண்டும் உருவாகும் என்று நான் கோரவில்லை. ஆனால் இனவாதம், மதவாதங்கள், வளருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் நாட்டின் எதிர்காலம் கருதி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியமாகும்.

 

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்கு வரலாம். அவர்கள் வந்து இங்கு முதலீடுகளையும் வியாபாரங்களையும் மேற்கொள்ளலாம். நாட்டில் சுதந்திரமாக அவர்கள் இருக்கலாம். புலம் பெயர்ந்த தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் நாம் மேற்கொள்வோம். அவர்கள் தமது உரிமைகளைப் பெற்று வாழ நாம் நடவடிக்கை எடுப்போம் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்போம். இவ்வாறான பிரச்சினைகளை வளரவிடக்கூடாது.

 

http://seithy.com/breifNews.php?newsID=128583&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மகாராணி பிரஸ்தாபிக்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டம் தன்.. வேலை செய்திருக்குது. :icon_idea:

 

ஆர்ப்பாட்டத்தில்.. ஈடுபட்டவர்கள் மைத்திரி அரசுக்கு எதிராகவும்.. சர்வதேச விசாரணையைக் கோரியும்.. சிறீலங்கா சிங்கள தேசம் தமிழீழ ஆக்கிரமிப்பை விட்டு விலகக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்ததோடு இனப்படுகொலையை நிறுத்தவும் கோரினர். மகாராணிக்கு ஆங்கிலம் வாசிக்க வரும் என்பதால்.. மைத்திரி மகாராணி அப்படிச் சொன்னா.. இப்படிச் சொன்னான்னு.. பொய் சொல்லி மகாராணியின் ஆங்கிலப் புலமைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடாது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகொடியை சுறுட்டி வைத்துவிட்டு ,சிங்க கொடியுடன் போய் இறங்கத்தான் இருக்கு.....கிரிபத்தும் பொல் சம்பலும் சாப்பிட்டுவிட்டு வியாபாரம் செய்யலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகொடியை சுறுட்டி வைத்துவிட்டு ,சிங்க கொடியுடன் போய் இறங்கத்தான் இருக்கு.....கிரிபத்தும் பொல் சம்பலும் சாப்பிட்டுவிட்டு வியாபாரம் செய்யலாம்....

 

 

ஏற்கனவே இதை நம்பி  போன ஒருவருக்கு (பகீரதி)

கலைத்து கலைத்து அடிவிழுகுதாம்...

பார்த்து..

http://www.yarl.com/forum3/index.php?/topic/155196-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இதை நம்பி  போன ஒருவருக்கு (பகீரதி)

கலைத்து கலைத்து அடிவிழுகுதாம்...

பார்த்து..

http://www.yarl.com/forum3/index.php?/topic/155196-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

 

மைத்திரி மாமே வாரச்சொல்லியிருக்கிறார் கட்டாயம் போகவேணும்....சும்மா செல்ல அடி அடிப்பினம்.... :D நாங்கள் முறைச்சு பார்க்காவிடில் உயிர்தப்பலாம்...முறைச்சு பார்த்தால் ....நீங்கள் பயங்கரவாதி

ஊரை சுற்றாமல் சொந்த பணத்தை  கொண்டுபோனா  நிம்மதியா வாழலாம் ....பெரிய தளபதி நிலை  முன்னாள்  புலிகளே  அங்கு வாழும் போது  வாலுகள் கவலை  படுவது எதுக்கு  :lol:

 

 

ஒரு சில போராளிகளுக்கு பிரச்சினை  இருக்கு சீன்  இணைய  போராளிளுக்கு  என்ன  பிரச்சினை  வரும் டவுட்டு  :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குப் போரடிக்குதாம்
எலிகளை விளையாட்டுக்கு அழைக்கின்றது.
பின்னர் புலி என்று உள்ளே வெளியே.....

ஏற்கனவே இதை நம்பி  போன ஒருவருக்கு (பகீரதி)

கலைத்து கலைத்து அடிவிழுகுதாம்...

பார்த்து..

 

 

உண்மையாகவா சொல்லுரிங்க அவா அதை நம்பியா போனா? 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா சொல்லுரிங்க அவா அதை நம்பியா போனா? 

 

அப்ப  உங்களுக்கு என்னைவிட உண்மை தெரிந்திருக்கு...

எதை நம்பி 

தப்பி  வந்தவர்

மீண்டும் போகமுடிவெடுத்தார்.........

அப்ப  உங்களுக்கு என்னைவிட உண்மை தெரிந்திருக்கு...

எதை நம்பி 

தப்பி  வந்தவர்

மீண்டும் போகமுடிவெடுத்தார்.........

 

அவா.. எதோ ஒரு குருட்டு நம்பிக்கயில் போயிருப்பா  அதுக்காக கிரிபத்துக்காக போயிருந்தா என்று நீங்கள் சொல்வது கொஞ்சம் ஓவர்தான்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அவா.. எதோ ஒரு குருட்டு நம்பிக்கயில் போயிருப்பா  அதுக்காக கிரிபத்துக்காக போயிருந்தா என்று நீங்கள் சொல்வது கொஞ்சம் ஓவர்தான்.

 

 

அந்தக்குருட்டு நம்பிக்கைக்குள் எல்லாம் வருகுது.........

அந்தக்குருட்டு நம்பிக்கைக்குள் எல்லாம் வருகுது.........

 

 வேணுமா இனிமேல் அந்த குருட்டு நம்பிக்கை? 

 

சாராம்சம் என்னவென்றால் இலங்கையில் யுத்தம் மாத்திரம் தான் முடிவுக்கு வந்திருந்தது அனால் பிரச்சனை இன்னும் தீரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 வேணுமா இனிமேல் அந்த குருட்டு நம்பிக்கை? 

 

சாராம்சம் என்னவென்றால் இலங்கையில் யுத்தம் மாத்திரம் தான் முடிவுக்கு வந்திருந்தது ஆனால் பிரச்சனை இன்னும் தீரவில்லை.

 

எனது அண்ணர் இறந்தபோது கூட நான் போகவில்லை....

அந்தளவு நம்பிக்கை

என் இனத்தின் மீது...... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலி/ புலி ஆதரவாளர்களை தவிர்த்து ஏனையோரை  மைத்திரி அழைக்கின்றார் என நினைக்கின்றேன்.  ஆகவே புலம்பெயர் நாடுகளிலிருந்து   இனியும் விடுதலைப்புலிகளை / கொடிபிடிப்பவர்களை திட்டிக்கொண்டிருக்காமல்   சொந்த மண்ணுக்கு திரும்புங்கள். :icon_idea:  :D  :lol:
 
இங்கே  இருந்த இடத்தில்  இருந்தபடி புற்றெடுக்காமல் அங்கேயாவது  பிரயோசனமான  வேலை பார்க்க  மைத்திரி அன்ட் கோ அழைக்கின்றது .  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

வருவோம் .....
ஆனா வரமாட்டோம்!

(உங்களுக்கு மட்டும்தான் தாரளா மனசா.... எமக்கும் அது இருக்கில்லே)

  • கருத்துக்கள உறவுகள்

வருவோம் .....

ஆனா வரமாட்டோம்!

(உங்களுக்கு மட்டும்தான் தாரளா மனசா.... எமக்கும் அது இருக்கில்லே)

 

 

இது சிங்களவனின் பிறப்புக்கொள்கை....

வாங்கோ

வாங்கோ வந்து இலங்கை முழுவதும் தொழில் செய்யுங்கோ என்பான்

நாம  காசையும் போட்டு

உடலை வருத்தி

24 மணி நேரமும் உழைத்து

பொருளாதார ரீதியாக கொஞ்சம் நிமிர்த்தி எழ...

கத்தி வாளோட கூட்டமா வந்து

கப்பலில் உடுத்த உடுப்புடன் அனுப்பி வைப்பான்

 

பின்னர் மீண்டும் அழைப்பு..

மீண்டும் கப்பல்...

எத்தனை தரம் செய்தாலும்

சிங்களவனுக்கே ஆச்சரியமாக இருக்கும்

இவ்வளவு எளிதில் மறந்து விடுகிறார்களே என்று....

  • கருத்துக்கள உறவுகள்

ராணியார் சொன்னாராம் போராடும் 300 பேருக்கும் அரசு மாறியது தெரியாது என்று.

கிழவிக்கு இந்த வயசிலும் குறும்பு :)

இதையொட்டி ஆக ராணியே பிரஸ்தாபிச்சுட்டார் என்று நெக்குருக வேறு செய்யுறம் :)

ராணியார் சொன்னாராம் போராடும் 300 பேருக்கும் அரசு மாறியது தெரியாது என்று.

கிழவிக்கு இந்த வயசிலும் குறும்பு :)

இதையொட்டி ஆக ராணியே பிரஸ்தாபிச்சுட்டார் என்று நெக்குருக வேறு செய்யுறம் :)

பேய் பகிடி . :icon_mrgreen:

ராணியார் சொன்னாராம் போராடும் 300 பேருக்கும் அரசு மாறியது தெரியாது என்று.

கிழவிக்கு இந்த வயசிலும் குறும்பு :)

இதையொட்டி ஆக ராணியே பிரஸ்தாபிச்சுட்டார் என்று நெக்குருக வேறு செய்யுறம் :)

என்ன ஒரு புல்லரிப்பு ..... அட இந்த அறிவையெல்லாம் நம் நாட்டுக்கு பயன் படுத்தி இருக்கோணும் ....

பேய் பகிடி . :icon_mrgreen:

மாமாவுக்கு  ஓரே குசும்பு தான் .....

  • கருத்துக்கள உறவுகள்

புலி/ புலி ஆதரவாளர்களை தவிர்த்து ஏனையோரை  மைத்திரி அழைக்கின்றார் என நினைக்கின்றேன்.  ஆகவே புலம்பெயர் நாடுகளிலிருந்து   இனியும் விடுதலைப்புலிகளை / கொடிபிடிப்பவர்களை திட்டிக்கொண்டிருக்காமல்   சொந்த மண்ணுக்கு திரும்புங்கள். :icon_idea:  :D  :lol:
 
இங்கே  இருந்த இடத்தில்  இருந்தபடி புற்றெடுக்காமல் அங்கேயாவது  பிரயோசனமான  வேலை பார்க்க  மைத்திரி அன்ட் கோ அழைக்கின்றது .  :icon_mrgreen:

 

கு.சா... ஆயிரத்தில் ஒரு வார்த்தை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.