Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறால்கள் பிடிபடும் பருவகாலம்

Featured Replies

article_1426746085-a.JPG

 

 

இறால்கள் பிடிபடும் பருவகாலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், கல்லடிப்பாலத்துக்கு அருகிலுள்ள  வாவியினுள் மேடை அமைத்து, ஒளிரும் இலாம்புகளை தொங்கவிட்டு இறால்கள் பிடிக்கும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

 

கடந்த ஒரு வாரகாலத்திலிருந்து  இறால்கள் அதிகளவில் பிடிபடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சேம்பு இறால், மணல் இறால்கள்  ஒரு கிலோ 400  ரூபாய்க்கும்  வெள் இறால்கள் ஒரு கிலோ  600 ரூபாய்க்கும் மட்டு இறால்கள் ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும் வரையும், கால்கள் பருத்த கோம்பை இறால்கள் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் கூறினர். -

article_1426746155-c.JPG

 

http://www.tamilmirror.lk/142112#sthash.bk3gaR26.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மாரி முடிந்து மட்டுநகரிலும் இப்போ வசந்த காலம். பாடும் மீன்களின் இசைகேட்க இறால்கள் நிறைய வருகை தந்திருக்கலாம். கோட்டைமுனைப் பாலத்தடியில் விற்கப்படும் இறால் வடைக்கு ஈடு இணை வேறெங்கும் இல்லை. 

Possibly-the-best-Isso-Vade-in-the-islan

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டைமுனைப் பாலம். ம்.ம்....,மட்டக்களப்பின் அழகே அழகு.

கோட்டைமுனைப் பாலம். ம்.ம்....,மட்டக்களப்பின் அழகே அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச், ரகு,

மழைநாளில் மட்டுநகரின் அழகோ தனி அழகுதான்.

கோட்டை முனைப் பாலத்தில் அப்படி ரசிக்க பெரிதாய் ஒன்றுமில்லையே?

கல்லடிப்பாலத்தை சொல்கிறீர்களா?

ரால் வடையை விட எனக்கு காத்தான்குடி "டல் கோப்பி"தான் பிடிக்கும் :)

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை முனைப் பாலத்தில் அப்படி ரசிக்க பெரிதாய் ஒன்றுமில்லையே?

அது அவருக்குப் பக்கத்தில் யார் இருந்தவை எண்டதைப் பொறுத்தது.. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். மட்டக்களப்பு என்றுவரும்போது அதன் பசுமையான நிகழ்வுகளும் கூடவே வந்துவிடுகின்றன.

 

ஆகவேதான் எனக்கு எல்லாமே அழகாகத் தெரிகிறது.

 

கோட்டைமுனைப் பாலமும் அழகுதான். அதைவிட எனக்கு உப்புக் கராஜ் பாலம்தான் அதிகம் பிடிக்கும். அடிக்கடி தாண்டவன்வெளிக்கு அந்தப் பாலத்தினூடுதான் போய்வருவேன். மழைக் காலம் என்றால் பாலத்தின்மேலால் ஆறு ஓடும். சைக்கிளில் அந்தத் தேசமெங்கும் சுற்றி வந்திருக்கிறேன்.

 

எல்லாவற்றிற்கும் மேலாய், எனக்கு உண்மையான நண்பர்களையும், இனிமையான மனிதர்களையும் , உண்மையான காதலியையும் தந்த ஊர் மட்டக்களப்பு.

 

அது ஒரு அழகிய கனாக் காலம் !

 

கோஷான் நீங்கள் மட்டக்களப்பில் இருந்திருக்கிறீர்களா? எப்போது, எங்கே???

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சாம் தம்பிமுத்துவின்ரை பண்ணை றால்தான் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

மட்டில் நான் இருந்தேன், இருக்கிறேன், இனியும் இருப்பேன் :)

புளியந்தீவு, கல்லடி, அரசடி இப்படி பல இடங்களில்.

உப்புகராஜ் என்று இப்போ சொன்னால் கோவப்படுவார்கள். அது இப்போ யூகே (யு போர் உப்பு கே போர் கராஜ் :) )

பல மாடி வீடுகள், 3, 4 லகரங்களில் போகிறது ஒரு பேர்ச்.

சாம் தம்பிமுத்துவின் றால் பற்றித்தெரியாது ஆனால் அருண் தம்பிமுத்துவின் அரசியல் - பிண நாத்தம் :)

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

மட்டில் நான் இருந்தேன், இருக்கிறேன், இனியும் இருப்பேன் :)

புளியந்தீவு, கல்லடி, அரசடி இப்படி பல இடங்களில்.

உப்புகராஜ் என்று இப்போ சொன்னால் கோவப்படுவார்கள். அது இப்போ யூகே (யு போர் உப்பு கே போர் கராஜ் :) )

பல மாடி வீடுகள், 3, 4 லகரங்களில் போகிறது ஒரு பேர்ச்.

சாம் தம்பிமுத்துவின் றால் பற்றித்தெரியாது ஆனால் அருண் தம்பிமுத்துவின் அரசியல் - பிண நாத்தம் :)

 

 

நான் 3 வருடங்கள் புளியந்தீவில் இருந்தேன். 1988 - 1990 வரை. மிக்கேல் கல்லூரியில் படித்துக்கொண்டு, கத்தோலிக்க அச்சகத்திற்குப் பின்னாலிருந்த மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். 

 

எனது வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாத பசுமையான நினைவுகளைத் தந்த அந்த 3 வருடங்கள் !

யாழ்ப்பானத்திலும் வல்லை பாலத்துக்கு இருபுறமும் பெருமளவான றால் பிடிபடும் இடமாகும்.பெரும்பாலும் றால் கூடு (இந்த பெயர் சரியோ தெரியாது, நாங்கள் அப்படிதான் சொல்லுரனங்கள்) பாவித்துதான் பிடிபார்கள். சின்ன ரால் தான் ஆனல் நல்ல ருசி. காலை மற்றும் மாலை வேளைகளில் வல்லை பாலத்துக்கு போனால் வாங்கமுடியும். நியமான விலைக்கு தருவார்கள். ஆகவே பேரம் பேசவேண்டிய தேவை இல்லை. அப்படி அங்கை வாங்க முடியாவிடல், ஆவரங்கால் சந்தியில் இருந்து வல்லை போற ரோடில ஒரு கள்ளு கோப்பிரேசன் இருக்குது, அதுக்கு பக்கதிலை வைத்து விக்கிரவை. அந்த இடத்தில றால் மட்டுமில்லை மீன், நண்டு போன்றவயும் வாங்க முடியும். நல்ல ஐஸ் போடாத சாமான்கள், சமைத்து சாப்பிட சூப்பர் ஆக இருக்கும். நான் அந்தபக்கம் போனால் றால் வாங்காமல் வருவது குறைவு.நீங்களும் சந்தர்பம் கிடைத்தால் ஒருக்கால் வாங்கி சாப்பிட்டு பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் சேவயர். இதேபோல் பொன்னாலை பாலத்திலும், பண்ணைப் பால வீதியிலும் கூட விக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தை பற்றி சொல்கின்றீர்கள்....செங்கலடி கறுத்த பாலத்தைபற்றி தெரியுமோ ? அதுவும் கொள்ளை அழகு......நானும் 10 வருடம் அங்கே இருந்தேன்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

12.jpg

 

மீன்மகள் பாடுகின்றாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டுநகர் அழகான மேடையம்மா - இங்கு
எட்டுத்திசையும் கலையின் வாடையம்மா 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் புத்தன். பதுளை ரோட்டில் வரும். இப்ப திருத்தி கட்டி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

4577.jpg

 

படத்தில் காணப்படும் கறுப்பு இறால்கள் கொக்கிளாய், நாயாறு, சுண்டிக்குளம், ஆனையிறவு சிறுகடலில் அதிகமாக பிடிக்கப்படுகின்றது .


white_prawns.jpg

 

கடலில் பிடிக்கப்படும் வெள்ளை இறால் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகு,

மட்டில் நான் இருந்தேன், இருக்கிறேன், இனியும் இருப்பேன் :)

புளியந்தீவு, கல்லடி, அரசடி இப்படி பல இடங்களில்.

உப்புகராஜ் என்று இப்போ சொன்னால் கோவப்படுவார்கள். அது இப்போ யூகே (யு போர் உப்பு கே போர் கராஜ் :) )

பல மாடி வீடுகள், 3, 4 லகரங்களில் போகிறது ஒரு பேர்ச்.

சாம் தம்பிமுத்துவின் றால் பற்றித்தெரியாது ஆனால் அருண் தம்பிமுத்துவின் அரசியல் - பிண நாத்தம் :)

 

றாலுக்குள் அரசியலை கொண்டுவரப்படாது.  :)

இதிலை இப்படியே நண்டு பற்றியும் தொடரலாமே.....
வெள்ளை புட்டும் நண்டு கறியும் றால் பொரியலும் சூப்பர் ....

  • கருத்துக்கள உறவுகள்

இறால் சாப்பிட்டதே இல்லை :(

சிஷ்யன் ஆச்சிரமத்தில் இருப்பதால் கவுச்சி சாப்பிடுவதில்லை.. ஆனால் குருமார் எல்லோரும் அசைவப்பழங்கள்தான்.. :lol:

  • தொடங்கியவர்
கிழக்கில் கொழுத்தும் வெயிலும் வெள்ளரிப்பழ வியாபாரமும் 
 
vellarippalam%20222581.jpg
 
 
கிழக்கிலங்கையைச் சேர்ந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தற்பொழுது வெள்ளரிப்பழ சீஸன் ஆரம்பமாகியுள்ளது. வெள்ளரிப்பழ உற்பத்திக்கு பெயர் பெற்ற கிரான்குளம் போன்ற பிரதேசங்களிலிருந்து பெறப்படும் வெள்ளரிப்பழங்கள் பிரதான வீதிகளிலும், முக்கிய நகர்ப் பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
 
நாளாந்த வருமானம் பெறும் நோக்குடன் ஓட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளிலும் கொண்டு வந்து பலர் வெள்ளரிப் பழங்களை விற்பனை செய்கின்றனர். ஐம்பது பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தால் 1000 ரூபாவுக்குக் குறையாது வருமானம் கிடைப்பதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் தற்பொழுது கடும் வெயிலுக்கு தாகசாந்தி பெற வெள்ளரிப் பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
 
vellarippalam%20222583.jpg
 
vellarippalam%20222582.jpg
 
vellarippalam%20222584.jpg
 
 
 
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல் மட்டக்களப்பில் சட்டியுடன் தயிரும் விற்பார்கள்.அதன் சுவையே தனி.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பலகாமத்திலும் சட்டியுடன் தயிர் விற்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.