Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகசின் சிறைச்சாலையில் முன்னாள் போராளி மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகசின் சிறைச்சாலையில் முன்னாள் போராளி மரணம்!

[Friday 2015-05-15 08:00]
dead-body-200-news.jpg

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி நேற்று உயிரிழந்துள்ளார்.மகசின் சிறைச்சாலைக் கைதியான 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளியே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

 

நேற்றுமுன்தினம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி விழுந்தபோதிலும், இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

  

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் சிறைக் கைதி இவராவார். சிறை அதிகாரிகளின் அசமந்த போக்கே இம்முன்னாள் போராளியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என ஏனைய அரசியற் கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

சயனைட் அருந்திய நிலையில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு காப்பாற்றப்பட்ட இவர், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கைதிகளுக்கு வழங்கும் சலுகைகள், முன்னாள் போராளிகளுக்கு சிறை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லையெனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132102&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

அரசியல் கைதிகளுக்கு... பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும்.. விடுதலை இல்லையோ..?! சம்பந்தர் இது பற்றி எல்லாம் கருத்துச் சொல்லமாட்டார் போல. அவர் பெரிய இடத்து ஆள் போலும். இதெல்லாம் அவர்களுக்கு புறக்கணிக்கத்தக்க.. சிறுசம்பவங்கள். :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!
 

ஆழ்ந்த இரங்கல்கள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

அரசியல் கைதிகளுக்கு... பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும்.. விடுதலை இல்லையோ..?! சம்பந்தர் இது பற்றி எல்லாம் கருத்துச் சொல்லமாட்டார் போல. அவர் பெரிய இடத்து ஆள் போலும். இதெல்லாம் அவர்களுக்கு புறக்கணிக்கத்தக்க.. சிறுசம்பவங்கள். :(:rolleyes:

 

அடுத்த பாராளுமன்றத்திலேயே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு...

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/157562-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A

எமது சிங்கள ஆருயிர் கூட்டாளிகள் தினசரி விடும் அறிக்கைகளை உன்னிப்பாக கவனித்துவிட்டு கருத்தெழுதவும்.b0977289-14d3-4248-9673-80c75dfa59fa_zps  

Edited by குமாரசாமி

வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

2012 தோழன் சதீஸ் பற்றி எழுதிய பதிவு :-

 

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்.

2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான்.

வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ?

அவனை நம்பிய அவனது மனைவி கவிதா அவனது குழந்தை சாகித்தியன் இருவரினதும் கண்ணீர்க்குரல் சதீசின் கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே சிந்த வைக்கிறது. ஒரு காலத்தின் வரலாறு ஒரு இனத்தின் விடுதலையை நேசித்தவன் கடமைக்காகவே குடும்பம் என்ற கூட்டைக் கட்டியவன். இன்று அனாதையாய் எல்லாம் இழந்து 4வருடங்கள் சிறையில் அனுபவித்த துயரின் காயங்கள் ஆற முன்னர் இன்று கோமாநிலையில் கிடக்கிறான்.
காரணம் அறியப்படாத மர்மம் சதீசின் காயங்களிலிருந்து வழிகிறது.

சதீஸ் காப்பாற்றப்பட வேண்டும். அவனுக்கான உதவி தேவைப்படுகிறது. ஈரமுள்ள இதயங்களிடமிருந்து சதீஸின் உயிர்காக்க உதவியை வேண்டுகிறேன்.

 

கீழ்வரும் இணைப்பில் அழுத்தி மேலதிக விடயங்களை வாசிக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/107184-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/

 

 

சதீஸ் தனக்காக உதவி கேட்ட நேரம் அவனது துயரை இதே யாழ் களத்தில் எழுதியிணைத்திருந்தேன். அதற்கு கருத்துக்கள ஆயுதம் தரிக்காத போராளிகள் பலர் சதீசின் இழப்பை துயரை பலவாறு கூறுபோட்டு விமர்சித்தார்கள். இன்று அவன் சாகக்கிடக்கிறான். 2வருடம் முதல் அவனை கருத்தால் சந்தேகித்தவர்கள் ஒருமுறை தங்கள் கருத்துக்களை மீள வாசிக்க வேண்டும்.

பழைய இணைப்பு இது :-http://www.yarl.com/...showtopic=77208 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.