Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வுகிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பெறவேமாட்டோம் : கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி

Featured Replies

தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பத­வி­க­ளையோ, வேறு சலுகை­க­ளையோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரோ நானோ பெறப்போவ­தில்லை என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

r.sampanthan_3.jpg
கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள தனது இல்­லத்தில் இளைஞர் அமைப்­புக்­களை சேர்ந்­த­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அர­சியல் தீர்வை நோக்­கிய எமது பயணம் எவ்­வி­டத்­திலும் தரிக்­கப்­போ­வ­தில்லை ஜன­வரி 8 ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எத்­த­கைய வெற்­றியை அடைந்­தாரோ அந்த வெற்­றியை உறுதி செய்யும் வகையில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலின் முடி­வுகள் அமை­யு­மென நாம் பல­மாக நம்­பு­கின்றோம். அவ்­வாறு இல்­லை­யாயின் பல­மான பாரா­ளு­மன்­ற­மொன்றில் மைத்­தி­ரியின் அர­சாங்கம் அமைவதற்கு நாம் ஆத­ரவு நல்­கவும் தயா­ரா­க­வு­முள்ளோம்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவு அர­சாங்­க­மானது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அர­சாங்­க­மாக அமை­யு­மாயின் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை 2016 ஆம் ஆண்டு முடி­வ­தற்கு முன்­னமே பெற்றுத் தீர்­வோ­மென என்னால் நம்­பிக்­கை­யாக கூற முடியும். அர­சியல் தீர்­வொன்று கிடைத்­த­பின்பே ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அமைச்சுப் பத­வி­க­ளையோ அல்­லது வேறு சலு­கை­க­ளையோ நாம் பெற முயற்­சிப்­போம். தவிர எக்­கா­ரணம் கொண்டும் அர­சியல் தீர்வை அடை­யாத வரை எந்­த­வொரு அமைச்சர் பத­விக்­காவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாசித்து நிற்­கா­தென நீங்கள் உறு­தி­யாக நம்­பலாம்.

எங்கள் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்கள் வழங்­கப்­பட வேண்டும். அவர்­களின் பொரு­ளா­தார நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்­பதில் நான் மாற்றுக் கருத்துக் கொண்­ட­வ­னல்ல. அமைச்சர் பத­வி­யொன்றை எடுக்கும் சாத்­திய நிலை­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் கப்­பல்­துறை துறை­மு­கங்கள் மற்றும் கைத்­தொழில் அமைச்சுப் பத­வி­களைப் பெற்று லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு வேலை வழங்க வேண்­டு­மென்­பது எனது எண்ணமாகும். அந்த நிலை உரு­வா­கு­வ­தற்கு அர­சியல் தீர்­வைப்­பெறும் சாத­க­மான சூழ் நிலை­யொன்று உரு­வா­க­வேண்டும். உரு­வா­கு­மென்ற நம்­பிக்கை எமக்­குண்டு.

எமது மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் கூறி­யுள்ளோம். தெற்கில் எமது விஞ்­ஞா­பனம் பற்­றிய சல­ச­லப்பு ஏற்­பட்­டி­ருப்­பதை நான் அறிவேன். எமது உறு­தி­யான நிலைப்­பாட்­டையும் தெளி­வான கொள்­கை­க­ளையும் தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நாட்டை பிரி­யுங்கள் என்று கேட்­க­வில்லை. பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் நிலை­யா­னதும் நிரந்­த­ர­மா­னதும் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் தீர்­வொன்றை தாருங்கள் என்றே கேட்­கின்றோம். அவ்­வாறு கேட்­ப­தற்கு எமக்கு பூரண உரி­மை­யுண்டு. நாங்கள் இந்த நாட்டில் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்றோம். வட­கி­ழக்கு இணைந்த சமஷ்டி முறை­யி­லான பிராந்­திய சுயாட்சி வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதே எமது கோரிக்கை. அதுதான் எமது உறு­தி­யான நிலைப்­பா­டு­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வரை அவர் ஒரு தாராண்­மை­வாதி, மஹாத்­மா­காந்தி, நெல்சன் மண்­டேலா, மார்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலை­வர்­களின் கொள்­கை­களை நான் நேசிப்­பவன் அவர்­க­ளைப்­போல வாழ விரும்­பு­கின்­றவன். அந்த தலை­வர்­களின் கொள்­கையைப் பின்­பற்றி இந்த நாட்டில் வாழும் சகல மக்­க­ளுக்கும் சமத்­து­வ­மான உரி­மை­களைப் பெற்று வாழ என்­னா­லான முயற்­சி­களை மேற்­கொள்வேன் என்று ஜனாதிபதி கூறி­வ­ரு­வதை கேட்­கின்றோம். எனவே தான் இந்த ஜனா­தி­ப­தியின் காலத்­துக்குள் நிலை­யான நிரந்­தி­ர­மான அர­சியல் தீர்­வொன்றை தமிழ் மக்கள் பெற்று விட­வேண்­டு­மென்­பதில் த.தே.கூட்­ட­மைப்பு அக்­கறை கொண்­ட­தாக காணப்­ப­டு­கி­றது.

தேர்தல் முடிந்த பின்பு ஏற்­ப­டக்­கூ­டிய உள்­நாட்டு அர­சியல் சூழ் நிலையைக் காட்­டிலும் வர­வி­ருக்கும் புதிய அர­சாங்கம் எதிர்­கொள்ளக் கூடிய சவால்­க­ளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மனித உரிமைப் பேர­வையின் அறிக்­கை­யா­னது செப்டெம்பர் மாதம் அளவில் வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. ஏலவே ஒரு­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்ட மனித உரிமை அறிக்­கை­யா­னது இன்­றைய அர­சியல் சூழலில் அதுவும் வர­வி­ருக்கும் புதிய அரசாங்க சூழலில் பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருமென்று நம்பலாம். 66 வருடகாலமாக மையம் கொண்டிருந்த இனநெருக்கடிகளுக்கு நல்லதொரு விடிவுகாலத்தைப் பிறப்பிக்குமென்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். இவ்வாறானதொரு சாத்தியமான சூழலில் வெல்ல முடியாத சர்வதேசத்தால் அறியப்படாத மாற்றுக்கட்சிகளுக்கு உங்கள் வாக்குக்களையிட்டு உங்கள் அரசியல் உரிமைகளை பாழாக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/08/04/தீர்வுகிடைக்கும்-வரை-அமைச்சு-பதவிகளை-பெறவேமாட்டோம்-கூட்டமைப்பின்-தலைவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

//தீர்வுகிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பெறவேமாட்டோம் : கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி.//

முனியப்பர் கோவிலில் வைத்து, சத்தியம்  பண்ணினால் தான்.... சம்பந்தனின் பேச்சை நம்புவோம்.:grin:

//தீர்வுகிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பெறவேமாட்டோம் : கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி.//

முனியப்பர் கோவிலில் வைத்து, சத்தியம்  பண்ணினால் தான்.... சம்பந்தனின் பேச்சை நம்புவோம்.:grin:

அண்ணை பின்னுக்கு அகழி இருக்கு தெரியும்தானே

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் ஒண்டும் செய்யக்காணோம்! தள்ளியும் படுக்கிறியள் இல்லை!

என்ன பிளான் எண்டு ஒண்டுமாய் விளங்குதில்லை, சம்பந்தன் ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் ஒண்டும் செய்யக்காணோம்! தள்ளியும் படுக்கிறியள் இல்லை!

என்ன பிளான் எண்டு ஒண்டுமாய் விளங்குதில்லை, சம்பந்தன் ஐயா!

தலைவர் சொன்னபடியால் தேர்தலின் பின்பு ஒரு சில எம்.பிக்கள் நிச்சயம் கட்சி மாறுவார்கள் ,மாறி அமைச்சு பதவி பெறுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் தீர்வு நிச்சயம் என்றார். ஐதேகுவும்>ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சமஸ்டி முறையை நிராகரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.சம்பந்தருக்கு இது கடைசித் தேர்தல் மைத்திரிபால அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு கொடுப்போம் என்கிறார். ஆகவே கடைசியாய் அமைச்சுப் பதவியைப் பெறும் முயற்சியில் இறங்குவார். அதுவும் என்ன அமைச்சுப்பதவியைக் குறிவைத்திருப்பதாயும் சொல்கிறார்.மைத்திரி வெல்வதென்றால் மகிந்த வெல்ல வேண்மடுமென்றுதானே அர்த்தம். 2 பேரும் ஒரே கட்சி.ஒரே குழப்பமாய் இருக்குது சம்பந்தர் ஐயா!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தானும் குழம்பி எங்களையும் குழப்புகிறார்

இப்படி அப்படி சொல்லி குழப்பி தமிழ் மக்களை ஏமாற்றுவதுதான் சம்பந்தனின் குள்ள நரித்தனம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் ஒருத்தரும் இந்தபக்கம் தலை வைச்சே படுக்கேல்லை கண்டியளோ.....

அவையின்ரை கட்சி வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு முக்கிய அமைச்சர் பதவி. 
இது முதலாவது கூட்டு தேர்தலிலையே முடிவெடுக்கப்பட்டு விட்டது.
இப்ப நடக்கிறதெல்லாம் வெறும் நாடகம்.

இதில் சனம் வெறும் அப்பாவிகள்.

11822701_1030139136998551_21926229959689

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் ஒருத்தரும் இந்தபக்கம் தலை வைச்சே படுக்கேல்லை கண்டியளோ.....

அவையின்ரை கட்சி வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு முக்கிய அமைச்சர் பதவி. 
இது முதலாவது கூட்டு தேர்தலிலையே முடிவெடுக்கப்பட்டு விட்டது.
இப்ப நடக்கிறதெல்லாம் வெறும் நாடகம்.

இதில் சனம் வெறும் அப்பாவிகள்.

முன்னரும் இப்படி ஒரு வெடியை கொழுத்தி போட்டார்கள் ஆனால் பின்னர் புஸ்வாணாமானது .

இலங்கைக்குள் தான் தீர்வு கூட்டு ஆட்சி எமக்கும் ஒரு தீர்வு வரும் பட்சத்தில்  மந்திரி பதவியை எடுப்பதும் தவறில்லை .முப்பது வருட போரில் இழந்தவற்றை ஈடுசெய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்கவேண்டும் .

இனியும் இலங்கை பொருட்களை புறக்கணியுங்கோ என்று விட்டு தாமே இறக்கி வியாபாரம் செய்த வாலுகளின் வேலைகள் இனி வாய்க்காது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னரும் இப்படி ஒரு வெடியை கொழுத்தி போட்டார்கள் ஆனால் பின்னர் புஸ்வாணாமானது .

இலங்கைக்குள் தான் தீர்வு கூட்டு ஆட்சி எமக்கும் ஒரு தீர்வு வரும் பட்சத்தில்  மந்திரி பதவியை எடுப்பதும் தவறில்லை .முப்பது வருட போரில் இழந்தவற்றை ஈடுசெய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்கவேண்டும் .

இனியும் இலங்கை பொருட்களை புறக்கணியுங்கோ என்று விட்டு தாமே இறக்கி வியாபாரம் செய்த வாலுகளின் வேலைகள் இனி வாய்க்காது .

அண்ணை அந்த முப்பது வருசத்துக்கு முந்தின முப்பது வருசத்தை ஏன் மறந்தார் எண்டு எனக்கு விளங்கேல்லை? :wink:
தானும் கட்டுத்துவக்கு தூக்கினவர் எண்டதையும் அடியோடை மறந்து போனார் போலை கிடக்கு....:cool:

முன்னரும் இப்படி ஒரு வெடியை கொழுத்தி போட்டார்கள் ஆனால் பின்னர் புஸ்வாணாமானது .

இலங்கைக்குள் தான் தீர்வு கூட்டு ஆட்சி எமக்கும் ஒரு தீர்வு வரும் பட்சத்தில்  மந்திரி பதவியை எடுப்பதும் தவறில்லை .முப்பது வருட போரில் இழந்தவற்றை ஈடுசெய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்கவேண்டும் .

இனியும் இலங்கை பொருட்களை புறக்கணியுங்கோ என்று விட்டு தாமே இறக்கி வியாபாரம் செய்த வாலுகளின் வேலைகள் இனி வாய்க்காது .

அட விடுங்கப்பா சிறு பிள்ளைகள் இனிப்பை பார்த்து மயங்குவதை போல அவரும் கட்டு துவக்கை மணந்து பார்த்தவர் அவ்வளவுதான் ...சும்மா ஊஊ ....

அண்ணை அந்த முப்பது வருசத்துக்கு முந்தின முப்பது வருசத்தை ஏன் மறந்தார் எண்டு எனக்கு விளங்கேல்லை? :wink:
தானும் கட்டுத்துவக்கு தூக்கினவர் எண்டதையும் அடியோடை மறந்து போனார் போலை கிடக்கு....:cool:

அந்த முதல் முப்பது வருட நினைவில் தான் பலர் இப்பவும் உயிர் வாழ்கின்றார்கள் .

ஆயுதம் தூக்கிய அடுத்த முப்பதை பலர் மறக்க நினைக்கினம் .கொலையாளிகளின் அதி உச்ச வன்ம காலங்கள் அவை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த முதல் முப்பது வருட நினைவில் தான் பலர் இப்பவும் உயிர் வாழ்கின்றார்கள் .

ஆயுதம் தூக்கிய அடுத்த முப்பதை பலர் மறக்க நினைக்கினம் .கொலையாளிகளின் அதி உச்ச வன்ம காலங்கள் அவை .

ஆயுதத்தின் அகோரங்களை மறக்கவில்லை. ஆனால் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்கள் என்பதை தினசரி சிந்திக்க வேண்டியுள்ளது. ஆயுதம் தூக்குவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்களை நினைக்க........ அவர்கள் இன்றும் பழைய பாடப்புத்தகத்தையே புரட்டிக்கொண்டிருப்பதையும் பார்க்க வயிறு பற்றி எரிகின்றது.

100 நாள் முழக்கங்கள் முடிந்து தேர்தலில் வந்து நிற்கின்றது.

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை பார்கத்தெரியும்.....இது ஈழத்தமிழ் அரசியல் தலைவர்களிடமிருந்து நான் பார்த்த 50 வருட சொந்த அனுபவம்.

ஈழதமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்து நீங்கள் கற்ற அதே பாடங்கள் தான் நாங்களும் கற்றோம் .மீண்டும் அதே மனோபாவம் கொண்ட அரசியல் தலைவர்கள் இவர்கள் என்பதும் உண்மை 

ஆனால் எமது நாட்டு அரசியல் சூழல் முற்றாக மாறிவிட்டது சர்வதேச அரசியலும் மாறிவிட்டது .அவர்கள் விரும்பினாலும் எழுபதுகளில் அவர்கள் நடத்திய அரசியலை இனி நடத்த முடியாது .

தலைவர்கள் விட்ட தவறுகளில் இருந்து மக்கள் படித்த பாடம் மிகஅதிகம் . 

  • கருத்துக்கள உறவுகள்

2009 அழிவுக்கு பிறகு (இற்றை வரை) வராத சமஸ்டி திடீரென 2015 தேர்த்தல் தருணத்தில் கூட்டமைப்பால் அவிழ்த்து விடப்பட்டதன் மர்மம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்து நீங்கள் கற்ற அதே பாடங்கள் தான் நாங்களும் கற்றோம் .மீண்டும் அதே மனோபாவம் கொண்ட அரசியல் தலைவர்கள் இவர்கள் என்பதும் உண்மை 

ஆனால் எமது நாட்டு அரசியல் சூழல் முற்றாக மாறிவிட்டது சர்வதேச அரசியலும் மாறிவிட்டது .அவர்கள் விரும்பினாலும் எழுபதுகளில் அவர்கள் நடத்திய அரசியலை இனி நடத்த முடியாது .

தலைவர்கள் விட்ட தவறுகளில் இருந்து மக்கள் படித்த பாடம் மிகஅதிகம் . 

நீங்கள் கற்றது அரசியல் பாடமல்ல, வெறும் பழிவாங்கும் பாடமே. புலியைப் பிடிக்கவில்லை என்பதற்காக புலியின் தமிழீழ கொள்கை பிழை என்று வாதிடுபவர் நீங்கள். நான் முன்னமொருமுறை சொல்லியிருந்தேன் எனது தந்தையாருக்கு எழிலன். போன்றோர்கள் பல தொல்லைகளை கொடுத்தார்கள். ஆனால் எமது குடும்பம் தனிப்பட்ட நபரில்தான் கோபமே தவிர ஒட்டுமொத்த புலியிலோ கோபபடவில்லை. ஆனால் நீங்களோ யாரோ ஒரு தனிப்பட்ட ஒருவர் இருவர் செய்த பிழைக்கு ஒட்டுமொத்த இலட்சியத்தையே கேள்விக்குறியாக்குகிறீர்கள்

2009 அழிவுக்கு பிறகு (இற்றை வரை) வராத சமஸ்டி திடீரென 2015 தேர்த்தல் தருணத்தில் கூட்டமைப்பால் அவிழ்த்து விடப்பட்டதன் மர்மம் என்ன?

வேறை வழியே இல்லை புலியை தீவிரவாதி என்டாச்சு .செய்த சாகசங்கள் என்று ஒண்டும் கிடையாது தங்களுக்கு சொத்து சேர்த்தது வெளியில் சொல்ல ஏலாது .வாக்கு பிச்சை கேட்க்க மாட்டன் என்று கரவெட்டியில் சொல்லியாச்சு எதை வச்சு கேட்பது வென்ற பின் சிங்களவன் தருகிரானில்லை என்று  சொல்வது சுலபம் .

//தீர்வுகிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பெறவேமாட்டோம் : கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி.//

முனியப்பர் கோவிலில் வைத்து, சத்தியம்  பண்ணினால் தான்.... சம்பந்தனின் பேச்சை நம்புவோம்.:grin:

அவர்களுக்கே பதவியில்லாமல் புதிது புதிதாக பதவிகளை உருவாக்கி கொண்டுள்ளார்கள்.தமிழர் தரப்புக்கு வெளியில் இருந்து ஆதரவு அளி(ழி)ப்பதற்காக வழக்கம் போல ரொக்கமாக கோடிகளைத் தாரைவார்ப்பார்கள்.இவர்களுக்கு பணத்தை கொடுக்கலாம் என அமெரிக்கத்தூதரகமும் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது வேடிக்கைதான்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கற்றது அரசியல் பாடமல்ல, வெறும் பழிவாங்கும் பாடமே. புலியைப் பிடிக்கவில்லை என்பதற்காக புலியின் தமிழீழ கொள்கை பிழை என்று வாதிடுபவர் நீங்கள். நான் முன்னமொருமுறை சொல்லியிருந்தேன் எனது தந்தையாருக்கு எழிலன். போன்றோர்கள் பல தொல்லைகளை கொடுத்தார்கள். ஆனால் எமது குடும்பம் தனிப்பட்ட நபரில்தான் கோபமே தவிர ஒட்டுமொத்த புலியிலோ கோபபடவில்லை. ஆனால் நீங்களோ யாரோ ஒரு தனிப்பட்ட ஒருவர் இருவர் செய்த பிழைக்கு ஒட்டுமொத்த இலட்சியத்தையே கேள்விக்குறியாக்குகிறீர்கள்

உண்மை.... ராகா.
அர்ஜூன்.... இனியாவது, புலிகள் பற்றிய தனது தவறான, கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வார் என நம்புவோம்.
தனிப்பட்ட விடயங்களில், அர்ஜுன் நல்ல மனிதர். ஆனால்.... புலிகள் பற்றிய அவரது தவறான பார்வை, அவரின் மேல் வெறுப்பை உண்டாக்குகின்றது.

  • தொடங்கியவர்

Eingebetteter Bild-Link

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே.... சம்பந்தன் பையன், கோவணத்தோடை தானே... நிற்கிறார்.:grin:

உண்மை.... ராகா.
அர்ஜூன்.... இனியாவது, புலிகள் பற்றிய தனது தவறான, கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வார் என நம்புவோம்.
தனிப்பட்ட விடயங்களில், அர்ஜுன் நல்ல மனிதர். ஆனால்.... புலிகள் பற்றிய அவரது தவறான பார்வை, அவரின் மேல் வெறுப்பை உண்டாக்குகின்றது.

சிங்கள அரசுகளை விட தமிழர்களுக்கு அதிக அநியாயம் செய்தது புலிகள் தான் ,

சிங்கள அரசுகள்  வேண்டுமென்றே செய்த அநியாங்கள் அவை ,

புலிகள் அறிவு இல்லாமல் செய்த அநியாயங்கள் அவை .

புலிகள் அழிந்தால் தான் சிங்களவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போகவேண்டிய தேவை தமிழர்களுக்கு இருந்தது .

அது நடந்துவிட்டது இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு போவதையும் இப்ப புலிவால்கள் முடிந்தவரை பல ரூபங்களில் தடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள் .

அவர்களையும் இந்த தேர்தலுடன் வாலை சுருட்ட வைத்தால் சரி .

இங்கு கருத்து இடும் புலிகளையும் நான் அறிவு இல்லாத பட்டியலில் தான் வைத்திருகின்றேன் ,(சர்வதேச அரசியல் ). எனவே அவர்களையும் தாண்டித்தான் போகவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுகளை விட தமிழர்களுக்கு அதிக அநியாயம் செய்தது புலிகள் தான் ,

சிங்கள அரசுகள்  வேண்டுமென்றே செய்த அநியாங்கள் அவை ,

புலிகள் அறிவு இல்லாமல் செய்த அநியாயங்கள் அவை .

புலிகள் அழிந்தால் தான் சிங்களவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போகவேண்டிய தேவை தமிழர்களுக்கு இருந்தது .

அது நடந்துவிட்டது இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு போவதையும் இப்ப புலிவால்கள் முடிந்தவரை பல ரூபங்களில் தடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள் .

அவர்களையும் இந்த தேர்தலுடன் வாலை சுருட்ட வைத்தால் சரி .

இங்கு கருத்து இடும் புலிகளையும் நான் அறிவு இல்லாத பட்டியலில் தான் வைத்திருகின்றேன் ,(சர்வதேச அரசியல் ). எனவே அவர்களையும் தாண்டித்தான் போகவேண்டும் .

நாய்வாலை நிமிர்த்தமுடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.