Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

Featured Replies

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

SEP 01, 2015 | 2:52by கார்வண்ணன்in செய்திகள்

sarath-fonsekaவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறியிருந்தார்.

பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயம், அவரது கைத்துப்பாக்கியால் சுடப்பட்டதாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்தக் கூற்றை போருக்குத் தலைமை தாங்கிய சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து வெளியிடுகையில்,

“ பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. மண்டையோட்டின் ஒரு பகுதி பிளவுபட்டிருந்தது. அவர் தன்னைத் தானே சுட்டிருந்தால், தலையின் அடுத்த பக்கத்தின் ஊடாக ரவை வெளியேறியிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

அவரது தலையில் மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியிருக்கக் கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, சரத் பொன்சேகா, சட்டப்படி காவல்துறையினர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர் என்றும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும், மகள் துவாரகா ஆகியோர் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருணா கூறியுள்ளது குறித்து கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதுபற்றிய தகவல்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இரண்டாவது மகனான 12 வயது பாலச்சந்திரன், கைப்பற்றப்பட்டது பற்றிய படங்களை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும் அதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“போரின் பின்னர் எல்லாச் சடலங்களையும் இராணுவங்கள் அடையாளம் காண்பதில்லை. நாம் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியின் சடலத்தை கண்டுபிடித்தோம், அடையாளம் கண்டோம்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, போரின் இறுதிக்கட்டம் வரையில், அவருடன் செய்மதித் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவரான, கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

“நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத நிலையில், அடர்த்தியான சமர் ஒன்றில் ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று கூறுவது சாத்தியமற்றது. அப்போது பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும், நந்திக்கடலில் நடந்த இறுதிச்சண்டையில் மரணமாகி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

பிரபாகரனின் உடலில் ஒரே ஒரு காயம் மட்டுமே காணப்பட்டது. தலையில் தான் அந்தக் காயம் ஏற்பட்டிருந்தது என்று, பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்ட போது, அங்கிருந்த சண்டே ஒப்சேவர் வாரஇதழின் ஊடகவியலாளர் ரணில் விஜயபால தெரிவித்துள்ளார்

http://www.puthinappalakai.net/2015/09/01/news/9308

 

  • கருத்துக்கள உறவுகள்

6 வருடங்களுக்கு பின்பு இப்போ மீண்டும் இந்தியா ஊடகங்கள் ஏன் இதை பற்றி அலசி ஆராச்சி செய்யினம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சாகவே இல்லை. நீங்கள் வேறை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் அவர் செத்தாப்போல நீங்க விட்டுறிவியல் ....
இன்னும் தலைவரை எழுப்பித்தான் தேர்தலுக்கு கூட  வாக்கு பிச்சை எடுக்கிறியள் ....இதுக்குள்ள ரோசம்  வேற 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் தளபதிமாருக்கும் அவர் தேவைப்படுகிறார் .....அவர்களின் வருங்கால அரசியலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 அவரவர் தேவைக்கு ஏற்றபடி அவர் செத்திட்டார் , உயிரோடு இருக்கிறார் . அவ்வளவுதான். 

இப்படியான செய்திகளில் மட்டும் இங்கு சிலர் ஆஜராகுவதன் மர்மம் என்ன ? தலைவரில் அவ்வளவு பாசமாக்கும் நிர்மலனுக்கு :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கெனடியின் கொலையை இப்போதும் அலசிக்கொண்டிருக்கின்றார்கள்.
அதே போல் இவ்வுலகில் தமிழினம் இருக்கும் வரைக்கும் தலைவர் பிரபாகரனின் பெயரையும் உச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.

புலி வாந்தியர்களுக்கு சோறும் வந்துகொண்டேயிருக்கும். :innocent:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சாகவே இல்லை. நீங்கள் வேறை.

இறந்து விட்டார் என்ற 6 வருடங்களாக நீங்க நம்பகிறீர்களா?

அப்படியானால் எப்படி இறந்தார் என்ற ஆராய்ச்சி 6 வருடங்களாக ஏன்  முடியவில்லை..??

 

போரைதலைமை தாங்கி நடாத்திய சிறீலங்கா ராணுவ அதிகாரி சொல்கிறார்

குண்டு மறுபக்கத்தால் போகவில்லையாம்

சாட்சி  சொல்ல அவரால் கூப்பிடப்பட்ட 30 வருட இராணுவ அனுபவ ............  சொல்லுது 

போயிருந்ததை தான் பார்த்தாராம்...

இப்ப இருவரும் எதற்காக பேசுகிறார்கள்??

இலங்கையில் எல்லோராலும் கைவிடப்பட்டது

எதுக்கு இந்தியாவுக்கு ஓடிப்போயிருக்கு??

உங்களை நம்பித்தானே முதுகில் குத்தினேன்

இப்ப நடுறோட்டில் விட்டுவிட்டீர்களே என்று ஓலமிட்டுத்திரிகிறதா???

 

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாட அவியலை.. சிங்கள மக்களே சகிக்க முடியாமல் தான் அரசியலில் இருந்து அவரை ஓரமே கட்டிட்டாங்க. அதுபோல்.. கருணா கும்மானின் அவியல் தமிழ் மக்களைப் பொறுத்த வரை. பிரபாகரனை உச்சரிக்காமல்.. ஒரு சிலருக்கு தமது இருப்பை தக்க வைப்பதே கஸ்டம் போலக் கிடக்கு. tw_blush:

Edited by nedukkalapoovan

உண்மை என்றுமே அழியாது ....இது விளங்கினால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்

வரும்.......

ஆனா வராது..........

????

வரக்கூடாது என்பதில தானே சிங்களத்தை காட்டிலும் சில தமிழ்  விசமிகள் இருக்கினம் ....

வரக்கூடாது என்பதில தானே சிங்களத்தை காட்டிலும் சில தமிழ்  விசமிகள் இருக்கினம் ....

இருக்கமட்டும் வாறது கஷ்டம் தான்.

அதாலதான் துரோகிகளை ........................ம்

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள்கள் பூமிக்கு வருவதில்லை 
ஆனால் பூமியில் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் !

வராவிட்டாலும் .....

வாழ்வார்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.