Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்! 

கணவர் ஜெயக்குமாரன் தமிழினியின் பெயரை வைத்து புலி எதிர்ப்பு அரசியல் செய்வதாக கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார்.

தமிழினியைப் போலவே சில போராளிகள் புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்றும் அவர்களின் மரணங்கள் திட்டமிட்ட அழிப்பா என்ற சந்தேகத்திற்குரியது என்றும் தீபச்செல்வன் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.

தமது அரசியலுக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவுமே இவ்வாறான சந்தேகங்கள் உலாவ விடப்படுகின்றன என்றும் இதனால் புலம்பெயர் புலிகளின் உண்டியல் நிறையும் என்றும்,

தமிழினி விடுதலைப் புலிகள் காலத்தில் ஓய்வின்றி உழைத்தமையினாலேயே புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளானார் என்றும் ஜெயக்குமாரன் தனது முகப்புத்தகத்தில் எழுதினார்.

இந்த நிலையில் போராளிகளின் மரணங்கள் இன அழிப்புச் சார்ந்தவை என்று சந்தேகிப்பதை கண்டு ஜெயக்குமாரன் ஏன் பதற்றமடைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள தீபச்செல்வன் தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தீபச்செல்வன் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஐயோ! தமிழினிக்கு என்ன நடந்தது? உவங்கள் தான் (இலங்கை அரசு) ஏதோ செய்து போட்டாங்கள்.. என்று தமிழினி அக்காவின் மரணம் அறிவிக்கப்பட்ட நாளில் எங்கள் சனங்கள் எல்லாம் கொந்தளித்ததைப் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் தங்கள் அரசியலுக்காகவும் வயிற்றை நிரப்பவுமா இப்படி பேசினார்கள்?

தமிழினி அக்கா குறித்த என்னுடைய கவிதையில் "வாதையின் பிணியே சூழ்ச்சியாய்/ தன் புதல்வியை தின்றதென/ புலம்புகிறாள் தாயொருத்தி/ நெஞ்சில் மூண்ட காலத் தீயே/ தன் தலைவியை உருக்கியதென/ துடிக்கிறாள் சேனைத் தோழியொருத்தி" என்று அன்றைய நாட்களில் எழுதியதற்கு இதுதான் காரணம்.

போராளிகளின் மரணங்கள் இன அழிப்புடன் தொடர்புடையவை என சந்தேகிப்பதை கண்டு அண்ணன் ஜெயக்குமாரன் ஏன் பதற வேண்டும்?

புலிகள் இயக்கத்தில் ஓய்வின்றி வேலை செய்ததினால் தான் தமிழினி அக்காவுக்கு புற்றுநோய் வந்ததாகவும் தடுப்பில் இருந்தவர்கள் எல்லாம் நலமாக இருக்கிறார்கள் என்றும் இவர் அடித்துச் சொல்வதன் காரணம் என்ன?

ஜெயக்குமாரன் தன்னுடைய புலி எதிர்ப்பு அரசியலின் முதலீடாக தமிழினி அக்காவைப் பயன்படுத்துகிறார்.

தமிழ் அரசியல் தலைவர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் குற்றம் சாட்ட தமிழினி அக்காவை ஆயுதமாக கையாளுகிறார்.

எப்படியிருப்பினும் பொதுவாழ்வில் இருந்த போராளிகளின் தொடர் மரணங்கள் குறித்து கேள்வி கேட்கும் உரிமையை, கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை மறுப்பதன் நோக்கம் என்ன?

மனித குலத்திற்கு விரோதமாக நடந்த இன அழிப்பு தொடர்பில் ஆராயும் உரையாடும் செயற்பாட்டை எவரும் தடுக்க இயலாது.

அது ஒட்டுமொத்த ஈழ மக்கள் சார்ந்த விவகாரம். புலி ஆதரவாளர்களின், தமிழ் அரசியல் தலைவர்களின் “அரசியல் இது” என்று சொல்லிக் கொண்டு தமது அரசியல் உள் நோக்கங்களுக்காக இன அழிப்பை மறைப்பது மனித குலத்திற்கு விரோதமானது.

அத்துடன் தமிழினி அக்காவின் புத்தக வெளியீட்டு மேடையை பொன்.காந்தன், தன்னுடைய அரசியல் தனிமையின் புலம்பலை வெளிப்படுத்தும் அரங்காக பாவித்தார்.

ஆனந்தசங்கரி தன்னுடைய அரசியல் தோல்வியை புலம்பும் அரங்காக உபயோகித்தார். இப்படியெல்லாம் தாம் அரசியல் செய்து கொண்டு, தம்மை விமர்சிப்பவர்களை நோக்கி வசைக் கற்களை வீசுவதன் நோக்கம் தான் என்ன?

http://www.tamilwin.com/politics/01/101257

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எங்கட யாழ் கள துளசியே முகநூலில் நூல் வெளியிடப்படும் தறுவாயில் பல ஆதரங்களை இனங்காட்டிச் சொல்லிட்டா. இவருக்கு இவ்வளவு நாள் எடுத்திருக்குது...??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,இது துளசி எழுதித் தானா உங்களுக்குத் தெரிந்தது

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

நெடுக்ஸ்,இது துளசி எழுதித் தானா உங்களுக்குத் தெரிந்தது

ரதி அக்கா,
"துளசி" என்பதற்கும் .."துளசியே" என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

தேவாரம் மட்டும் பாடவே அனுமதி .

இதற்குள் ரவி அருணாசலம் வேறு கதை விடுகின்றார் .

தமிழினி எழுத முதலே பல விடயங்கள் எங்களுக்கு தெரிந்ததுதான் .

28 minutes ago, arjun said:

தேவாரம் மட்டும் பாடவே அனுமதி .

இதற்குள் ரவி அருணாசலம் வேறு கதை விடுகின்றார் .

தமிழினி எழுத முதலே பல விடயங்கள் எங்களுக்கு தெரிந்ததுதான் .

 

அர்ஜுன்,
சக கள உறவுகள் தேவாரம் பாடுவதாகக் கேலி செய்யும் நீங்கள் எழுதுவதும் தேவாரம்தான். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஏளனமான கருத்தையே அநேகமான உங்கள் பதிவுகள் காட்டுகின்றன. யாழில் புலி எதிர்ப்பு அல்லது மாற்றுக் கருத்தை உடையவர்கள் யதார்த்தமாகவும் சிந்திக்கத் தக்கதாகவும் எழுதுவதைப் பார்க்கிறோம்.  
பல விடயங்கள் தெரிந்தவர்கள் பயனுடையதாக எழுதப் பல விடயங்கள் இருக்கும். இப்படி ஒரே மாதிரியான கருத்தை எல்லாத் திரிகளிலும் எழுதிக் கொண்டிருக்காமல் ஆர்வமாக வாசிக்கத் தக்கவாறு எழுதலாமே. (எனது இக் கருத்து தமிழ்வின் கட்டுரையை ஆதரிப்பதற்கானது அல்ல)

14 hours ago, nunavilan said:

புலிகள் இயக்கத்தில் ஓய்வின்றி வேலை செய்ததினால் தான் தமிழினி அக்காவுக்கு புற்றுநோய் வந்ததாகவும் தடுப்பில் இருந்தவர்கள் எல்லாம் நலமாக இருக்கிறார்கள் என்றும் இவர் அடித்துச் சொல்வதன் காரணம் என்ன?

இங்கு கைது செய்யப்பட்டு விடுதலையானவர்கள் பலருக்கு புற்று நோய் உள்ளது - அதுவும் பெரும்பாலும் குடலில். சித்திரவதை காரணமாக இருக்கலாமோ  என்ற சந்தேகம் 

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கிட்டுது சசி.நன்றி

1 hour ago, இணையவன் said:

 

அர்ஜுன்,
சக கள உறவுகள் தேவாரம் பாடுவதாகக் கேலி செய்யும் நீங்கள் எழுதுவதும் தேவாரம்தான். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஏளனமான கருத்தையே அநேகமான உங்கள் பதிவுகள் காட்டுகின்றன. யாழில் புலி எதிர்ப்பு அல்லது மாற்றுக் கருத்தை உடையவர்கள் யதார்த்தமாகவும் சிந்திக்கத் தக்கதாகவும் எழுதுவதைப் பார்க்கிறோம்.  
பல விடயங்கள் தெரிந்தவர்கள் பயனுடையதாக எழுதப் பல விடயங்கள் இருக்கும். இப்படி ஒரே மாதிரியான கருத்தை எல்லாத் திரிகளிலும் எழுதிக் கொண்டிருக்காமல் ஆர்வமாக வாசிக்கத் தக்கவாறு எழுதலாமே. (எனது இக் கருத்து தமிழ்வின் கட்டுரையை ஆதரிப்பதற்கானது அல்ல)

இங்கு நான் சக உறவுகளை  சொல்லவில்லை தீபசெல்வன் ,ரவி அருணாசலம்  போன்றவர்களைதான் சொன்னேன் .

அனைத்து இயக்கங்களை பற்றியும் தான் அதில் இருந்தவர்கள் வெளியில் வந்து சுயவிமர்சனம் வைத்தார்கள் .உள்ளே இருந்து வைக்கமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் தமிழினியின் நூல் வந்தபின் புலிகளும் பிரபாவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது போல பொங்கி எழுவதுதான் சினத்தை தருகின்றது .

தமிழினியின் நூலில் இருக்கும் விடயங்கள் பொய் என்றால் மறுதலித்து உண்மையை எழுதவேண்டுமேயொழிய அவர் கணவரை திட்டி தீர்த்து ஆபாண்டங்க்களை எழுதகூடாது .ஆனால் புலிகள் இப்படியான பிரச்சாரங்களை போராட்ட காலம் முழுக்க செய்தே வந்தார்கள் .பலர் இன்றும் அது தொடரவேண்டும் என்று நினைகின்றார்கள் .

யாழும் அந்த விடயத்தில் விதி விலக்கல்ல ,

எமது அரசியலில் அமிரை ,சம்பந்தரை ,சுமந்திரனை,டக்கிளசை ,சித்தரை ,சுரேசை ,

இந்திய அரசியலில் கருணாநிதியை ,ஜெயலலிதாவை ,சோவை ,சோனியா காந்தியை 

இப்படி தமக்கு பிடிக்காதவர்களை எவ்வளவு கேவலாமாகவும் எழுதாலாம் ஆனால் புலிகள் விட்ட தவறுகளை கூட எழுதகூடாது என்பதுதான் பலர் நிலை .

புலிகள் செய்த தவறுகள் அவர்கள் சார்ந்த இணையங்களில் வெளிவாராவிட்டால் உலகிற்கு தெரியாது என்று நினைகின்றார்களோ தெரியாது .

நான் பல இடங்களில் வீம்பிற்குத்தான் எழுதுகின்றேன் அது மற்றவர்களை வீம்பிற்கு இழுத்து சுயஇன்பம் அடைபவர்களுக்காக .

மிக முக்கியமான விடயம் எவரை எவ்வளவு கேவலாமாக திட்டினாலும் கண்டும் காணமால் போபவர்கள் புலிகள் பற்றி ஒரு வார்த்தை எழுதினால் நிரைக்கு ஓடிவந்துவிடுவார்கள் .

அதுதான் யாழில் காலம் காலமாக இருக்கும் எழுதாவிதி.

தேவைஎன்றால் ஆயிரம் உதராணம் எடுத்து பதிகின்றேன் .

எனக்கு எல்லாம் தெரியாது ஆனால் இங்கிருப்பவர்கள் பலரை விட பல விடயங்கள் தெரியும் என்று நம்புகின்றேன் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில மாமேதைகள் ஈழத்தமிழர் வரலாற்றில் புலிகள் செய்தது தவறென்றும் மற்றவர்கள் செய்ததெல்லாம் சுத்தமானதும் ஆரோக்கியமானதும் என்பது போல்  ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கின்றார்கள். இது இன்றைய இலங்கை அரசின் போக்கிற்கு துடுப்பாகவே அமையும்.:innocent:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, குமாரசாமி said:

ஒருசில மாமேதைகள் ஈழத்தமிழர் வரலாற்றில் புலிகள் செய்தது தவறென்றும் மற்றவர்கள் செய்ததெல்லாம் சுத்தமானதும் ஆரோக்கியமானதும் என்பது போல்  ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கின்றார்கள். இது இன்றைய இலங்கை அரசின் போக்கிற்கு துடுப்பாகவே அமையும்.:innocent:

நீங்கள் மட்டும் என்னவாம்? அவர்மட்டுமல்ல உங்கள் போன்றவர்களும் திருந்தவேண்டியவர்களே.நீங்கள் ஒரு கொப்பில் தொங்குகிறீர்கள் அவர் இன்னொரு கொப்பில் தொங்குகிறார்.அவ்ளவுதான் உங்களுக்குள் வித்தியாசம்..உங்களில் யாரும் கீழ பூமிக்கு இறங்கிவந்து யதார்த்தத்தோட சிந்திக்க தயார் இல்ல.

Edited by Thirdeye

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Thirdeye said:

நீங்கள் மட்டும் என்னவாம்? அவர்மட்டுமல்ல உங்கள் போன்றவர்களும் திருந்தவேண்டியவர்களே.நீங்கள் ஒரு கொப்பில் தொங்குகிறீர்கள் அவர் இன்னொரு கொப்பில் தொங்குகிறார்.உன்fகளில் யாரும் கீழ பூமிக்கு இறங்கிவந்து யதார்த்தத்தோட சிந்திக்க தயார் இல்ல.

2009க்கு முதல் திருந்திய நீங்கள்  ஏன் இன்னும் அதே புள்ளியில் நிற்கின்றீர்கள்? அங்கு புலிகளும் அவர்களின் கொள்கைகளும் அழிக்கப்பட்டு விட்டனவே. இனியும் ஏன் புலம்புவர்களின் கதையை காது கொடுத்து கேட்கின்றீர்கள்? நாட்டுக்கு செல்லுங்கள். நடக்க வேண்டியதை கவனியுங்கள். என்னைப்போன்றவர்கள் இங்குதான் இருப்பார்கள். அங்கே தேனாறும் பாலாறும் ஓட வேண்டும் என நினைத்தவர்களுக்கு.......இப்போது அது இனிதே நடக்கின்றதாம்....இனியென்ன கவலை...செல்லுங்கள்.வாழ்த்துக்கள்.

மற்றவர்கள் செய்தது சுத்தம் என்று எந்த பதிவிலும் எழுதவில்லை ,

உயிரை பணயம் வைத்து பிழைகளை உள்ளே இருந்து விமர்த்தோம் .

ஆயுத போராட்டத்தில் போராடிய இயக்க வரலாறுகளை வாசிக்கும் போது அவர்கள் செய்த அநியாக கொலை ,கொள்ளை அப்பாவி மக்கள் மீது திணித அநியாயங்களை வாசிக்கும்போது இரத்தம் கொதித்தால் அவன் மனிதன் 

அதைவிட்டு எழுதியவர்களை துரோகிகளாக்கி கொலை செய்ய அலைந்தவர்கள் உண்மையை வெளிக்கொண்டுவரகூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு தாம் சார்ந்த இயக்கத்தை விசுவாசித்தவர்கள் .இப்படியானவர்களால் தான் போராட்டம் கொலைக்களம்  ஆகியது ,

தவறுகளை  கண்டும் காணமால் விட்டு அவர்களை நியாயபடித்திய ஊடகங்களும் போராட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கோட்டை விட இன்னொரு பெரிய கோடு கீறுவதையே வழக்கமாக ஒருசிலர் வைத்திருந்தாலும்........

நமக்குள் நடந்ததை நாமே விவாதித்து முடிவுக்குள் வருமுன் சிங்களவன் தனது விசத்தை பயிரிட்டு அறுவடையும் செய்து விடுவான். அதற்கு உரம் போடுவதும் நம்மவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

மற்றவர்கள் செய்தது சுத்தம் என்று எந்த பதிவிலும் எழுதவில்லை ,

உயிரை பணயம் வைத்து பிழைகளை உள்ளே இருந்து விமர்த்தோம் .

ஆயுத போராட்டத்தில் போராடிய இயக்க வரலாறுகளை வாசிக்கும் போது அவர்கள் செய்த அநியாக கொலை ,கொள்ளை அப்பாவி மக்கள் மீது திணித அநியாயங்களை வாசிக்கும்போது இரத்தம் கொதித்தால் அவன் மனிதன் 

அதைவிட்டு எழுதியவர்களை துரோகிகளாக்கி கொலை செய்ய அலைந்தவர்கள் உண்மையை வெளிக்கொண்டுவரகூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு தாம் சார்ந்த இயக்கத்தை விசுவாசித்தவர்கள் .இப்படியானவர்களால் தான் போராட்டம் கொலைக்களம்  ஆகியது ,

தவறுகளை  கண்டும் காணமால் விட்டு அவர்களை நியாயபடித்திய ஊடகங்களும் போராட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் .

 இதைத்தான் அர்யூன் நானும் சொல்லவாறன், இங்கு யார் என்ன எழுதினாலும் அதுக்குள்ளே புலிகளையும் இழுத்து வந்து இங்குள்ளவர்களை சீண்டி சுய இன்பம் காணுவது உங்களுக்கு பொழுது போக்காய்ப் போச்சுது. புலிகள் விட்டது தவறென்று நீங்கள் சொன்னால், சரியானதை நிறுவிக்காட்டிப்போட்டு சுட்டிக்காட்டுங்கள். அதை விட்டுப்போட்டு இல்லாத ஒருவரை இழுத்து வீறாப்புக் காட்டக்கூடாது. போராட்ட காலத்திலேயே புலம்பெயர்ந்து குடியும்,குடித்தனமும் ஆகியாச்சு. இழந்தது நாங்கள், அதை நாங்கள் பாத்துக்கொள்கிறோம். நீங்கள் குடியேறிய நாட்டில் நல்ல பிரயையாய் இருங்கள்.நீங்கள் புலிகளை பின்னாலிருந்து விமர்சிக்கும் ஒவ்வொருதடவையும் அவர்கள் எங்கள் முன்னால் இருக்கிறார்கள். உங்கள் எழுத்துக்களில் எந்த ஆக்கபூர்வமான கருத்துக்களும் இல்லை. போன பஸ்சுக்கு கத்திக் குளறி கைகாட்டி நீங்களும் குழம்பி, எல்லோரையும் குழப்பலாமென்று நினைக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா தமிழினியின் புத்தகம் வாசித்து விட்டீர்களா?...இல்லையாயின்,வாசிக்காமல் எப்படி உங்கள் கருத்தை வைப்பீர்கள்.

புத்தகம் வாசிக்காவிட்டாலும் பலரால் விம்ரசிக்கபடும் பகுதிகள் துண்டு துண்டாக வாசித்திருகின்றேன்.

புத்தகத்தை நான் வாசித்தாலும் புலிகளுக்குள் நடந்தவிடயங்கள் பற்றி எனக்கு தெரியாது அதனால் தமிழினி உண்மை எழுதினாரா அல்லது போய் எழுதினாரா என்று  எனக்கு  தெரியவரபோவதில்லை ,விமர்சனம் வைக்கும் பலர் நிலையும் அதுதான் .

இங்கு பிரச்சனை அதுவல்ல .தமிழினி தனது பக்கத்தை எழுதினார் ,

தமிழினி அதை எழுதவில்லை என்று தொடங்கி ,இடைசெருகல் நடந்திருக்கு என்று போய் இன்று அவர் கணவரை பற்றிய தாக்குதல்களில் போய்கொண்டிருக்கு ,

புலியில் இருந்தவர்கள் பிழைகளை சுட்டிகாட்டினால் ஓரளவு ஏற்றுகொள்ளலாம்

அதைவிட்டு தீபச்செல்வன் ,ரவி அருணாசலம் ,தமிழ் நதி என்ற புலிவியாபரிகள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை .

புளொட்டையும் உமாவையும் மிக கேவலமாக விமர்சித்து புதியதோர்  உலகம் வெளிவந்த போதுவிமர்சனத்தை தாங்கமுடியாமல் எழுதியவர்களை கொல்ல  அலைந்து திரிந்தவர்களையும் கடந்துதான் நாம் வந்தோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.