Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்'

Featured Replies


'ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்'
 
 

article_1464027564-msAA.jpgநாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/174181/-ஈழக-கனவ-த-ல-வ-யட-ய-ச-ய-வ-ம-#sthash.NL3u4s8T.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அதை பற்றி ஏன் நீங்கள் கவலை படுகிறீர்கள் ....?
உங்கள்----- அதை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்களே ?

Edited by நிழலி
Edited

  • கருத்துக்கள உறவுகள்


சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்கை பெறாதவர் சிங்கள மக்களுக்கு  அறிவுரை சொன்னால் ஏற்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ முயற்சி பண்ணுறார் போல.ஒன்றில் எமக்கு நல்லது(குறைந்த)நடக்கும்.அல்லது அடுத்த முறை இவர் வீட்டிற்க்கு போவார்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏதோ முயற்சி பண்ணுறார் போல.ஒன்றில் எமக்கு நல்லது(குறைந்த)நடக்கும்.அல்லது அடுத்த முறை இவர் வீட்டிற்க்கு போவார்.

அவர் மிகத்தெளிவாக இருக்கிறார்

எம்மவர் பற்றியும் உண்மை நிலையை அறிந்து

தனது இனத்துக்கும் பதவிக்கும் பங்கம் வராதபடி தான்பேசுகிறார்.

1 hour ago, நவீனன் said:



'ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்'

article_1464027564-msAA.jpgநாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி கூறினார்.

புலிகளுடன்  சண்டை பிடிப்பது ஒரு அரசியல் என்றால்

அவர்கள் வந்தவிடுவார்கள் என்பதும் ஒரு அரசியல் தான்..

அவர் தமிழரது போராட்டத்தை அழிப்பேன் என்றபடி

கொஞ்ச காணிகளை விடுவோம் என்பது தான் பேச்சின் நோக்கம்.

காணிகளை விட்டாலும் அதில் தமிழன் உட்காரமாட்டான் என்பதும் அவருக்கு நன்கு தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் தமிழ் மக்கள் எப்படி ஒரு நீதியான தீர்வை எதிர்பார்க்க முடியாதோ.. அதேபோல் சிங்களவன் தமிழ் மக்களிடம் ஈழக்கனவை அழிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. கனவு தான் காண முடியும்.

இவர் எப்போது லண்டனுக்கு வந்தாலும் வரவேற்பது.. தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி தான். அதுதான் செமக் கடுப்பில வந்து போறவர்... இப்படித்தான் பிதட்டச் செய்வார்.

எந்த இனத்திலும் துரோகிகளும் காட்டிக்கொடுப்பாளர்களும் எதிரிக்கு சோரம் போய் ஆதாயம் தேடுவோரும் இருப்பர். அதை எல்லாம் கடந்து தான் மக்களுக்கான பொது இலட்சியங்கள் வெல்லப்படும்.. பட வேண்டும். அது தமிழீழ விடுதலைக்கும் பொருந்தும். தமிழீழக் கொள்கைக்கும் பொருந்தும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனைகளை உணர்ந்து கொண்டால் மட்டுமே தீர்வு கிட்டுமா?
இவருடைய கூற்றுப்படி......சிங்களவர்களே  உணர்ந்து கொள்ளூங்கள், இலங்கையில் தமிழர்கள் ஈழக் கோரிக்கையைக் கைவிடும் வகையில் நான் அவர்களை ஏமாற்றுகின்றேன். அதற்காக நீங்கள் என்னை எதிர்க்காதீர்கள் என்பதே அர்த்தம்.  

இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதத்தை விட மோசமான சிங்கள பௌத்த இனமதவெறிக் கும்பலை முழுமையாக தோற்கடித்து எமது தாய் நாட்டை விட்டு அகற்றுவோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியர் நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ......எங்கடை ஆக்கள் உதுக்குத்தான் மும்முரமாய் அலுவல் பாக்கினம். நீங்கள் உங்கடை சனத்தை கவனியுங்கோ :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.