Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிங்கள அடையாளத்திற்கு பதிலாக இலங்கையர் என்ற அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டும்

Featured Replies

காணாமல்போனோர் உயிருடன் உள்ளனர் எனும் உணர்விலேயே உறவுகள் : அரசுக்கு கடப்பாடு உள்ளது என்கிறார் பிரதமர் 

 

யுத்­தத்தின் போதும் யுத்­தத்தின் பின்­னரும் காணாமல் போன­வர்கள் இன்னும் உயி­ருடன் இருக்­கின்­றனர் என்ற உணர்­வி­லேயே அவர்­க­ளது உற­வி­னர்கள் இருந்து வரு­கின்­றனர். ஆகவே அவர்­க­ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்­பிலும் அது குறித்து கண்­ட­றிய வேண்­டி­யதன் கடப்பாடு தொடர்­பிலும் நல்­லாட்சி அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­கி­றது என்று பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

DSC_6681_copy.jpg

விகி­தா­சார தேர்தல் முறை­மையில் விளை­வாக வடக்கில் அதி­க­மான தமிழர் பிர­தி­நி­தித்­து­வங்­களும் தெற்கில் அதி­க­மான சிங்­கள பிர­தி­நி­தித்­து­வங்­களும் உரு­வா­கின எனவே சுமுக­­மான அர­சியல் சூழல் ஒன்றை உரு­வாக்க வேண்­டிய தேவையும் உரு­வாகி உள்­ளது என்று பிரதமர் சுட்­டிக்­காட்­டினார்.

பம்­ப­லப்­பிட்டி ஓசோ ஹோட்­டலில் யாழ்ப்­பாணம் ஹாட்லி கல்­லூரி பழைய மாண­வர்கள் சங்கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பிர­தம விருந்­தி­­ன­ராக பங்­கேற்று உரை­யாற்றுகையி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­பட்ட மாற்­றத்­திற்கு தமிழ் மக்­களின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தேர்ந்­தெ­டுத்து பாரிய வர­லாற்று மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தினர்.

இலங்­கை­யி­லுள்ள அனைத்து மக்கள் குழுக்­க­ளையும் இலங்­கையர் என்ற கண்­ணோட்­டத்­தி­லேயே பார்க்­கிறோம். தந்தை செல்­வ­நா­ய­கத்தின் காலத்தில் குறிப்­பாக 1979 ஆம் ஆண்­டு­களில் கொண்­டு­வ­ரப்­பட்ட பயங்­க­ர­வாத தடைச் சட்டம், 2009 ஆம் ஆண்­டு­ வ­ரையில் யுத்தம் தொடரவும் இன முரண்­பா­டுகள் வளர்ச்­சி­ய­டை­வ­தற்கும் கார­ண­மாக இருந்­தது.

மேலும் இலங்­கையில் ஏற்­பட்ட சிவில் யுத்தம் வெறு­மனே இனங்­க­ளுக்கி­டை­யே மட்­டு­மல்ல. இதனை விடவும் இலங்­கைக்குள் அதா­வது வடக்கு பகு­தியில் வாழும் மக்­க­ளி­டையே மற்றும் தென்­ப­கு­தியில் வாழும் மக்­க­ளுக்­கி­டை­யிலும் பயங்­க­ர­வாதம் பர­வி­யி­ருந்­தது.

குறிப்­பாக தென்­ப­கு­தியில் 1977,1979 ஆம் ஆண்­டு­களில் வடக்கு கிழக்கை பொறுத்­த­மட்டில் பல சந்­த­தி­யி­ன­ருக்­கி­டையில் யுத்தம் மற்றும் அதன் பாதிப்­புகள் பர­வி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சி வடக்கு மற்றும் தெற்கு மக்­க­ளுக்­கி­டையில் சுமுக­மான உறவை ஏற்­ப­டுத்துவதில் அக்­க­றையுடன் செயற்­பட்டு வந்­துள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துவதற்­கான பல வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு எதிர்­க்கட்­சியின் பங்­க­ளிப்பும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது.மேலும் சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்பு என்­பது நீண்­ட­கால பொறி­மு­றையை கொண்­ட­தாக காணப்­ப­டு­கின்­றது.

இதில் இரண்டு பிர­தான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. முத­லாவ­தாக யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யிலும் அதன் பின்­ன­ரான காலத்­திலும் காணாமல் போன மக்கள் என்ன ஆனார்கள் என்­பது தொடர்­பிலும் அவர்­களை கண்­ட­றிய வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் நல்­லாட்சி அர­சாங்கம் அதிக கவனம் செலுத்தி வரு­கின்­றது.

காணாமல் போனோர் தொடர்­பி­லான அலு­வ­ல­கத்தின் மூலம் யுத்­தத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் காணாமல் போன தங்­க­ளது உற­வுகள் இன்னும் உயி­ருடன் இருக்­கி­ன்றார்கள் எனும் உணர்ச்­சி­பூர்­வ­மான நிலையில் மக்கள் உள்­ளனர். எனவே நாம் இது தொடர்பில் கூர்­மை­யாக ஆராய வேண்டும்.

அடுத்த­தாக உண்­மையை கண்­ட­றிதல் மற்றம் நல்­லி­ணக்க ஆணைக்­குழு மூலம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் உண்­மையை கண்­ட­றி­வதன் அவ­சியம் தொடர்பில் அதிக அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. சமூ­கத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சம­யங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஏற்­ப­டுத்­த­ப்பட வேண்டும். அதற்கு அனைத்­து­மதத் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். இதற்கு சம­யச்­ச­பைகள் அதிக பங்­க­ளிப்பு செலுத்­து­கின்­றன.

சில சந்­தர்ப்­பங்­களில் சட்ட நட­வ­டிக்கை எடுத்தல் என்­பது பொருத்­த­மான­தாக இருக்­கின்ற போதும் அது அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பொருந்­தாது எனவே சமூக தலை­வர்கள் இதற்­கான முக்­கிய பங்­கு­தாரர்­க­ளாக உள்­ளனர்.

கடந்த காலங்­களில் புலி­க­ளு­ட­னான யுத்தம் சிவி­லி­யன்­க­ளு­ட­னான மோதல் மற்றும் விடு­தலைப்புலிகள் தென்­ப­கு­தியில் உள்ள முக்­கி­ய­மான அர­சியல் தலை­வர்­களை இலக்­கு­ வைத்­தனர், முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் ஊட­ாக மோதல் என ஒரு கால­கட்­டத்தில் யாருடன் யார் மோதிக்­கொள்­கி­ன்றார்கள் என்­பதே தெரி­யாமல் போயி­ருந்­தது. தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­களை பற்­றியும் சிங்­க­ள­வர்கள் தமி­ழர்­களை பற்­றியும் குறை­கூறி நூல்­களை எழு­து­கின்­றனர்.

இவ்­வ­கை­யான கடந்­த­கால அனு­ப­வங்­களை வைத்து மக்­க­ளுக்­க­ிடையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மக்கள் மனதில் ஏற்­பட்­டுள்ள மாறுபட்ட கருத்­துக்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும். அது மட்­டு­மல்­லாது தற்­போது இலங்­கையின் சனத்­தொகை பரம்­பலில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஒரு­புறம் வடக்கு கிழக்கு பகு­தி­களில் சனத்­தொகை சடு­தி­யாக குறை­கின்ற போது மேல்­மா­கா­ணத்தில் தமிழ் மக்­களின் சனப் பரம்பல் சடு­தி­யாக அதி­க­ரிக்­கின்­றது.

குறிப்­பாக வத்­த­ளை­யி­லி­ருந்து ரத்­ம­லானை மற்றும் கொழும்பு தேர்தல் தொகுதிஇ கொலன்­னாவ, காலி முகத்­தி­டலை அண்­டிய பகு­தி­களில் தமிழ் மக்­களின் சனப்­ப­ரம்பல் கணி­ச­மான அதி­க­ரிப்பை காட்­டு­கின்­றது. மேலும் கொழும்பில் வெள்ளவத்­தை­யி­லேயே நிலத்­துக்­கான பெறு­மதி மிகவும் அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. இதுவும் சனத்­தொகை பரம்­பலில் முக்­கி­ய­மான தாக்கம் செலுத்தும் விட­ய­மாகும்.

மேலும் கிராமப் புறங்­களில் இருந்தும் அதி­க­ள­வான மக்கள் நக­ரத்தை நோக்கி படை­யெ­டுக்­கின்­றனர். குறிப்­பாக கொழும்பு, கண்டி, மாத்­தளை ஆகிய பகு­தி­க­ளுக்கு அதி­க­ளவில் இடம்­பெ­யர்­கின்­றனர். மலை­ய­கத்தில் லயன் அறையில் வாழும் மக்கள் தோட்­டப்­பு­றங்­க­ளுக்கு வெளியே வாழ்­வ­தனை அதிகம் விரும்­பு­கின்­றனர். அத்­தோடு மலை­யகத்தில் உள்ள இளை­ஞர்கள் தற்­போது லயன் அறை­களில் வாழ விரும்­பு­வ­தில்லை. பெரும்­பா­லான மக்கள் தற்­போது அம்­பாந்­தோட்­டைக்கு இடம்­பெ­யர்­கின்­றனர்.

அத்­தோடு நாடு­மு­ழு­வதும் ஹோட்டல் துறை­களை மேம்­ப­டுத்தி பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனால் நாட்டில் மிகப்­பெ­ரிய இடம்­பெ­யர்­வுகள் இடம்­பெ­று­கின்­றன. மேலும் இலங்கை மக்­க­ளி­டையே பாரம்­பரிய கலா­சாரம் வேரூன்­றிய பொழுதும் வெகு­சன ஊடக கலா­சா­ரமும் அதி­க­ளவில் பர­வி­யுள்­ளது.

எமது நாட்­டவர் ஆடை அணியும் விதம், பேச்­சு­வ­ழக்கு, உள்­ளிட்ட விட­யங்கள் ஆகி­ய­வற்­றிலும் பொலிவூட், ஹொலிவூட் பாணியில் மாறி­வ­ரு­கின்­றது. இதுவே உலக மய­மாக்­கலின் விளை­வாகும். அதே­நேரம் இன்று நினைத்­த­ மாத்­தி­ரத்தில் எங்கும் சென்று மீளத்­தி­ரும்­பு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்த கட்­ட­மாக அர­சி­ய­ல­மைப்பின் பக்கம் பார்க்­கின்ற போது தேர்தல் முறை­மையில் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறைமை பாரிய தாக்­கத்­தினை செலுத்­தி­யது. மேலும் தற்­போது தொகு­தி­வாரி முறையின் அவ­சியம் தொடர்­பிலும் ஆலோ­சிக்­கப்­பட்­டது. குறிப்­பாக விகி­தா­சார தேர்தல் முறை­மையில் வெற்­றி­பெற்ற கட்சி மட்­டுமே முழு­மை­யான ஆதிக்­கத்தை செலுத்தும். குறிப்­பாக இவ்­விரு தேர்தல் முறை­க­ளி­லுமே ஆசனப்பங்­கீடு தொடர்பில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் மக்கள் பிர­தி­நி­தித்­துவத்­தினை முறை­யாக ஒழுங்­கு­ப­டுத்த முடி­யா­துள்­ளது. என­வே தான் தற்­போது ஜேர்­ம­னிய கலப்பு பாணி­யி­லான பிர­தி­நிதித்­துவ முறைமை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்­து­கின்றோம்.

அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை தொடர்பில் உரு­வா­கி­யுள்ள பிர­சா­ரங்­க­ளுக்கு மத்­தியில் பிர­தமர் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை அதி­கார முறை­மையின் தேவை தொடர்­பிலும் குறித்த தேர்தல் முறைமை தெரிவு அதிகம் தாக்கம் செலுத்தும். இதுவே வடக்கு பகு­தியில் தமி­ழரும் தென் பகு­தியில் சிங்­க­ள­வரும் ஆதிக்கம் செலுத்த கார­ண­மாக அமைந்­தது.

அதி­கார பர­வ­லாக்­கத்தை நோக்கும் போது நாம் மூன்றாம் நிலை அதி­கார பர­வ­லாக்கம் குறித்து யோசிக்க வேண்டும். நாட்டின் பாது­காப்பு தொடர்­பிலும் எல்­லை­களை கடந்த இலங்­கையின் மாகாண மட்­டத்­தி­லான அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பிலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கடந்து அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு தேவை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க உள்ளோம்.

இந்­நி­லையில் நாம் சகல நாடு­க­ளு­டனும் சுமுக­மான உறவைப் பேண எத்­த­னிக்­கின்றோம். நாம் புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை இலங்­கையின் பொரு­ளா­தாரம் 500 பில்­லி­யனை தாண்டிச் செல்­கின்­றமை வர­வேற்­கத்­தக்கது.

தெற்­கி­லுள்ள மக்கள் வடக்கிற்கு செல்லவும் வடக்கில் உள்ளவர்கள் தெற்கிற்கு செல்லவும் சுமுகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.

அதனை அடையும் முயற்சியினையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம். எனவே பாடசாலைக ளுக்கிடையில் புதிய புரிந்துணர்வின் அடிப்படையிலான கலாசாரம் ஒன்று உருவாக்கப்படும்.

இதன் அடிப்படை யிலேயே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குஇ கிழக்கு பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக ஹாட்லி கல்லூரி யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கடுமையான பாதிப்புக்களை எதிர் கொண்டிருந்தது. அந்நேரத்தில் நான் குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த போது அப்பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான எவ்வித சூழ்நிலையும் காணப்படவில்லை. ஆனாலும் அவ்வருடத்தில் குறித்த பாடசாலை தேசிய ரீதியில் சாதனை செய்திருந்தது.

எனவே நாம் கல்வியின் மூலமே அபிவிருத்தியடைய முடியும் அதற்கான கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/9582

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கத்திற்கு கடந்த கால சம்பவங்களை தடையாகக் கொள்ளக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு தமிழ் சிங்கள அடையாளத்திற்கு பதிலாக இலங்கையர் என்ற அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு கடந்த கால சம்பவங்களை தடையாகக் கொள்ளக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு தமிழ் சிங்கள அடையாளத்திற்கு பதிலாக இலங்கையர் என்ற அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

   

நாட்டில் பல்வேறு இன மற்றும் மத மக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு தெற்கு அரசியல்வாதிகளை கொலை செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் காரணமாக நிதி மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்ததாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு யுத்தம் செய்ய நேரிட்டதாகவும் சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவை கடந்த கால நிகழ்வுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

யார் தாக்குவது யாருடைய உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என அடையாளம் காண முடியாத காலமொன்று காணப்பட்டது எனவும், சிங்கள ஊடங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயங்கள் கடும்போக்குவாதமாக அமையக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு நாம் நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு நாம் மருந்து போட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162524&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழரசு said:

நல்லிணக்கத்திற்கு கடந்த கால சம்பவங்களை தடையாகக் கொள்ளக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு தமிழ் சிங்கள அடையாளத்திற்கு பதிலாக இலங்கையர் என்ற அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

   

நாட்டில் பல்வேறு இன மற்றும் மத மக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு தெற்கு அரசியல்வாதிகளை கொலை செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162524&category=TamilNews&language=tamil

உங்களுடைய சிங்களக் காடைகள் எத்தனை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொன்றனர் என்பதையும் தெரிவித்தால் கூட்டிக் கழித்துப்பார்க்க வசதியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நரியினது ஊளை. அடுத்த ஆக்கிரமிப்புக்கான அடித்தளம். 

இவங்களெல்லாம் ஏதோ தாங்க இப்பதான் சிறிலங்காவுக்கு வந்து பார்க்கிறமாதிரியும், ஏதோ விடயங்களைக் கேள்விப்பட்டதுபோலவும் பேசி மக்களது மண்டைகளைக்கழுவி (கொன்றொழித்ததுபோக,ஏலவே போதை அது இது என்று இளையதலைமுறையைக் கழுவியாச்சு) மக்களை மந்தைகளாக்கிச் சவாரிசெய்ய முனைகின்றன சிங்கள பௌத்த உயரினவாதச் சிற்பிகள்.

இலங்கையரென்ற அடையாளம் தேவையெனில் ஒற்றையாட்சிமுறை மாற்றப்பட்டு, பௌத்தமதத்துக்கான முன்னுருமை நீக்கப்பட்டு, தேசியக்கொடியிலே இருக்கும் கத்தியைக்காட்டி அச்சுறுத்தும் சிங்கம், அரச இலை நீக்கப்பட்டு இருமொழிபேசும் நாடு என்ற சிந்தனையோடு இருவர்ணங்களைக்கொண்ட புதியதேசியக்கொடியையும் ஏற்படுத்தினால் அழிப்பினூடான இவளவு இழப்பு ,ஈகத்திற்கான சிறுமதிப்பாய்ந்த ஏற்பாகத் தமிழர்கள் ஏற்க முன்வரக்கூடும். அதைவிடுத்து இலங்கையரென்று தமிழரை அழிக்கும் செயற்பாட்டுக்குத் தமிழரையே அழைப்பது என்ன ஒரு உயரினவாத மமதை.    

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

 அதைவிடுத்து இலங்கையரென்று தமிழரை அழிக்கும் செயற்பாட்டுக்குத் தமிழரையே அழைப்பது என்ன ஒரு உயரினவாத மமதை.    

சிங்கள பொது மக்கள் இலங்கையில் உள்ள தமிழரை இந்தியர் என்றே கருதுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோணிகள் என்றே கூறுகிறார்கள். ரணில் அதை மாற்றி இந்த தமிழரும் இலங்கையர் என்று சிங்களவர் ஏற்றுக்கொள்ள வைக்க பார்க்கிறார். நீங்கள் தமிழர் இந்தியராக இருப்பதே நல்லது என்று நினைப்பது போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இலங்கையரும் இல்லை,கள்ளத் தோனியில் வந்த தமிழரும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர். தனித்துவம்மிக்கவர்கள்...ஒரு போதும் சிங்களவர்களோடு எம்மால் ஒன்றினைய முடியாது...சிங்களவர்களாலும் எம்மோடு சேர்ந்து வாழ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் இலங்கையரும் இல்லை,கள்ளத் தோனியில் வந்த தமிழரும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர். தனித்துவம்மிக்கவர்கள்...ஒரு போதும் சிங்களவர்களோடு எம்மால் ஒன்றினைய முடியாது...சிங்களவர்களாலும் எம்மோடு சேர்ந்து வாழ முடியாது.

கடந்தவாரம் டெய்லி மிரர் பத்திரிகை செய்தி ஒன்றின் பின் ஊட்டத்தில், ஒரு சிங்களவர் தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்பதாக கருத்து சொல்லி இருந்தார்.

அவருக்கு, இன்னொமொரு பதில் கருத்து : அப்படியானால் விஜயனும் 700 தோழர்களும், நல்ல தோணியிலயோ வந்தவையள்? 

பதில் சொல்ல அவர் ஏன் அங்க நிக்கப்போறார்? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

சிங்கள பொது மக்கள் இலங்கையில் உள்ள தமிழரை இந்தியர் என்றே கருதுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோணிகள் என்றே கூறுகிறார்கள். ரணில் அதை மாற்றி இந்த தமிழரும் இலங்கையர் என்று சிங்களவர் ஏற்றுக்கொள்ள வைக்க பார்க்கிறார். நீங்கள் தமிழர் இந்தியராக இருப்பதே நல்லது என்று நினைப்பது போல தெரிகிறது.

என்னாது கள்ளத் தோணியோ
யார் கள்ளத்தோணிகள் என்பது அண்ணைக்கு விளங்கவில்லை.
சிங்களவன் தான் கள்ளத்தோணியென்று விஜயனின் வருகையுடன்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலருக்குச் சிங்களவர் வாக்கே பொன்வாக்காக இருக்கின்றது

1 hour ago, ரதி said:

நாங்கள் இலங்கையரும் இல்லை,கள்ளத் தோனியில் வந்த தமிழரும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர். தனித்துவம்மிக்கவர்கள்...ஒரு போதும் சிங்களவர்களோடு எம்மால் ஒன்றினைய முடியாது...சிங்களவர்களாலும் எம்மோடு சேர்ந்து வாழ முடியாது.

அட்றா சக்கை அட்றா சக்கை

ஆகா அப்படிப் போடுங்கள் அரிவாளை
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் இலங்கையரும் இல்லை,கள்ளத் தோனியில் வந்த தமிழரும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர். தனித்துவம்மிக்கவர்கள்...ஒரு போதும் சிங்களவர்களோடு எம்மால் ஒன்றினைய முடியாது...சிங்களவர்களாலும் எம்மோடு சேர்ந்து வாழ முடியாது.

 

நீங்கள் எவ்வளவுதான் இப்படி ஊழையிட்டு கத்தினாலும் உலகம் உங்களை கண்டுகொள்ளாது. இந்த எண்ணத்தினால் தான் இவ்வளவு பேரழிவு எற்பட்டது. உலகம் எங்களை இப்படி நினக்க காரணம் ஆதி சுயநலத்தமிழர்களே.

2 hours ago, Jude said:

சிங்கள பொது மக்கள் இலங்கையில் உள்ள தமிழரை இந்தியர் என்றே கருதுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோணிகள் என்றே கூறுகிறார்கள். ரணில் அதை மாற்றி இந்த தமிழரும் இலங்கையர் என்று சிங்களவர் ஏற்றுக்கொள்ள வைக்க பார்க்கிறார். நீங்கள் தமிழர் இந்தியராக இருப்பதே நல்லது என்று நினைப்பது போல தெரிகிறது.

 

சிங்களவன் மட்டுமல்ல முழு உலகமும் அப்படித்தான் கூறுகின்றது.
எனக்கு பக்கத்தில் இருக்கும் பிலிப்பினோவும் அப்படித்தான் சொல்கின்றான்

59 minutes ago, Nathamuni said:

கடந்தவாரம் டெய்லி மிரர் பத்திரிகை செய்தி ஒன்றின் பின் ஊட்டத்தில், ஒரு சிங்களவர் தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்பதாக கருத்து சொல்லி இருந்தார்.

அவருக்கு, இன்னொமொரு பதில் கருத்து : அப்படியானால் விஜயனும் 700 தோழர்களும், நல்ல தோணியிலயோ வந்தவையள்? 

பதில் சொல்ல அவர் ஏன் அங்க நிக்கப்போறார்? 

 

அப்படி பார்த்தல் சிங்களவெனோ தமிழனோ அல்ல வேடுவ‌ர்களே இலங்கையின் ஆதி குடிமக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நாங்கள் இலங்கையரும் இல்லை,கள்ளத் தோனியில் வந்த தமிழரும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர். தனித்துவம்மிக்கவர்கள்...ஒரு போதும் சிங்களவர்களோடு எம்மால் ஒன்றினைய முடியாது...சிங்களவர்களாலும் எம்மோடு சேர்ந்து வாழ முடியாது.

இதுதான் யாதார்த்தம். 

*இங்கு ஊளையிடும் ஒரு சிலர் வேண்டுமென்றால் தங்களை கள்ளத்தோணிகளாக சொல்லிக்கொள்ளட்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

சிங்கள பொது மக்கள் இலங்கையில் உள்ள தமிழரை இந்தியர் என்றே கருதுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோணிகள் என்றே கூறுகிறார்கள். ரணில் அதை மாற்றி இந்த தமிழரும் இலங்கையர் என்று சிங்களவர் ஏற்றுக்கொள்ள வைக்க பார்க்கிறார். நீங்கள் தமிழர் இந்தியராக இருப்பதே நல்லது என்று நினைப்பது போல தெரிகிறது.

 

 

 

 


நாங்கள் முதலில் எம்மை புரிந்துகொண்டு எமது உரிமைகளுக்காக் குரல்கொடுப்பதே இன்றைய மீதமிருக்கும் எமது நிலங்களைக்காப்பதற்கான வழி.
 

  • கருத்துக்கள உறவுகள்
Follow 0
தமிழ் சிங்கள அடையாளத்திற்கு பதிலாக இலங்கையர் என்ற அடையாளம் கட்டியெழுப்பப்பட வேண்டும்

 

 

 

 

பிறகு உங்களை போன்ற உத்தமர்கள் எப்படி அரசியல் செய்யிறதாம்...தமிழனை வைத்துதானே இவ்வளவு நாளும் அரசியல் செய்யிறீயள் ....இலங்கையன் என்று நினைத்து அரசியல் செய்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது.... ஈழம் என்ற கருத்தியலே உருவாகியிருக்காது...

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Jude said:

சிங்கள பொது மக்கள் இலங்கையில் உள்ள தமிழரை இந்தியர் என்றே கருதுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோணிகள் என்றே கூறுகிறார்கள். ரணில் அதை மாற்றி இந்த தமிழரும் இலங்கையர் என்று சிங்களவர் ஏற்றுக்கொள்ள வைக்க பார்க்கிறார். நீங்கள் தமிழர் இந்தியராக இருப்பதே நல்லது என்று நினைப்பது போல தெரிகிறது.

ஆழிக்கப்படும் இனம் ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் தமிழர் தாயகமாகத் தமிழரும், அழிப்போராகவும் ஆக்கிரமிப்போராகவும்  சிங்களத் தலைமைகளும் (இவருடைய கட்சி ஆட்சியில்தான் தமிழினத்தின் உயிர்பாயிருந்த அறிவுச்சுரங்கத்தையே எரித்த காடையர் கூட்டம்) எதையும் தமது வசதிகருதி தமது இலக்குக்கருதி சொல்லலாம். ஆனா சில தமிழர்களே வக்காளத்து வாங்குவதுதான் எமதினத்தின் மிகப்பெரும் சாபம். 

நாங்கள் ரணிலை நம்பிட்டம்.

நன்றி!

வணக்கம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.