Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது!

Featured Replies

கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது!

 

கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது!



வன்னியின் கனகராயன்குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு வீதியின் பாரம்பரிய பெயரொன்று இராணுவ அதிகாரி ஒருவரின் சிங்களப் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் குறித்த அமைப்பு அண்மையில் தாக்கியிருந்தது.

சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு தமிழ் இனத்தின் மீதும் தமிழர் பிரதேசத்திலும்  திணிக்கப்படும் மதரீதியான அத்துமீறல்களையும் சிங்கள ஆதிக்கத்தையும் இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது என்றும் தமிழ் இனப் பற்றாளர்கள் என்ற அமைப்பு கூறியுள்ளது

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135390/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்சி ஆரம்பம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் இது தமிழர்களுடைய வேலையாக இராது. 

  • கருத்துக்கள உறவுகள்

சின்னனை உடைச்சிட்டு.. பெரிசா கட்டப் போறாங்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க விளையாட்டுகள் எல்லாம் சிங்கள பெளத்த - பேரினவாதிகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் கைவந்த கலை.

ஓருவேளை இன உணர்வுள்ள தமிழர்கள் இதைச் செய்திருந்தாலும்.. தமிழர் பூமி எங்கும்.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு கேட்டுக் கேள்வி இன்றி.. பெருகி உள்ள நிலையில்.. இதன் விளைவுகள் எதிர்மறையானதாகவும்.. சிங்கள பெளத்த பேரின விரிவாக்கத்திற்கு உதவும் வகையிலேயே அமையும். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

ஏற்கனவே ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் முஸ்லிம் காடையர்களால் உடைக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து 10 km தூரத்திலுள்ள  கனகராயன்குளத்தில் புத்தர்சிலை உடைக்கப்பட்டுள்ளது.

கள்ளக் காணி புகழ் ரௌடி ரிஷாட் கனகராயன்குளம் பகுதியில் சில முஸ்லீம் குடும்பங்களையும் குடியேற்றியது பழைய செய்தி. இந்த புத்தர்சிலை உடைப்பும் அந்தக் கள்ளக்காணிக் காடையர் கும்பலால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  

 

  • தொடங்கியவர்
கனகராயன்குளத்தில் புத்தர்சிலை உடைப்பு
கனகராயன்குளத்தில் புத்தர்சிலை உடைப்பு
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகா மிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
1472550518_30-8-2016%2015.8.36%204.jpg
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் 210 ஆவது கிலோமீற்றர் கல்லிற்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றடி உயரமான புத்தர் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரமான புத்தர்சிலை ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது.
1472550543_30-8-2016%2015.8.52%205.jpg
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
 
இதேவேளை உடைக்கப்பட்ட புத்தர்சிலைகள் இரண்டும் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, 

http://onlineuthayan.com/news/16952

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

ஏற்கனவே ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் முஸ்லிம் காடையர்களால் உடைக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து 10 km தூரத்திலுள்ள  கனகராயன்குளத்தில் புத்தர்சிலை உடைக்கப்பட்டுள்ளது.

கள்ளக் காணி புகழ் ரௌடி ரிஷாட் கனகராயன்குளம் பகுதியில் சில முஸ்லீம் குடும்பங்களையும் குடியேற்றியது பழைய செய்தி. இந்த புத்தர்சிலை உடைப்பும் அந்தக் கள்ளக்காணிக் காடையர் கும்பலால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  

 

இதை தடுக்க தமிழர் தலமை தவறியுள்ளது  பிழையாக விளங்கி கொள்ள வேண்டாம் 

ஆரம்பத்தில் புத்தர் சிலையை  வைக்க தவறியதை சொன்னன் 


தமிழர்கள் அவன்ட கோவில் கட்ட பிரச்சினை கொடுக்கிறார்கள் 


அவனுகள் அங்கே தமிழ் பாடசாலைகட்ட கூடாது என ஆர்ப்பாட்டம் வைக்கிறான்  எதுமுக்கியம் என்று குழப்பமாக இருக்கிறது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

சின்னனை உடைச்சிட்டு.. பெரிசா கட்டப் போறாங்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க விளையாட்டுகள் எல்லாம் சிங்கள பெளத்த - பேரினவாதிகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் கைவந்த கலை.

ஓருவேளை இன உணர்வுள்ள தமிழர்கள் இதைச் செய்திருந்தாலும்.. தமிழர் பூமி எங்கும்.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு கேட்டுக் கேள்வி இன்றி.. பெருகி உள்ள நிலையில்.. இதன் விளைவுகள் எதிர்மறையானதாகவும்.. சிங்கள பெளத்த பேரின விரிவாக்கத்திற்கு உதவும் வகையிலேயே அமையும். tw_angry::rolleyes:

அதே..

நம்ம  சனம் இவங்களுக்கு வேற வேலையில்லை என்று விட்டு தூங்கப்போய்விடும்..

  • கருத்துக்கள உறவுகள்

இது இடச்செருக்கின் வேலை....ரோட்டு முழுக்க மாட்டிறச்சிக் கடை விரைவில்.... கிழக்கு தோற்றூவிடும்...

1 hour ago, alvayan said:

இது இடச்செருக்கின் வேலை....ரோட்டு முழுக்க மாட்டிறச்சிக் கடை விரைவில்.... கிழக்கு தோற்றூவிடும்...

தனி ஈழம் கேட்டு போராடி எமது தேசம் கடைசியில் இஸ்லாம் வென்று விட்டதே. 

  • தொடங்கியவர்
கனகராயன்குளத்தில் புதிய புத்தர்சிலை
கனகராயன்குளத்தில் புதிய புத்தர்சிலை
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது.
 
கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பினரே கனகராயன்குளம் புத்தர் சிலையை உடைத்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
1472746426_160901074216_buddha_statue_kanakarayankulam_640x360_bbc_nocredit.jpg
இதேவேளை, இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில ,லங்கை ,ந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் என்.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
 
உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களு க்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அருண்காந்த் கூறியுள்ளார்.
 
கனகராயன்குளம் குறிசுட்டகுளம் அம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையே உடைக்கப்பட்டிருந்தது.
 
அந்த அம்மன் கோயில் பூசாரி உள்ளிட்ட அந்தப் பிரதேசத்து மக்கள், புதிய புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்ததாகவும் அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கனராயன்குளம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

http://onlineuthayan.com/news/17056

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நவீனன் said:
.
1472746426_160901074216_buddha_statue_kanakarayankulam_640x360_bbc_nocredit.jpg
 
அனேகமாக மதகுருமார்களின் முகங்களில் ஒரு அமைதியும், ஞான ஒளியும் தெரியும்.
இங்குள்ள குருமார்களின் முகங்கள் கடுவன் பூனையை நினைவுக்குக் கொண்டுவருகின்றனவே.:( 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:
உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களு க்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அருண்காந்த் கூறியுள்ளார்.
 

பாதுகாப்பு எனும் பெயரில் இராணுவமுகாமை விரிவாக்கம் செய்ய கரு கிடைச்சிட்டுது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை சிங்களவரை தட்ட உலகில் ஆள் கிடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1472746426_160901074216_buddha_statue_kanakarayankulam_640x360_bbc_nocredit.jpg

இவங்களை பார்க்க  பிக்குமாதிரியே தெரியுது?
இறைச்சிக்கடையிலை வேலையை  அரைகுறையிலை விட்டுட்டு ஓடிவந்தவங்கள் மாதிரியெல்லே தெரியுது..

39 minutes ago, குமாரசாமி said:

1472746426_160901074216_buddha_statue_kanakarayankulam_640x360_bbc_nocredit.jpg

இவங்களை பார்க்க  பிக்குமாதிரியே தெரியுது?
இறைச்சிக்கடையிலை வேலையை  அரைகுறையிலை விட்டுட்டு ஓடிவந்தவங்கள் மாதிரியெல்லே தெரியுது..

கோழித் திருடர்கள் மாதிரியும் முழிக்கிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.