Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெகிழி (நிமிடக்கதை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                              நெகிழி 

  குணாளனுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது. குணாளனின் தந்தையார் கந்தையருக்கும் கடுப்பேறிப் பேசிக்கொண்டே துப்பரவு செய்துகொண்டிருந்தார். கந்தையற்றை துணைவி பாக்கியமக்காவும் விடுவித்தகாணியைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட வேணுமெண்ட அவாவிலை  ஷஷ துலைவாங்கள் நிலமெல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்கள்,, என்று புறுபுறுத்தவாறு குப்பைவாரியால் குப்பைகளை இழுத்து ஒன்றாக்குவதில் முனைப்போடு நின்றார். ஆனால் இழுக்க இழுக்க வளவுக்குளாலை ஒரே பொலித்தீனாகவே வந்துகொண்டிருந்தது.. " உவங்கள் கண்ணிவெடியை எடுத்து முடிச்சாலும் இது முடியாதுபோல கிடக்கென்று,, அங்கலாய்த்தவாறு  இழுத்துக்கொண்டு நிற்க, அடுத்த வளவு அன்னம்மாக்காவும் தனது காணியை நோக்கி நடந்தவாறு  " என்ன பாக்கியமக்கா மண்ணோட சண்டையோ! என்று கேட்க, "அன்னம் இந்தப் பொலித்தீனாலை ஒரே தொல்லையாக் கிடக்குதடி! இழுக்க இழுக்க வந்தகொண்டேயிருக்குதடி!  

இதுவரை அமைதியாயிருந்த பொலித்தீன் "நாங்களுங்கட விழாக்கள் முதல் சொதிப்பொதி கட்டுறது வரைக்கும் தேவைப்பட்டம். எங்களைக் கக்கத்துக்க கொண்டு திரிஞ்சுபோட்டு கண்டமாதிரி எறிஞ்சுபோட்டு இப்ப குய்யோமுறையோ என்றால் என்ன நியாயமாம்! பக்குவமாகப் பாவிக்கத் தெரியாது. பிறகு எங்களை நோகிறது என்றவாறு சுழன்றடித்த காற்றில் மேலெழுந்து பறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nochchi said:

 

இதுவரை அமைதியாயிருந்த பொலித்தீன் "நாங்களுங்கட விழாக்கள் முதல் சொதிப்பொதி கட்டுறது வரைக்கும் தேவைப்பட்டம். எங்களைக் கக்கத்துக்க கொண்டு திரிஞ்சுபோட்டு கண்டமாதிரி எறிஞ்சுபோட்டு இப்ப குய்யோமுறையோ என்றால் என்ன நியாயமாம்! பக்குவமாகப் பாவிக்கத் தெரியாது. பிறகு எங்களை நோகிறது என்றவாறு சுழன்றடித்த காற்றில் மேலெழுந்து பறந்தது. 

உதுகளுக்காகவே எல்லா இடமும் பொலிதீனை தடை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வுப்   பதிவுக்கு பாராட்டுக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நொச்சி!

ஊரில மட்டுமில்லை...இங்கயும் இது பெரிய பிரச்சனையாக உள்ளது!

கடலில் குப்பைகளாகச் சேரும் இவற்றை...அருகி வரும் இனங்களான கடலாமைகள், சீல் வகைகள் போன்றவை...ஜெல்லி பிஷ் என நினைத்துச் சாப்பிடுவதால். விரைவாக அந்த இனங்கள் அழிந்து போய் விடுகின்றன!

ஊரில் உள்ளவர்கள்..அறியாமையால் இவற்றை எரிப்பதுண்டு! ஆனால் இவற்றை எரிக்கும் போது உருவாகும் வாயுக்களும் சில நோய்களை உண்டாக்க கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன! அவர்களும் கவனமாக இருக்க வேண்டும்!

CaqziNMUMAACoBN.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளால் ஊக்கப்படுத்திய தமிழ்ச்சிறி ஆதவன் நிலாமதி ஈழப்பிரியன்புங்கையூரான் கலைஞன் குமாரசாமியண்ணா  ஆகியோருக்கு நன்றிகள். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

உதுகளுக்காகவே எல்லா இடமும் பொலிதீனை தடை செய்கிறார்கள்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. 

4 hours ago, நிலாமதி said:

விழிப்புணர்வுப்   பதிவுக்கு பாராட்டுக்கள். 

சரியான மறுசுழற்சியற்ற ஏழைநாடுகளைப் பாதிக்கும் பெரும் பிரச்சனையாக வருவதோடு மண்வளமும் கெட்டுப்போய் பாதிப்பைத்தரப்போகிறது.வரவுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

3 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், நொச்சி!

ஊரில மட்டுமில்லை...இங்கயும் இது பெரிய பிரச்சனையாக உள்ளது!

கடலில் குப்பைகளாகச் சேரும் இவற்றை...அருகி வரும் இனங்களான கடலாமைகள், சீல் வகைகள் போன்றவை...ஜெல்லி பிஷ் என நினைத்துச் சாப்பிடுவதால். விரைவாக அந்த இனங்கள் அழிந்து போய் விடுகின்றன!

ஊரில் உள்ளவர்கள்..அறியாமையால் இவற்றை எரிப்பதுண்டு! ஆனால் இவற்றை எரிக்கும் போது உருவாகும் வாயுக்களும் சில நோய்களை உண்டாக்க கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன! அவர்களும் கவனமாக இருக்க வேண்டும்!

CaqziNMUMAACoBN.jpg

படத்தோடு  தகவலைப்பகிர்ந்துகொண்டமைக்கும் வந்து படித்தக் கருத்திட்டமைக்கும் நன்றிகள் புங்கையுரான்.

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für plastik müll

Bildergebnis für plastik müll

பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களைப்  பற்றிய... விழிப்புணர்வு கதைக்கு, பாராட்டுக்கள் நொச்சி.
மண்ணில் புதையுண்ட  பிளாஸ்ரிக் கழிவு, முற்றாக அழிய 300 வருடத்துக்கு மேல் எடுக்குமாம்.
நமது மண்... நீருக்காக, மழையை நம்பியே உள்ள நிலம்.மண்ணில்... பிளாஸ்ரிக் கழிவுப் பைகள் புதைபடும் போது...    பெய்யும் மழை நேரடியாக நிலத்தடிக்கு செல்ல முடியாமல் தடுக்கப் பட்டு ... தண்ணீர் பிரச்சினை ஏற்படும்.

நாம் ஊரில் இருந்த காலங்களில்.... தண்ணீரை கடையில் காசு கொடுத்து வாங்கியதே இல்லை. கடைகளில் தண்ணீர்  விற்பதும் இல்லை. சென்ற முறை ஊருக்கு சென்று இருந்த போது .... கிராமங்களில் உள்ள கடைகளில் கூட, 5 லீற்றர் அளவில் உள்ள  பெரிய பிளாஸ்ரிக் போத்தல்களில் தண்ணீர் விற்கிறார்கள். இவ்வளவு வெறும் போத்தல்களும், மேற்கு நாடுகள் போன்று  மீள் சுழற்சி செய்யப் படுவதில்லை. அவ்வளவும்  மண்ணுக்குள் தான் போக இருக்கின்றது.

அத்துடன் முன்பு உணவுக்  கடைகளில்.... தோசை, இடியப்பம்  வாங்கினால் வாழை இலையில் தருவார்கள். இப்போ... கோப்பையில், பிளாஸ்ரிக் தாளை விரித்து அதில் சாப்பிடும் கொடுமையை என்னவென்று சொல்வது. இந்தப் பூமி தோன்றி பல மில்லியன் வருடங்களாக இருந்தும்... கடந்த ஐம்பது ஆண்டுகளில் மனிதன் பூமித் தாயை... இரசாயன விவசாயம், பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களால்  அதிகம் சேதப் படுத்தி விட்டான். வருகின்ற தலைமுறைக்கும்... இந்தப் பூமி சொந்தமானது என்று, மனிதன் சிந்திக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  கருத்துள்ள  கதையாக  எழுதி இருக்கிறீங்கள் நொச்சி,பாராட்டுகள்..... 

வணக்கம்

இது போன்ற கதைகள் சமுதாயத்துக்கு தேவை. 

உங்களுக்கு எனது பாராட்டுக்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளால் ஊக்கம்தரும்தர்சன் நேசன் கிருபன் பாஞ் நவீனன் மீரா ஆகியோருக்கு நன்றிகள்.

15 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für plastik müll

Bildergebnis für plastik müll

பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களைப்  பற்றிய... விழிப்புணர்வு கதைக்கு, பாராட்டுக்கள் நொச்சி.
மண்ணில் புதையுண்ட  பிளாஸ்ரிக் கழிவு, முற்றாக அழிய 300 வருடத்துக்கு மேல் எடுக்குமாம்.
நமது மண்... நீருக்காக, மழையை நம்பியே உள்ள நிலம்.மண்ணில்... பிளாஸ்ரிக் கழிவுப் பைகள் புதைபடும் போது...    பெய்யும் மழை நேரடியாக நிலத்தடிக்கு செல்ல முடியாமல் தடுக்கப் பட்டு ... தண்ணீர் பிரச்சினை ஏற்படும்.

நாம் ஊரில் இருந்த காலங்களில்.... தண்ணீரை கடையில் காசு கொடுத்து வாங்கியதே இல்லை. கடைகளில் தண்ணீர்  விற்பதும் இல்லை. சென்ற முறை ஊருக்கு சென்று இருந்த போது .... கிராமங்களில் உள்ள கடைகளில் கூட, 5 லீற்றர் அளவில் உள்ள  பெரிய பிளாஸ்ரிக் போத்தல்களில் தண்ணீர் விற்கிறார்கள். இவ்வளவு வெறும் போத்தல்களும், மேற்கு நாடுகள் போன்று  மீள் சுழற்சி செய்யப் படுவதில்லை. அவ்வளவும்  மண்ணுக்குள் தான் போக இருக்கின்றது.

அத்துடன் முன்பு உணவுக்  கடைகளில்.... தோசை, இடியப்பம்  வாங்கினால் வாழை இலையில் தருவார்கள். இப்போ... கோப்பையில், பிளாஸ்ரிக் தாளை விரித்து அதில் சாப்பிடும் கொடுமையை என்னவென்று சொல்வது. இந்தப் பூமி தோன்றி பல மில்லியன் வருடங்களாக இருந்தும்... கடந்த ஐம்பது ஆண்டுகளில் மனிதன் பூமித் தாயை... இரசாயன விவசாயம், பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களால்  அதிகம் சேதப் படுத்தி விட்டான். வருகின்ற தலைமுறைக்கும்... இந்தப் பூமி சொந்தமானது என்று, மனிதன் சிந்திக்க வேண்டும்.

கதைக்கப்பால் கனகச்சிதமான படங்களை இணைத்து மேலும் மெருகூட்டியமைக்கும் படித்துப் பாராட்டியமைக்கும் நன்றிகள் தமிழ்ச்சிறி.

14 hours ago, suvy said:

நல்ல  கருத்துள்ள  கதையாக  எழுதி இருக்கிறீங்கள் நொச்சி,பாராட்டுகள்..... 

ஐயா என்றாலும் உங்களைப்போல் முடியாது. இது ஒரு சிறுகிறுக்கல்.படித்துப் பாராட்டியமைக்கும் நன்றிகள் 

13 hours ago, yakavi said:

வணக்கம்

இது போன்ற கதைகள் சமுதாயத்துக்கு தேவை. 

உங்களுக்கு எனது பாராட்டுக்கள். 

படித்துப் பாராட்டியமைக்கும் நன்றிகள் யாகவி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லோதொரு விழிப்புணர்வுக்கதை.....பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... பாராட்டுக்கள் நொச்சி குட்டிக் கதைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

நல்லோதொரு விழிப்புணர்வுக்கதை.....பாராட்டுக்கள்

படித்துப் பாராட்டியமைக்கு நன்றிகள்.

53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ம்.... பாராட்டுக்கள் நொச்சி குட்டிக் கதைக்கு.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

பச்சைப்புள்ளிகளால்   ஊக்கம் தரும்  சுவியர்     கி ருபன் மெசொபொத்தேமியா சுமேரியர்   ஆகியோருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலே புலிகள் வலுவாக இருந்தபோதே

இதை தடை செய்திருந்தார்கள்

அந்தளவுக்கு  நீண்ட பெரும் காலத்துக்கு கேடு  விளைவிக்கும் பொருள் இது

நல்லோதொரு விழிப்புணர்வுக்கதை.....பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

தாயகத்திலே புலிகள் வலுவாக இருந்தபோதே

இதை தடை செய்திருந்தார்கள்

அந்தளவுக்கு  நீண்ட பெரும் காலத்துக்கு கேடு  விளைவிக்கும் பொருள் இது

நல்லோதொரு விழிப்புணர்வுக்கதை.....பாராட்டுக்கள்

அரசுகளாக இருந்து சிந்திக்காத பலவிடயங்களை  ஒரு நடைமுறைஅரசாக இயங்கிச் செய்துகாட்டடியவர்கள் புலிகள்!   விசுகு அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் பச்சைப்புள்ளியட்டு ஊக்கம் தருவதற்கும் நன்றிகள்!

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die sitzen und im Freien

Bild könnte enthalten: 1 Person, sitzt, im Freien und Natur

விழிப்புணர்வு, சுவரோவியத்தில்... ஈடுபடும் மாணவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை சிறிது கரு பெரிது நல்லதொரு ஆக்கம் பாராட்டுக்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17.4.2017 at 1:42 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 3 Personen, Personen, die sitzen und im Freien

Bild könnte enthalten: 1 Person, sitzt, im Freien und Natur

விழிப்புணர்வு, சுவரோவியத்தில்... ஈடுபடும் மாணவர்கள்.

மீண்டும் பொருத்தமான நிழற்படங்களுக்கு நன்றிகள்.  

On 17.4.2017 at 1:42 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 3 Personen, Personen, die sitzen und im Freien

Bild könnte enthalten: 1 Person, sitzt, im Freien und Natur

விழிப்புணர்வு, சுவரோவியத்தில்... ஈடுபடும் மாணவர்கள்.

மீண்டும் பொருத்தமான நிழற்படங்களுக்கு நன்றிகள்.  

பச்சைப்புள்ளிகளைப் பரிசாக்கும் விசுகு அண்ணா புத்தன் காவலூர் கண்மணியக்கா ஆகியோருக்கு நன்றிகள்.

 

On 17.4.2017 at 9:15 PM, Kavallur Kanmani said:

கதை சிறிது கரு பெரிது நல்லதொரு ஆக்கம் பாராட்டுக்கள்

 படித்துப் பராட்டிப்பதிவிட்டமைக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.