Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை

Featured Replies

செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை

 

 

செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

xcx.jpg

http://www.virakesari.lk/article/19810

  • கருத்துக்கள உறவுகள்

இது அங்கு தொடர் கதை இதை எவ்வாறு தடுப்பது என்பதை சிந்திக்க மறந்து சம்பந்தன் ஐயா கொட்டிலில் இருந்து ஆட்டுப்பால் குடித்தார் எனும் ரீதியில் கதை விடுது அடுத்தது இரண்டும் தங்களை வளர்ப்பதிலே மும்முரமாய் இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண் போராளிகள் மத்திய கிழக்கில் பெண் போராளிகள் இங்கே வாழ்க்கை திண்டாட்ட நிலையில்  யாரிடம் போய்  சொல்வது இவர்கள் குறை  நிறைகளை  

2 hours ago, பெருமாள் said:

இது அங்கு தொடர் கதை இதை எவ்வாறு தடுப்பது என்பதை சிந்திக்க மறந்து சம்பந்தன் ஐயா கொட்டிலில் இருந்து ஆட்டுப்பால் குடித்தார் எனும் ரீதியில் கதை விடுது அடுத்தது இரண்டும் தங்களை வளர்ப்பதிலே மும்முரமாய் இருக்கினம் 

சும்மா மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் 

இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

மற்றவர்கள் என்ன செய்யணும்

அதை எப்படி செய்யலாம் என்று எழுதினால் யாருக்காவது பிரயோசனமா இருக்கும்.

அதை விடுத்து கீறல் விழுந்த ரெகார்ட் போல சும்மா சம் சும்மோட பொழுது போக்க விரும்பினால் - யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கத்தாமல் அந்த பிள்ளை குரிய கணக்கை என்னுடைய பிரைவெட்டில்  போட்டு கொள்ளும்  நான் பார்த்து கொள்கிரன் எம்மால் அங்கு வர முடியாது ஆனால் உம்மால் முடியும் என்று சொல்கிறீர் நான் அந்த பிள்ளை வாழும் ,படிக்கும் செலவுக்கு பொறுப்பு கணக்கை போடும் காசை நான் போடுகிரன்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் 

இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

மற்றவர்கள் என்ன செய்யணும்

அதை எப்படி செய்யலாம் என்று எழுதினால் யாருக்காவது பிரயோசனமா இருக்கும்.

அதை விடுத்து கீறல் விழுந்த ரெகார்ட் போல சும்மா சம் சும்மோட பொழுது போக்க விரும்பினால் - யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் :grin:

மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்தவில்லை....

மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து பாரளுமன்றம் சென்றவர்கள் மீதுதான் குற்றம் சுமத்துகின்றோம்.
இதற்கு நாம் அல்லது நாங்கள் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் எதற்காக கொழும்பிலிருக்கும் பாராளுமன்றம் சென்றார்கள்?

மற்றவர்கள் எதை செய்யணும்? எப்படி செய்யணும்? எங்கை செய்யணும்? என்ற கேள்வியும் சிந்தனையும்  ஒரு பொதுமகனுக்கு வருமாயின்!!!!!

சம்சும் கோஷ்டி எதற்கு???


கீறல் விழுந்த தோசைக்கல்லுமாதிரி திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே தவிர பொதுமக்கள் அல்ல.

நீங்கள் மற்றவரை பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி "நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று...
அந்த கேள்வி கேட்கும் தகுதி உங்களுக்கு எப்படி வந்தது? அதை ஏன் அடிக்கடி கேட்கின்றீர்கள்.

நீங்கள் ஊரில் இருப்பதால் மட்டும் பட்டத்து யானை என நினைத்துவிடாதீர்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்திலும் ....... நாம் சும்மா இருப்போம் 
என்று கேட்டு வந்து வாக்கு கேட்டால் ...... கேட்டிருந்தால் 
அடுத்தவன் ஏன் தட்டி கேட்க போகிறான்.

இது தேர்தல் வந்தால் .........
வெட்டுவோம் ...வீழ்த்துவோம் ... என்று அவர்கள் கொஞ்சம் சவுண்டுதான்.

இங்கின இருக்கிற ஒருசிலர் தான் அம்பிலிவையர்  மாதிரி 
சம்மந்தன் ஐயா தான் புடுங்குவார் .... நாடுவார் என்று கத்தி திரிவினம்.

பிறகு போராளிகளே நேரில்போனால் ஐயா பேப்பர் படித்துக்கொண்டு இருப்பார். 

நாங்களும் செய்தி படித்துக்கொண்டு இருக்கலாம் என்றால் 
யாழ் களத்தை மூடிவிட்டு .... அண்ணன் நவீனன் அவர்களிடம் திறப்பை கொடுத்துவிட்டால் 
செய்தி இணைத்துக்கொண்டு இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

தமிழர் பிரதிநிதிகள் எண்டு பாராளுமன்றம் போய் உலகம் முழுக்க சுத்தித்திரியினம்....வாற வெள்ளையளோடை கதைக்கினம்......வெட்டிப்புடுங்கீனம்....ஏன்? என்னதுக்கு?

பாலத்துக்கு சுண்ணாம்பு அடிக்கவே????
தங்கச்சி! சம்பந்தனும் சுமந்திரனும் இண்டுவரைக்கும் என்னத்தை சாதிச்சவை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?<_<

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2017 at 1:38 AM, ரதி said:

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

ம்ம் கசக்கும் உன்மைதான் 

On 5/8/2017 at 4:04 AM, பெருமாள் said:

சும்மா கத்தாமல் அந்த பிள்ளை குரிய கணக்கை என்னுடைய பிரைவெட்டில்  போட்டு கொள்ளும்  நான் பார்த்து கொள்கிரன் எம்மால் அங்கு வர முடியாது ஆனால் உம்மால் முடியும் என்று சொல்கிறீர் நான் அந்த பிள்ளை வாழும் ,படிக்கும் செலவுக்கு பொறுப்பு கணக்கை போடும் காசை நான் போடுகிரன்.

விசாரிக்கிறேன் முடிந்தால் எடுத்து அனுப்புகிறேன்  உங்களுக்கு அந்த பிள்ளையின் கணக்குவிபரத்தை 

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-9 at 6:08 AM, ரதி said:

சம்மந்தன் ஜயாவோ அல்லது சுமத்திரனோ புலிகளையோ அல்லது போரையோ ஆதரித்தவர்களா?<_< அவர்களை விட புலத்துப் புலிகள் தான் இப்படிப்பட்டவர்களது சாவுக்கு பொறுப்பு கூற வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎/‎05‎/‎2017 at 11:38 PM, குமாரசாமி said:

தமிழர் பிரதிநிதிகள் எண்டு பாராளுமன்றம் போய் உலகம் முழுக்க சுத்தித்திரியினம்....வாற வெள்ளையளோடை கதைக்கினம்......வெட்டிப்புடுங்கீனம்....ஏன்? என்னதுக்கு?

பாலத்துக்கு சுண்ணாம்பு அடிக்கவே????
தங்கச்சி! சம்பந்தனும் சுமந்திரனும் இண்டுவரைக்கும் என்னத்தை சாதிச்சவை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?<_<

சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.
நிற்க,உந்தப் புலிப் போராளிகளது மரணத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை...இங்கேயிருந்து போருக்கு ஆதரவு கொடுத்த நாங்கள் தான் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்<_<
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:
சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.
நிற்க,உந்தப் புலிப் போராளிகளது மரணத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை...இங்கேயிருந்து போருக்கு ஆதரவு கொடுத்த நாங்கள் தான் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்<_<

 

முயல்பவனுக்கு தட்டிக் கொடு!.
இயலாதவனுக்கு விட்டுக் கொடு!
கேட்பவனுக்கு சொல்லிக் கொடு!.
வாழ்வில் வீழ்ந்தவனை தூக்கி விடு!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.
நிற்க,உந்தப் புலிப் போராளிகளது மரணத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை...இங்கேயிருந்து போருக்கு ஆதரவு கொடுத்த நாங்கள் தான் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்<_<

சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.

என்ன ரதி; முன்னுக்குப்பின் முரணாக அல்லவா எழுதுகிறீர்கள்!
அவர்கள் எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை...
ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை...
முதலில் அவர்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து மீள் வருவோம்.
அவர்களை காவாந்து பண்ணும் வேலையை விட்டொழிப்போம்.
தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம். 

இதற்கு அவர்கள் விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை சசி வர்ணம்  ஒரு தடவை   தமிழ் அரசுக்கட்சியில்  தேர்தலுக்கு இடம்  கேட் க சென்றவருக்கு மறுக்க அவர்  வேறு கட்சியில் சேர்ந்து  பல வாக்குகளை பிரித்தார்  5 லட்சம் காசும் கொடுக்கப்பட்டது  அவர் நின்ற கட்சியால் ஆக மொத்தத்தில் தமிழரசுக் கட்சி புதியவர்களை இணைக்காது விரும்பாது என்ற  கொள்கையும் இருக்கிறது  ஆனால் இருப்பதெல்லாம் அதே குட்டை அதே மட்டை கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎05‎/‎2017 at 11:05 PM, Sasi_varnam said:

சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும்.

என்ன ரதி; முன்னுக்குப்பின் முரணாக அல்லவா எழுதுகிறீர்கள்!
அவர்கள் எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை...
ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை...
முதலில் அவர்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து மீள் வருவோம்.
அவர்களை காவாந்து பண்ணும் வேலையை விட்டொழிப்போம்.
தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம். 

 

சசி,ஆனானப்பட்ட தலைவரே எடுத்தால் தமிழீழம் தான் மட்டும் தான் எடுக்கோனும் என்று இருந்தவர்....தான் செத்தாலும் பரவாயில்லை தனக்கு பிறகு யாராவது தமிழீழம் எடுத்தாலும் ஏற்கோனுமென்ட மனப் பார்வை புலிகளுக்கே இல்லாத போது கூட்டமைப்பிற்கு எப்படி வரும். எவ்வளவு படித்தவர்கள் ஈழத்தில் இருந்தும் திரு அன்ரன் பாலசிங்கத்திற்கு பின்னரான அரசியல் வெற்றிடமாகத் தானே இருந்ததுtw_astonished:

On ‎10‎/‎05‎/‎2017 at 10:49 PM, குமாரசாமி said:

 

முயல்பவனுக்கு தட்டிக் கொடு!.
இயலாதவனுக்கு விட்டுக் கொடு!
கேட்பவனுக்கு சொல்லிக் கொடு!.
வாழ்வில் வீழ்ந்தவனை தூக்கி விடு!

 

அண்ணா,அதெல்லாம் பெருமாள் பார்த்துக் கொள்வாரு<_<

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் இருந்து போய் ஊரில பெரிய பெரிய சாமத்திய வீடு செய்யுற காசுகளை மிச்சம் பிடிச்சு இப்படியான குடும்பங்களுக்கு கொடுக்கலாம். வெளிநாட்டுக்காரர் செய்யுற ஆடம்பரக் கல்யாணங்களில் செலவைக் குறைச்சு உதவி செய்யலாம். செய்யும் உதவிகள் இவர்களின் நிரந்தர வருமானத்திற்கு உதவும் வகையில் அமையனும். ஒரு குடும்பத்துக்கான சொறீலங்காவில் இருக்கும் செலவுகளை கருத்தில் கொண்டு அது அமையனும்.

மேலும்.. முன்னாள் போராளிகள் என்பவர்களுக்கு..

உங்களின் கஸ்டத்துக்கு தற்கொலை தான் தீர்வென்று ஏன் நினைக்கிறீர்கள்.. ஏனெனில்.. உங்களில் யாரும் தாயகத்தில் கருசணை செய்ய இல்லை.

புலம்பெயர் நாடுகளில் இருந்து போய் போராளிகள் மீது கருசணை செய்தால்.. புலி வளர்க்கப்படுகுது என்று சிங்களவன் கத்த எம்மவர்களில் சுமந்திரன் போன்ற சில்லறை அரசியல்வாதிகளே வகுப்பெடுத்து விடுவார்கள்.

அந்த வகையில்.. இந்த முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு என்பது உள்ளூர் வெளியூர்  பொறுப்பான சமூக அமைப்புக்களின் ஊடாக நடத்தப்படுவதோடு.. அந்தப் போராளிகள் தயக்கமின்றி.. தங்களின் கஸ்டங்களுக்கு தீர்வு தேடும் வழிமுறைகள் இலகுபடுத்தப்பட்டால் அன்றி.. இப்படியான அநியாயச் சாவுகளையும்.. குழந்தைகள்.. பெண்கள்.. சிறுவர்கள் இதனால் அனாதையாவதையும் தடுக்க முடியாது.

எமது இனத்தின் விடிவை எதிர்பார்த்துப் போராடப் போய்.. அநியாய  உலகத்தால் தோற்கடிக்கப்பட்ட ஒரு குற்றத்திற்காக.. இவர்களை எம்மவர்களே உள்ளூரில் புறந்தள்ளி வைக்க.. முக்கிய காரணம்.. எமது மொக்கு அரசியல்வாதிகள் சிலரின் சுயநலக் காட்டிக்கொடுப்புகள். அதில் சம்பந்தன் சுமந்திரன் போன்றதுகள்.. முதன்மை.  சுமந்திரனுக்கு எவ்வளவோ சமூகத்திற்கு நல்லது செய்து அரசியல் செய்ய வக்கில்ல.. சும்மா.. முன்னாள் போராளிகள் கிளைமோரும் கையுமா திரியுனம் என்று சிங்களவனின் இருப்பை தமிழர் நிலத்தில் உறுதி செய்யும் எஜமானக் கதை வசனம் பேசி.. அரசியல் செய்யுது.

இப்படியானதுகளால் தான் மக்களும் முன்னாள் போராளிகளை விட்டு விலகி இருக்கிறார்கள்.  அதன் பலாபலனே.. இந்த மரணங்கள். அதைவிடுத்து.. போர் காலக் கதையை இப்ப போர் முடிந்த பின் பேசிக் கொண்டு காலம் கழித்து.. இந்த அநியாய மரணங்களை தடுக்க வக்கில்லாமல்.. இருக்கும் நாம் எல்லோரும் தான்..  ஏதோ ஒரு வகையில்.. இதில் குற்றவாளிகள். 

சரியான செயற்திட்டமின்றி... திட்டங்களை செய்யாதேங்கோ.. சும்மா.. தையல் மிசினையும்.. கோழிக்குஞ்சையும் கொடுத்தால்.. மறுவாழ்வு என்பது நடக்காது என்று அப்பவே சொன்னம். கோபித்தார்களே ஒழிய.. அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்பாடுகளின் நகர்வு திசைகளை மாற்றவில்லை. மாற்றி இருந்தால்..  இந்தப் போராளிகள் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சாகடிக்கப்படுவது இன்று தொடராது இருந்திருக்கும். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.