Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு!

Featured Replies

தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு!

 

Tamilarin_pumi_wrapper_jpg__66715_zoom.j
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.

 

நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது.

நில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை பற்றியும் இந்த நூல் பேசுகின்றது.

 

இந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான எதிர்வெளியீடு என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குளோபல் தமிழ் செய்திகளில் பிரசுரமான பல கட்டுரைகளை இந்த நூல் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/archives/29108

மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. புலிகளை மட்டும் கொச்சைப்படுத்தி எழுதிய பக்கங்களை மட்டும் பிரசுரித்த  தமிழினியின் புத்தகத்துக்கு அனுமதி; ஆனால் தமிழர் நிலங்கள் பறிபோவதை பற்றி எழுதிய புத்தகத்துக்கு மட்டும் சிக்கல்கள்

ஈழத்  தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.


பார்ப்பம்... பலாத்காரமாக முத்தம் கொடுத்த மாட்டுப்பட்ட தெய்வீகனுக்காக சமூக வலைத்தளங்களில்  ஆதரவுக்  குரல் கொடுக்கும் கோமகன், தமிழ் கவி அக்கா போன்றோர் இதை எப்படி அணுகுகின்றார்கள் என
 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. புலிகளை மட்டும் கொச்சைப்படுத்தி எழுதிய பக்கங்களை மட்டும் பிரசுரித்த  தமிழினியின் புத்தகத்துக்கு அனுமதி; ஆனால் தமிழர் நிலங்கள் பறிபோவதை பற்றி எழுதிய புத்தகத்துக்கு மட்டும் சிக்கல்கள்

ஈழத்  தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.


பார்ப்பம்... பலாத்காரமாக முத்தம் கொடுத்த மாட்டுப்பட்ட தெய்வீகனுக்காக சமூக வலைத்தளங்களில்  ஆதரவுக்  குரல் கொடுக்கும் கோமகன், தமிழ் கவி அக்கா போன்றோர் இதை எப்படி அணுகுகின்றார்கள் என
 

பச்சோந்திகள் சுயநலத்திற்கேற்ப தான் ,நிறம் மாறும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. புலிகளை மட்டும் கொச்சைப்படுத்தி எழுதிய பக்கங்களை மட்டும் பிரசுரித்த  தமிழினியின் புத்தகத்துக்கு அனுமதி; ஆனால் தமிழர் நிலங்கள் பறிபோவதை பற்றி எழுதிய புத்தகத்துக்கு மட்டும் சிக்கல்கள்

ஈழத்  தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.


பார்ப்பம்... பலாத்காரமாக முத்தம் கொடுத்த மாட்டுப்பட்ட தெய்வீகனுக்காக சமூக வலைத்தளங்களில்  ஆதரவுக்  குரல் கொடுக்கும் கோமகன், தமிழ் கவி அக்கா போன்றோர் இதை எப்படி அணுகுகின்றார்கள் என
 

இதில் கண்டிக்க என்ன இருக்கிறது ?

உங்களுடன் கிருபனை போன்றவர்களுடன் நான் முரண்படும் இடம் இதுதான்.
புத்தகம் என்பற்க்காக எமது இனத்தை அழிக்க மறைமுகமாக வரும் ஆயுத 
வடிவங்களுக்கும் நாம்  வர்த்தக முண்டு கொடுத்து வாசிக்க வேண்டுமா ?

கொழும்பில் இருந்து தமிழினியின் பெயரில் புத்தகம் வருகிறது எனும்போது 
இவ்ளவு அடிவேண்டிய தமிழனுக்கு என்ன வரும் என்று அறியும் புத்தி இன்னமும் இல்லையா ?

எதோ இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து பூ சொரிவதுபோல 
நாடகம் ஆடியவர்கள் யாராவது இப்போ இந்த தடை பற்றி ஏதும் சொல்ல போகிறார்களா ?

தமிழனை ஏய்த்து பிழைத்து வாழ்ந்தவன்தான் வாழ்கிறான்.
தமிழனுக்கு ஏதும் செய்ய நினைத்தவன் ..... தமிழனால் கூட கண்டுகொள்ள படுவதில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்தப் புத்தகத்தைப்பற்றியும் அதை எழுதியவரைப்பற்றியும்  அறிந்து கொள்ள முயற்சி செய்யும் தமிழர்கள் குறைவாகவே இருக்கும்.
அவர்கள் நாளை எங்கே எப்படித் தங்கள் பொழுதை உல்லாசமாகப் போக்கலாம் என்ற வகையிலேயே சிந்திப்பார்கள்.
தீபச்செல்வன் போன்றவர்கள் ஈழத்தில் குறைவாகவே இருக்கின்றனர்.
அவர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழர்கள்தான் ஈழத்தில் இன்று அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற குப்பைகளைத் தடை செய்யட்டும்!

பொங்கி எழுவார்கள்...ஈழத் தமிழர்கள்!

தீபச் செல்வனுக்காக....ஈழத்து இலக்கிய வாதிகள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்!

சிங்கள-பௌத்த இனமதவெறியை ஊக்குவிக்கும் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி பயங்கரவாத இயந்திரம் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளுக்கு தடை விதிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற குப்பைகளைத் தடை செய்யட்டும்!

பொங்கி எழுவார்கள்...ஈழத் தமிழர்கள்!

தீபச் செல்வனுக்காக....ஈழத்து இலக்கிய வாதிகள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்!

ஈழத்திலும் ..... ஒரு வேளை புலம்பெயர்ந்து ஒரு சிலர் வாழலாம்.
ஆனால் தயவு செய்து இந்த இலக்கிய யுத்தம் .... இலக்கிய கூட்ட்டம் என்று 
பரிசில் லண்டனிலும் மாறி மாறி கூடுற இலக்கிய சிற்பிகள் இதை காணாமல் விடுவதே 
தீபச்செல்வனுக்கு சிறப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இதில் கண்டிக்க என்ன இருக்கிறது ?

உங்களுடன் கிருபனை போன்றவர்களுடன் நான் முரண்படும் இடம் இதுதான்.
புத்தகம் என்பற்க்காக எமது இனத்தை அழிக்க மறைமுகமாக வரும் ஆயுத 
வடிவங்களுக்கும் நாம்  வர்த்தக முண்டு கொடுத்து வாசிக்க வேண்டுமா ?

கொழும்பில் இருந்து தமிழினியின் பெயரில் புத்தகம் வருகிறது எனும்போது 
இவ்ளவு அடிவேண்டிய தமிழனுக்கு என்ன வரும் என்று அறியும் புத்தி இன்னமும் இல்லையா ?

எதோ இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து பூ சொரிவதுபோல 
நாடகம் ஆடியவர்கள் யாராவது இப்போ இந்த தடை பற்றி ஏதும் சொல்ல போகிறார்களா ?

தமிழனை ஏய்த்து பிழைத்து வாழ்ந்தவன்தான் வாழ்கிறான்.
தமிழனுக்கு ஏதும் செய்ய நினைத்தவன் ..... தமிழனால் கூட கண்டுகொள்ள படுவதில்லை.  

சிறிலங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவோ, சிங்களவர்கள் மேலாதிக்க வெற்றிவாத மனநிலையில் இருந்து மாறியுள்ளார்கள் என்றோ ஒருபோதும் கருதியதில்லை.

சாத்திரியார் கூட தனது "அவலங்கள்" சிறுகதைத் தொகுப்பை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்திருந்தார்கள் என்று அங்கலாய்த்திருந்தார். பின்னர் எப்படியோ வெளியே விட்டுவிட்டார்கள்.

தீபச்செல்வனின் கட்டுரைகளை வாசித்தளவில் இப்புத்தகம் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு ஆவணம் என்றுதான் சொல்வேன். அழுத்தங்களைக் கொடுத்து உள்ளே விட செல்வாக்குள்ள தமிழ்த்தலைமைகள் உதவவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற குப்பைகளைத் தடை செய்யட்டும்!

பொங்கி எழுவார்கள்...ஈழத் தமிழர்கள்!

தீபச் செல்வனுக்காக....ஈழத்து இலக்கிய வாதிகள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்!

தற்பொழுது இலக்கியவாதிகள் என்றால் புலிகளை திட்டி ஒரு கதை அல்லது கட்டுரை எழுதியிருக்க வேண்டும் ..

2 hours ago, putthan said:

தற்பொழுது இலக்கியவாதிகள் என்றால் புலிகளை திட்டி ஒரு கதை அல்லது கட்டுரை எழுதியிருக்க வேண்டும் ..

தற்போதுள்ள அநேகமான இலக்கியவாதிகள் கூலிக்கு மாரடிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சிறிலங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவோ, சிங்களவர்கள் மேலாதிக்க வெற்றிவாத மனநிலையில் இருந்து மாறியுள்ளார்கள் என்றோ ஒருபோதும் கருதியதில்லை.

சாத்திரியார் கூட தனது "அவலங்கள்" சிறுகதைத் தொகுப்பை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்திருந்தார்கள் என்று அங்கலாய்த்திருந்தார். பின்னர் எப்படியோ வெளியே விட்டுவிட்டார்கள்.

தீபச்செல்வனின் கட்டுரைகளை வாசித்தளவில் இப்புத்தகம் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு ஆவணம் என்றுதான் சொல்வேன். அழுத்தங்களைக் கொடுத்து உள்ளே விட செல்வாக்குள்ள தமிழ்த்தலைமைகள் உதவவேண்டும். 

நீங்கள் அப்படி கருதுவதாக நான் எண்ணவில்லை 
உங்களுடன் நான் முரண்படும் இடம் ....
எதையும் வாசிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்துடன் மட்டுமே 
அதில் மறைமுகமாக எமது இன துரோகிகளுக்கு முண்டு கொடுக்க வேண்டிய 
ஒரு துர்பாக்கிய நிலை வருவதால் .....இப்போதைய சூழ்நிலையில் 
நாம் இவ்வளவு ஆதி வாங்கிய அனுபவத்தில் .... யாரிடம் இருந்து என்ன வரும் என்ற 
ஓரளவான புரிந்துணர்வு இருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட எண்ணம். 
(இது தனிப்பட்ட எண்ணம் மட்டுமே. இது சரியானதாக இருக்கவேண்டும் என்று இல்லை 
அவர் அவர் வாழ்க்கையின் அனுபவம் எதிர்கால சிந்தனை சமூக நலன் சார்ந்த எண்ணம் போன்றவற்றில் 
இவை மாறுபடும்)
சிலர் இறைவனுக்கு தொண்டு என்று எண்ணி சாமியாகி போகிறார்கள் 
வெறும் சாமியாகி ஒருவருக்கும் உதவாது போகாமல் கடுவுளின் படைப்புகளை 
கொஞ்சம் பாதுகாப்போம் என்று எண்ணி சிலர் சமூக தொண்டு சார்ந்து தமது வாழ்வை 
அர்பணிக்கிறார்கள். எது சரி எது பிழை என்பது அவர் அவர் இஸ்டம் என்பதிலும் அவர் அவர் 
அறிவு சார்ந்ததும் கூட ..... எனது அறிவுக்கு விண்வெளி மற்றும் இதர கிரகங்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க 
தெரியாது. ஆனால் சிலர் கல்வி ஆராய்ச்சி என்று தமது வாழ்வையே அதில் அர்பணிக்கிறார்கள்.
இப்போது எந்த நேர செலவும் இன்றி நாம் வாழ்வை அனுபவிக்கலாம் ..... ஆதலால் அவர்கள் 
வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்று கூட அறிவுரை கூற முற்படலாம். நாளை ஒரு ஆபத்து பூமியை நோக்கி வானில் இருந்து வந்தால் ...? என்னை கூட காப்பாற்ற போகிறவர்கள் அவர்கள்தான்.

எதோ ஒரு இடத்தில் எல்லோரும் முரன்பட்டு கொள்கிறோம். அதைதான் நான் எழுதினேன் 
எனது நிலைப்பாடு இது என்பதே எனது கருத்தே தவிர ... உங்கள் எண்ணம் தவறானது என்ற முடிவை 
எனது நிலைப்பாட்டில் இருந்து நான் எடுக்கிறேன். இது எனது தனிப்படட அறிவு சார்ந்த விடயம் மட்டுமே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.