Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழில் வன்முறைகள் கட்டவிழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு

Featured Replies

தெற்­கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்ப்பு

கூட்டமைப்பு தெரிவிப்பு

 

தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன. வன்­மு­றை­கள் முன்­னரை விடத் தற்­போது ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பருத்­தித்­துறை திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் பிர­தேச இளை­யோ­ரு­ட­னான சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது.

அதில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவ­யோ­கன், ச.சுகிர்­தன் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். அதில் சுமந்­தி­ரன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலுந் தெரி­வித்­த­தா­வது,
யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் இருந்­த­தை­விட ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன. பொலி­ஸார் மீது நேற்று வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. துப்­பாக்­கிச் சூடு­கள் உயி­ரி­ழப்­புக்­கள் என்­பன வன்­மு­றை­கள் அதி­க­ரித்த தன்­மை­யைக் காட்­டு­கின்­றன. தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் இவ்­வாறு வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அவ­ச­ரப்­பட்ட கருத்து வெளிப்­பா­டு­கள் இத­னு­டன் தொடர்­பு­ப­டு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் அதி­க­ரித்­துள்­ளன என்று மகிந்த கூறு­கி­றார். யாழ்ப்­பா­ணத்து வன்­மு­றை­கள் தொடர்­பில் அவர் தீவி­ர­மான போக்­கைக் கொண்­டுள்­ளார் என்­பது அவ­ரது கருத்­துக்­க­ளின் ஊடா­கப் புலப்­ப­டு­கி­றது – என்­றார்.

இது­த­விர, பருத்­தித்­துறை துன்­னா­லை­யில் மணல் கடத்­தி­ய­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் இளை­ஞன் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டி­ருந்­தார். அந்த இளை­ஞ­னின் வீட்­டுக்­குச் சென்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குடும்­பத்­த­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

அங்கு கூடிய இளை­ஞர்­கள், “பொலி­ஸா­ரால் தமக்­குப் பாது­காப்­பில்லை. வெளியே நட­மாட முடி­ய­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­திக் கைது செய்­கின்­ற­னர்” என்று சுமந்­தி­ர­னி­டம் முறை­யிட்­ட­னர்.

அது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­ய­பின்­னர், சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ரு­டன் பொலி­ஸா­ர­யும் இங்­குள் பொது இடத்­துக்கு அழைத்து இங்­குள்ள மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்தி சுமு­க­மான நிலையை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பில் அடுத்த வாரம் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/15296.html

16 hours ago, நவீனன் said:

, “பொலி­ஸா­ரால் தமக்­குப் பாது­காப்­பில்லை. வெளியே நட­மாட முடி­ய­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­திக் கைது செய்­கின்­ற­னர்”

தமிழ் மண்ணை விட்டு சிங்கள-பௌத்த போலீஸ், முப்படைப் பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அகற்றப்பட வேண்டியவர்கள். 99% க்கு மேற்பட்ட சமூகவிரோத செயல்களின் பின்னாலும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும்  சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளும் தான் உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

தமிழ் மண்ணை விட்டு சிங்கள-பௌத்த போலீஸ், முப்படைப் பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அகற்றப்பட வேண்டியவர்கள். 99% க்கு மேற்பட்ட சமூகவிரோத செயல்களின் பின்னாலும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும்  சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளும் தான் உள்ளனர். 

இதனை செய்ய வேண்டியது.. சிங்களவனுக்கு ஆயுதத்தையும் இராணுவ உதவிகளையும்  அள்ளி வழங்கி தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கச் செய்து.. அதனை இராணுவ மயமாக்கி அதில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப நினைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகமே ஆகும். வேறு யாராலும் இதனை செய்ய முடியாது.. காரணம் சர்வதேசம் தான்.. இந்த ஆக்கிரமிப்பின் எல்லாக் காரணிகளையும் சிங்களவர்களுக்கு வழங்கி உதவியது. அந்த வகையில்.. தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு.. இராணுவத் துன்புறுத்தல்கள்.. போதைப்பொருள் விநியோகம்.. மத நில ஆக்கிரமிப்புக்கள்.. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது சர்வதேசமே ஆகும். ஆனால் எம்மவர்களும்.. அவர்களை நோக்கி எதையும் காத்திரமாகச் சொல்வதும் இல்லை.. கேட்பதும் இல்லை. tw_angry::rolleyes:

54 minutes ago, nedukkalapoovan said:

இதனை செய்ய வேண்டியது.. சிங்களவனுக்கு ஆயுதத்தையும் இராணுவ உதவிகளையும்  அள்ளி வழங்கி தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கச் செய்து.. அதனை இராணுவ மயமாக்கி அதில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப நினைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகமே ஆகும். வேறு யாராலும் இதனை செய்ய முடியாது.. காரணம் சர்வதேசம் தான்.. இந்த ஆக்கிரமிப்பின் எல்லாக் காரணிகளையும் சிங்களவர்களுக்கு வழங்கி உதவியது. அந்த வகையில்.. தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு.. இராணுவத் துன்புறுத்தல்கள்.. போதைப்பொருள் விநியோகம்.. மத நில ஆக்கிரமிப்புக்கள்.. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது சர்வதேசமே ஆகும். ஆனால் எம்மவர்களும்.. அவர்களை நோக்கி எதையும் காத்திரமாகச் சொல்வதும் இல்லை.. கேட்பதும் இல்லை. tw_angry::rolleyes:

இதற்கான காத்திரமான முயற்சியை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் தான் செய்ய வேண்டும்!

பிறந்தநாள் பார்ட்டி, கல்யாணநாள் பார்ட்டி, 30 வயதுப் பார்ட்டி, 40 வயதுப் பார்ட்டி, 50 வயதுப் பார்ட்டி, 60 வயதுப் பார்ட்டி,  ............ என்று ஒன்று சேர்ந்து குடித்து, கும்மாளமடித்து, உண்டுகளித்து  காலவிரயம், பணவிரயம் செய்யாமல் இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உணர உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபின் 100 பார்ட்டிகளை விருப்பம் போல கொண்டாடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:10_wink:

31 minutes ago, Rajesh said:

இதற்கான காத்திரமான முயற்சியை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் தான் செய்ய வேண்டும்!

பிறந்தநாள் பார்ட்டி, கல்யாணநாள் பார்ட்டி, 30 வயதுப் பார்ட்டி, 40 வயதுப் பார்ட்டி, 50 வயதுப் பார்ட்டி, 60 வயதுப் பார்ட்டி,  ............ என்று ஒன்று சேர்ந்து குடித்து, கும்மாளமடித்து, உண்டுகளித்து  காலவிரயம், பணவிரயம் செய்யாமல் இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உணர உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபின் 100 பார்ட்டிகளை விருப்பம் போல கொண்டாடட்டும்.

உதெல்லாம் நடக்கிற காரியமே....புலத்தில நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை தாயகத்தில் இருப்பவர்களும் கொண்டாட பணம் அனுப்பிகிறோம்...:10_wink:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

18வது பேர்த்தே பார்ட்டி மோட்டார்சைக்கிள் மேலே கேக் வைத்து வெட்டுவது தான் இங்க இப்ப ரெண்ட். 

1 minute ago, putthan said:

:10_wink:

உதெல்லாம் நடக்கிற காரியமே....புலத்தில நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை தாயகத்தில் இருப்பவர்களும் கொண்டாட பணம் அனுப்பிகிறோம்...:10_wink:

தப்பித்தவறியும் நீதி கிடைக்காமல் ஒட்டுமொத்தமா அழிவம் என்ற நல்ல எண்ணம் தானே இதெல்லாம்!

நல்லூர், சந்நிதி, கதிர்காமக் கந்தனும், மடு மாதாவும் சேர்ந்து முயன்றாலும் காப்பாற்ற முடியாத கேஸ்!!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அடுத்த வருடம் நடக்கும் A/L இல் குறைந்தது இரண்டு பாடமாவது கையில் இருக்கும்

1 minute ago, MEERA said:

ஆனால் அடுத்த வருடம் நடக்கும் A/L இல் குறைந்தது இரண்டு பாடமாவது கையில் இருக்கும்

AL எதுக்கு?
அதுதானே இருக்கினம் புலம்பெயர் உறவுகள்!
இலச்சம் இலச்சமாகக் கொட்டி UK, அவுஸ் டிகிரி வாங்கிடுவீனமெல்லோ!
மோட்டார் சைக்கிள் கேக் பார்ட்டி வீண் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

18வது பேர்த்தே பார்ட்டி மோட்டார்சைக்கிள் மேலே கேக் வைத்து வெட்டுவது தான் இங்க இப்ப ரெண்ட். 

போறரபோகை பார்த்தால் மோட்டார் சைக்கிளுக்கு மேல கேக்கை வைத்து வாளால் வெட்டுவாங்கள் போலகிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் புலத்தாருக்கே

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

18வது பேர்த்தே பார்ட்டி மோட்டார்சைக்கிள் மேலே கேக் வைத்து வெட்டுவது தான் இங்க இப்ப ரெண்ட். 

ஊரில் நடப்பதை வந்து பார்த்துவிட்டு அதை வெளி உலகிற்கு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்  21 வயது பெண் பிள்ளை பிறந்த தினம் அதை விட பெஷல்  போட்டோ எடுத்து ஊரு ஊருக்கு இப்ப இணையத்தளத்தில் இறக்கி வரனை தேடுறாங்கள் வெளிநாட்டில் இது இப்ப புது சு  கண்ணா புது சு  இதானால் பொண்ணு  இல்லாமல் அலையுறவர்கள் அதிகம் எல்லாம் வெளி நாட்டுப்பார்சலாக போகிறது  

1 hour ago, சுவைப்பிரியன் said:

எல்லாப் புகழும் புலத்தாருக்கே

முழு உன்மை அண்ணா , அக்கா, அத்தான் காசு அனுப்புங்க  மணி ஓடர்ரில் பாய்ந்து வருகிறது ஏனென்றால்  நான் பட்ட கஸ்ரம் அவர்கள் படக்கூடதாம் என்று புலந்தவர் அனுப்ப  இங்கே வேலைக்கு போகாமல் செழிப்பா வாழ்கிரார்கள் கச்சான் புடுங்க ஆள் இல்லப்பா ஊரில் 

2 hours ago, putthan said:

போறரபோகை பார்த்தால் மோட்டார் சைக்கிளுக்கு மேல கேக்கை வைத்து வாளால் வெட்டுவாங்கள் போலகிடக்கு...

ஊரில் இப்ப  வாள் தானுங்கோ பேமஸ்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனி ஒருவன் said:

 

முழு உன்மை அண்ணா , அக்கா, அத்தான் காசு அனுப்புங்க  மணி ஓடர்ரில் பாய்ந்து வருகிறது ஏனென்றால்  நான் பட்ட கஸ்ரம் அவர்கள் படக்கூடதாம் என்று புலந்தவர் அனுப்ப  இங்கே வேலைக்கு போகாமல் செழிப்பா வாழ்கிரார்கள் கச்சான் புடுங்க ஆள் இல்லப்பா ஊரில் 

 

அது சரி உங்கள் ஊரில சோளம் என்ன விலை போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

அது சரி உங்கள் ஊரில சோளம் என்ன விலை போகுது.

இப்ப சீசன் இல்லை 10  சோளன் 100 ரூபா விலை குறைந்த நேரத்தில் :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனி ஒருவன் said:

இப்ப சீசன் இல்லை 10  சோளன் 100 ரூபா விலை குறைந்த நேரத்தில் :11_blush:

அப்ப அங்கை கிலோ கணக்கு இல்லையா.விலை குறைந்த நேரத்தில கிலோ என்ன விலை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

அப்ப அங்கை கிலோ கணக்கு இல்லையா.விலை குறைந்த நேரத்தில கிலோ என்ன விலை

கிலோ இல்லை எண்ணிக்கை அடிப்படையில் தான் அண்ண  முதலில் மமுறிக்கும் சோளனுக்கு விலை ஒன்று 20 வரை இருக்கும் போக போக விலை குறைந்து விடும் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

போறரபோகை பார்த்தால் மோட்டார் சைக்கிளுக்கு மேல கேக்கை வைத்து வாளால் வெட்டுவாங்கள் போலகிடக்கு...

சில வருடங்களுக்கு முன்னர் முகநூலில் வாளால் கேக் வெட்டிய போட்டோவை பார்த்தேன்

14 hours ago, சுவைப்பிரியன் said:

அது சரி உங்கள் ஊரில சோளம் என்ன விலை போகுது.

மூதூரில் 100/= க்கு 8 சோளன் கிடைக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

 

ஊரில் இப்ப  வாள் தானுங்கோ பேமஸ்

நாங்கள் பேனா வைத்திருக்கும் பொழுது அவர்கள் வாள் வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1.8.2017 at 8:04 AM, Rajesh said:

இதற்கான காத்திரமான முயற்சியை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் தான் செய்ய வேண்டும்!

பிறந்தநாள் பார்ட்டி, கல்யாணநாள் பார்ட்டி, 30 வயதுப் பார்ட்டி, 40 வயதுப் பார்ட்டி, 50 வயதுப் பார்ட்டி, 60 வயதுப் பார்ட்டி,  ............ என்று ஒன்று சேர்ந்து குடித்து, கும்மாளமடித்து, உண்டுகளித்து  காலவிரயம், பணவிரயம் செய்யாமல் இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உணர உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபின் 100 பார்ட்டிகளை விருப்பம் போல கொண்டாடட்டும்.

நாங்கள் மாடாய் உழைச்சு ஊரவனுக்கு குடுக்கவே இஞ்சை வந்தனாங்கள் எண்டு திருப்பி கேட்டால் என்ன செய்வியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.