Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகர் இயற்கை எய்தினார்

Featured Replies

கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார்.

இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார்.

இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது.

மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/156310?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மை கொள்...சைவ நீதி ..விளங்குக....உலகமெல்லாம்!

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.


ஆழ்ந்த இரங்கல்.

  • தொடங்கியவர்

நீண்ட காலம் ஆன்மீகப் பணியாற்றிய ஸ்ரீமத் கணேசானாந்த சுவாமிகள் மகாசமாதி: ஆறு. திருமுருகன் இரங்கல்

கிளிநொச்சி - ஜெயந்தி நகரிலுள்ள மகாதேவா ஆச்சிரமத்தின் குருபீடாதிபதியாக நீண்ட காலம் ஆன்மீகப் பணியாற்றிய ஸ்ரீமத் கணேசானாந்த சுவாமிகள் மகா சமாதியடைந்தது தொடர்பில் யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று இரங்கல் செய்தி விடுத்துள்ளார். குறித்த இரங்கல் செய்தி குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தவத்திரு யோகர் சுவாமிகளின் வேண்டுதலுக்கமைய இணுவில் வடிவேல் சுவாமிகள் கிளிநொச்சிப் பகுதியில் குடியேறிய மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஜெயந்தி நகரில் குடில் அமைத்துத் தொண்டாற்றினார்.

அந்த குடிலே 'மகாதேவ ஆச்சிரமம்' என்ற நாமத்தோடு இன்று பெரும் விருட்சமாக வளர்ச்சி பெற்றுள்ளது. வடிவேல் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட மகாதேவா ஆச்சிரமத்தை அவரது சமாதிக்குப் பின்னர் நீண்டகாலம் நிர்வகித்த பெருமை தற்போது சமாதி அடைந்துள்ள ஸ்ரீமத் கணேசானந்த சுவாமிகளைச் சாரும்.

போர்ச் சூழலுக்கு மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தில் சைவசமயத்தின் காவலராக இவர் விளங்கி இவர் ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது.

ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு நிழலாக விளங்கிய இந்த பெருமகனாரின் பிரிவு மிகுந்த வேதனை தரும் செய்தியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பலருக்குச் சமய தீட்சைகள் வழங்கி நற்கருத்துக்கள் எடுத்துரைத்து வழிகாட்டியாகத் திகழ்ந்த இப் பெரியாரின் இடத்தை நிரப்புவதற்கு யாருமில்லை.

தள்ளாடும் வயதிலும் இறுதிவரை பணியாற்றிய பெரியாருக்கு எமது இதய அஞ்சலியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/community/01/156489?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • தொடங்கியவர்
14 minutes ago, போல் said:

போர்ச் சூழலுக்கு மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தில் சைவசமயத்தின் காவலராக இவர் விளங்கி இவர் ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது.

ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு நிழலாக விளங்கிய இந்த பெருமகனாரின் பிரிவு மிகுந்த வேதனை தரும் செய்தியாகும்.

ஈடிணையற்ற சேவை என்பதை நேரில் அறிந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள்!

அன்னாரின் ஆன்மா மகாதேவனின் காலடியில் மோட்சமடைய பிரார்த்தனைகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதய அஞ்சலி

ஆழ்ந்த இரங்கல்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.