Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்

Featured Replies

அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்

 
 
அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும்.

மியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து அடைக்­க­லம் தேடி இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளைப் பாது­காப்­பது அர­சின் கட­மை­யா­கும்”
இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

கொழும்­பில் ரோஹிங்ய முஸ்­லிம் மக்­கள் மீது பௌத்த பிக்­கு­மா­ரும், சிங்­கள இன­வா­தி­க­ளும் நடத்­திய அட்­டூ­ழி­யங்­கள் குறித்து கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டில் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் சிலர், அக­தி­க­ளாக இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­களை விரட்­டி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த நட­வ­டிக்கை ஐ.நாவின் பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­துக்கு முர­ணா­னது.

இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளுக்கு ஏதி­லிக் குடி­யி­ருமை வழங்கி அவர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது அர­சின் கட­மை­யா­கும். இந்­தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான உரிய நட­வ­டிக்­கையை அரசு எடுக்­க­வேண்­டும். அந்த மக்­க­ளுக்கு மனி­த­நே­யத்­தின் அடிப்­ப­டை­யில் உதவ வேண்­டும்.

நாட்­டில் இந்த ஆட்­சி­யி­லும் இடை­இ­டையே இன­வா­தச் செயற்­பா­டு­கள் அரங்­கே­று­கின்­றன. நாட்­டின் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் குழப்­பி­ய­டிக்­கும் இந்­தச் செயற்­பா­டு­க­ளுக்கு அரசு உட­ன­டி­யாக முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/33898.html

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாட்டு அகதிகளை அரசு எதுவேணுமென்றாலும் செய்யலாம் ஆனால் வெளிநாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் இது தான் சட்டம் ....ஆங்...ஆங்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

சொந்த நாட்டு அகதிகளை அரசு எதுவேணுமென்றாலும் செய்யலாம் ஆனால் வெளிநாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் இது தான் சட்டம் ....ஆங்...ஆங்...

நம்மட ஆளிண்ட மனிதாபினானம் விடுங்கப்பா அடைகலம் கொடுக்க வேண்டிய ஒன்றுதான் ஆனால் சிங்கள அரசு கொடுக்குமா என்ற சந்தேகம் தான் எனக்கும் ஆனாலும் சிங்கள பிரதேசம் என்றால் இன்னும் சிறப்பு 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரோகிங்ய முசுலீம்கள் மியன்மாரில் இந்துக்களை இனப்படுகொலை செய்து அழித்ததைக் கருத்தில் கொண்டு இந்த முசுலீம்களுக்கு எதிராக சிங்களர் கோபம் கொண்டிருக்கலாம். சிங்களர் என்றாலும் அவர்களும் இந்துக் கடவுள்களை வணங்குபவர்கள் என்பதைச் சம்பந்தர் ஐயா இன்னமும் அறியவில்லைப் போலும்.....!!
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சம்பந்தர் ஐயா நரம்பறுந்த வீணையிலை நாதம் இசைக்கிறார். "ஏதிலிகள்" "விரட்டியடிப்பது" என்றெல்லாம் சென்டிமென்டா வார்த்தைபேசி நல்லபிள்ளையா வேடம்போடறார். இவருக்கு முன் இருக்கும் தலையாய பொறுப்பு ஈழத்தமிழரின்  பிரச்சினையை தீர்ப்பது என்பதை  மறந்து விட்டாரா?.  அதை செய்து முடிக்காமை இவரை நம்பிய தமிழினத்திற்கு ஒரு முடிவு சொல்லாமல் இவருக்கு சாகக்கூட அனுமதியில்லை.   இவரிடம் மிஞ்சியுள்ள அற்ப சொற்ப சக்தியையும் வேறுவிடயங்களுக்கு பயன்படுத்தி அதை  வீணடிக்கிறார்.

ஏதிலிகள் என்று சம்பந்தன் ஐயா குறிப்பிடும் அகதிகள் ஐ.நா அகதிகள் நிறுவனத்தால் பாதுகாக்கப்படுபவர்கள். மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை நாட்டுக்குள் வர விடுவோம் என்று ஒப்புதல் கொடுத்த நாடுகளைத்தவிர வேறுநாடுகள் சர்வதேச அகதிகளை வைத்து பராமரிக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வேண்டுமானால் இலைங்கையை இடைத்தங்கல் நாடாக பயன்படுத்தி வேறுநாடுகளுக்கு செல்ல ஐநா உதவலாம்.

கீழேயுள்ள இணையம் சென்று விபரங்களை அறியலாம். இதில் இலங்கை அகதிகளை பராமரிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதற்கு ஆதாரமில்லை.

http://www.fmreview.org/non-signatories.html

"ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும்" 

இது எந்தச் சட்டத்தில் உள்ளது என்று சம்பந்தன் ஐயா சொன்னால் இன்னும் சிறப்பு.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

முஞ்சுறு கூட்டம் முதலில் வட கிழக்கில் தகரகொட்டைகைகுள் கிடந்து வேகும் எம்மினத்து அகதிகளா இன்னும் இருக்கும் மக்களை பற்றி கதைக்க வக்கில்லை அதுகள் மூன்று நேரமும் உணவு இருக்கா இல்லியா என்று கூட தெரியாது அதுகளுக்கு இருந்த சொந்த இடம் இப்போது எங்கே யாரிடம் உள்ளது போன்ற விபரங்கள் ஒன்றுமே தெரியாது எங்கிருந்தோ எங்கோ போக இருந்துதுகள் வழிமாறி இங்குவந்ததுகளுக்கு கிடந்து குத்தி முறியிதுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவரும்.... ஒரு காலத்தில்,  அகதியாக... தமிழ் நாட்டுக்கு போனவர்  தான்.
அந்த அனுபவத்தில்... உள்ளூரில்  உள்ள தமிழ் அகதிகளின்  பிரச்சினையை,
இப்போ உள்ள அரசியல் உச்ச... பதவியை, பயன்படுத்தி  தீர்ப்பதை  விட்டு விட்டு.... மற்ற அகதிகளைப்  பற்றி கருத்து தெரிவிப்பது  சரியா?...
தன்னுடைய வேலையை... பார்க்க முடியாதவர், மற்றவனைப் பற்றி... கதைக்க எந்த அருகதையும் இல்லை.

இவர் கூறிய கருத்து,  புத்த பிக்குகளுக்கு,  தெரிந்தால்,  ஐயா.... மீண்டும் அகதியாக வேண்டி வரும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை இனவாதம் புரையோடிப்போயுள்ளநாடுதான் சிறிலங்கா. மனித உரிமையை மதிக்காத நாடு. தனது நாட்டு மக்களையே மிருகவேட்டையாடிய கொலைகார நாடு. இப்படியிருக்கக நீங்கள் குறிப்பிடும் வெளிநாட்டு ஏதிலிகளுக்கு வேறொரு சரியான நாட்டைகாட்டுவதை விடுத்து இலங்கையில் அவர்களை குடியமர்த்த நினைப்பது முற்றிலும் மூடத்தனம்.

இலங்கையில் அகதிகள்  நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியும் என்றால் நீங்கள் ஏன் உங்கள் குடும்பத்தினரை சிறிலங்காவுக்கு வெளியில் வைத்திருக்கிறீர்கள் அவர்களையும் இங்கு அழைத்துவந்து குடியமர்த்தலாம்தானே. மேலே நான்வழங்கிய link இல் கடைசி பந்தியில் பின்வருமாறு உள்ளது: "The reasons for not being party to the Convention or its Protocol are varied but the fact of not being a party affects, for example, the ability of UNHCR to work with and in that state and, importantly, the liability of that state to comply with international humanitarian standards"

பன்னாட்டு ஏதிலிகள் சட்டம் இலங்கையில் செல்லாது அப்பு. அவங்கதான் அதிலை கையெழுத்துபோட்டு ஏற்றுக்கொள்ளலையே. அதனாலைதானே இறுதிச்சண்டை உக்கிரமடைந்தபோது அனைத்து உதவி இஸ்தாபனங்களையும் NGO களையும் சிங்கள அரசு அவர்களை விருப்பத்துக்கு மாறாக வெளியேறும்படி கலைக்க வாய்ப்பாய் இருந்தது. ஐநாவிலையிருந்து அதற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பலையே! என்ன ஐயா நீங்க அப்புக்காத்தா இல்லையா?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, vanangaamudi said:

ஐயா நீங்க அப்புக்காத்தா இல்லையா?

கல்லோயா திட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த அவருடைய அப்பு.... அதிகமான சிங்களர் அங்கு வந்து குடியேறக் காரணமாக இருந்ததாகச் செய்தி உண்டு. அப்பு செய்த தொண்டுகளைத் தானும் தொடர்ந்து அப்புவின் பெயரைப் பாதுகாத்து வருவதற்கு முற்படுவதால் இவர் அப்பு + காத்து அப்புக்காத்துத்தான்.  
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

“ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும்.

மியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து அடைக்­க­லம் தேடி இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளைப் பாது­காப்­பது அர­சின் கட­மை­யா­கும்”
இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

உங்கள் வாக்காள பெருமக்கள் சிங்களவர்களினால் சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்டு காடு மேடெல்லாம் திரிந்தார்களே அப்போது எங்கே போனது உந்த ஞானோதயம்? tw_angry:
நினைச்ச நேரம் நினச்சதை கதைக்கும் மாறாட்ட எதிர்க்கட்சி தலீவர்.tw_angry: tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மக்களையே நாட்டை விட்டு வெளியேற்ற அவர்களின் நிலங்களை பறித்து தனத்தாக்க அவன் உபாயம் தேடுகிறான். அதைப்பாக்க நேரம், யோக்கியதை இல்லை. இவர் போய் வந்தவனுக்கு குடியுரிமை குடுத்து பாதுகார் எண்ணுறார். இவருக்கெல்லோ அமைதி பரிசு கொடுத்திருக்க வேணும். தவறி மைத்திரியாரை சிபாரிசு பண்ணிபோட்டார்கள். வெறும் எதிர்க்கட்ச்சி கதிரையை வைச்சுக்கொண்டு கனவு, சட்டம்  வேற. சிங்களவனே இவற்றை கூத்தைப்பாத்து சிரிப்பான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.