Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

Featured Replies

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

 

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை, இது துரதிஸ்ரவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள் எமக்கு அநீதி இழைப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்துக் கொள்ளும் நிலையில் எம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்திருப்பதுடன் அந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம்(10); இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்கள் வட்டம் ஏற்பாடு செய்த தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு இன்று(10) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளில் இந்த தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு வட மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் தலைவருமான அயூப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில்  தமிழ் முஸ்லிம்  மக்களிற்கிடையில் இன ஐக்கியத்தினை வலியுறுத்தும் விதமாகவும் நல்லுறவை பேணுவதற்கு அடையாளமாகவும் இம்மாநாடு இடம்பெற்றது.

முஸ்லிம் மக்கள் யாழ் மாவட்டத்தல் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் விதமான கொள்கைப்பிரகடனம் ஒன்றையும் வட மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் வாசித்து உரையாற்றினார்.

அத்துடன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையினை வலியுறுத்தி அரசியல் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா, மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, இம்மானுவல் ஆர்லல்ட், அரியகுட்டி பரம்சோதி, சிவாஜிலிங்கம்,சயந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-sumanthiran-speach-today

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

 

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

இந்நிகழ்வில் வடமாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா, மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, இம்மானுவல் ஆர்லல்ட், அரியகுட்டி பரம்சோதி, சிவாஜிலிங்கம்,சயந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-sumanthiran-speach-today

சரியான திசையில் பயணிக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி... கூடவே... கிழக்கு தமிழர் பிரச்சனைகள் குறித்து, சுமன தேரர் கரிசனையையும் சொல்லி வையுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்தான்  அய்கியம் ...அவயின்டை கதை முழுக்க வேறை..

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை நாங்கள் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை நிரூபிக்க நீங்கள் முதல் ஆளாக நின்று முஸ்லீமாக மதம் மாறி முஸ்தபா என்று உங்கள் பெயரை மாற்றி, எங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே சுமந்திரன்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

 

"நாங்கள் செய்த தவறுகளுக்கான தண்டனையே எங்களுக்குக் கிடைத்தது" என்று முசுலீம்களே சொன்னாலும் உந்தாள் விடாது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்திற்கு அரசியல் தலைவர் என்ற முகமூடிக்குள் ஒரு சகுனி எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 தன் மக்களின் பிரச்சனைகளை   தீர்க்கத்தெரியாதவர், உப்பிடி ஏதாவது கதைத்து  கைதட்டல் வாங்கி தன் இயலாமையையும், துரோகத்தனத்தையும் மூடி மறைக்கப் பாக்கிறார்.

  • தொடங்கியவர்

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

 

 
 
 
வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா என நான் சவாலாக கேட்கின்றேன், கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிரசு கட்சியின் முஸ்லீம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளிலான தமிழ், முஸ்லீம் ஐக்கிய மாநாடு நேற்று (10) யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்ற கட்சி தமிழரசு கட்சி என பெருமையாக கூறுவேன். போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற காலகட்டத்திற்குள் வரும் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு நிகராக முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தினைக் குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்பதனை இங்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.

நீண்டகாலமாக இங்கிருந்து அநியாயமாக அகற்றப்பட்ட மக்கள் மீளவும் இங்கு வந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஆர்வத்தினைக் காட்டி இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அவ்வாறான செயற்பாடு அமைந்திருக்கவில்லை. இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை இனமாக இருப்பவர்கள் பலவிதமான பாரபட்சங்களுக்குள்ளாக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென உலகம் முழுவதிலும் தெரிவிக்கும் தமிழ் மக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மையாக சிறு சிறு இடங்களில் வாழும் மற்ற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிஸ்டவசமான விடயம்.

முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்படும், அநீதிகள், அழுத்தங்கள் எமக்குத் தான் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். எமது அரசியல் ஜனநாயக அரசியலாக இருப்பது துரதஸ்டவசமானது, பெரும்பான்மை இன மக்களை சந்தோசமாக வைத்திருப்பதே அரசியல் தலைவர்களின் போக்காக இருக்கின்றது.

ஏனெனில், பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியிருக்கின்றோம் என்ற காரணத்திற்காகவே, அதனால் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நியாயம் கிடைப்பது அரிது. வாக்குகளில் தங்கியிருக்கும் தலைவர்களுக்கு சிறுபான்மையினரின் குரல் கேட்காது. எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களின் குரல் கேட்காது.

இந்த நிலமை மாற வேண்டும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இருந்து எழுந்த ஒரு கட்சி.

அண்மைக் காலமாக, தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் குறைந்துள்ளதென்பது உண்மை. இடைக்கால அறிக்கை ஏகமனதாக வழிநடத்தல் குழுவினால் செய்யப்பட்டது. இந்த அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்த ஒரு விடயம்.

அரசியலமைப்பில் எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டவை. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதிலும், பௌத்த மதத்தினை உடைய பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சட்டமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின், அது பிரியோசனம் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் கூட, உண்மையான மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும். அது இலகுவான விடயம் அல்ல. மிகவும் கடினமான ஒரு விடயம்.

இருந்தாலும், இரண்டு வருடங்களாக ஏகமனதான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றோம். இது மக்களுக்குத் தெரிய வேண்டும். வழிநடத்தல் குழு ஏதோ அறிக்கைகளை வெளியிடுகின்றதென மக்கள் நினைப்பது தவறு. இனி மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இணைந்து செயற்படுகின்ற போது தான் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

வட, கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. வட, கிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம், அது வேறு விடயம். ஆனால், அது ஏற்படுத்தப்படுவதாக இருந்தால், வடக்கில் வாழும் மக்களின் விருப்பப்படி செய்ய முடியாது. கிழக்கில் வாழும் மக்களின் விருப்பத்துடனும் செய்யப்பட வேண்டும்.

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமானதென யாராவது சொல்ல முடியுமா? நான் சவாலாக கூட கேட்கின்றேன். எமக்கு வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென கூவித்திரியும் எவராவது அதைச் செய்து முடிப்பார்களா? வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது. அது உண்மை, அந்த உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள்.

வட, கிழக்கு இணைப்பு என்றுமே சாத்தியமற்றதென சொல்லக் கூடாது. நாங்கள் இணைந்து வாழ்வதாக இருப்பதென்றால், அது நடக்கும், இணைய வேண்டுமென்று கூறும் ஆட்கள் தான், அவர்களே சூழ்நிலைகளை இல்லாமல் செய்கின்றார்கள்.

ஏற்படக் கூடிய சூழ்நிலையையும் கட்டுப்படுத்துவதற்காக, முஸ்லீம் மக்களையும் அன்னியப்படுத்துகின்றார்கள். முஸ்லீம் மக்களையும் இணைத்து செயற்படுத்தாமல், இது தான் நடக்க வேண்டும். வட, கிழக்கு இணைய வேண்டுமென்று நினைக்கும் நாம் செய்வது வித்தியாசமான செயல்கள்.

ஆகையினால், மத்திய அரசின் இணக்கத்துடன் செய்ய வேண்டுமென்று சொல்கின்றோம். அதில் உறுதியாக இருக்கின்றோம். மக்களாட்சியாக முடிவுறுகின்ற போது, அந்தந்த பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு மாகாணங்களில் உள்ள மக்கள் வட, கிழக்கு இணைப்பதற்கு இணங்க வேண்டும். அவற்றினை நிவர்த்தி செய்யாது. வெறுமனவே கோசமாக வடகிழக்கு இணைப்பினைச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98295

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திமார்கள் சிலபேர் வந்து போவது போல தெரியுது .. கூத்தமைப்பு வெட்டியடுவதை பார்த்து புல்லரிக்கினமப்பா 
அண்ண சும்மு வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று வடக்கிற்கு புரியுதோ இல்லையோ கிழக்கிற்கு நன்றாகவே புரியும் 
ஆகவே சும்மா பழைய பானைக்குள்ள கையை விட்டு கிண்டாமல்  கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு என்ன வகையான அரசியலை கைவசம் வைத்திருகிறீர்கள் என்று ஒருக்கால் சொல்லுறீங்களோ .....?
போற போக்கைப்பார்த்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ் தேசியத்திலிருந்து விடுபட்டு தங்களது தப்பிப்பிழைத்தலுக்கான அரசியலை கையிலெடுக்க வேண்டியநிலைக்கு தள்ளபட்டுவிட்டார்கள் 
நீங்கள் இப்படி வடக்கையே பிடித்து வைத்து சொறிஞ்சு  கொண்டிருங்கோ  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

வாத்திமார்கள் சிலபேர் வந்து போவது போல தெரியுது .. கூத்தமைப்பு வெட்டியடுவதை பார்த்து புல்லரிக்கினமப்பா 
அண்ண சும்மு வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று வடக்கிற்கு புரியுதோ இல்லையோ கிழக்கிற்கு நன்றாகவே புரியும் 
ஆகவே சும்மா பழைய பானைக்குள்ள கையை விட்டு கிண்டாமல்  கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு என்ன வகையான அரசியலை கைவசம் வைத்திருகிறீர்கள் என்று ஒருக்கால் சொல்லுறீங்களோ .....?
போற போக்கைப்பார்த்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ் தேசியத்திலிருந்து விடுபட்டு தங்களது தப்பிப்பிழைத்தலுக்கான அரசியலை கையிலெடுக்க வேண்டியநிலைக்கு தள்ளபட்டுவிட்டார்கள் 
நீங்கள் இப்படி வடக்கையே பிடித்து வைத்து சொறிஞ்சு  கொண்டிருங்கோ  

இன்னுமா நீங்கள் இவர்களை நம்பி இருக்குறீர்கள் ஐயோ ஹய்யோ

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

 

 
 
 
வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா என நான் சவாலாக கேட்கின்றேன், கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிரசு கட்சியின் முஸ்லீம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளிலான தமிழ், முஸ்லீம் ஐக்கிய மாநாடு நேற்று (10) யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்ற கட்சி தமிழரசு கட்சி என பெருமையாக கூறுவேன். போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற காலகட்டத்திற்குள் வரும் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு நிகராக முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தினைக் குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்பதனை இங்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.

நீண்டகாலமாக இங்கிருந்து அநியாயமாக அகற்றப்பட்ட மக்கள் மீளவும் இங்கு வந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஆர்வத்தினைக் காட்டி இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அவ்வாறான செயற்பாடு அமைந்திருக்கவில்லை. இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை இனமாக இருப்பவர்கள் பலவிதமான பாரபட்சங்களுக்குள்ளாக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென உலகம் முழுவதிலும் தெரிவிக்கும் தமிழ் மக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மையாக சிறு சிறு இடங்களில் வாழும் மற்ற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிஸ்டவசமான விடயம்.

முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்படும், அநீதிகள், அழுத்தங்கள் எமக்குத் தான் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். எமது அரசியல் ஜனநாயக அரசியலாக இருப்பது துரதஸ்டவசமானது, பெரும்பான்மை இன மக்களை சந்தோசமாக வைத்திருப்பதே அரசியல் தலைவர்களின் போக்காக இருக்கின்றது.

ஏனெனில், பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியிருக்கின்றோம் என்ற காரணத்திற்காகவே, அதனால் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நியாயம் கிடைப்பது அரிது. வாக்குகளில் தங்கியிருக்கும் தலைவர்களுக்கு சிறுபான்மையினரின் குரல் கேட்காது. எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களின் குரல் கேட்காது.

இந்த நிலமை மாற வேண்டும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இருந்து எழுந்த ஒரு கட்சி.

அண்மைக் காலமாக, தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் குறைந்துள்ளதென்பது உண்மை. இடைக்கால அறிக்கை ஏகமனதாக வழிநடத்தல் குழுவினால் செய்யப்பட்டது. இந்த அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்த ஒரு விடயம்.

அரசியலமைப்பில் எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டவை. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதிலும், பௌத்த மதத்தினை உடைய பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சட்டமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின், அது பிரியோசனம் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் கூட, உண்மையான மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும். அது இலகுவான விடயம் அல்ல. மிகவும் கடினமான ஒரு விடயம்.

இருந்தாலும், இரண்டு வருடங்களாக ஏகமனதான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றோம். இது மக்களுக்குத் தெரிய வேண்டும். வழிநடத்தல் குழு ஏதோ அறிக்கைகளை வெளியிடுகின்றதென மக்கள் நினைப்பது தவறு. இனி மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இணைந்து செயற்படுகின்ற போது தான் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

வட, கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. வட, கிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம், அது வேறு விடயம். ஆனால், அது ஏற்படுத்தப்படுவதாக இருந்தால், வடக்கில் வாழும் மக்களின் விருப்பப்படி செய்ய முடியாது. கிழக்கில் வாழும் மக்களின் விருப்பத்துடனும் செய்யப்பட வேண்டும்.

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமானதென யாராவது சொல்ல முடியுமா? நான் சவாலாக கூட கேட்கின்றேன். எமக்கு வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென கூவித்திரியும் எவராவது அதைச் செய்து முடிப்பார்களா? வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது. அது உண்மை, அந்த உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள்.

வட, கிழக்கு இணைப்பு என்றுமே சாத்தியமற்றதென சொல்லக் கூடாது. நாங்கள் இணைந்து வாழ்வதாக இருப்பதென்றால், அது நடக்கும், இணைய வேண்டுமென்று கூறும் ஆட்கள் தான், அவர்களே சூழ்நிலைகளை இல்லாமல் செய்கின்றார்கள்.

ஏற்படக் கூடிய சூழ்நிலையையும் கட்டுப்படுத்துவதற்காக, முஸ்லீம் மக்களையும் அன்னியப்படுத்துகின்றார்கள். முஸ்லீம் மக்களையும் இணைத்து செயற்படுத்தாமல், இது தான் நடக்க வேண்டும். வட, கிழக்கு இணைய வேண்டுமென்று நினைக்கும் நாம் செய்வது வித்தியாசமான செயல்கள்.

ஆகையினால், மத்திய அரசின் இணக்கத்துடன் செய்ய வேண்டுமென்று சொல்கின்றோம். அதில் உறுதியாக இருக்கின்றோம். மக்களாட்சியாக முடிவுறுகின்ற போது, அந்தந்த பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு மாகாணங்களில் உள்ள மக்கள் வட, கிழக்கு இணைப்பதற்கு இணங்க வேண்டும். அவற்றினை நிவர்த்தி செய்யாது. வெறுமனவே கோசமாக வடகிழக்கு இணைப்பினைச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98295

அவரை கொண்டு போய், தொப்பி போட்டு விட்டாச்சு போல கிடக்குது...

கிழக்கு முழுக்க தொப்பி...

தெற்குப்பக்கமா, தேரர்மார் விடமாடினம்... இனியென்ன வடக்கு தானே.... :unsure:

Edited by Nathamuni

4 hours ago, Nathamuni said:

அவரை கொண்டு போய், தொப்பி போட்டு விட்டாச்சு போல கிடக்குது...

கிழக்கு முழுக்க தொப்பி...

தெற்குப்பக்கமா, தேரர்மார் விடமாடினம்... இனியென்ன வடக்கு தானே.... :unsure:

அப்படியாயின் மக்கள் என்ன செயீனம், தொப்பியின் கடையில் கொத்து ரொட்டியும் முட்டை அப்பமும் வேண்டி சாப்பிட்டு விட்டு தூக்கமா?

கள்ள காணி பிடிக்கிற திட்டம் நிறைவேறவில்லை என்றவுடன் இப்படி புது நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அவரை கொண்டு போய், தொப்பி போட்டு விட்டாச்சு போல கிடக்குது...

அவர் தொப்பியைக் கழற்றி விட்டதால்தான் மாறிக் கதைக்கிறார்போல் தெரிகிறது... ! புதுத் தொப்பி எல்லாம் போடமுடியாது. போனால் போனதுதான்.!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.