Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்”

Featured Replies

“தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்”

 

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

 

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன்.

வடமாகாணத்திற்கு நான் ஆளுநராக கடமைக்கு வரும்போது என்னுடய மனைவி அங்கே போகவேண்டாம் என்று சொல்லி அழுதார். நான் இறக்க நேரிடும் என்று கூறினார். இன்று அவரும் இங்கே வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கின்றார். அவருக்கும் வடக்கு தமிழ் மக்களின் மனிதநேயம் நன்றாக புரிந்துவிட்டது.

கடந்த வருடங்களை விட மேலும் மேலும் இந்த வட மாகாண மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்திருக்கின்றேன்.

நான் வயது முதிர்ந்தவன் கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போன்று “வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ” என்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ் மக்களுக்காக என் உயிரையும் கொடுத்து சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.

இங்குள்ள அரசியல் தலைமைகள் தமது வாய்களை திறந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஒரு டொலரை மாதம் ஒன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்பது கிடையாது. நிச்சயமாக அவர்கள் கேட்பார்களே ஆனால் அவ்வாறு ஒரு பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் ஓரிரு நாட்களில் அரசியல் தலைவர்கள் ஆகவேண்டுமானால் ஒரு முறையிருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாம், மதவாதம் இவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டு பேசினால் ஓர் இரு நாட்களில் தலைவராக முடியும்.

இதனை மக்களாகிய நாம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்வதற்கு உரிய வழிகளை தேடிக்கொண்டு வாழ வேண்டும். அதற்காக நான் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/76017/

  • தொடங்கியவர்

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு…

ampalavanar-1.jpg?resize=800%2C600

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது. ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்து சிறப்பித்தார் .

 

புங்குடுதீவு வாழ் மக்களின் கலை கலாசார தொழில் பயிச்சிகளை மையமாக கொண்டு புலம்பெயர்து வாழும் புங்குடுதீவு மக்களினால் இந்த மண்டபம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இரண்டு புதிய கட்டிடங்களை உள்ளூர் மற்றும் கனடா வாழ் மக்களினால் அமைக்கப்பட்டு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, வைத்திய கலாநிதி ஸ்ரீகிருஷ்ணா , பிரதேசபை உறுப்பினர்கள் என பலர்கலந்து கொண்டனர் .

ampalavanar-4.jpg?resize=800%2C600ampalavanar-3.jpg?resize=800%2C600ampalavanar-2.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/76023/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செய்யும் அரசியல் ஆளுநருக்கு உரியதல்ல, சிங்கள அரசியல்வாதி போல செயற்படுகின்றார். எங்கட எடுபிடிகளும் உடந்தை. 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

புங்கிடுத்தீவு ஆட்கள் எதிலும் முன் மாதிரி<_<

  • கருத்துக்கள உறவுகள்

படங்களில் ஒரு பெண்புரசுகளையும் காணவில்லை.  வந்த ஆம்பிளையளில் எவருக்குப் பயந்து ஒளிஞ்சிருக்கினம்??

ஆளுனர் என்றாலே பெண் புரசுகள் எங்க என்ற கேள்வி வருது:D

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

புங்கிடுத்தீவு ஆட்கள் எதிலும் முன் மாதிரி<_<

அர‌சியல் செய்ய தீவுகள் எல்லோருக்கும் முக்கியம்,அது அமேரிக்கா என்றால் என்ன சிறிலங்கா என்றால் என்ன 

  • கருத்துக்கள உறவுகள்

உவர் இப்ப எந்த மாகாணத்துக்கு ஆளுநர்..??! 

மாத்தினது.. என்று அறிவிச்சாங்களே சிங்களன்கள்..??!

உவர் தமிழ்மக்களின் மனிதநேயத்தை அறிஞ்சாரோ இல்லையோ தமிழ்மக்களின் மறதிநேயத்தில்.. அரசியல் செய்திட்டு இருக்கிறார். இல்ல தமிழ் மக்கள் யு என் பிக்கும்.. மகிந்தவுக்கு.. எஸ் எல் எப் பி க்கும் வாக்குப் போடுவினமோ..??! tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, தமிழ்மக்களது உடம்பில் சிங்களவர் இரத்தம் ஓடுகிறது எனச்சொல்லப்பட்ட இழிசொல்லுக்கு மன்னிபுக்  கேட்பீர்களா திரு றெஜினோல்ட் குரே அவர்களே. 

உங்களுக்குத் தெரியுமா புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தேவையில்லாத  பெறுமதியில்லாத விடையங்களுக்கெல்லாம் ஊருக்குக் காசு அனுப்பி   அபிவிருத்திக்குத் தடையாக உள்ளார்கள் என

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

இவர் செய்யும் அரசியல் ஆளுநருக்கு உரியதல்ல, சிங்கள அரசியல்வாதி போல செயற்படுகின்றார். எங்கட எடுபிடிகளும் உடந்தை. 

 

On 22/04/2018 at 6:49 PM, நவீனன் said:

 

அம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.

இங்குள்ள அரசியல் தலைமைகள் தமது வாய்களை திறந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஒரு டொலரை மாதம் ஒன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்பது கிடையாது. நிச்சயமாக அவர்கள் கேட்பார்களே ஆனால் அவ்வாறு ஒரு பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

 

விக்கி  ஐயா வடமாகாண  முதலமைச்சராக  வந்தபோது

இவ்வாறான  ஒரு தமிழ் மக்களுக்கான  பொது அமைப்பை  நிதியத்தை  உருவாக்கி

புலத்தவரிடமிருந்து நிதியை  சேகரிப்பார்

அதன் மூலம் நாம் தன்னிறைவு  அடையலாம் என்ற  நம்பிக்கை  எனக்கு  இருந்தது  போலவே  பலருக்கும் இருந்திருக்கும்

 

ஆனால்  அவ்வாறான  ஒரு  திட்டம் வரவே  இல்லை

ஆரம்பித்ததாக விக்கி  ஐயா  சொன்னாலும்

அதை  நடைமுறைப்படுத்த  முடியவில்லை

அரசு தடுக்கிறது  என்றும் அறிக்கை  விட்டிருந்தார்

இப்போ ஆளுணரின் இந்த பேச்சை

முயற்சியை பிடித்துக்கொண்டால்  நல்லது நடக்கலாம்

நல்லதை  மட்டுமே  நினைப்போம்

யார் குற்றினாலும் அரிசியானால் சரி

தமிழ்  மக்கள் தன்னிறைவு  அடையணும்

சொந்தக்காலில்  நிற்கணும்

அதுவே எதுவாக  இருந்தாலும் முதற்படி.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
1 hour ago, nedukkalapoovan said:

உவர் இப்ப எந்த மாகாணத்துக்கு ஆளுநர்..??! 

மாத்தினது.. என்று அறிவிச்சாங்களே சிங்களன்கள்..??!

உவர் தமிழ்மக்களின் மனிதநேயத்தை அறிஞ்சாரோ இல்லையோ தமிழ்மக்களின் மறதிநேயத்தில்.. அரசியல் செய்திட்டு இருக்கிறார். இல்ல தமிழ் மக்கள் யு என் பிக்கும்.. மகிந்தவுக்கு.. எஸ் எல் எப் பி க்கும் வாக்குப் போடுவினமோ..??! tw_angry::rolleyes:

24 மணி நேரத்தில் மீண்டும் வடமாகாணத்தின் ஆளுநராக நியமிக்கபட்டார்.

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2018 at 2:49 AM, நவீனன் said:

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.

அரச ஆளுநரும் தேவையில்லை. சாகும்வரை நடு வீட்டில இருந்து  தமிழனை உய்ய 
விடாமல் கடைக் குடலையும்  சுரண்ட திட்டம் தீட்டுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/22/2018 at 12:49 PM, நவீனன் said:

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.

 

http://globaltamilnews.net/2018/76017/

இதே வாயாலதான் நீங்கள் எல்லோருமே புலம்பெயர் தமிழர்கள் நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று கூவி வருகிறீர்கள்,

தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள்தான் உதவ வேண்டுமென்றால் நீங்கள் எதுக்கு ஐயா இத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து ,இத்தனை லட்சம் உயிர்களை அழித்து அவர்கள் பகுதிகளை கைபற்றினீர்கள்?

தமிழனிடம் காசு வாங்கி தமிழர் பகுதியை விருத்தி செய்யவேண்டிய நிலமை இருந்தால், சிங்களவரின் நிர்வாகம் எதுக்கு அங்கே வேண்டும் என்கிறீர்கள்?

புலம்பெயர் தமிழர்களிடம் வடக்கு கிழக்கை ஒப்படைக்க நீங்கள் தயாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.