Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு

Featured Replies

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு

 

 
 

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் கூறியவாறு அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்வர்களின் பிரச்சினைக்கான தீர்வு, காணி விடுவிப்பு, புதிய அரசியல் யாப்பு திருத்தம் ஆகிய பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பொது மக்கள், பொது அமைப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெறவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசுக் கட்சி நிறுத்தாது எனவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

http://www.ibctamil.com/politics/80/101821

 

 

 

இனிமேலும் அரசுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்கிறது கூட்டமைப்பு!

தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தமையாலேயே பலரது விமர்சனங்களையும் மீறி கூடிய காலம் அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறு ஆதரவு வழங்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாள் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இனிமேலும் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேச சமூகம் கூட எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தீர்வுத் திட்டத்திலோ மக்களது அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதிலோ முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் நிர்வாக முடக்கல் போராட்டங்களைச் செய்வோம் என ஏற்கனவே நாம் கூறியிருந்தோம்.

குறிப்பாக 2014ம் ஆண்டே நாம் அதனைச் செய்வதற்கு ஆயத்தமாக இருந்த போது அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் புதிய அரசுக்கு நாம் ஒத்துழைப்பாகச் செயற்பட்டாலும் எமது இலக்குகளை நாம் மறந்து விடவில்லை. புதிய அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருந்தது.

அவ் அவகாசத்தை நாம் கொடுத்திருக்கின்றோம். குறிப்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் அதனை அதிகமாகவே கடந்த மூன்றாண்டில் கொடுத்திருக்கின்றோம்.

அந்நேரத்தில் சர்வதேச சமூகமும் நாங்கள் சேர்ந்து இயங்கப வேண்டும் என எதிர்பார்த்திருந்தது.

நாம் அரசுக்கு ஆதரவு கொடுக்காததாலேயே அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே பலத்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனாலும் இனிமேலும் நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்பினை பேணுகின்றவன் என்ற அடிப்படையிலும் அவர்களது நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற அடிப்படையிலும் இனிமேலும் நாமத் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேசம் கூட எதிர்பார்க்கவில்லை. இனிமேல் எதிர்ப்புகளை காட்டவேண்டும் என்றே சர்வதேசம் எதிர்பார்க்கின்றது.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட நிர்வாக முடக்கல் போராட்டமானது வெறுமனே ஒத்திகை மாத்திரமே என்றார் சுமந்திரன் எம்.பி.

 

http://www.tamilwin.com/politics/01/185067?ref=home-feed

  • தொடங்கியவர்

 

அரசாங்கத்திற்கான ஆதரவு குறித்து மீள்பரிசீலனை! – கூட்டமைப்பு

உங்களின் சர்வதேசம் என்பது இந்தியா மட்டும் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தளபதிகளுக்கு மஹிந்தவுடன் தேனிலவு ஆரம்பமாயிட்டுது என்பதன் மறுவடிவமே அண்மைய அரசுக்கெதிரான போராட்ட ஒத்திகைகளும், ஆதரவு வாபஸ் வாங்கபோகும் எச்சரிக்கைகளும்.

கூடிய சீக்கிரம் ஐயாவுக்கு வழங்கப்பட்ட அதிரடிப்படை பாதுகாப்பு வாபஸ் வாங்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கு ஆதரவு வழங்கச் சொல்லி எந்த சர்வதேச நாடு சொன்னது அப்போது??

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

B5_E8_D118-20_F0-44_C1-_BBDB-11223_D34_D

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர்கள்  யாரென்று தீர்மானிப்பது கூட்டமைப்பா? தமிழ் அரசு கட்சியா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வேட்பாளர்கள்  யாரென்று தீர்மானிப்பது கூட்டமைப்பா? தமிழ் அரசு கட்சியா?

சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/10/2018 at 12:46 PM, நவீனன் said:
 

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 நடு ரோட்டிலை நிக்கப்போறியள் கவனம்.....அவையை விட்டால் உங்களுக்கு வேறை ஆர் இருக்கினம்? :(

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மகிந்த கையில் வந்துவிடும் என்பதை சுமந்திரன் இப்போதே அறிந்து அதன் பக்க விளைவுகளை ஆராய்ந்து விட்ட அறிக்கை இது.
ஒருமுறையாவது  ஸ்ரீலங்காவின் அமைச்சரவையை ஒரு எட்டு  எட்டிப்பார்க்காமல் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராக இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நடு ரோட்டிலை நிக்கப்போறியள் கவனம்.....அவையை விட்டால் உங்களுக்கு வேறை ஆர் இருக்கினம்? :(

பழைய குருடி கதவைத் திறவடி.... பிறகென்ன இந்தியாதான் தஞ்சம்.!  Details zu ähnlichen Bildern anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மகிந்த கையில் வந்துவிடும் என்பதை சுமந்திரன் இப்போதே அறிந்து அதன் பக்க விளைவுகளை ஆராய்ந்து விட்ட அறிக்கை இது.
ஒருமுறையாவது  ஸ்ரீலங்காவின் அமைச்சரவையை ஒரு எட்டு  எட்டிப்பார்க்காமல் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராக இல்லை

இணக்க அரசியல் என்று வந்த பின்பு அரசுடன் இணையத்தான் வேண்டும்...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.