Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

_________________________________________________

வாங்கோ சகோதரா உங்க வரவு நல் வரவாக இருக்க எனது வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு இலக்கியவாதி என்பதை உங்க அறிமுக வாசனையில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது. உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்சியடைகிறேன். இங்கு உங்களுக்கும் நிறைய பங்குண்டு.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வேலவா.

எப்படி உங்க சுகம் எல்லாம்?

வேலவா வண்க்கம் வாருங்கள். ஒரே தாய் மக்கள் நாங்கள், வந்தவரை வரவேற்கும் பழக்கம் தமிழனுக்கே உரித்தானது. வாருங்கள் எல்லார்கூடவும் பேசுங்கள். அன்பாலும் தமிழ் பண்பாலும் ஒன்றினைவோம்

வணக்கம் சகோதரா..வாருங்கள்

வணக்கம் வேலவன் வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வேலவன்.எப்படிச்சுகங்கள்?உங்கள் பெயரிலேயே தமிழ் மணம் வீசுகின்றது.தமிழ் பெயரில் உங்களை அறிமுகப்படுத்தியதிற்கு மீண்டும் ஒருமுறை கைகூப்பி வரவேற்கின்றேன்.

வணக்கம் வேலவன்.எப்படிச்சுகங்கள்?உங்கள் பெயரிலேயே தமிழ் மணம் வீசுகின்றது.தமிழ் பெயரில் உங்களை அறிமுகப்படுத்தியதிற்கு மீண்டும் ஒருமுறை கைகூப்பி வரவேற்கின்றேன்.

வாருங்கள் வேலவா

அடியேனின் இதமான நல் வணக்கங்கள்

பனிமலை நாட்டிலிருந்து

அன்புடன் நோர்வேஜியன்

வணக்கம் வேலவன் உங்களை அன்போடு வரவேற்கிறேன்

  • தொடங்கியவர்

_________________________________________________

வாங்கோ சகோதரா உங்க வரவு நல் வரவாக இருக்க எனது வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு இலக்கியவாதி என்பதை உங்க அறிமுக வாசனையில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது. உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்சியடைகிறேன். இங்கு உங்களுக்கும் நிறைய பங்குண்டு.

நான் ஒன்றும் இலக்கியவாதி எல்லாம் இல்லை .எனது தந்தை ஒரு தமிழ்ப்பேராசிரியர் அவர் என்னிடம் தமிழர் வரலாறு,தமிழீழ வரலாறு எல்லாம் பற்றி பேசுவார் எனவே எனக்கும் தமிழ் தமிழர் வரலாறு மீது ஈடுபாடு உண்டு... யாழ்ப்பாண நூலகத்தின் பெருமையையும் மிகவும் சிலாகித்து கூறுவார் .அதனை நாகரிகமில்லா கயவர்கள் தீக்கிரையாக்கியதில் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தவர் எனது தந்தை. இப்பொழுது நாங்கள் அனைவருமே தமிழீழம் விடுதலை பெற்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறோம்

வணக்கம் வேலவன் வாருங்கள்.

எங்கள் உறவுகள் அங்கு நலமா?

வணக்கம், வாங்கோ, வாங்கோ.

வணக்கம் வேலவன்.... வாங்கோ ... வரவேற்கிறோம். :lol:

வணக்கம் வேலவன்

தமிழகத்தை சேர்ந்த உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. வாருங்கள் வாருங்கள்.

  • 2 weeks later...

உங்கள் கருத்துக்களை படித்துவிட்டுதான் உங்களை வரவேற்கிறேன்.. அத்தனையும் அருமை. உங்கள் கருத்துக்களால் யாழிர்க்கு மேலும் வழு சேர்க்க உங்களை வரவேர்கிறேன்.

வணக்கம் சகோதராஉங்களை வரவேற்பதில் பெருமகிழ்சி அடைகின்ரோம்

உங்களின் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம் நீங்கள் எழுதியதை பார்கையில் உங்களுக்கு ஈழ அறிவு நிரைய இருக்குது என தெரிகிறது குறை நினைக்காவிட்டால் குமரி மாவட்டத்தில் ஈழ ஆதரவு எப்படி என சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வேலவன் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வேலவன். வாருங்கள் வாழ்த்துக்கள்! :unsure::unsure:

  • தொடங்கியவர்

ஈழவன்.... குமரி மாவட்டத்தில் தமிழீழ ஆதரவு வெளிப்படையாக சொன்னால் குறைவு தான்..... முக்கிய காரணம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி மக்களுக்கு ஒன்றும் தெரியாது.... வரலாறு ரீதியாக நோக்கினால் குமரி மாவட்டத்திலும் அதன் அருகாமையிலுள்ள கேரளத்திலும் ஈழவன் என்ற ஒரு சாதி உண்டு இவர்கள் பெரும்பாலும் மலையாளத்தையே தாய்மொழியாகக்கொண்டவர்கள் ...ஆனால் இவர்களது பூர்வீகம் தமிழீழம் என்றும் கூறப்படுவதுண்டு...தென்னை மரம் ஏறுதல் கள் இறக்குதல் இவர்கள் முக்கிய தொழில்.. ஏன் குமரி மாவட்டத்தில் ஈழ ஆதரவு குறைவு என்று ஆராய்ந்தால்....

50 ஆண்டுகளுக்கு முன்னர் குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் மகாராஜாவால் ஆளப்பட்டு வந்தது.குமரி எப்பொழுதும் ஆங்கிலேய நேரடி ஆட்சியில் இல்லை பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றபின் மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டபோது ..கேரளத்துடன் இணைக்கப்பட்டது ஆனால் குமரி மாவட்ட தமிழர்கள் தாய்த்தமிழகத்துடன் இணைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு வன்முறையை பிரயோகித்தது ...போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்...இப்பொழுது சிங்கள அரசுகள் செய்வதைப்போலவே அப்போதய கேரள அரசு தமிழர் பகுதிகளில் மலையாள குற்றவாளிகளை சிறைகளில் இருந்து விடுவித்து குடியமர்த்தியது...ஆனாலும் குஞ்ச நாடார், மார்ஷல் நேசமணி போன்ற தலைவர்கள் வழிகாட்டுதலில் 1955 இல் தாய்த்தமிழகத்துடன் இணைந்தது

... குமரி மாவட்டம் தனியாக பிரிவதற்கு அப்போதய தினமலர் நாளிதழும் உதவியது அதன் ஆசிரியர் ராமசுப்பய்யர் எனவே தினமலர் குமரி மாவட்டத்தில் பிரபலம் ,தாய்த்தமிழகத்துடன் இணைய பாடுபட்ட தலைவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.......அந்த காலகட்டத்தில் திராவிட கட்சி காங்கிரஸ் கட்சிகள் ஒன்றுக்கொன்று கடும் எதிரியாக இருந்த காரணத்தால் 1983 ல் தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிய போதும் குமரியில் சற்று மந்தம் தான் போராட்டதை பற்றி எடுத்துச்சொல்ல தலைவர்கள் இலாதது ஒரு குறை என்றால் ..அப்போது ஈழ ஆதரவு பிரசாரம் செய்த திராவிட கட்சிகள் தவிர காங்கிரஸ் ஈழப்பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை..இங்கு பிரபலமான தினமலரும் தமிழீழ எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டு புலிகளை பயங்கரவாதிகள் போல சித்தரித்து வந்தது.ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் அவை பலமான புலி எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டன அதன் விளைவாக குமரி மாவட்டத்தில் .மக்கள் புலிகள் பற்றி தவறான அபிப்பிராயங்களையே கொண்டிருந்தனர்...அந்த நிலை தகவல் தொழில் நுட்பம் வலர்ந்த இந்த காலத்தில் மாறிவருகிறது.

மக்கள் மனதிற்குள் தமிழீழ விடுதலையை ஆதரிக்கிறார்கள்.ஆனால் வெளிக்காட்ட தயங்குகிறார்கள்.இது தான் இன்றைய நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் வரவேற்கிறோம் வேலவன். கபட அரசியல் மற்றும் புலனாய்வுச் சதிகளால் குலைந்து போகும் எமது உறவுகளை உங்கள் போன்ற தமிழக சகோதரர்களால் தான் காப்பாற்ற முடியும். வந்து இணையுஙகள் எம்முடன்.

  • தொடங்கியவர்

குமரியில் தமிழ் சற்று மலையாள வாடையுடன் இருந்தாலும் ...ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும் உதாரணமாக நீங்கள் பேசுவதைப்போலவே புரியும் என்பதற்கு விளங்கும் என்பார்கள்... நன்றாக இருக்கினம் ..இஞ்ச வாருங்கோ இப்படி பல சொற்கள் பயன் படுத்துவார்கள் ... முற்காலத்தில் ஈழத்திற்கும் குமரிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்க வேண்டும்.தமிழகத்தில் குமரியில் மட்டுமே தமிழ் மூதாட்டி அவ்வைக்கு கோயில் உண்டு

வணக்கம் வேலவன்.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலவன் அண்ணா உங்க வரவும் நல்வரவாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.