Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!

IMG-9698-720x450.jpg

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார்.

அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார்.

இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக அவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் மாகாண சபையில் முதல்வர் அணி முதல்வருக்கு எதிரான அணி என இரு அணிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து நின்று செயற்பட்டனர்.

இதனையடுத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த கட்சியில் அனந்தி சசிதரன் உள்ளிட்ட தமிழரசு கட்சி அதிருப்தியாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/அனந்தி-சசிதரன்-தலைமையில்/

 

  • கருத்துக்கள உறவுகள்

CBC6-C96-E-D2-F9-446-F-9-D88-7-F073-A7-C

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

CBC6-C96-E-D2-F9-446-F-9-D88-7-F073-A7-C

ஊர்காவற்துறை நவரத்தினம் அவர்கள் ஆரம்பித்த கட்சியின் பெயர் போல உள்ள்தே?

தகர் மூளை என்று அவரை நக்கலடித்தவர்கள் ... இப்போது மீண்டும் ... அவர் வழியில்...!

வாழ்க்கை ஒரு. வட்டம் தான்!

அனந்தி சசிதரன் அவசரப்பட்டு ஆனந்தசங்கரி போன்ற சுயநலவாதிகளை இணைத்துக் கொள்ளாமல், சிற்றம்பலம் ஐயா, விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் வழிநடத்தலில்  பொறுமையுடன் கட்சியை முன்னெடுத்து சென்றால்,  விரைவில் எட்டப்பர்களின் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி போன்றவற்றை குப்பைக்குழியில் போட்டு மூடிட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு காசு நல்லா கிடைக்குது போல ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருப்பது முப்பது பேர் இதில் முன்னூறு கட்சிகள், நல்ல தமாசு..! :)

ஏன் இந்த சிவஞானம், சிறிதரன் மற்று அரியேந்திரன் இவர்களெல்லாம் இன்னமும் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை? கூடிய சீக்கிரம் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து அழிய வாழ்த்துக்கள்.! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

வெளிநாட்டு காசு நல்லா கிடைக்குது போல ?

கொடுக்கிற ஆட்களுக்கு தானே  தெரியும் ஏதும் கொடுத்ததோ ??:grin::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தில் இருப்பது முப்பது பேர் இதில் முன்னூறு கட்சிகள், நல்ல தமாசு..! :)

ஏன் இந்த சிவஞானம், சிறிதரன் மற்று அரியேந்திரன் இவர்களெல்லாம் இன்னமும் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை? கூடிய சீக்கிரம் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து அழிய வாழ்த்துக்கள்.! :grin:

இனி அழிவதற்கு ஒன்றுமில்லை. எரிகிற வீட்டில் புடுங்கினது லாபம் அவ்வளவுதான். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை புதிய கட்சிகள் உருவானாலும்  ஈழத்தமிழர்களுக்கு அளந்த அளவு அவ்வளவுதான் என்பதை முள்ளிவாக்கால் அழிவு சொல்லி விட்டது.
அதன் பின் எத்தனை வருடங்கள் சென்று விட்டது?

இன்றுவரை அழிவுகளில் கூட பிரதிபலன் கிடைக்காத இனமாக தமிழினம் இருக்கின்றது.

 ஆனந்தி சசிதரன் ஏதாவது புதிய வழிமுறைகள் இருந்தால் செய்யட்டும். வாழ்த்துக்கள் சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி சசிதரன் பிழையானவர் இல்லை. அதனால் அவர் தனக்கென்று ஒரு அரசியல் கட்சி அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக நான் நினைக்கவில்லை.

என்னைப்பொறுத்தவரை, தமிழர் உரிமைகள் தொடர்பாகவும், அவற்றை அடையும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஒரேமாதிரியான கருத்தோட்டத்தில் இருப்பவர்கள் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் ஒருங்கிணைவதே சரியானது என்று படுகிறது.

திரு விக்னேஸ்வரன், திரு கஜேந்திரகுமார், திருமதி ஆனந்தி சசிதரன் போன்றவர்கள் ஒரு பொதுவான அமைப்பில் ஒருங்கிணைந்து பயணிப்பதே தமிழர்க்கான பலத்தைச் சேர்க்கும்.

ஆளாளுக்கு ஒரு கட்சி தொடங்கி, வாக்குகளைப் பிரித்து, சிதைந்து போவதைக் காட்டிலும் இது பரவாயில்லை.

புரிந்துகொண்டால்ச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!

IMG-9698-720x450.jpg

 

லெப்பை, பாதர், அய்யா நிக்கினம்.... ஒரு ஆமத்துறு மொட்டையையும் காணமே.

சொல்லி அனுப்பி இருந்தால் நாக விகாரை ஹெட் மொட்டை  ஆமத்துறு ஒரு எட்டு வந்திருப்பாரே.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.