Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தில் துன்பத்தால் வாடுகின்ற எம்மக்களுக்கு இத் தமிழ் புத்தாண்டு, புதுவெளிச்சத்தையும், வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று, வாழ்த்துகின்றேன்.

மேலும், யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் துன்பத்தால் வாடுகின்ற எம்மக்களுக்கு இத் தமிழ் புத்தாண்டு, புதுவெளிச்சத்தையும், வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று, வாழ்த்துகின்றேன்.

மேலும், யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் நக்கீரரே :lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் புத்தாண்டு தை மாதம் முதலாம் திகதி. ஆரியர்களின் சூழ்ச்சிகளினால் சித்திரை மாதம் முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது

அப்ப இப்ப என்ன செய்வது? :lol:

சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவது தவறா? :lol:

வாழ்த்தை கூறவா அல்லது அமைதியாக அடங்கிப்போகவா? :lol:

ஆரிய மாயையிலிருந்து மீள்வதற்கு தமிழர் தயாராக இருக்கின்றார்களா? :lol:

ஏதாவது வாழ்த்தி வெடி சுடுவம் என்று ஓடி வந்த என் வாயை பூட்டிவிட்டீர்கள்! :lol:

ஆனால், இப்படி வருடத்தில் நான்கு தரம் கொண்டாட்டங்கள் வந்தால்தானே சினிமாக்காரன் படம் ஓடமுடியும்? யாவாரி யாவாரம் செய்ய முடியும்? மாணவர்கள் பள்ளிக்கூடம் போகாது வீட்டில் சந்தோசமாக இருக்க முடியும்? :(

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

ஒவ்வொரு சித்திரை மாதம் தொடக்கத்தில் இந்த கதை வந்திடும்.புத்தாண்டைக் கொண்டாடுறதா இல்லையா எண்டு...... ஆனால் யார் கொண்டாடமல் இருக்கினம் .... எல்லாரும் கொண்டாடினம். :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமையில் சித்திரை புத்தாண்டு தேவையா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் புத்தாண்டு தை மாதம் முதலாம் திகதி. ஆரியர்களின் சூழ்ச்சிகளினால் சித்திரை மாதம் முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது

ஆரியர்கள் சூழ்ச்சி செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களுக்கு இருக்கின்றது. அல்லது தைப்பொங்கல் தான் உங்களின் 1ம் நாள் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு. மூன்று வேளையும் மூக்கு முட்டப் பிடித்து விட்டு, யாராவது என்னவாவது சொன்னால், அவர்களுக்குப் பின்னால் நிரை கட்டிப் போவதா?

புதிய தமிழ் ஆண்டான சர்வசித்து வரும் 14ம் தேதி பிறக்கிறது. இந்த ஆண்டு மிகுந்த செழிப்பைத் தரும் ஆண்டு என ஜோதிட நுல்கள் சொல்கின்றன.

"சருவசித்து தன்னில் நலத்திற் பலவும்...

ஒரு பதினெட்டு வித்தும் ஓங்கும் பெருமையுடன்...

மிக்க விளைவுண்டாம் மென்மேலும் மாரியுண்டாம்...

தக்க சுகம் பெருகும் தான்...'

இதன்படி இவ்வாண்டு நலங்கள் பெருகும். 18 வகை தானியமும் செழிப்பாக வளரும்; மழை தடங்கலின்றி பெய்யும்; தேவையான சுகத்தை மக்கள் அடைவர். இந்த இனிய ஆண்டை வரவேற்கவும், நன்மைகள் தடங்கலின்றி கிடைக்க நாம் இறையருளை வேண்டு வதற்கு தகுந்த இடம் சுவாமிமலை முருகன் கோவில்.

தமிழ் புத்தாண்டுக்கும், சுவாமிமலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முருகனின் பிற மலைக்கோவில்களில் ஏராளமான படிகள் இருக்கும்; ஆனால், சுவாமிமலையில் 60 தமிழ் ஆண்டுகளை குறிக்கும் வகையில், 60 படிகளே அமைக்கப்பட்டுள்ளன. இந்த தலத்தில் தான், தன் தந்தைக்கு ஓம் என்ற பிரணவத்தின் பொருளை உரைத்தார் முருகன். அவர் பாலமுருகனாக இருந்த காலத்தில், சிவனின் தரிசனத்திற்காக வந்த பிரம்மாவிடம், "பிரம்மனே, தாங்களே படைப்புத் தொழிலை செய்பவர். அதை எந்த அடிப்படையில் செய்கிறீர்கள்?' என்றார்.

முருகனிடம், "ஓம் என்ற பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்கிறேன்...' என்றார் பிரம்மா. "ஓம் என்றால் என்ன?' என்று முருகன் கேட்க மாட்டிக் கொண்டார் பிரம்மா. அதன் பொருள் அவருக்கு தெரியவில்லை.

அவர் விழிப்பதைப் பார்த்த முருகன், "ஐயனே! ஒரு தொழிலைச் செய்பவர், அதன் அந்தரங்கத்தை தெரியாமல் செய்வது தவறு தானே! தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி நீங்கள் படைப்புத் தொழிலை செய்யக் கூடாது; நானே அதைச் செய்வேன்...' எனக்கூறி படைக்கும் பதவியைப் பறித்து விட்டார்.

இந்த விஷயம் சிவனுக்கு சென்றது. அவருக்கு அந்த மந்திரத்தின் பொருள் தெரியும். இருப்பினும், மகனின் மழலை மழையில் நனைய, தனக்கும் அந்தப் பொருள் தெரியாதது போல் நடித்தார். குருவிடம் பாடம் கற்கும் மாணவன், பணிவுடன் இருப்பது போல, முருகனின் முன் மண்டியிட்டு, வாய் பொத்தி அமர்ந்தார் சிவன். அந்த மந்திரத்தின் பொருளை தந்தையின் காதில் சொன்னார் முருகன்.

படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, எல்லாமே தனக்குள் அடக்கம் என்ற ஆணவம் கொண்டிருந்தார். அதை அடக்கவே, இப்படி ஒரு நாடகம் ஆடினார் முருகன். இதன் மூலம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், ஆணவம் கொள்ளக் கூடாது என்ற தத்துவம் வலியுறுத்தப்படுகிறது. குரு என்பவர் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். எனவே, இக்கோவில் மூலவர் சுவாமிநாதனுக்கு விபூதி அபிஷேகம் செய்யும் போது, முதிர்ந்த ஞானி போல காட்சி தருவார். சாதாரணமாக பார்த்தால், இளைஞனைப் போலவே சிலை அமைப்பு இருக்கும். இங்கே மயிலுக்கு பதிலாக, யானை சுவாமிக்கு வாகனமாக இருக்கிறது.

தமிழ் வருடப்பிறப்பன்று 60 படிகளுக்கும் பூஜை நடக்கும். சித்திரையில் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடத்தப்படும். இக்கோவிலில் மூன்று பிரகாரங்களும் வித்தியாசமாக உள்ளன. முதல் பிரகாரம் மலை அடிவாரத்திலும், இரண்டாம் பிரகாரம் மலையின் நடுவிலும், மூன்றாம் பிரகாரம் கருவறையைச் சுற்றியும் அமைந்துள்ளன.

இங்கேயுள்ள தல விருட்சமான நெல்லியை, மகாலட்சுமியின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர். செல்வத்தின் அடையாளம் லட்சுமி. நோய் தீர்க்கும் மருந்து என்பதுடன் ஆயுளையும் அதிகரிக்கவல்லது நெல்லி. முருகனின் ஆறுபடை வீடுகளில் இது நான்காம் படைவீடு. தமிழ் புத்தாண்டில் சுவாமிமலையானை வழிபட்டு, "நான்' என்ற அகந்தை நீங்கப் பெறுவதுடன், நமது தொழில் தொடர்பான எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து செய்யப் பழகுவோம்.

dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலமையில் சித்திரை புத்தாண்டு தேவையா?

ஏன் கறுப்பி!

சாதாரண வாழ்த்துச் சொல்வதில் உங்களுக்கு என்ன குறைந்து விட்டது?

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கின்றீர்கள், கலியாணவீட்டு வாழ்த்துச் சொல்கின்றீர்கள். .... ஏன்... 50 கருத்து எழுதி, அதற்கு ஒரு வாழ்த்து அரட்டை எழுதி, பிறகு ... அந்த அரட்டையால் 100 கருத்தாக்கி, பிறகு அதற்கும் ஒரு வாழ்த்துப் போட்டு,................ காலத்தை ஓட்டிக் கொள்கின்றீர்களே! அப்போது எல்லாம் இது தேவையா என்று தோன்றவில்லையா உங்களுக்கு? :angry: :angry:

சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவது, விடுவது அவரவர் விருப்பம். விரும்பினால் கொண்டாடுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருங்கள். ஆரியம், தமிழ் தேசியம் என்று கதைச்சால், கடைசியில் எம் மூதாதையர் மிருகமொன்றைச் சாகடிச்சு, அதற்கு முன்னால் கூத்தாடின நிலைக்குத் தான் போக வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கறுப்பி!

சாதாரண வாழ்த்துச் சொல்வதில் உங்களுக்கு என்ன குறைந்து விட்டது?

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கின்றீர்கள், கலியாணவீட்டு வாழ்த்துச் சொல்கின்றீர்கள். .... ஏன்... 50 கருத்து எழுதி, அதற்கு ஒரு வாழ்த்து அரட்டை எழுதி, பிறகு ... அந்த அரட்டையால் 100 கருத்தாக்கி, பிறகு அதற்கும் ஒரு வாழ்த்துப் போட்டு,................ காலத்தை ஓட்டிக் கொள்கின்றீர்களே! அப்போது எல்லாம் இது தேவையா என்று தோன்றவில்லையா உங்களுக்கு? :angry: :angry:

சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவது, விடுவது அவரவர் விருப்பம். விரும்பினால் கொண்டாடுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருங்கள். ஆரியம், தமிழ் தேசியம் என்று கதைச்சால், கடைசியில் எம் மூதாதையர் மிருகமொன்றைச் சாகடிச்சு, அதற்கு முன்னால் கூத்தாடின நிலைக்குத் தான் போக வேண்டி வரும்.

என்ன இப்படிக் கேட்டிட்டீங்கள்..! உலகத்திலேயே வள்ளுவருக்கு அடுத்ததா ஒருவரில ஆயிரம் அர்த்தம் பட எழுதக் கூடிய ஆற்றல் கறுப்பி மேமுக்கு மட்டும் தான் உண்டு..! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் கறுப்பாத்தாவை அப்படி வஞ்சிக்காதீர்கள் :angry:

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில இருக்கிறவர்கள் என்னத்தை பெரிசா கொண்டாட போயினம்....எல்லோரும் ஒருக்கா கோயிலுக்கு தான்போவினம்.....உண்டியலில் காசு போடுவினம்.ஆங்கில வருடப்பிறப்பு,பொங்கல்,சித்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கறுப்பி!

சாதாரண வாழ்த்துச் சொல்வதில் உங்களுக்கு என்ன குறைந்து விட்டது?

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கின்றீர்கள், கலியாணவீட்டு வாழ்த்துச் சொல்கின்றீர்கள். .... ஏன்... 50 கருத்து எழுதி, அதற்கு ஒரு வாழ்த்து அரட்டை எழுதி, பிறகு ... அந்த அரட்டையால் 100 கருத்தாக்கி, பிறகு அதற்கும் ஒரு வாழ்த்துப் போட்டு,................ காலத்தை ஓட்டிக் கொள்கின்றீர்களே! அப்போது எல்லாம் இது தேவையா என்று தோன்றவில்லையா உங்களுக்கு? :angry: :angry:

சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவது, விடுவது அவரவர் விருப்பம். விரும்பினால் கொண்டாடுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருங்கள். ஆரியம், தமிழ் தேசியம் என்று கதைச்சால், கடைசியில் எம் மூதாதையர் மிருகமொன்றைச் சாகடிச்சு, அதற்கு முன்னால் கூத்தாடின நிலைக்குத் தான் போக வேண்டி வரும்.

ஒம் ,இல்லாட்டி ஒற்றனுக்கு கேட்ட கோபம் வரும்....அவர் ஒரு சண்டியர்..........வாயை மூடிக்கொண்டு கையால் எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த புத்தாண்டிலாவது அகதிவாழ்க்கை அல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த புத்தாண்டிலாவது தமிழ் மக்கள் எல்லோரும் தமிழீழத்தில் நிம்மதியான சந்தோசமான புத்தாண்டு கொண்டாட இறைவனை வேண்டுகின்றேன்

யாழ் கள உறவுகளிற்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எமது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

யாழ் கள உறவுகளுக்கும் எம்முயிருலும் மேலான போராளிகளுக்கும் புத்தாண்டை கொண்டாடும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் நல்லதே நடக்க இறைவனை வேண்டுகின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் :):lol:

அனைவருக்கும் நல்லதே நடக்க இறைவனை வேண்டுகின்றேன்...

ஹாய் தூய்ஸ்!

கண்டு கனகாலம். நலமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணாவின் தனிமடல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். ஆனால் பதில் அஞ்சல் அனுப்ப முடியாமல் உள்ளது

அவருக்கும், அவர், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு கொண்டாடும் அனைவரிற்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.