Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடையாள அட்டை இருக்காததால் எங்கள் இருவரையும் போலீசார் தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது
செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் ,

கடந்த 19 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் பொலிஸார் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனையிட்டதுடன் , முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற எனது மைத்துனரிடம் ஆவணங்களை வாங்கி அவற்றையும் பரிசோதித்தனர்.

இதனையடுத்து பின்னால் இருந்த என்னிடம் அடையாள அட்டையை கேட்டனர். அப்போது என்னிடம் அடையாள அட்டை இல்லை. வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டேன் எனவும், வீட்டில் இருந்து எடுத்து வந்து காண்பிக்கின்றேன் என கேட்டதற்கு , அதனை ஏற்காத பொலிஸார் எம்மை முச்சக்கர வண்டியுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , மைத்துனனை பொலிஸாரின் சமையல் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததுடன் , என்னை தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பினரா என கேட்டே என்னை தாக்கினார்கள். பின்னர் மறுநாள் 20 ஆம் திகதி மாலை எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லாது எம்மை விடுவித்தனர்.

பலத்த சித்திரவதைகள் , அடிகாயங்களுக்குள்ளான நாம் வலி தாங்க முடியாது 20 ஆம் திகதியே தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றோம்.

எம்மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை அறிய மனம் வேதனையும், ஆதங்கமும் அடைகிறது. மனதை ஆறுதல்படுத்த சில நடைமுறைகளையும் மனம் மீட்டிப்பார்க்க விழைகிறது. 

எத்தகைய கொடிய மிருகங்களாக இருப்பினும் அவற்றை நாங்கள் சீண்டிப் பார்க்காதவரையில் பாதிப்புகள் குறைவு.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இப்படியான செய்திகளை அறிய மனம் வேதனையும், ஆதங்கமும் அடைகிறது. மனதை ஆறுதல்படுத்த சில நடைமுறைகளையும் மனம் மீட்டிப்பார்க்க விழைகிறது. 

எத்தகைய கொடிய மிருகங்களாக இருப்பினும் அவற்றை நாங்கள் சீண்டிப் பார்க்காதவரையில் பாதிப்புகள் குறைவு.

 

ஒரு பக்கம் வாள் வெட்டுக் கோஸ்டிகளை போலீஸ் அடக்கேல்ல எண்டுறியள், இன்னொரு பக்கம், இரவில பொலீஸ்காரரிடம் அடையாளத்தை நிரூபிக்க ஏலாதவயள் சொல்லுறதையும் நம்பிறியள்...

பெடியள் மேவியிருப்பினம்... பிறகென்ன நாலு தட்டு போட்டிருப்பினம். தலைகீழாக கட்டின கதை கொஞ்சம் கப்சா மாதிரி கிடக்குது. 

இப்ப, தண்ணிய, தூளப் போட்டுட்டு, பெடியளும் சரியான மோசம் கண்டியளே!

மோட்டார் சைக்கிள்ள போனா, போலீஸ் நிப்பாட்டும் எண்டு, ஆட்டோல எல்லோ திரியினம்.

பாருங்கோவன், மச்சான்மார்..... பயணியை கொண்டு போன ஆட்டோ அல்ல...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மடவெலக்கு தெரிந்த அளவு ஏனைய பத்திரிகைகளுக்கு தெரியவில்லையா
??   இல்லை எங்கையாவது எண்ணையை ஊற்றுவோம் என திரிகிறார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மடவெலக்கு தெரிந்த அளவு ஏனைய பத்திரிகைகளுக்கு தெரியவில்லையா
??   இல்லை எங்கையாவது எண்ணையை ஊற்றுவோம் என திரிகிறார்களா??

இதே செய்தி வேறு ஒரு செய்தி இணையம்களும் வெளியிடவில்லை இதுவும் இந்த ஆசியாவின் அடுத்த  ரோகின்யா முஸ்லீம்கள் சார்பான இணையதளம் காரணமில்லாமல் ஆடாது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

ஒரு பக்கம் வாள் வெட்டுக் கோஸ்டிகளை போலீஸ் அடக்கேல்ல எண்டுறியள், இன்னொரு பக்கம், இரவில பொலீஸ்காரரிடம் அடையாளத்தை நிரூபிக்க ஏலாதவயள் சொல்லுறதையும் நம்பிறியள்...

பெடியள் மேவியிருப்பினம்... பிறகென்ன நாலு தட்டு போட்டிருப்பினம். தலைகீழாக கட்டின கதை கொஞ்சம் கப்சா மாதிரி கிடக்குது. 

இப்ப, தண்ணிய, தூளப் போட்டுட்டு, பெடியளும் சரியான மோசம் கண்டியளே!

மோட்டார் சைக்கிள்ள போனா, போலீஸ் நிப்பாட்டும் எண்டு, ஆட்டோல எல்லோ திரியினம்.

பாருங்கோவன், மச்சான்மார்..... பயணியை கொண்டு போன ஆட்டோ அல்ல...

நாங்கள் அலசி ஆராய மாட்டோம் தமிழன் என்ன செய்தாலும் சரி.ஆனால் சிங்கள பொலிஸ் கேட்டால் பிழை.அதுக்காக பொலிஸ் எல்லாம் யோக்கியர்கள் இல்லை.அதில மாற்றுக்கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

‘பிறப்புறுப்பில் கத்தியை வைத்து அச்சுறுத்தினர்’

சொர்ணகுமார் சொரூபன் / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, பி.ப. 02:56Comments - 0

“ஆரம்பக்கட்ட விசாரணைகள் எதுவும் இன்றி எம்மை சித்திரவதைக்குட்படுத்திய சுன்னாகம் பொலிஸார் எனது மைத்துனனின் பிறப்புறுப்பில் கைத்தியை வைத்து இதனால் தானே தமிழர்கள் ஆடுகிறீர்கள் என தெரிவித்து அச்சுறுத்தினர்” என பொலிஸாரால் சித்திரவதைக்குட்பட்டவர் இன்று (23) தெரிவித்தார்.

சுன்னாகம்  பொலிஸாரால்   சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று கடந்த 21 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சித்திரவதைக்குட்பட்டதாக கூறப்பட்ட நபரை தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நான் ஏழாலையில் வசிக்கிறேன், சம்பவ தினம் நான் மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு எனது மைத்துனரின்; முச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தோம். வழியில் சிவில் உடையில் நால்வர் நின்றிருந்தனர். அவர்களின் கையில் தடி, பொல்லுகள் காணப்பட்டது. அப்போது எம்மை வழி மறித்த குறித்த நபர்கள் தம்மை பொலிஸார் என வாய் மூலம் அடையாளப்படுத்திக்கொண்டு, மைத்துனரிடம் முச்சக்கர வண்டிக்கான ஆவணங்களைக் கோரினர். மைத்துனர், தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வழங்கிய நிலையில், என்னிடம் தேசிய அடையாள அட்டையை கோரினர். நான், அடையாள அட்டையை உடன் எடுத்து வரவில்லை. வீட்டில் உள்ளது. என தெரிவித்து நான் வீட்டில் இருந்து அடையாள அட்டையை பெற்றுக் காட்ட முற்பட்ட வேளை, அது தேவையில்லை. இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள். விசாரிக்க வேண்டும் என்று கூறி எம் இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு நாம் செல்லும் போது இரவு 11 மணியாகிவிட்டது. அழைத்துச் சென்ற உடனே எதுவித விசாரணையும் இன்றி எனது மைத்துனரை பொலிஸ் நிலைய சமையல் அறைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.

என்னை பிறிதொரு இடத்தில் தலைகீழாக கட்டித்தொங்க விட்டு மரக்கட்டை மற்றும் மண்வெட்டி பிடியினால் அடித்தனர். அந்த நால்வரில் ஒருவர் மட்டும் தமிழில் உரையாடினார். 'தான் மட்டக்களப்பில் இருந்து சுன்னாகம் வந்துள்ளதாகவும் மட்டக்களப்பை ஒரு கலக்கு கலக்கிவிட்டுதான் வந்தனான், சுன்னாகத்தை ஒரு கலக்கு கலக்காமல் விடமாட்டேன். தான்; குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி” எனவும் கூறித் தாக்கினார்.

“நீ இயக்கத்தில் (தமிழீழ விடுதலைப்புலிகள்) இருந்தனியா? 'ஊருக்க நடக்கிற களவு முழுக்க நீங்கதான் செய்யிறீங்கடா” என தெரிவித்து சரமாரியாக பொலிஸார் தாக்கினார் சுமார் இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 2.45 மணிவரையில் எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்பு வெளியில் சென்றவர்கள் மீண்டும் வந்து அதிகாலை 3.30 மணிக்கு எம்மை பொலிஸ் நிலைய மறியல் அறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் விடயம் அறிந்த எனது அண்ணா நள்ளிரவு 12.30 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்று சம்பவம் தொடர்பில் வினவிய போது, அவ்வாறு யாரையும் நாம் கைது செய்யவில்லை. நீங்கள் சென்று காலை வருமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

மறுநாள் காலை எதுவித விசாரணையும் இல்லாமல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீடும் இல்லாமல் பொலிஸ் பிணையில் நாம் விடுவிக்கப்பட்டோம். வீடு திரும்பிய நாம் உடல் முழுவதும் ஏற்பட்ட கண்டல் காயத்தால், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருநாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளோம். நாம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற நேரத்தில் உறவினரால் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் வைத்தியசாலைக்கு வந்த இரு பொலிஸார் அந்த 4 பொலிஸாரும் தெரியாமல் தவறிழைத்துவிட்டனர். அவர்களை உங்களிடம் மன்னிப்பு கேட்க வைப்பதாகவும் கூறி சமரசத்துக்கு முற்பட்டனர். நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் பிராந்திய இணைப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

“மேற்படி முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளமை உண்மை. இது தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகளாக தாக்குதலுக்குள்ளானவரின் வாக்குமூலம் மற்றும் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டுள்ள வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் வாக்குமூலம், சம்பந்தபட்ட பொலிஸ் அதிகாரி ஆகியோரின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து எமக்குள்ள அதிகார எல்லையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிறப்புறுப்பில்-கத்தியை-வைத்து-அச்சுறுத்தினர்/71-225679

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

இதே செய்தி வேறு ஒரு செய்தி இணையம்களும் வெளியிடவில்லை இதுவும் இந்த ஆசியாவின் அடுத்த  ரோகின்யா முஸ்லீம்கள் சார்பான இணையதளம் காரணமில்லாமல் ஆடாது .

தமிழ்மிரரிலும் தற்போது செய்தி வந்துள்ளது.

 

11 hours ago, கிருபன் said:

எமக்குள்ள அதிகார எல்லையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அமைக்கப்பட்ட இந்த கண்துடைப்பு "மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்" எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு நீதியையும் நியாயத்தையும் உரிய நட்டஈடுகளையும் இந்த கண்துடைப்பு "மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்" வழங்க முடியாது.

இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு நீதியையும் நியாயத்தையும் உரிய நட்டஈடுகளையும் இந்த கண்துடைப்பு "மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்" வழங்கிய சரித்திரம் இல்லை. இதன் மூலம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அமைக்கப்பட்ட இந்த கண்துடைப்பு "மனித உரிமைகள் ஆணைக்குழு"  மனித உரிமைகளை மீறியவர்களை பாதுகாப்பதிலேயே இன்றுவரை செயற்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக் கணக்கான ஆதாரங்கள் உண்டு.

ரணிலுக்கு ஆபத்து என்று ஆக்ரோஷமடைந்து பல கிழமைகளாக நாய்படாதபாடாக அலையும் சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல் இந்த உண்மைகளை ஒருபோதும் வெளிக்கொண்டு வந்ததில்லை. தமிழருக்கு நீதி, நியாயம், உரிய நட்டஈடுகள் கிடைக்க எந்தவொரு முயற்சிகளையும் எடுத்ததில்லை.

இதன் மூலம் சம்மந்தன்-சுமந்திரன்-மாவை ஒட்டுண்ணிகளின் சுயரூபம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.