Jump to content

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

Editorial / 2018 டிசெம்பர் 29 சனிக்கிழமை, பி.ப. 01:13 Comments - 0

-டி.விஜிதா

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே, மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று இந்த நடவடிக்கைகளை செய்திருந்தாகவும் 19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி சாடினார்.

இந்த செயற்பாட்டின் போது தான் தமித்ழ் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று செயற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த செயற்பாட்டில் தான் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறதெனவும் ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றனலெனவும் குறிப்பிட்டார்.

அரசமைப்பு மீறப்படுகின்ற போது, அதை மீறப்படாத தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளதெனத் தெரிவித்த அவர், ஏனெனில், ஓர் அரசியல் தீர்வை தாம் எதிர்நோக்குவது, அரசமைப்பின் மூலமான ஒரு தீர்வாகுமெனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு மூலமாக அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு எழுதப்பட்ட பின்னர் அரசமைப்பு மீறப்படுமாக இருந்தால், அந்த தீர்வில் ஒரு பிரியோசனமும் இல்லாமல் போய்விடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில், நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதென்ற நல்ல எண்ணம் உதித்துள்ளது. இது புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும். நாட்டைப் பிரிக்க முயலவில்லை. நாட்டுக்கு கேடு விளைவிக்க விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளிலே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் விலகுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆகையினால், மிகத் துரிதமாக புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவரும் எனவும் அவர் கூறினார்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பெப்-4க்கு-முன்னர்-வரைவு-வெளிவரும்/150-227245

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப வர வர .... எதோ ரஜனி படம் வெளிவர மாதிரி 
போய்க்கொண்டு இருக்கிறது.

இதுக்கும் சினிமாவுக்கும் பெரிதாக ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

இவ்வரசியல் அமைப்பு திருத்த வரைவில் தமிழர்களுக்கு சாதகமான ஒன்றும் இல்லை என்பதற்கு மேல் ... 

 ... ஒரு அரசியலமைப்பு திருந்த சட்டங்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டுமாயும்,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையால்தான் நிறைவேற்றப்பட வேண்டும்!  ...  இல்லையா??

அப்படியாயின், இந்த வரைபும் ஒரு புஸ்வாணமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

வட்ட மேசை, தீர்வு, தீர்வுப்பொதி, பொக்கிசம் எல்லாம் முடிஞ்சுது..... இனி வரைவாம்.....நடக்கட்டும்....நடக்கட்டும்.
கடைசியிலை எப்பிடி முடியுமெண்டது அனுபவப்பட்ட எங்களுக்கு நல்லவடிவாய் தெரியும்...:127_older_man:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கூட தாம் வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதுமே ஆதரவளிக்கப்போவதிலை என்று ஜே வீ பி சூளுரைத்திருந்தது. அவ்வாறே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட பெள்த்தத்திற்கும்சிங்களத்துக்கும் வழங்கப்படும் விசேட அந்தஸ்த்துக் குறைக்கபடாதென்று ரணில் நேற்றுக் கூறியிருக்கிறார். அப்படியிருக்க அவர்களுடன்  இணைந்து கொண்டுவரப்படும் அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது? அது இப்போதிருக்கும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதில்தான் சென்று முடியப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for sri lanka districts map

இது கூகிளில் தட்டினால் வரும் 
ஏன் சுமந்திரன் கஸ்ரபட்டு வரைகிறார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முதல் வரைபு அல்லவா? எனவே இதில் உள்ளதை விடவும் குறைவாகத் தான் இறுதி வரைபு இருக்கும். ஆனால் ஏதாவது ஒன்று பைப்லைனில் இருக்க வேண்டும், எனவே பெப்.4 இல் வந்தால் வரவேற்கக் கூடியதே. ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் திட்டுவார்களே? ஆனால், பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பது, எமக்குப் பிடிக்கா விட்டாலும் சிறி லங்காவில் இருக்கத் தான் போகிறது. இதை எழுத்தில் வைத்திருக்கா விட்டாலும் இது எழுதாச்சட்டமாக இருக்கத் தான் போகிறது. உதாரணமாக இந்தியாவைப் பாருங்கள், செகுலர் ஜனநாயகம் என்று தான் சொல்கிறார்கள், ஆனால் பி.ஜே.பி ஆட்சியில் இந்துக்களுக்கு முதலிடம் தான் வழங்கப் படுகிறது. எனவே , பௌத்தம் முதலிடம் பெற்றாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவை உதாரண புருசனாய் காட்டுது ஒரு தெம்மாங்கு சிங்கம்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலிருந்தபடி ஊடகவியலாளருடன் சந்திப்பு நடத்துவதும் இதுபோன்ற முக்கிய விடயங்களை ஆலோசிப்பதும் வெளியிடுவதும் பின்னர் அது எனது தனிப்பட்ட கருத்து எனக்கூறி நழுவிச்செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ அலுவலகம் தமிழர்தாயக பகுதிகளில் இல்லையோ? தெற்கில் ஜனநாயகத்தை காத்தோம் என்று மார்தட்டும் சூரர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள்மத்தியிலும் கட்சிக்குள்ளும் அதே ஜனநாயகத்தைக்கட்டிக்காக்க முன்வர வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்கப்படும் எனும்பொழுது, தமிழர்  தாயகத்தில் ஒவ்வொரு நாளும் முளைக்கும் புத்த விகாரைகளும் அடங்கும். அநியாயம் என்னவென்றால் புதிய யாப்பு இதற்கு அங்கீகாரம் அளிப்பதாக மாறிவிடும் என்பதுதான். 

பெளத்தத்திற்கும் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் கோட்பாட்டை நாம் ஏற்பதென்பது அதனோடு இணைந்து வரப்போகும் ஏனைய அடக்குமுறைகளையும் ஏற்பதாகிவிடும்.

பெளத்தத்திற்கும், சிங்களத்திற்கும் முதலிடம், இணையாத வடக்கும் கிழக்கும்.........இனி என்னதான் மீதமாய் இந்த வரைபில் தமிழருக்கு இருக்கப்போகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ragunathan said:

ஜஸ்டின், பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்கப்படும் எனும்பொழுது, தமிழர்  தாயகத்தில் ஒவ்வொரு நாளும் முளைக்கும் புத்த விகாரைகளும் அடங்கும். அநியாயம் என்னவென்றால் புதிய யாப்பு இதற்கு அங்கீகாரம் அளிப்பதாக மாறிவிடும் என்பதுதான். 

பெளத்தத்திற்கும் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் கோட்பாட்டை நாம் ஏற்பதென்பது அதனோடு இணைந்து வரப்போகும் ஏனைய அடக்குமுறைகளையும் ஏற்பதாகிவிடும்.

பெளத்தத்திற்கும், சிங்களத்திற்கும் முதலிடம், இணையாத வடக்கும் கிழக்கும்.........இனி என்னதான் மீதமாய் இந்த வரைபில் தமிழருக்கு இருக்கப்போகிறது?

உண்மை தான், இது இப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டால் அது நடக்கும். பௌத்த முன்னுரிமையை அகற்றச் சொல்வதை விட, மாகாண மட்டத்தில் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை இல்லாமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது விகாரை கட்டக் காணி வழங்குவதில் மதச் சார்பின்மை மாதிரி ஒரு ஏற்பாட்டைக் காணி அதிகாரத்தை மாகாண மட்டத்திற்கு மாற்றுவதால் கட்டுப் படுத்தலாம். இவை ஐடியாக்கள் மட்டுமே, எனவே யாரும் தங்கள் கலைத்திறன் மிக்க ஜோக்குகளை எடுத்து விட அழைக்கிறேன்!

ஆனால், பௌத்த முன்னுரிமையை விடவே மாட்டார்கள்! எழுதாச் சட்டமாகவேனும் அது இருக்கும். அது இருப்பதால் வரைபைக் கடாசி விடலாம்! பதிலாக ஒன்றும் கிடைக்காது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியம் என நினைக்கிறேன். முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து விடுவதால் வரக்கூடிய பயம் சிங்களவர்களை கொஞ்சமாவது வட்-கிழக்கு இணைப்பு நோக்கி நகர்த்தலாம்! அல்லது இந்தியாவின் வழியாக கை முறுக்க வேண்டும். 

1 hour ago, vanangaamudi said:

வீட்டிலிருந்தபடி ஊடகவியலாளருடன் சந்திப்பு நடத்துவதும் இதுபோன்ற முக்கிய விடயங்களை ஆலோசிப்பதும் வெளியிடுவதும் பின்னர் அது எனது தனிப்பட்ட கருத்து எனக்கூறி நழுவிச்செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ அலுவலகம் தமிழர்தாயக பகுதிகளில் இல்லையோ? தெற்கில் ஜனநாயகத்தை காத்தோம் என்று மார்தட்டும் சூரர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள்மத்தியிலும் கட்சிக்குள்ளும் அதே ஜனநாயகத்தைக்கட்டிக்காக்க முன்வர வேண்டும். 

ம்..வீட்டிலிருந்த படியே அலுவலக வேலைகளைச் செய்யும் காலத்தில் இப்படியொரு கவலையா உங்களுக்கு? இது உத்தியோக பூர்வ த.தே.கூ என்று  கூட இங்கே சொல்லப் படவில்லை. வரைபு வருகிறது என்பதை வீதியில் நின்று சொன்னால் கூட வரைபு வந்த பின்னர் தானே மிச்சம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உண்மை தான், இது இப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டால் அது நடக்கும். பௌத்த முன்னுரிமையை அகற்றச் சொல்வதை விட, மாகாண மட்டத்தில் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை இல்லாமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது விகாரை கட்டக் காணி வழங்குவதில் மதச் சார்பின்மை மாதிரி ஒரு ஏற்பாட்டைக் காணி அதிகாரத்தை மாகாண மட்டத்திற்கு மாற்றுவதால் கட்டுப் படுத்தலாம். இவை ஐடியாக்கள் மட்டுமே, எனவே யாரும் தங்கள் கலைத்திறன் மிக்க ஜோக்குகளை எடுத்து விட அழைக்கிறேன்!

ஆனால், பௌத்த முன்னுரிமையை விடவே மாட்டார்கள்! எழுதாச் சட்டமாகவேனும் அது இருக்கும். அது இருப்பதால் வரைபைக் கடாசி விடலாம்! பதிலாக ஒன்றும் கிடைக்காது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியம் என நினைக்கிறேன். முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து விடுவதால் வரக்கூடிய பயம் சிங்களவர்களை கொஞ்சமாவது வட்-கிழக்கு இணைப்பு நோக்கி நகர்த்தலாம்! அல்லது இந்தியாவின் வழியாக கை முறுக்க வேண்டும். 

ம்..வீட்டிலிருந்த படியே அலுவலக வேலைகளைச் செய்யும் காலத்தில் இப்படியொரு கவலையா உங்களுக்கு? இது உத்தியோக பூர்வ த.தே.கூ என்று  கூட இங்கே சொல்லப் படவில்லை. வரைபு வருகிறது என்பதை வீதியில் நின்று சொன்னால் கூட வரைபு வந்த பின்னர் தானே மிச்சம்? 

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இது தான் நடக்காது. கல்வி காணி பொலிஸ் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க சிங்கள அரசுகள் தயாரில்லை.

Link to comment
Share on other sites

11 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

ராணுவத்தினை மீறி எதுவும் செய்ய முடியாது. இராணுவத்தை வைத்திருப்பதே குடியேற்றங்களையும் புத்தர் சிலைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ளவும்  மக்களை அச்சுறுத்தவும் தான்.

Link to comment
Share on other sites

16 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

2004 /2005 இல் வன்னி உட்பட தமிழர் தாயகத்தின் அநேகமான முக்கிய பிரதேசங்களையும் இலங்கையின் 45 வீதத்துக்கு மேற்பட்ட, முக்கியமாக சர்வதேச கடற் போக்குவரத்து பாதைகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கடல் பிரதேசங்களை தம் செல்வாக்குள் வைத்திருந்தனர் புலிகள்.

ஓயாத அலைகள் 3 இன் மூலம் யாழ் தீபகற்பத்தை துண்டாடிக் கொண்டு இருந்த ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றியும் இருந்தனர்.

தீச்சுவாவலை எனும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையை முறியடித்து இலங்கை அரச படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதற்கும் முதல் கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு தம்மால் இலங்கை எங்கும் விரும்பிய இடத்தில் தாக்குதல் செய்யலாம் என நிரூபித்து இருந்தனர்.

இப்படி கடும் பலத்துடன் புலிகள் இருந்தும் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட PTOMS எனப்படும் சுனாமிக்கு பின்னரான மக்களின் துயர் துடைக்கும் ஒரு திட்டத்தை சிங்களம் புலிகளுடன் / தமிழர்களுடன் செய்ய அங்கீகரிக்கவில்லை. இதில் ஜேவிபி / ஐதேக மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் கூட PTOMS இற்கு ஒத்துழைக்கவில்லை.

30 வருடங்களும்மு மேலாக போராடிய புலிகள் பலமாக இருக்கும் போது கூட சிங்கள பெளத்த பேரினவாதம் இயற்கை அழிவுக்கான துயர் நீக்கும் நடவடிக்கையில் இணைந்து செயலாற்ற முன்வரவில்லை.

ஆனால் இன்று

எமக்கென்று எம் கட்டுப்பாட்டில் ஒரு பிரதேசமும் இல்லை, இராணுவ பலமும் இல்லை, காத்திரமான பொருளாதார பலமும் இல்லை, உருப்படியான அரசியல் தலமையும் இல்லை, ஒரு ம**ரும் இல்லை.

பலமாக இருக்கும் போதே ஒன்றையும் தராத சிங்களம் இப்ப மட்டும் தமிழர் தாயகத்தை அங்கீகரித்து வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தீர்வை தரும் என நம்புகின்றீர்களா?

இல்லை எனில் இப்போதைக்கு கிடைக்க கூடிய ஆகக் கூடிய விடயங்களை பெற்று மக்களை ஓரளவுக்கேனும் பொருளாதார, கல்வி, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து செல்லும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பலத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பதை தவறு என்பீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

2004 /2005 இல் வன்னி உட்பட தமிழர் தாயகத்தின் அநேகமான முக்கிய பிரதேசங்களையும் இலங்கையின் 45 வீதத்துக்கு மேற்பட்ட, முக்கியமாக சர்வதேச கடற் போக்குவரத்து பாதைகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கடல் பிரதேசங்களை தம் செல்வாக்குள் வைத்திருந்தனர் புலிகள்.

ஓயாத அலைகள் 3 இன் மூலம் யாழ் தீபகற்பத்தை துண்டாடிக் கொண்டு இருந்த ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றியும் இருந்தனர்.

தீச்சுவாவலை எனும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையை முறியடித்து இலங்கை அரச படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதற்கும் முதல் கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு தம்மால் இலங்கை எங்கும் விரும்பிய இடத்தில் தாக்குதல் செய்யலாம் என நிரூபித்து இருந்தனர்.

இப்படி கடும் பலத்துடன் புலிகள் இருந்தும் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட PTOMS எனப்படும் சுனாமிக்கு பின்னரான மக்களின் துயர் துடைக்கும் ஒரு திட்டத்தை சிங்களம் புலிகளுடன் / தமிழர்களுடன் செய்ய அங்கீகரிக்கவில்லை. இதில் ஜேவிபி / ஐதேக மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் கூட PTOMS இற்கு ஒத்துழைக்கவில்லை.

30 வருடங்களும்மு மேலாக போராடிய புலிகள் பலமாக இருக்கும் போது கூட சிங்கள பெளத்த பேரினவாதம் இயற்கை அழிவுக்கான துயர் நீக்கும் நடவடிக்கையில் இணைந்து செயலாற்ற முன்வரவில்லை.

ஆனால் இன்று

எமக்கென்று எம் கட்டுப்பாட்டில் ஒரு பிரதேசமும் இல்லை, இராணுவ பலமும் இல்லை, காத்திரமான பொருளாதார பலமும் இல்லை, உருப்படியான அரசியல் தலமையும் இல்லை, ஒரு ம**ரும் இல்லை.

பலமாக இருக்கும் போதே ஒன்றையும் தராத சிங்களம் இப்ப மட்டும் தமிழர் தாயகத்தை அங்கீகரித்து வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தீர்வை தரும் என நம்புகின்றீர்களா?

இல்லை எனில் இப்போதைக்கு கிடைக்க கூடிய ஆகக் கூடிய விடயங்களை பெற்று மக்களை ஓரளவுக்கேனும் பொருளாதார, கல்வி, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து செல்லும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பலத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பதை தவறு என்பீர்களா?

 

நீங்கள் கூறுவதும் சரிதான்,

சிங்களம் எதையுமே தரப்போவதில்லை. இப்போது இருப்பதையாவது தக்கவைத்துக்கொள்ள ஒரு அதிகாரமாவது இருந்தால்ப் போதும் என்கிற நிலைமைதான் இப்போது. அதுக்குக்கூட சிங்களம் விரும்பினால்த்தான்.

எங்கள் தலைவிதியை நினைத்து எங்களையே நொந்துகொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:47 AM   லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க,  3940 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 1,522  ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  28 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை  712  ரூபாவாகும். https://www.virakesari.lk/article/185272
    • உத்தர பிரதேச மாநிலம்  இந்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக இரு‌ந்து வரு‌ம் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 42 தொகுதியில் முன்னிலை உள்ளது  இதுவரை 5 சுற்று  வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க  கூட்டணி  297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது   
    • ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்  அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஆப்கான் வீரர் Fazalhaq Farooqi  4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
    • இரண்டாவது சுற்று வாக்குகள் முடிவில் ராதிகா 3 இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் விஜயகாந்தின் மகன் இருக்கிறார்
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவே தான் இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒன்றித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார இணைப்புகளை துரிதப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றார்.   குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதும் கூட, எரிபொருள் தட்டுப்பாட்டை சீரமைக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது. மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியது. அது மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக இந்தியா ஒத்துழைப்பு கோரியது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை கடந்த பின்னரே டெல்லி விஜயத்திற்காக அழைப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலுக்காக இலங்கை பலமுனைகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் அப்போது கூறப்பட்டன. சீன உளவுக்கப்பல் விவகாரம், மாத்திரமன்றி இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்திய ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்குவதாக கூறி டெல்லி அதிருப்தியை வெளியிட்டது.  அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கையில்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்தது. இவ்வாறானதொரு நிலையில், சுமார் ஓருவருடத்திற்கு பின்னர் கடந்த வருடம் ஜுலை மாதம்  உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு ஜனாதிபதி ரணிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதுடன், புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம்,  மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல் மற்றும் பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சீராகவும் செயல்திறன் மிக்கதாகவும் தற்போது காணப்படுகின்றது. இலங்கையில் இந்தியாவின் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதரத்துடன் இலங்கை இணைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய தேர்தலில் வெற்றிப்பெறும் தலைவருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185265
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.