Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழீழ காலத்தில் அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 9, 2019எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள்.

 

Edited by பிழம்பு

7 hours ago, பிழம்பு said:

தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்

மின்சாரம் இல்லை, எரிபொருட்கள் தட்டுப்பாடு, ஆடம்பர பொருட்கள் இல்லை, ......  இப்படி பல நவீன சொகுசுகள்/வசதிகள் அற்ற நிலையிலும் துன்பங்களின்றி நல்லாட்சியில் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதை நிராகரிக்க சிலதுகள் இங்கேயும் உள்ளனரே!

  • கருத்துக்கள உறவுகள்

விமான செல் தாக்குதலால் ஏற்படும் அச்சம் மற்றும் இழப்பை தவிர, ஒப்பீட்டளவில் மகிழ்வாகவே வாழ்ந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய தமிழீழத்துக்கு உலகம் அங்கீகாரம் வழங்கி இருந்தால்.. இன்று எம் மக்கள் அனுபவிக்கும் பயத்துடன் இழப்புடன் காயங்களுடன் கூடிய சுமை மிகுந்த சராசரி நிம்மதி வாழ்க்கையை விட சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள்.

இதே பன்னாட்டு.. உள்நாட்டு நவீன வசதிகளை விட இன்னும் உள்ளூர் அதிநவீன நிறுவனங்கள் மக்களுக்கு சேவையை.. பொருட்களை வழங்கி இருக்கும்.

வன்முறை.. சண்டித்தனம்.. இராணுவ மயமாக்கம்.. பெளத்த மயமாக்கம்.. போதைப்பொருள்.. சமூகச் சீரழிவு முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்க நிறைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தால்.. இன்று தமிழீழம் நவீன சிங்கப்பூராகி இருக்கும். 

தவறிழைத்தது பன்னாட்டு சமூகமே ஆகும். இன்றைய அடிமை நிலைக்கு தமிழ் மக்கள் தங்களின் சுயநலம் கருதி தள்ளியது பன்னாட்டு சமூகமே. அவர்கள் தான் தமிழ் மக்களின் அவலத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். 

சிங்களவனோ.. ஹிந்தியனோ...எப்பவுமே தமிழர்கள் நலனில் உரிமையில்.. அக்கறை கொண்டவர்கள் அல்ல. 

Edited by nedukkalapoovan

1 hour ago, ஏராளன் said:

விமான செல் தாக்குதலால் ஏற்படும் அச்சம் மற்றும் இழப்பை தவிர, ஒப்பீட்டளவில் மகிழ்வாகவே வாழ்ந்தோம்.

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

எனக்கு எந்த அளவு உரிமையுள்ளது என்று தெரியவில்லை...

இந்த கருத்துப்பிழையை சுட்டி காட்ட விரும்புகிறேன்...

அவன் வெளியில் சென்றதால் உயிரிழந்தான், அதனால் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என்பது போலுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

என்ன நீங்கள் கூட்டமைப்பின் பேச்சாளர் போலவே கூறுகின்றீர்கள்?!
முழுப்பூசணிக்காய சோத்தில மறைக்கேலுமே?

3 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இவரை தவிர எல்லோரும் சந்தோசமாக தான் இருந்தோம் ,இப்ப தான் எங்கள் நின்மதி முற்றாக இழந்து ரௌடிசம் மற்றும் போதை உலகத்தில் புதைக்க பட்டுளோம் . இது உங்களுக்கு தெரியாது .......வீம்புகு கருத்து சொல்ல வேண்டாம் ....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுதான் வடக்கில் வாள் வெட்டுக் குழுவினருடன் பொலிஸ், அதிரடிப்படையினர்,  இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

15 minutes ago, MEERA said:

அதுதான் வடக்கில் வாள் வெட்டுக் குழுவினருடன் பொலிஸ், அதிரடிப்படையினர்,  இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

வாள் வெட்டு தணிந்து விட்டது.

செல் தாக்குதல், ஒரு தசாப்த காலமாக  இல்லை.

மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

வாள் வெட்டு தணிந்து விட்டது.

செல் தாக்குதல், ஒரு தசாப்த காலமாக  இல்லை.

மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

இந்த திரியின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள் 

8 minutes ago, MEERA said:

இந்த திரியின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள் 

எனது பின்னூட்டம், உங்களது கருத்துக்கானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

எனது பின்னூட்டம், உங்களது கருத்துக்கானது.

மக்கள் நிம்மதியுடன் இருந்தால் ஏன் இந்த சம்பவம்.... புரியவில்லையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/9/2019 at 5:41 PM, பிழம்பு said:

எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

8 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

10 minutes ago, thulasie said:

வாள் வெட்டு தணிந்து விட்டது.

செல் தாக்குதல், ஒரு தசாப்த காலமாக  இல்லை.

மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

 

சுத்த கேணைத்தனமான கருத்து என்றால் இதுதான்

11 minutes ago, MEERA said:

மக்கள் நிம்மதியுடன் இருந்தால் ஏன் இந்த சம்பவம்.... புரியவில்லையா

காணாமல் போனவர்கள் சம்பவம், 2009 இற்கு முன் நடந்த சம்பவம்.

2009 இற்குப்பின் இப்படியான சம்பவம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

காணாமல் போனவர்கள் சம்பவம், 2009 இற்கு முன் நடந்த சம்பவம்.

2009 இற்குப்பின் இப்படியான சம்பவம் இல்லை.

2009 இற்கு பின்னர் கடத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர்,  யாழிலேயே பதிவு உள்ளது தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

17 minutes ago, MEERA said:

2009 இற்கு பின்னர் கடத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர்,  யாழிலேயே பதிவு உள்ளது தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

யாழில் உள்ளது எல்லாம் நம்பக் கூடியதா?

காணாமல் போனவர்கள் உண்மை சம்பவம் - 2009 இற்கு முன்.

தற்போது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

என்ன நீங்கள் கூட்டமைப்பின் பேச்சாளர் போலவே கூறுகின்றீர்கள்?!
முழுப்பூசணிக்காய சோத்தில மறைக்கேலுமே?

பெயர் புது இறங்குகை, எழுத்து பேச்சாளர். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, thulasie said:

யாழில் உள்ளது எல்லாம் நம்பக் கூடியதா?

காணாமல் போனவர்கள் உண்மை சம்பவம் - 2009 இற்கு முன்.

தற்போது இல்லை.

துளசி  ஒரு  முடிவோட  தான்  வந்திருக்கிறார்

இனி  எதுக்கும்  ஆமாப்போடுவதில்லை...😀😀😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.