Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

வாருங்கள் ஜீவன் , 

1990- 2000  காலகட்டத்தின்  ஏறக்குறைய அரைப் பகுதியை  திருமலை , யாழ் , கொழும்பு ஆகிய பகுதிகளிலும் மீதியை புலம் பெயர் நாடுகளிலும் கழித்தவன் என்ற முறையிலும் , இயக்கங்கள் எதிலும் நேரடி அங்கத்துவம் வகித்திராத ஒரு சராசரி குடிமகனாக , அதே வேலை பலதரப்பட்ட இயக்க உறுப்பினர்களுடன் அலுவலக மற்றும் தனிப்பட்ட ரிபீதியில்   தொடர்பு கொண்டிருக்க வேண்டியிருந்த  ஒருவன் என்ற முறையில் , மன்னிக்கவும் , நான் உங்கள் கருத்துடன் ஒத்துப் போக முடியாது நிற்கின்றேன்। 

விடயங்களை குறுகிய மற்றும் நெடும் போக்கு பார்வைகளில் பார்க்கும் போது வேறு வகையாக தெரிவது இயற்கை

1) ஒரு சுவாமியார் ஒரு சமயம் என்னிடம் குறிப்பிடடார் " அவர்கள் சில விடயங்களை வேறு மாதிரி கையாண்டிருந்திருக்கலாம் , நான் அவர்களின் பாதங்களை கழுவி அந்த நீரை அருந்துவேன்,   இதன் மூலம்  அவர்கள் செய்திருக்கக் கூடிய பாவங்களை என்னிடம் மாற்றி விடுமாறு நான் வேண்டிக்  கொள்வேன் என்று.   இதனை நான் ஒற்றுமை என்று எடுத்துக் கொள்கிறேன் , இங்கே அடக்கு முறை இருப்பதாக நினைக்கவில்லை

2) ஈச்சிலம்பற்று கிராமத்துக்கு தேர்தல் கடமையாக போய் கொண்டிருந்த போது இயக்கமொன்றை சேர்ந்த இளவல்கள் வழி மறித்து  ஏறிக் கொண்டனர் கதைகளின் நடுவில் ஒருவர் சொன்னார் " தம்பியை மாத்திரம் சந்திக்க என்னை அனுமதித்தால் , எல்லாவற்றையும் நான் நேர் செய்து விடுவேன்"  என்று  இஙகேயும் அந்த எல்லோரையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையத் தான் காண முடிந்தது  

3) முரண்பாடுகளின் முடிவில் விளையும் வன்முறைகள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் தான்  , முரண்பாடுகள்  இரு  கை ஓசையினால் விளைவன,   அதன் தீர்வுகள் பொதுவாக  நேர் சீராக இருப்பதில்லை   இதனையும் " கூட்டு ஒற்றுமையினையும் " சேர்த்துப் பார்த்து குழப்பமடையத் தேவையில்லை   

 

  • Replies 93
  • Views 8.5k
  • Created
  • Last Reply
51 minutes ago, சாமானியன் said:

வாருங்கள் ஜீவன்

ஒரு அராஜகம் தாண்டவமாடின காலம் அது.

பயங்கரவாதம் தலைவிரி கோலமாய் கோலோச்சின நாட்கள் அவை 

அந்த பயங்கரவாதத்தைத்தான் நான் சொல்கின்றேன்.

நீங்கள் அதை ஒற்றுமையான காலம் என்கிறீர்களே 

அதுதான் இங்கு பிரச்சனை.

...................................

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

சரி, அப்படியே இருக்கட்டும். இந்தக் காலத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும், அதனோடு ஒருமித்தும் தமிழருக்கெதிராக எதுவுமே, எவராலுமே நடத்தப்படவில்லையா? அல்லது அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி, அவை எல்லாவற்றையும் வடித்தகற்றிவிட்டு, வெறும் புலியெதிர்ப்பை மட்டுமே பாருங்கள் என்று கூறியதா?

உங்களின் சாக்கடைப் புலியெதிர்ப்பு அரசியலில், கடந்த 70 ஆண்டுகளாய் சிங்களப் பேரினவாதம் தமிழருக்கெதிராக நிகழ்த்திவரும் திட்டமிட்ட இனக்கொலை தெரியாமல்ப் போனது துரதிஷ்ட்டம்தான்! அல்லது அது தமிழரின் அதிஷ்ட்டம் என்று கருதுகிறீர்களோ என்னவோ?

உங்களின் இந்தப் புலியெதிர்ப்பு அரசியல் அருவருக்கிறது. சீ...தூ!

13 minutes ago, ragunathan said:

சரி, அப்படியே இருக்கட்டும். இந்தக் காலத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும், அதனோடு ஒருமித்தும் தமிழருக்கெதிராக எதுவுமே, எவராலுமே நடத்தப்படவில்லையா? அல்லது அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  


  


புலிக்கூட்டம் செய்த கொலைகள் அப்படியே இருக்கட்டுமா?

அவைகளைக் கண்ணாடி போட்டு பார்க்க மாட்டீர்களா?

ஜீவன் சொல்வது, புலிகளின் காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட காட்டு தர்பாரை.

புலிகளின் முன் அல்லது பின்னால் நடத்தப்பட்ட/நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இங்கு பேசுபொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:


  


புலிக்கூட்டம் செய்த கொலைகள் அப்படியே இருக்கட்டுமா?

அவைகளைக் கண்ணாடி போட்டு பார்க்க மாட்டீர்களா?

ஜீவன் சொல்வது, புலிகளின் காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட காட்டு தர்பாரை.

புலிகளின் முன் அல்லது பின்னால் நடத்தப்பட்ட/நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இங்கு பேசுபொருள்.

இங்கு பேசுபொருள் உங்களின் புலியெதிர்ப்பு அரசியல் இல்லை. அதை இன்னொரு திரி திறந்து பேசுங்கள்.  உங்களின் சாக்கடைகளை அங்கே கொட்டுங்கள், உங்களைப்போன்றவர்கள் கிளறியெடுத்து மென்று விழுங்கவும், மீண்டும் கக்கவும் அது உதவியாக இருக்கும். 

நடிகர் விவேக்கின் கருத்துப்பற்றித்தான் இங்கு பேசுகிறோம். அவர் எங்கும் புலியெதிர்ப்புப் பற்றிப் பேசவில்லை. தெரியாவிட்டால் மீண்டும் திரியின் தலைப்பைப் பார்த்துவிட்டு வாருங்கள். முதல் கருத்தில் சொல்லியதை, இல்லை என்று மறுக்கும் உங்களுக்கு இது தெரியப்போவதில்லை.

எது பேசுபொருளாக இருந்தாலும் உங்களுக்கு புலிவாந்தியெடுக்கக் களம் அமைக்கப் பாடுபடுகிறீர்கள். போகுமிடமெல்லாம் கக்கி விடவேண்டும் என்கிற அவா உங்களுக்கு. 

1 minute ago, ragunathan said:

இங்கு பேசுபொருள் உங்களின் புலியெதிர்ப்பு அரசியல் இல்லை. அதை இன்னொரு திரி திறந்து பேசுங்கள்.  உங்களின் சாக்கடைகளை அங்கே கொட்டுங்கள், உங்களைப்போன்றவர்கள் கிளறியெடுத்து மென்று விழுங்கவும், மீண்டும் கக்கவும் அது உதவியாக இருக்கும். 

நடிகர் விவேக்கின் கருத்துப்பற்றித்தான் இங்கு பேசுகிறோம். அவர் எங்கும் புலியெதிர்ப்புப் பற்றிப் பேசவில்லை. தெரியாவிட்டால் மீண்டும் திரியின் தலைப்பைப் பார்த்துவிட்டு வாருங்கள். முதல் கருத்தில் சொல்லியதை, இல்லை என்று மறுக்கும் உங்களுக்கு இது தெரியப்போவதில்லை.

எது பேசுபொருளாக இருந்தாலும் உங்களுக்கு புலிவாந்தியெடுக்கக் களம் அமைக்கப் பாடுபடுகிறீர்கள். போகுமிடமெல்லாம் கக்கி விடவேண்டும் என்கிற அவா உங்களுக்கு. 

ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க  வேண்டும்.

அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள்.

அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க  வேண்டும்.

அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள்.

அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா? 

 

எது? ? ஜீவனின் கருத்துக்கு பதிலெழுதுவதா?

அவர் சம்பந்தமேயில்லாமல் திரியைத் திசை திருப்பி புலிவாந்தி எடுப்பார், நாங்கள் அதற்குச் சங்கு ஊதிச் சல்லரிரியைத் தட்டவேண்டும் என்கிறீர்களா? 

கருத்து தலைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உங்களின் சாக்கடைகளுக்குப் பதில்தரவேண்டிய தேவை இல்லை. 

4 minutes ago, thulasie said:

ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க  வேண்டும்.

அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள்.

அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா? 

பேசுபொருளின் முரண் பற்றி நீங்க்கள் பேசுமுன், பேசுபொருளைத் திசை திருப்பாமல், புலிவாந்தியெடுக்காமல் கருத்துக்கு கருத்தினால் பதில் சொல்லமுடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால், உங்களுக்கென்றே இயங்கும் களங்களில் வாந்தியெடுங்கள், உங்களுக்கும் திருப்தியாக இருக்கும். 

2 minutes ago, ragunathan said:

 

எது? ? ஜீவனின் கருத்துக்கு பதிலெழுதுவதா?

அவர் சம்பந்தமேயில்லாமல் திரியைத் திசை திருப்பி புலிவாந்தி எடுப்பார், நாங்கள் அதற்குச் சங்கு ஊதிச் சல்லரிரியைத் தட்டவேண்டும் என்கிறீர்களா? 

கருத்து தலைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உங்களின் சாக்கடைகளுக்குப் பதில்தரவேண்டிய தேவை இல்லை. 

ஒரு திரி ஒன்றைப்பற்றிச் சொல்ல, அதற்கு சம்பந்தமில்லாதவைகளைத்தான் பலர் எழுதுகிறார்கள்.

அப்படி சம்பந்தமில்லாதவைகளை எழுதும்போது, உங்களுக்கு சீரணிக்க முடிகிறது. 

அப்படி சம்பந்தமில்லவைகள் ஒரு போதும் புலியெதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் ஏன் கரிசனையாக இருக்கிறீர்கள்?

திரிக்கு சம்பந்தமில்லாதவைகள், புலிக்கு எதிர்ப்பாக இருந்தாலென்ன, சார்பாக இருந்தாலென்ன - அவைகளையும் சீரணிக்கப் பழகிக்கொள்வதில் உங்களுக்கு யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள்?

புலிகள் செய்த படுகொலைகள் ஏன் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

ஒட்டுமொத்த தமிழின ஒற்றுமைக்கும் பங்கம்  விளைத்தவர்கள் அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

ஒரு திரி ஒன்றைப்பற்றிச் சொல்ல, அதற்கு சம்பந்தமில்லாதவைகளைத்தான் பலர் எழுதுகிறார்கள்.

அப்படி சம்பந்தமில்லாதவைகளை எழுதும்போது, உங்களுக்கு சீரணிக்க முடிகிறது. 

அப்படி சம்பந்தமில்லவைகள் ஒரு போதும் புலியெதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் ஏன் கரிசனையாக இருக்கிறீர்கள்?

திரிக்கு சம்பந்தமில்லாதவைகள், புலிக்கு எதிர்ப்பாக இருந்தாலென்ன, சார்பாக இருந்தாலென்ன - அவைகளையும் சீரணிக்கப் பழகிக்கொள்வதில் உங்களுக்கு யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள்?

புலிகள் செய்த படுகொலைகள் ஏன் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

ஒட்டுமொத்த தமிழின ஒற்றுமைக்கும் பங்கம்  விளைத்தவர்கள் அவர்கள்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்தவர்கள் நீங்கள் இன்று காவடியெடுக்கும் கூட்டணியும், இந்திய வல்லாதிக்கத்தினதும், சிங்களப் பேரினவாதத்திந்தும் ஐந்தாம் படைகளாகவும், கொலைக் குழுக்களாகவும்  மாறி தமிழ்மக்களைப் பலியிட்ட உங்களின் "மாற்று: இயக்கங்களும் தான்.

புலிகளின் தவறுகள் பற்றி நான் பேசத் தயங்கியதில்லை. இங்கே தொடர்ந்து வாசித்துவருபவராக இருந்தால், எனது கருத்துக்களில் அவற்றைக் கண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் இப்போது வந்தவராச்சே!

1 hour ago, ragunathan said:

ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்தவர்கள் நீங்கள் இன்று காவடியெடுக்கும் கூட்டணியும், இந்திய வல்லாதிக்கத்தினதும், சிங்களப் பேரினவாதத்திந்தும் ஐந்தாம் படைகளாகவும், கொலைக் குழுக்களாகவும்  மாறி தமிழ்மக்களைப் பலியிட்ட உங்களின் "மாற்று: இயக்கங்களும் தான்.

புலிகளின் தவறுகள் பற்றி நான் பேசத் தயங்கியதில்லை. இங்கே தொடர்ந்து வாசித்துவருபவராக இருந்தால், எனது கருத்துக்களில் அவற்றைக் கண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் இப்போது வந்தவராச்சே!

புலிகள் மாற்று இயக்கங்களுக்கு எதிராக திரண்டால், அவர்களும் என்ன செய்வார்கள்?

அராஜகம்தான் தலைவிரித்தாடும்.  ஒற்றுமை குழையும்.

சும்மா இருந்த தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள்.

இன்னொரு தமிழ் சமூகமான இசுலாமியர்களின் இனச் சுத்திகரிப்பு.

ஆக, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினதும் ஒற்றுமைக்கு களங்கம் விளைத்தவர்கள்தான் புலிகள்.

இப்போது தமிழின ஒற்றுமைக்கு பாடம் எடுக்க வந்த தென்னிந்திய ----- ------உரைக்கு, எல்லாரும் அரோகரா பாடுகிறீர்கள்.

இவரை விட, பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் (?) ரஞ்சன் ராமநாயக்க என்ற ------- கூப்பிட்டிருந்தால், அவர் விவேக்கை விட - விவேகமாக சொற்பொழிவை (?) நிகழ்த்தி இருப்பார்.

இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.

Edited by நிழலி
நாகரீகமற்ற சொற்கள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

புலிகள் மாற்று இயக்கங்களுக்கு எதிராக திரண்டால், அவர்களும் என்ன செய்வார்கள்?

அராஜகம்தான் தலைவிரித்தாடும்.  ஒற்றுமை குழையும்.

சும்மா இருந்த தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள்.

இன்னொரு தமிழ் சமூகமான இசுலாமியர்களின் இனச் சுத்திகரிப்பு.

ஆக, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினதும் ஒற்றுமைக்கு களங்கம் விளைத்தவர்கள்தான் புலிகள்.

இப்போது தமிழின ஒற்றுமைக்கு பாடம் எடுக்க வந்த தென்னிந்திய ----- ------உரைக்கு, எல்லாரும் அரோகரா பாடுகிறீர்கள்.

இவரை விட, பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் (?) ரஞ்சன் ராமநாயக்க என்ற ------- கூப்பிட்டிருந்தால், அவர் விவேக்கை விட - விவேகமாக சொற்பொழிவை (?) நிகழ்த்தி இருப்பார்.

இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.

ஓ, சும்மாயிருந்த அரசியல்வாதிகளா? அவர்கள் சும்மாயிருந்தால் ஏன் புலிகள் அவர்களை இலக்கு வைக்கவேண்டும்? அமிரும் யோகேஸ்வரனும் செய்த வேலைகள் தெரியாதா? தமிழரின் இரத்தம் கேட்டு இந்தியப் பேய்கள் தமிழர் தாயகமெங்கும் அலைந்துகொண்டிருக்க, இந்தியாவிலிருந்து அமிரும் அவரது கூட்டாளிகளும் பேசாமலிருக்காமல் இந்தியப் பேய்களுக்கு தமிழ்மக்கள் உதவவேண்டும், புலிகளை அழிக்கும் அவர்களது நடவடிக்கை வெற்றிபெறவேண்டும் என்று சொல்லவேண்டிய தேவை என்ன? 

உமா மகேஸ்வரனும் சிறீயும் செய்தவை ஊர் அறிந்ததுதானே? உள்வீட்டுக் கொலைகளை முதன் முதலில் செய்துகாட்டியது உமா மகேஸ்வரன் என்பதை மாற்றியக்க மாமணியான உங்களுக்கு எப்படித் தெரியாமல்ப் போனது? செம்மணியில் சிங்களப் பேய்கள் மனிதப் புதைகுழிகளை அமைக்கலாம் என்று செய்துகாட்டியவர்கள் உமாவும் அவரது தோழர்களும்தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?  நல்லூர் வீதிகளில் தமக்குள் அடிபடுகிறோம் என்கிற போர்வையில் அப்பாவிகள் மீது துப்பாகிப் பிரயோகம் செய்து தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் பொபியும் தாஸும் உங்களுக்கு மாற்றியக்க மாமணிகளாகத் தெரிவது எப்படி? சமாதானம் செய்ய வந்த புலிகளைக் கொன்று தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் சும்மாயிருத்தல் உங்களுக்குத் தெரியுமா? 

அதுசரி, புலிகள் உங்களை இயங்க விடவில்லையென்றால், உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தானே? எதுக்குப் போய் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் கூஜா தூக்கினீர்கள்? டக்கிளஸ், புளொட் மோகன், ராசீக் என்று நீள்கின்ற வரிசையில் வந்த உங்களின் மாற்றுக்கருத்து - மாற்றியக்க மாணிக்கங்கள் செய்தவை உங்களுக்கு மறந்து போச்சா??? இந்திய நாய்களுடன் சேர்ந்து இரண்டுவருடங்களில் அந்த பயங்கரவாத மிருகங்கள் செய்த படுகொலைகளும், மனித வேட்டைகளும், விசாரணை என்கிற பெயரில் பெண்பிள்ளைகளைக் கூட்டிவந்து வீட்டில் அடைத்துவைத்து தாமும் அனுபவித்து, இந்திய நாய்களுக்கும் உணவாக்கிய உங்களின் சும்மாயிருந்த மாற்றியக்க மாமணிகளின் வீரம்  உங்களுக்குத் தெரியாமல்ப் போயிற்றா? அல்லது அந்தப் பயங்கரவாத கொலைகார நாய்களை நீங்கள் இன்றும் ஆதரிப்பதால் அது உங்க்களுக்குத் தெரியாமல்ப் போனதா? 

மேலே நான் குறிப்பிட்ட பயங்கரவாத பேய்களில் எவர் பேசாமலிருக்கப் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? 

முஸ்லீம்களை யாழில் இருந்து வெளியேற்றியது தவறுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. 

விவேக் உங்களின் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பற்றிப் பேசவில்லை. தமிழருக்கு ஒற்றுமை வேண்டும் என்கிறார். அதில் தவறில்லை என்பதுதான் எனது வாதம். அவரை உங்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் பிடிக்கவில்லை என்பதற்காக, பார்ப்பணன், பார்ப்பணருக்காக கூலிவேலை செய்பவன், கூத்தாடி என்று விழிக்கிறீர்கள்.  விவேக் சொல்வது பிழையென்று சொல்லிவிட்டு, புலிகளால்த்தான் ஒற்றுமையில்லாமல்ப் போனது என்கிறீர்கள். நீங்கள் சொல்வது உங்களுக்கே தவறென்று நன்கு தெரிந்தும் விதண்டாவாதத்திற்காக மீண்டும் மீண்டும் அதே தவறை விடுகிறீர்கள்.
இதே இடத்தில் அவரைப் பார்ப்பணன் என்றும் கழிசடை என்றும் கூறிவிட்டு, நான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்கிறீர்கள். 
உங்களின் நம்பகத்தன்மையை இங்கே மிக நன்றாக எங்களுக்குக் காட்டியிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, thulasie said:

இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை.

தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.

தமிழன் ஒழுங்காக ஒற்றுமையாகவா? ஏனிதை இப்போது கேட்கிறீர்கள்? தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ் என்று புலிகள் இல்லாத காலத்திலேயே ஒற்றுமையிருக்கவில்லையே? அதுபற்றிப் பேசலாமே? 

சும்மாயிருந்த இளைஞர்களை ரத்தத் திலகமிட்டு, தனி ஈழம்தான் தீர்வென்று உசுப்பேற்றிவிட்டு தமிழரின் ரத்தச் சகதியில் குளித்த அமிரும் அவரது தோழர்களும் அன்று சும்மாயிருந்திருக்கலாமே? எதற்கு உசுப்பேற்றினார்கள்?

இந்தியனும் சிங்களவனும் உங்களுக்கு நல்லவனா? புலிகள் தோன்றுவதற்கு 20 - 25 வருடங்களுக்கு முன்னமே உங்களின் கூட்டணியும், தமிழரசும் சிங்களவனிடம் அடிபட்டு இனிக் கடவுள்தான் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டபோது, சிங்களவன் செய்தது சரியென்று எப்படித் தோன்றுகிறது உங்களுக்கு? 

தனது சொந்த நலனுக்காக ஈழத் தமிழனின் உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தை பகடைக் காயாகப் பாவித்த இந்தியன் உங்களுக்கு நல்லவனாகத் தெரிவது எப்படி?

எந்த விவரமும் இல்லாமல், நானும் கருத்தெழுதுகிறேன் பேர்வழியென்று அதிமேதாவித்தனமாக் (சுத்த மொக்கை) கருத்தெழுதுவதை விடுத்து "சும்மாயிருங்கள்" !

  • கருத்துக்கள உறவுகள்

ரகு
எத்தனையோ வருட தமிழர் வரலாற்றை போராட்டத்தை மிக சுருக்கமாகவும் பக்க சார்பில்லாமலும் எல்லோருக்கும் விளங்கக் கூடியவாறு எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

4 hours ago, ragunathan said:
4 hours ago, ragunathan said:

தமிழன் ஒழுங்காக ஒற்றுமையாகவா? ஏனிதை இப்போது கேட்கிறீர்கள்? தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ் என்று புலிகள் இல்லாத காலத்திலேயே ஒற்றுமையிருக்கவில்லையே? அதுபற்றிப் பேசலாமே? 

 

 

தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ்  புலிகள் இல்லாத காலத்தில், புலிகள் போல தம்மை எதிர்த்தவன் எல்லாரையும் சுட்டுப் பொசுக்கவில்லை.

மேற்படியான கட்சிகள் எல்லாம் ஜனநாயக ரீதியிலானவை.

ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்ட கொள்கைகள்.

வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் இருந்தன.

Edited by thulasie

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, thulasie said:

தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ்  புலிகள் இல்லாத காலத்தில், புலிகள் போல தம்மை எதிர்த்தவன் எல்லாரையும் சுட்டுப் பொசுக்கவில்லை.

மேற்படியான கட்சிகள் எல்லாம் ஜனநாயக ரீதியிலானவை.

ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்ட கொள்கைகள்.

வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் இருந்தன.

வேற்றுமையில் ஒற்றுமை எங்கை எப்பிடியிருந்தது? உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ பாப்பம்? ஜீ.ஜீ பொன்னம்பலம் விட்ட கிர்தா வேலையெல்லாம் எங்களுக்கும் தெரியும்.
அந்தக்காலத்து  தமிழ் பெரிசுகள் ஒற்றுமையாய் இருந்திருந்தால் தமிழர்விடுதலைக்கூட்டணியும் தோன்றியிருக்காது. அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்ட பேப்பட்டமும் வந்திருக்காது. மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.

5 hours ago, ragunathan said:

ஓ, சும்மாயிருந்த அரசியல்வாதிகளா? அவர்கள் சும்மாயிருந்தால் ஏன் புலிகள் அவர்களை இலக்கு வைக்கவேண்டும்? அமிரும் யோகேஸ்வரனும் செய்த வேலைகள் தெரியாதா? தமிழரின் இரத்தம் கேட்டு இந்தியப் பேய்கள் தமிழர் தாயகமெங்கும் அலைந்துகொண்டிருக்க, இந்தியாவிலிருந்து அமிரும் அவரது கூட்டாளிகளும் பேசாமலிருக்காமல் இந்தியப் பேய்களுக்கு தமிழ்மக்கள் உதவவேண்டும், புலிகளை அழிக்கும் அவர்களது நடவடிக்கை வெற்றிபெறவேண்டும் என்று சொல்லவேண்டிய தேவை என்ன? 

உமா மகேஸ்வரனும் சிறீயும் செய்தவை ஊர் அறிந்ததுதானே? உள்வீட்டுக் கொலைகளை முதன் முதலில் செய்துகாட்டியது உமா மகேஸ்வரன் என்பதை மாற்றியக்க மாமணியான உங்களுக்கு எப்படித் தெரியாமல்ப் போனது? செம்மணியில் சிங்களப் பேய்கள் மனிதப் புதைகுழிகளை அமைக்கலாம் என்று செய்துகாட்டியவர்கள் உமாவும் அவரது தோழர்களும்தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?  நல்லூர் வீதிகளில் தமக்குள் அடிபடுகிறோம் என்கிற போர்வையில் அப்பாவிகள் மீது துப்பாகிப் பிரயோகம் செய்து தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் பொபியும் தாஸும் உங்களுக்கு மாற்றியக்க மாமணிகளாகத் தெரிவது எப்படி? சமாதானம் செய்ய வந்த புலிகளைக் கொன்று தமது வீரத்தைக் காட்டிய டெலோவின் சும்மாயிருத்தல் உங்களுக்குத் தெரியுமா? 

அதுசரி, புலிகள் உங்களை இயங்க விடவில்லையென்றால், உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தானே? எதுக்குப் போய் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் கூஜா தூக்கினீர்கள்? டக்கிளஸ், புளொட் மோகன், ராசீக் என்று நீள்கின்ற வரிசையில் வந்த உங்களின் மாற்றுக்கருத்து - மாற்றியக்க மாணிக்கங்கள் செய்தவை உங்களுக்கு மறந்து போச்சா??? இந்திய நாய்களுடன் சேர்ந்து இரண்டுவருடங்களில் அந்த பயங்கரவாத மிருகங்கள் செய்த படுகொலைகளும், மனித வேட்டைகளும், விசாரணை என்கிற பெயரில் பெண்பிள்ளைகளைக் கூட்டிவந்து வீட்டில் அடைத்துவைத்து தாமும் அனுபவித்து, இந்திய நாய்களுக்கும் உணவாக்கிய உங்களின் சும்மாயிருந்த மாற்றியக்க மாமணிகளின் வீரம்  உங்களுக்குத் தெரியாமல்ப் போயிற்றா? அல்லது அந்தப் பயங்கரவாத கொலைகார நாய்களை நீங்கள் இன்றும் ஆதரிப்பதால் அது உங்க்களுக்குத் தெரியாமல்ப் போனதா? 

மேலே நான் குறிப்பிட்ட பயங்கரவாத பேய்களில் எவர் பேசாமலிருக்கப் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? 

 

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள்.

புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். 

மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம்.

பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு அராஜகம் தாண்டவமாடின காலம் அது.

பயங்கரவாதம் தலைவிரி கோலமாய் கோலோச்சின நாட்கள் அவை 

அந்த பயங்கரவாதத்தைத்தான் நான் சொல்கின்றேன்.

நீங்கள் அதை ஒற்றுமையான காலம் என்கிறீர்களே 

அதுதான் இங்கு பிரச்சனை.

...................................

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

சரி சரி தேவையில்லாத இடத்திலையெல்லாம் புத்தர் சிலை சிலையாய் முளைக்குதாம்.....போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லுங்கோ. நீங்கள் தான் ஊரிலை இருக்கிறியள் எல்லோ......எல்லாம் ஏன் என்னத்துக்கு எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சிருக்கும்.
ஊருக்குள்ளை  போர் முடிஞ்சும் திருத்தப்படாத கட்டிடங்கள் கனக்க இருக்காம்.....குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்காம்....ரோட்டுகள் கிடங்கும் கிண்டியுமாய் இருக்காம்......அதுகளையெல்லாம் படமெடுத்து போடுங்கோ....நாலு சனத்துக்கு தெரியட்டும்........சும்மா லென்ஸ் பூட்டி நாரை நன்னாரியளை படம் எடுத்து சேக்கஸ்காட்டாமல்-.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

 புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

துளசி
நீங்கள் ஆளை மாறி ஏழுதுகிறீர்கள் போல தெரிகிறது.
ரகுநாதனைப் பொறுத்தவரை மாவீரர் குடும்பத்தில் இருந்து துணிந்து பலதடவை புலிகளின் குறைகுற்றங்களை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீங்கள் புலிக்கு எதிராக மட்டுமே எழுதுகிறீர்கள்.ஆனால் அவரோ நடுநலையாகவே எப்போதும் எழுதுகிறார்.
சிலவேளை நீங்கள் புதிதாக வந்தபடியால் அப்படி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ragunathan said:

சரி, அப்படியே இருக்கட்டும். இந்தக் காலத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும், அதனோடு ஒருமித்தும் தமிழருக்கெதிராக எதுவுமே, எவராலுமே நடத்தப்படவில்லையா? அல்லது அது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி, அவை எல்லாவற்றையும் வடித்தகற்றிவிட்டு, வெறும் புலியெதிர்ப்பை மட்டுமே பாருங்கள் என்று கூறியதா?

உங்களின் சாக்கடைப் புலியெதிர்ப்பு அரசியலில், கடந்த 70 ஆண்டுகளாய் சிங்களப் பேரினவாதம் தமிழருக்கெதிராக நிகழ்த்திவரும் திட்டமிட்ட இனக்கொலை தெரியாமல்ப் போனது துரதிஷ்ட்டம்தான்! அல்லது அது தமிழரின் அதிஷ்ட்டம் என்று கருதுகிறீர்களோ என்னவோ?

உங்களின் இந்தப் புலியெதிர்ப்பு அரசியல் அருவருக்கிறது. சீ...தூ!

நீங்கள் உங்கள் நேரத்தை வீண் அடித்து வீண் விவாதத்தை வளர்கிறீர்கள் 
இது  எதோ இப்போதான் நீங்கள் புதிதாக இங்க பார்க்கும் விடயம் இல்லை 
நானும் இருக்கிறேன் ... நானும் இருக்கிறேன் என்று 
செத்தவீட்டில் பிணமாகவும்  திருமண வீட்டில் மாப்பிளை யாகவும் 
இருக்கவேண்டும் எனும் நினைப்பில் உலகில் பல உயிர்கள் நடமாடுது. 

கண்டும் காணாமல் செல்வதுதான் சிறப்பு மட்டுமல்ல 
காலப்போக்கில் சில ஜீவராசிகள் திருந்தவும் நீங்கள் மறைமுகமாக 
உதவுகிறீர்கள்.

7 hours ago, thulasie said:

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள்.

புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். 

மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம்.

பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

ஆ அப்படியா சங்கதி?
நான் அறிந்திருக்கவில்லை .

ஐயோ புலிகள் எவ்ளவு கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் 
பாழாய்ப்போன சிங்களவன் கூட வாய்திறக்காமால் இருந்து இருக்கிறான்.

நல்ல வேளை நீங்கள் பூமியில் பிறந்து உள்ளீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலிருந்து... விவேக்கின் பேட்டி. 
"இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, தமிழ் வாழும்."

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 12:46 AM, சாமானியன் said:

தமிழ் நாட்டினரின் சக்தி மிக்க ஒரு பகுதி எங்களை வியாபார சந்தையாக பார்க்கின்றனர் --  அவதானமாக இருக்கிறோம்  (  சில காலத்திற்கு முன்னர் எனது மகளின் நாட்டிய அர்நாகேற்றத்திற்கு சென்னையில் இருந்த ஒரு இசை வல்லுனரை பாட வர முடியமா என கேட்டிருந்தேன் .  பாட வருவற்கில்லை  , “ Chief Guest”  ஆக வேண்டுமென்றால் வருகின்றேன் என்கிறார் ?  கடுப்பாகி அதை கைவிடடேன்.

உங்களின் மீது தனிப்பட்ட விமர்சனம் இல்லை இது.

இதில் வியாபாரத்தை தொடக்கியது நீங்களா அல்லது அந்த இசை வல்லுநரா? சிந்தித்து பாருங்கள்.

விருப்புக்கு இணங்கி வரவில்லை என்றால், அவர்கள் எம்மை சரண்டக் கூடிய பொருளாக பார்க்கிறார்கள் என்று எவ்வாறு கற்பிதம் கொள்வது?

Edited by Kadancha
add info.

4 hours ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பிலிருந்து... விவேக்கின் பேட்டி. 
"இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, தமிழ் வாழும்."

தமிழ் வாழாது என்று சூட்சுமமாக சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

ஆ அப்படியா சங்கதி?

நான் அறிந்திருக்கவில்லை .

ஐயோ புலிகள் எவ்ளவு கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் 
பாழாய்ப்போன சிங்களவன் கூட வாய்திறக்காமால் இருந்து இருக்கிறான்.

நல்ல வேளை நீங்கள் பூமியில் பிறந்து உள்ளீர்கள் 

🌹🌹🙏🙏

21 hours ago, ragunathan said:

எது? ? ஜீவனின் கருத்துக்கு பதிலெழுதுவதா?

அவர் சம்பந்தமேயில்லாமல் திரியைத் திசை திருப்பி புலிவாந்தி எடுப்பார், நாங்கள் அதற்குச் சங்கு ஊதிச் சல்லரிரியைத் தட்டவேண்டும் என்கிறீர்களா? 

கருத்து தலைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உங்களின் சாக்கடைகளுக்குப் பதில்தரவேண்டிய தேவை இல்லை. 

இங்கு திசை திருப்பி வாந்தி எடுத்தது நானா இல்லை புலிவாலுகளா 

கேவலமான பதிவு ரகு 

உங்களில் மதிப்பு வைத்திருந்தேன் - நீங்களாக உங்களைக் காட்டிக்கொடுத்ததிற்கு நன்றிகள் பல்லாயிரம்.

 

20 hours ago, ragunathan said:

அதுசரி, புலிகள் உங்களை இயங்க விடவில்லையென்றால், உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தானே? எதுக்குப் போய் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் கூஜா தூக்கினீர்கள்?

பிரேமதாச காலத்தில் புலிகள் தூக்கினால் அது கூஜா இல்லையாம் இராஜதந்திரமாம் 

நம்பினால் நம்புங்கள் 

 நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, thulasie said:

தமிழ் வாழாது என்று சூட்சுமமாக சொல்கிறார்.

துளசி....  விவேக் நல்லதை பெருமைப் பட்டு சொல்ல...
நீங்கள், ஏன்...  தரம் குறைந்து, எம் இனத்தின்,  தாய்  மொழியை.. மதிப்பிடுகின்றீர்கள்?  
உங்களுக்கு... இந்த, தாழ்வு மனப் பான்மை வர, உண்மையான காரணம் எது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.